ரிதுபர்னோ கோஷின் தாகூர்
வங்காள இயக்குநர் ரிதுபர்னோ கோஷ் மகாகவி தாகூரைப் பற்றி ஒரு ஆவணப்படம் எடுத்துள்ளார். Jeevan Smriti என்ற இந்த ஆவணப்படமே கோஷின் கடைசிப்படம். இப்படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. ஆனால் இன்று இணையத்தில் காணக்கிடைக்கிறது. 12 தேசிய விருதுகளை பெற்றுள்ள ரிதுபர்னோ கோஷ் கவித்துவமான சினிமாவை உருவாக்கியதில் முன்னோடி. இவர் தாகூரின் கதைகளை சிறந்த திரைப்படங்களாக உருவாக்கியிருக்கிறார். இந்த ஆவணப்படம் தாகூரின் 150வது ஆண்டினை முன்னிட்டு மத்திய அரசின் நிதி உதவியோடு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதுபோலவே சத்யஜித்ரே தாகூரைப் பற்றி …









