சினிமா

எல் வயலின்

வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்வது நமது செயல்பாட்டில் தானிருக்கிறது. சுயலாபங்களுக்காக சகமனிதர்களை ஏமாற்றவும் காட்டிக் கொடுக்கவும் தயங்காத மனநிலை வளர்ந்து விஸ்வரூபம் கொண்டுள்ள சூழலில் எளிய மனிதர்களின் முக்கியத்துவத்தை மறுபடி மறுபடி எடுத்து சொல்லவேண்டியிருக்கிறது. குறிப்பாக சரித்திரம் பற்றிய நமது பொதுகருத்தில் தலைவர்களும், சாதனையாளர்களும், மகாராஜாக்களும், சர்வாதிகாரிகளும் மட்டுமே நிரம்பியிருக்கிறார்கள். சமூக மாற்றத்திற்கான உயிர் துறந்த சாதாரண மனிதர்கள் எவரும் அடையாளப்படுத்தபடவேயில்லை. சமூகமாற்றங்கள் அடித்தட்டு மகக்ளின் நம்பிக்கையும் உறுதுணையும் இன்றி ஒரு போதும் சாத்தியமாவதேயில்லை . அந்த உண்மையை …

எல் வயலின் Read More »

குரசேவாவின் நூறுவயது.

அகிரா குரசேவாவிற்கு இன்று நூறாவது பிறந்த நாள்.  உலக சினிமாவின் தனிப்பெரும் ஆளுமையான குரசேவா 1910ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி பிறந்தவர். தற்செயலாக சில நாட்களுக்கு முன்பு அகிரா குரசேவாவின் வாழ்க்கை வரலாற்று நூலான Something Like An Autobiography  யை ஒரு தகவலுக்காக புரட்டிக் கொண்டிருந்தேன்.  மௌனப்படங்கள் திரையிடும் அரங்குகளில் தனது சகோதரன் பின்னணி இசை அமைப்பவராக வாழ்ந்ததையும் அவரது மரணத்தையும் பற்றிய குரசேவாவின் நினைவுகளை மறுபடி வாசித்தபோது அது தனியே திரைப்படமாக்க வேண்டிய …

குரசேவாவின் நூறுவயது. Read More »

மௌனப்பனி.

2007ம் ஆண்டிற்கான தேசிய விருது பட்டியலில் சிறந்த முதல்பட இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவாளர் விருது உள்ளிட்ட விருதுகளையும் ஒசியான் விருது உள்ளிட்ட 18 முக்கிய விருதுகளை பெற்றுள்ள ஊழ்ர்க்ஷ்ங்ய்  சமீபத்தில் நான் பார்த்த படங்களில் மிக முக்கியமானதாகும். சிவாஜி சந்திரபூஷன் இயக்கத்தில் உருவான இப்படம் இமயமலையின் பனிசூழ்ந்த தனிமையில் வாழும் ஒரு குடும்பத்தின் கதையை விவரிக்கிறது. படத்தை முழுமையாக கறுப்பு வெள்ளையில் உருவாக்கியிருக்கிறார்கள் என்பதே இதன் தனிச்சிறப்புதற்செயலாக இந்த படத்தின் சிறிய முன்னோட்டம் ஒன்றினை இணையத்தில் கண்டேன். …

மௌனப்பனி. Read More »

துயரத்தின் சாலை.

சமகால சீனப்படங்கள் ஒரு பக்கம் ஹாலிவுட் படங்களோடு போட்டியிடும் ஆக்சன் படங்களாக வெளியாகின்றன. இன்னொரு பக்கம் மிக யதார்த்தமாக வாழ்வின் பன்முகங்களை நெருக்கமாக சித்தரிக்கின்றன. சமீப காலத்தில் நான் பார்த்த மிக சிறந்த படங்களில் பாதி சீனப்படங்களே. சீனாவின் புதிய தலைமுறை சினிமா என்று கொண்டாடப்படும் இந்த படங்கள் உலக திரைப்பட விழாக்களில் தனிகவனம் பெற்று வருகின்றன. பெரும்பான்மை படங்களின் அடித்தளம் எளிய மக்களின் வாழ்க்கையும் அதில் ஏற்படும் சிக்கல்கள் சிதைவுறும் கனவுகள் பற்றியதே. 2007ம் ஆண்டிற்கான …

துயரத்தின் சாலை. Read More »

மோனோநோகி.

ஜப்பானின் புகழ்பெற்ற அனிமேஷன் இயக்குனர் ஹயோ மியாசகி (Hayao Miyazaki  )இயக்கிய 1997ல் வெளியான Princess Mononoke படத்தை கடந்த ஒருவாரத்தில் நான்குமுறை பார்த்துவிட்டேன். சமீபத்தில் அவதார் திரைப்படம் ஏற்படுத்திய வியப்பை விடவும் பலமடங்கும் இந்த படம் என்னை பாதித்தது. தொழில்நுட்ப ரீதியாகவும் கற்பனையான கதை சொல்லும் முறையிலும் இதுவரை நான் பார்த்த அனிமேஷன் படங்களில் இதுவே ஆகச்சிறந்தது என்பேன். மியாசகியின் அனிமேஷன் படங்களை ஒவ்வொரு குழந்தைகளும் அவசியம் காணவேண்டும். குறிப்பாக சிறார்பள்ளிகள் மற்றும் பூங்காங்களில் இவை …

மோனோநோகி. Read More »

கசக்கும் காமம்.

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான J. M.கூட்ஸியின் நாவல் Disgrace  இது 1999ம் ஆண்டு புக்கர் பரிசு பெற்றது. கடந்த ஆண்டு இதைத் திரைப்பட மாக்கியிருக்கிறார் இயக்குனர் ஸ்டீவ் ஜேக்கப்ஸ். ஜான் மால்கோவிச்  டேவிட் லூரி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் நான் பார்த்த மிக அற்புதமான படமிது. டேவிட் லூரி ஐம்பது வயதைக் கடந்த ஆங்கில பேராசிரியர். தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் உள்ள பல்கலைகழகத்தில் பணியாற்றுகிறார். அவருக்குள் அடங்காத காமம் எப்போதுமே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. வாடிக்கையாக …

கசக்கும் காமம். Read More »

எஷ்னாபூரின் புலி.

புகழ்பெற்ற ஜெர்மனிய இயக்குனரான ப்ரிட்ஜ் லாங்கின் இந்திய காவியங்கள் என்று போற்றப்படும் The Tiger of Eschnapur  மற்றும் The Indian Tomb ஆகிய இரண்டு படங்களை சமீபமாக பார்த்தேன். 1959ம் ஆண்டு வெளியான இந்தப் படங்கள் ஜெர்மனியில் பெரிய வெற்றிபெற்றவை. இந்தியாவில் படமாக்கபட்ட வெளிநாட்டு படங்களில்  லாங்கின் இந்தப் படங்களே மிக பிரம்மாண்டமான முயற்சியாகும். ராஜஸ்தானில் பெரும்பகுதியான படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. மற்றவை ஜெர்மனிய ஸ்டுடியோக்களின் அரங்கில் உருவாக்கபட்டிருக்கின்றன. ஈஸ்ட்மென் கலரில் உருவாக்கபட்ட இந்த இரண்டு படங்களையும் ஒரு …

எஷ்னாபூரின் புலி. Read More »

மனசாட்சியின் கண்கள்

ஆர்மீனியர்களுக்கும் சென்னைக்குமான தொடர்பு மிக பழமையானது. சென்னை பிராட்வே பகுதியில் ஆர்மீனியன் வீதி இருக்கிறது. இங்கே மிக பழமையான ஒரு புனிதமேரி தேவாலயம் இருக்கிறது. 1772ம் ஆண்டு கட்டப்பட்ட ஆலயமது. இதன் உள்ளே  சென்னையில் வாழ்ந்து இறந்து போன ஆர்மீனியர்களின் கல்லறைதோட்டம் உள்ளது.  அந்த சமாதிகற்களில் ஆர்மீன மொழியில் அவர்களை பற்றிய விபரங்கள் எழுதப்பட்டிருக்கின்றன 1794ம் ஆண்டு ஆர்மீனிய மொழியில் வெளியான முதல் செய்திதாள் அஸ்தரார் சென்னையில் இருந்தே அச்சிடப்பட்டது. அதை அச்சிட்ட ஆராதுôன் ஷ்மாவோன் சென்னையில் …

மனசாட்சியின் கண்கள் Read More »

போர் செய்யும் புத்தன்.

எல்லாக் கலைகளைப் போலவே சண்டையிடுதலும் ஒரு கலையே என்கிறார் பௌத்த துறவி போதி தர்மா. எனது பள்ளி வயதில் என்டர் தி டிராகன் திரைப்படத்தைப் பார்த்தேன். ஆங்கில படங்கள் திரையிடுவற்கு என்றே மதுரையில் சில திரையரங்குகள் இருந்தன. பெரும்பான்மை பார்வையாளர்கள் அடித்தட்டு மக்கள். ஆங்கிலம் அறியாதவர்கள். தினசரி உழைப்பாளிகள் ஆனால் அவர்களுக்கு சாப்ளினும்,கிரிகிரிபெக்கும், கிளார்க் கேபிளும், பட் ஸ்பென்சரும் மர்லின் மன்றோவும், ஆட்ரி ஹெபர்னும், உர்சுலா ஆண்ட்ருஸ்சும் நன்றாக பரிச்சயமாகியிருந்தார்கள். கைதட்டி ரசித்தார்கள் சில திரைப்படங்களுக்கு அரங்க …

போர் செய்யும் புத்தன். Read More »

பீதோவனின் காதல்.

இசைமேதை பீதோவனின் காதலைப்பற்றிய Immortal Beloved  என்ற திரைப்படத்தை நேற்றிரவு பார்த்தேன். பீதோவன் எனக்கு விருப்பமான இசைக்கலைஞர். சென்னைக்கு வந்த நாட்களில்  ஏதேதோ அறைகளில் தங்கியிருந்த போது பல இரவுகள் என்னுடன் துணையிருந்தவர் பீதோவன். அவரது இசைக்கோர்வைகளை வாக்மேனில் விடிய விடிய கேட்டுக் கொண்டிருந்திருக்கிறேன். அவர் வழியாகவே நான் மேற்கத்திய இசையின் முக்கிய கலைஞர்கள் பலரை கேட்க பழகினேன்.  மேற்கத்திய இசை பற்றி எந்த முறையான பரிச்சயமும் இன்று வரை எனக்கு கிடையாது. வெறுமனே இசை கேட்க …

பீதோவனின் காதல். Read More »