சினிமா

ரிதுபர்னோ கோஷின் தாகூர்

வங்காள இயக்குநர் ரிதுபர்னோ கோஷ் மகாகவி தாகூரைப் பற்றி ஒரு ஆவணப்படம் எடுத்துள்ளார். Jeevan Smriti என்ற இந்த ஆவணப்படமே கோஷின் கடைசிப்படம். இப்படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. ஆனால் இன்று இணையத்தில் காணக்கிடைக்கிறது. 12 தேசிய விருதுகளை பெற்றுள்ள ரிதுபர்னோ கோஷ் கவித்துவமான சினிமாவை உருவாக்கியதில் முன்னோடி. இவர் தாகூரின் கதைகளை சிறந்த திரைப்படங்களாக உருவாக்கியிருக்கிறார். இந்த ஆவணப்படம் தாகூரின் 150வது ஆண்டினை முன்னிட்டு மத்திய அரசின் நிதி உதவியோடு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதுபோலவே சத்யஜித்ரே தாகூரைப் பற்றி …

ரிதுபர்னோ கோஷின் தாகூர் Read More »

மீட்கப்படும் உண்மைகள்

. The Dig என்ற புதிய பிரிட்டிஷ் திரைப்படத்தைப் பார்த்தேன். ஜான் பிரஸ்டன் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு சைமன் ஸ்டோன் இயக்கிய படம் 1939 ஆம் ஆண்டு நடைபெற்ற சுட்டன் ஹூ அகழ்வாராய்ச்சியின் நிகழ்வுகளைப் பின்புலமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. அகழ்வாராய்ச்சியை மையமாகக் கொண்டு இத்தனை உணர்ச்சிப்பூர்வமாக ஒரு திரைப்படத்தை எடுத்திருப்பது வியப்பளிக்கிறது. மிகச் சிறந்த ஒளிப்பதிவு. படத்தொகுப்பு மற்றும் சிறந்த நடிப்பு படத்தோடு நம்மை ஒன்றிப் போகச் செய்கிறது. நிறைய நேரங்களில் நாம் ஒரு திரைப்படம் …

மீட்கப்படும் உண்மைகள் Read More »

வீடு திரும்பிய நாட்கள்

ரஷ்ய இயக்குநர் பாவெல் லுங்கின் இயக்கிய இஸ்ரேலியத் திரைப்படம் Esau. பைபிள் கதை ஒன்றின் நவீன வடிவமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இஸ்ரேலிய எழுத்தாளர் மீர் ஷாலேவின் நாவலை மையமாகக் கொண்ட இந்தப்படம் பிரிந்த சகோதரர்கள் ஒன்று சேரும் போது என்ன நடக்கிறது என்பதை விவரிக்கிறது “அன்றிலிருந்து இன்றுவரை மகிழ்ச்சியும் துரோகமும் ஒன்றுபோலவே இருக்கிறது“ என்று படத்தின் ஒரு காட்சியில் ஏசா குறிப்பிடுகிறார். அது தான் படத்தின் மையப்புள்ளி குடும்ப உறவில் ஏற்பட்ட விரிசலும் கசப்புணர்வும் காலம் மாறினாலும் விலகிப்போய்விடுவதில்லை. …

வீடு திரும்பிய நாட்கள் Read More »

ஆசையின் மலர்கள்

டேவிட் லீன் இயக்கிய Brief Encounter ஒரு அழகான காதல் கதை. காதலிக்கும் இருவரும் நடுத்தரவயதைச் சேர்ந்தவர்கள். தற்செயலாக ஏற்படும் நட்பு காதலாக மாறுகிறது. ஒரு ரயில் நிலையத்தின் பின்புலத்தில் இப்படி ஒரு அழகான காதல்கதையை உருவாக்கியிருப்பது எழுத்தாளர் நோயல் கோவர்ட்டின் தனித்துவம். ரஷ்ய நாவல் ஒன்றைப் படிப்பது போலவே இருக்கிறது. மில்ஃபோர்ட் செல்வதற்காக லாரா ரயில் நிலையத்தில் காத்திருப்பதில் படம் துவங்குகிறது. அப்போது நாம் காணும் காட்சி படத்தின் பிற்பகுதியில் மறுபடியும் இடம்பெறுகிறது. ஆரம்பக் காட்சியின் …

ஆசையின் மலர்கள் Read More »

புகைப்படம் சொல்லும் உண்மை

ஒரு புகைப்படத்தால் உலகத்தையே தன் பக்கம் திருப்ப முடியும். சிறந்த புகைப்படக்கலைஞர்கள் சமகாலப் பிரச்சனைகளை உலகின் கவனத்திற்குக் கொண்டு வந்ததில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்கள். குறிப்பாக உலகப்போர் மற்றும் நாஜி இனப்படுகொலையின் குரூரங்களையும் ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சின் பாதிப்புகளையும் உலகமறியச் செய்ததில் புகைப்படக்கலைஞர்களின் பங்கு முக்கியமானது. இன்றும் அழிந்து வரும் கானுயிர் வாழ்க்கை மற்றும் பற்றி எரியும் சமூகப்பிரச்சினைகளைத் தேடிப் புகைப்படக்கலைஞர்கள் பல்வேறு நாடுகளுக்குப் பயணிக்கிறார்கள். தனது புகைப்படத்தின் வழியே பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வுரிமையை மீட்டுத்தருகிறார்கள். புகைப்படம் பொய் …

புகைப்படம் சொல்லும் உண்மை Read More »

உலகம் அறியாத காதல்.

ரோம் நகரிலுள்ள பழைய குடியிருப்பு ஒன்றில் மேல் மாடியில் வசிக்கிறாள் அன்டோனியெட்டா. அவள் ஆறு பிள்ளைகளின் தாய். அவளது கணவன் இமானுவேல் முசோலினியின் தீவிர விசுவாசி. கட்சி உறுப்பினர். 1930 களில் ரோமில் கட்டப்பட்ட மிகப் பெரிய வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு ஒன்றில் அவர்கள் வாழுகிறார்கள். ஒரு நாள் காலை அவள் படுக்கையிலிருந்து எழுந்து தனக்கான காபியைத் தயாரித்து அருந்திக் கொண்டு பிள்ளைகள் ஒவ்வொருவராக எழுப்பிவிடுகிறாள். படுக்கையிலிருந்த கணவனை எழுப்பி நேரமாகிவிட்டது என்று துரத்துகிறாள். அவளது காபியின் …

உலகம் அறியாத காதல். Read More »

கடற்கரைக் காற்று

மலையாள எழுத்தாளர் சி.வி. பாலகிருஷ்ணன் தனக்குப் பிடித்தமான சிறந்த திரைப்படங்களைப் பற்றி ஒரு தொடர் எழுதியிருக்கிறார். அது சினிமாவின் இடங்கள் என்ற நூலாக வெளிவந்துள்ளது. இதனைத் தமிழாக்கம் செய்திருப்பவர் கவிஞர் ஸ்ரீபதிபத்மநாபா. சுவாரஸ்யமான புத்தகம். அதில் வரும் ஒரு கட்டுரையின் சிறுபகுதியை மீள்பிரசுரம் செய்கிறேன் •• கடற்கரைக் காற்று சி.வி. பாலகிருஷ்ணன் தமிழில்:  ஸ்ரீபதிபத்மநாபா •• ஒரு பத்திரிகையாளர் நடிகை ஷீலாவிடம் செம்மீன் படத்தின் கருத்தம்மா கதாபாத்திரத்தைக் குறித்துக் கேட்டார். ஷீலா இவ்வாறு பதில் சொன்னார்: ”அது …

கடற்கரைக் காற்று Read More »

மறையாத அதிகாரம்

.பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின் போது இலங்கையின் தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக வெள்ளைக்காரர்கள் இருந்தார்கள். அவர்கள் குறுநில மன்னர்களைப் போல மக்கள் மீது அதிகாரம் செலுத்தினார்கள். சொகுசான வாழ்க்கையை வாழ்ந்தார்கள்.. அப்படிப்பட்ட ஒருவரின் கதையைத் தான் Elephant Walk திரைப்படம் விவரிக்கிறது. படம் ஜான் வைல் என்ற தேயிலைத் தோட்ட உரிமையாளர் இங்கிலாந்திற்கு வருவதில் துவங்குகிறது. அங்கே ரூத் என்ற வாடகை நூலகத்தினை நடத்தி வரும் இளம்பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறான் வைல். ரூத்திற்கு இலங்கையைப் பற்றி எதுவும் …

மறையாத அதிகாரம் Read More »

சின்னஞ்சிறு மலை ரயில்

மலைரயிலில் பயணம் செய்யும் போது நமது வயது கரைந்து போய்விடுகிறது. குறிப்பாகக் குகைகளுக்குள் ரயில் செல்லும் போது ஏற்படும் இருட்டில் உடனிருக்கும் பயணிகள் கூச்சலிடும் போது நாமும் இணைந்து கத்துகிறோம். மரங்களுக்குள்ளும் பள்ளத்தாக்கின் மீதும் பெரிய பாலத்தைக் கடந்தும் ரயில் செல்லும் போது நாம் புதுவகை அனுபவத்தைப் பெறுகிறோம். உலகின் மிகச்சிறிய மலைரயிலாகக் கருதப்படுவது சீனாவின் ஜியாங் நிலக்கரி சுரங்கத்திற்கு அருகில் இயங்கும் ரயில் சேவையாகும். இந்த ரயில் சேவை பற்றிய ஒரு ஆவணப்படத்தைப் பார்த்தேன். நாற்பது …

சின்னஞ்சிறு மலை ரயில் Read More »

கைகளின் இயக்கம்

1984ம் ஆண்டுக் கான்ஸ் திரைப்படவிழாவில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த இயக்குநர் ராபர்ட் ப்ரெஸனை நேரில் சந்தித்து ஒரு நேர்காணல் எடுக்க விரும்பிய நான்கு இளைஞர்கள் பகலிரவாக அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு தொலைப்பேசி செய்தபடியே இருந்தார்கள். ராபர்ட் ப்ரெஸன் பத்திரிக்கையாளர்களைச் சந்திக்க விரும்பாதவர். நேர்காணல்களில் விருப்பமில்லாதவர். ஆகவே அவர்களின் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை. இதற்கிடையில் அந்த இளைஞர்கள் திரைப்படவிழாவிற்கு வந்திருந்த லூயி மால், பால் ஷ்ராடர் தார்க்கோவ்ஸ்கி பல்வேறு இயக்குநர்களிடம் ராபர்ட் ப்ரெஸன் பற்றிப் பேட்டி எடுத்து அதைத் …

கைகளின் இயக்கம் Read More »