admin

கோனேரி ராஜபுர ஓவியங்கள்

கோனேரி ராஜபுரம் சென்றிருந்தேன். திருநல்லம் என்பது அதன் பழைய பெயர். அங்குள்ள பஞ்சலோக நடராஜர் விக்கிரகம் மிகப்பெரியது. பேரழகு மிக்கது. செம்பியன் மாதேவி இக்கோவிலைக் கற்றளியாகக் கட்டினார் என்கிறார்கள். கோவிலிலுள்ள இறைவியின் பெயர் அங்கவள நாயகி. எவ்வளவு அழகான பெயர். கும்பகோணம் – காரைக்கால் பாதையில் எஸ்.புதூர் என்னும் ஊரைக் கடந்து தெற்கே வடமட்டம் செல்லும் சாலையில் பயணம் செய்தால் கோனேரி ராஜபுரம் அடையலாம். சாலைவழியெங்கும் நாணல் பூத்திருந்தன. இளவெயிலின் முணுமுணுப்பு. மண்சாலைகளுக்கு உள்ள நினைவு தார்ச் …

கோனேரி ராஜபுர ஓவியங்கள் Read More »

சோமாவைப் பாடுதல்

சோமா என்ற “ஏ.கே.ராமானுஜனின் புதிய கவிதைத்தொகுப்பினை வாசித்தேன். ஆங்கிலக் கவிஞரும் நாட்டுப்புறவியல் ஆய்வாளருமான ஏ.கே.ராமானுஜனின் மறைவிற்குப் பிறகு அவரது கையெழுத்துப்பிரதிகள், நாட்குறிப்புகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தும் சிகாகோ பல்கலைக்கழகத்திற்கு அளிக்கப்பட்டு பாதுகாப்பட்டு வருகின்றன. பெரும்பாலான சேகரிப்பு ஆங்கிலத்திலிருந்தாலும், தமிழ், கன்னட கையெழுத்து பிரதிகளும் அங்கே காணப்படுகின்றன. இதில் அவரது சான்றிதழ்கள் புகைப்படங்கள் மற்றும் கடிததொடர்புகள், நினைவுக்கட்டுரைகள் தனியே தொகுக்கப்பட்டிருக்கின்றன. இதுவரை வெளியிடப்படாத அவரது ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பைச் சோமா என்ற பெயரில் தற்போது வெளியிட்டிருக்கிறார்கள். இந்தத் …

சோமாவைப் பாடுதல் Read More »

காஞ்சிபுரம் புத்தகத் திருவிழாவில்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மைதானத்தில் புத்தகத் திருவிழா 09.02.2024 முதல் 19.02.2024 வரை 11 நாட்கள் நடைபெறவுள்ளது இந்த விழாவில் 13 செவ்வாய்கிழமை மாலை உரையாற்றுகிறேன்

கே.ஜி, ஜார்ஜ் நினைவு மலர்

மறைந்த இயக்குநர் கே.ஜி. ஜார்ஜின் நினைவைப் போற்றும்விதமாக மலையாளத்தில் வெளியாகியுள்ள மலரில் எனது கட்டுரை இடம் பெற்றுள்ளது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் நண்பர் ஷாஜி.

மரங்களின் கடல்

புதிய சிறுகதை நரேந்திரன் ஒரு ஜப்பானிய நிறுவனத்தில் வேலை செய்து வந்தான். ஒவ்வொரு ஆண்டும் அவர்களது அலுவலகத்திலிருந்து பத்துப் பேர் தேர்வு செய்யப்பட்டு ஜப்பான் சுற்றுலா அனுப்பி வைக்கபடுவார்கள். இந்த முறை அவன் தேர்வு செய்யப்பட்டிருந்தான். அயோகிகஹாரா என்ற புகழ்பெற்ற வனத்தில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இணையத்தில் தேடி அந்தக் காட்டின் காணொளிகளைப் பார்த்தான். தற்கொலைக்குப் புகழ்பெற்ற காடு என்றார்கள்.. அவர்கள் நிறுவனத்தில் நேரந்தவறாமை, முழுமையான ஈடுபாட்டுடன் வேலை செய்வது. உரத்த சப்தமின்றிப் பணியாற்றுவது அடிப்படை விதிகளாகும். …

மரங்களின் கடல் Read More »

ரஷ்ய வெளிச்சம்

‘மாஸ்கோவின் மணியோசை’  வாசிப்பனுபவம். ரம்யா ரோஷன் ரஷ்ய இலக்கியமும் எழுத்தாளர்களும் என்றுமே எனக்கு ஆச்சர்யம் தான்.ரஷ்ய எழுத்தாளர்கள் நிச்சயம் தத்துவவாதிகளாகவும் சிந்தனையாளர்களாகவும் இருந்திருக்க வேண்டும். சமூகத்தை இவ்வளவு அக்கறையோடும், கவலையோடும், உணர்ச்சியோடும் பார்க்கும் இலக்கியம் வேறெதுவும் இல்லை என்றே எனக்குத் தோன்றும். நம்மில் பலர் ரஷ்ய இலக்கியங்களை ரசிக்க காரணம் எஸ்.ரா ஐயா வாக தான் இருக்க முடியும். ரஷ்ய இலக்கியத்தின் நிகரற்ற எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்து அவர் பேசியதும் எழுதியதும் ஏராளம். ரஷ்ய இலக்கியம் குறித்த …

ரஷ்ய வெளிச்சம் Read More »

தண்ணீரைத் தேடி

The Naked Island படத்தில் தொலைதூரத் தீவு ஒன்றில் வாழும் ஆணும் பெண்ணும் விவசாயம் செய்கிறார்கள் கடலின் உப்பு நீரைக் கொண்டு விவசாயம் செய்ய முடியாது என்பதால் நல்ல தண்ணீரைத் தேடி தீவின் மறுகரைக்குச் செல்கிறார்கள். வாளிகளில் தண்ணீரைச் சேகரித்து, தங்கள் தீவுக்குக் கொண்டு வருகிறார்கள். பாறைவெடிப்புகளுக்குள் நீளும் பாதையில் தண்ணீர் வாளிகளைக் கொண்டு செல்கிறார்கள். கிட்டத்தட்ட முதுகுத்தண்டு உடைந்துவிடுமளவு கடினமான பணி. அந்தப் பெண் இரண்டு பக்கமும் இரண்டு தண்ணீர் வாளிகளைச் சுமந்தபடி உயரமான பாதையில் …

தண்ணீரைத் தேடி Read More »

பாதிப்படம்

புதிய குறுங்கதை வீட்டில் அப்பாவும் அம்மாவும் சண்டை போட்டுக் கொள்ளும் நாளில் அப்பா கட்டாயம் சினிமாவிற்குப் போவார். அது சில நேரம் இரவு செகண்ட் ஷோவாகக் கூட இருக்கக் கூடும். அப்படிச் சினிமாவிற்குப் போகும் போதெல்லாம் அவனையும் அழைத்துக் கொண்டு போவார். ஆகவே அப்பா அம்மாவின் சண்டை சிறுவனான அவனை மகிழ்ச்சிப்படுத்தவே செய்தது. “என்னை இப்படி விட்டுட்டு நீங்க சினிமாவுக்குப் போனா நான் செத்துப் போயிருவேன் பாத்துக்கோங்க“ என்று அம்மா கத்துவாள். அப்பா அதைக் காது கொடுத்துக் …

பாதிப்படம் Read More »