admin

சிந்துபாத்தின் சாகசம்.

தி கோல்டன் வாயேஜ் ஆஃப் சிந்துபாத் திரைப்படத்தில் சிந்துபாத் லெமூரியா தீவைத் தேடிச் செல்கிறான். 1973ல் வெளியான இந்த ஹாலிவுட் படத்தில் தமிழக வரலாற்று ஆய்வில் குறிப்பிடப்படும் கடல்கொண்ட தேசமான லெமூரியாவை கற்பனையான புதையல் தீவாகச் சித்தரிக்கிறார்கள் ஆயிரத்தோரு இரவுகள் கதைகளில் மாலுமி சிந்துபாத் ஏழு கடல் பயணங்களை மேற்கொள்கிறான். இந்தச் சாகசப் பயணங்களைப் பற்றி எண்ணற்ற திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. நான் பார்த்த சிந்துபாத் படங்களில் மிகச்சிறப்பானது இதுவே ஆயிரத்தோரு இரவு கதையில் இரண்டு சிந்துபாத் இடம்பெறுகிறார்கள். …

சிந்துபாத்தின் சாகசம். Read More »

கதைப்பயணி

தேசாந்திரி யூடியூப் சேனல் சார்பாக கதைப்பயணி என்ற புதிய காணொளித் தொடரை துவக்குகிறேன். சென்னையும் நானும், எஸ்ராவிடம் கேளுங்கள். திரைப்பயணி போன்ற எனது முந்தைய காணொளித் தொடர்கள் மிகச்சிறந்த வரவேற்பை பெற்றன. ரஷ்ய இலக்கியங்கள் குறித்தும். உலகப்புகழ்பெற்ற எழுத்தாளர்கள். திரைப்பட இயக்குநர்கள் குறித்தும் நான் பேசிய விரிவான உரைகள் இணையத்தில் காணக்கிடைக்கின்றன. பல்வேறு புத்தக கண்காட்சிகளில் நான் ஆற்றிய உரைகள். எனது நூல் வெளியீட்டில் ஆற்றிய சிறப்புரைகள், புத்தக அறிமுகங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட எனது உரைகளை …

கதைப்பயணி Read More »

இரும்பின் ஆசி

புதிய சிறுகதை. ஜுன் 15. 2026 தனது வீட்டைக் கடந்து ஒரு போலீஸ் வேன் செல்வதை செல்லம்மாள் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். நிச்சயம் இன்றைக்கு பெரிய கலவரம் நடக்கப்போகிறது.  காலையிலிருந்தே தெக்கம்பட்டி பரபரப்பாகியிருந்தது. கலெக்டர் வரப்போவதாகப் பேசிக் கொண்டார்கள்.  இரண்டு மூன்று அரசாங்க ஜீப்புகள் கிழக்கு  நோக்கிப் போய்க் கொண்டிருந்தன. செல்லம்மாவின் இளையமகன் முத்துக்காளை கூட வேடிக்கை பார்க்கப் போயிருந்தான். இத்தனை பேர் சேர்ந்து கொண்டு சின்னமாயனின் சாமியைப் பறிக்க முற்படுவது நியாயமில்லை. அவர்களா இத்தனை ஆண்டுகள் …

இரும்பின் ஆசி Read More »

துப்பாக்கியும் பெண்ணும்

Nouvelle Vague 2025ல் வெளியான திரைப்படம். 1950- 60 களில் தோன்றிய பிரெஞ்சு புதிய அலையின் முக்கிய இயக்குனர் கோதார் இயக்கிய “பிரத்லெஸ்” திரைப்படம் எப்படி உருவானது என்பதைப் பற்றிய படம் Cahiers du Cinema இதழில் சினிமா விமர்சனங்களையும் கட்டுரைகளையும் எழுதி வந்த கோதார் எப்படித் திரைப்பட இயக்குநராக உருவானார் என்பதைப் படம் விவரிக்கிறது. “All you need to make a movie is a girl and a gun” என்கிறார் கோதார். …

துப்பாக்கியும் பெண்ணும் Read More »

அஞ்சலி

தமிழ் திரையுலகின் நிகரற்ற இயக்குநர் பாரதிராஜாவின் மறைவிற்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள். தமிழ் சினிமாவிற்கு புதிய அழகியலை உருவாக்கியவர். தெற்கத்தி மண்ணையும் மக்களையும் திரையில் அழியாச்சித்திரங்களாக உருவாக்கிய பெருங்கலைஞர். சிறந்த நண்பர். பண்பாளர். அவரது மறைவு மிகுந்த துயரமளிக்கிறது.

திரையில் அமரும் ஈ

புதிய சிறுகதை. ஜுன் 9 .2026 மல்லிகாவிற்குச் சினிமாவில் வரும் திருமணக்காட்சியை மிகவும் பிடிக்கும். அதற்காகவே அவள் சினிமா பார்த்தாள். தனது பக்கத்துவீட்டுப் பையன்களிடம் எந்தத் தியேட்டரில் என்ன படம் ஒடுகிறது என்பதை விசாரிப்பதோடு அதில் கல்யாணக் காட்சி இருக்கிறதா என்றும் கேட்டுத் தெரிந்து கொள்வாள். “ இருக்கிறது“ என்று சொன்னால் “ கடைசிக்காட்சியிலா“ எனக்கேட்பாள். “ இல்லைக்கா..பாதியில வருது“ என்று சொல்லிவிட்டால் போதும் அடுத்த நாளே அந்தப்படத்திற்குப் போய்விடுவாள். சினிமா பார்ப்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் …

திரையில் அமரும் ஈ Read More »

மனசாட்சியின் உதயம்

அம்ரும் திரைப்படத்தில் ஹில்லே என்ற பெண் ஹிட்லர் இறந்த சேதியை ரேடியோவில் கேள்விப்பட்டு மிகுந்த துயரம் அடைகிறாள். கர்ப்பிணியான அவள் ஆழ்ந்த மன அழுத்தத்தில் மூழ்கி எதையும் சாப்பிட மறுக்கிறாள். தங்களைக் காக்க வந்த கடவுளான ஹிட்லர் எப்படி இறந்து போவார் எனப்புலம்புகிறாள். அவர் இறந்தாலும் அவர் முன்னெடுத்த போரைத் தொடர வேண்டும் என்கிறாள். ஆனால் அதே வீட்டிலுள்ள அத்தை ஈனா ஹிட்லரின் புகைப்படத்தை அடுப்பிலிட்டு எரித்து இனி நாம் விடுதலை அடைந்தோம் என்கிறாள். இந்த இருவருக்கும் …

மனசாட்சியின் உதயம் Read More »

பயணியின் நிழல்

மார்க்கோ போலோவின் பயணநூலை விடவும் அது எழுதப்பட்டதன் பின்னுள்ள கதை அல்லது உண்மை வியப்பளிக்கிறது. கால்வினோ அதிலிருந்தே தனது புலப்படாத நகரங்கள் என்ற நாவலை எழுதியிருக்கிறார். அதில் வரும் மன்னர் குப்ளாய்கான் கற்பனையான நகரங்களை விவரிக்கத் துவங்குகிறார். அதுவும் போலோவின் உண்மை அனுபவங்களும் ஒன்றாக இணைகின்றன. இந்த இணைவு போன்றதே போலோவின் பயண நூல் எழுதப்பட்ட வரலாறும் போலோவின் நிழலாக அந்த நூலின் பின்னால் இருப்பவர் இத்தாலிய எழுத்தாளரான ரஸ்டிகெல்லோ டா பிசா. வீரசாகசக் கதைகளை எழுதும் …

பயணியின் நிழல் Read More »

கடல் காணாத சிறுவர்கள்

1935ல் வடக்கு ஸ்பெயினின் புர்கோஸ் மாகாணத்திலுள்ள சிறிய பள்ளிக்கூடம். அதற்குப் புதிய ஆசிரியராக அந்தோனி பெனாய்கெஸ் வருகை தருகிறார். தனது வகுப்பில் படிக்கும் மாணவர்களிடம் உஙகளில் எத்தனை பேர் கடலைப் பார்த்திருக்கிறீர்கள் என்று கேட்கிறார். ஒருவரும் கடல் பார்த்ததில்லை. ஆனால் கடலைப் பற்றி நிறையக் கேள்விபட்டிருக்கிறார்கள். கடல் எப்படியிருக்கும் அவர்களாகக் கற்பனை செய்திருக்கிறார்கள். அவற்றை ஆசிரியர் எழுதித் தரச் சொல்கிறார். ஒவ்வொரு மாணவனும் தனது கற்பனையில் கடலைப் பற்றி எழுதித் தருகிறான். அவற்றைத் தொகுத்து சிறிய நூலாக …

கடல் காணாத சிறுவர்கள் Read More »