சினிமா

நீலக்குடை

        ஹிந்தி திரைப்பட உலகம் கடந்த சில ஆண்டுகளுக்குள் மிகப் பெரிய மாற்றத்திற்கு உள்ளாகியிருக்கிறது. புதிய கதை சொல்லும் முறை, புதிது புதிதான இளம் இயக்குனர்கள். மாறுபட்ட கதைகள் என்று அதன் வளர்ச்சி உலக அளவில் விரிந்துள்ளது. வழக்கமான கேளிக்கை படங்களின் வருகை ஒரு பக்கம் அதிகரித்திருந்த போதும் மறுபக்கம் மாற்றுமுயற்சிகளுக்கான வாசல் திறந்து விடப்பட்டிருக்கின்றது. குறிப்பாக பெருநகரங்களில் உருவாகியுள்ள மல்டிபிளக்ஸ் எனப்படும் சிறிய அரங்கங்களுக்கான திரைப்படங்கள் அதிகரித்துள்ளன.பெரும்பான்மை ஹிந்தி படங்களின் முக்கிய …

நீலக்குடை Read More »

தொஷிரோ மிபுனே

      ஏப்ரல் 1 மிபுனேயின் பிறந்த தினம். யார் மிபுனே என்று கேட்கிறீர்களா? பெயரைச்சொன்னால் பலருக்கும் தெரிந்திருக்காது ஆனால் அகிரா குரசேவாவின் படங்களில் சாமுராயாக நடித்தவர் என்றால் நிச்சயம் பலருக்கும் அடையாளம் தெரிந்துவிடும்.ஹாலிவுட் நடிகர்களை அறிந்துள்ள அளவு பிறமொழிகளின் நடிகர்களைக் குறித்து நாம் அதிகம் அறிந்திருக்கவில்லை. உலகத் திரைப்படங்களைக் காணும் சந்தர்ப்பம் கிடைத்த போதும் கூட படத்தின் இயக்குனர் யார் என்பதில் கொள்ளும் கவனம் யார் நடித்திருக்கிறார்கள் என்பதில் இருப்பதில்லை. ஒரு சில முகங்கள் …

தொஷிரோ மிபுனே Read More »

திரையில் ஒடிய ரயில்

தமிழ் சினிமாவிற்கும் ரயிலுக்கும் உள்ள தொடர்பு விசித்திரமானது. சாமிக்கண்ணு வின்சென்ட் என்ற ரயில்வே ஊழியர் தான் மௌனப்படங்களை ஊர் ஊராக எடுத்துச் சென்று திரையிட்டவர். ஆரம்ப கால கறுப்பு வெள்ளைப் படங்களில் கதையில் ஏற்படும் கால இட மாற்றங்களைத் தெரிவிப்பதற்காகவே ரயில் பயன்படுத்தபட்டிருக்கிறது. தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இரண்டு ரயில் காட்சிகள் எப்போதும் பசுமையாக உள்ளன. ஒன்று தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிவாஜி பத்மினி இருவரும் ரயிலில் செல்லும் காட்சி. அதுவும் பத்மினியின் அருகாமையில் உட்காருவதற்காக …

திரையில் ஒடிய ரயில் Read More »

நாயர் சான்

எனது நண்பரும் மலையாளத் திரைப்பட இயக்குனருமான ஆல்பர்ட்டுடன் இணைந்து ஒரு திரைக்கதையை விவாதித்துக் கொண்டிருந்த போது அவர் சுதந்திரப்போராட்டத்தை மையமாகக் கொண்ட ஏதாவது கதை ஒன்றைத் தனக்காகச் சிபாரிசு செய்யும்படியாகச் சொன்னார் நான் உடனே நாயர் சானின் வாழ்க்கையைப் படமாக்கலாமே என்றேன். அவர் திகைத்தபடியே யார் நாயர் சான் என்று கேட்டார்.   அவர் ஒரு மலையாளி. சுதந்திரப் போராட்ட வீரர் கேள்விபட்டதில்லையா என்றேன். தான் அப்படியொரு பேரைக்கூட கேட்டதில்லை என்றார்.நாயர் சான் மட்டுமில்லை. இந்திய சுதந்திரத்திற்காக …

நாயர் சான் Read More »

கொலையும் செய்வான் சாப்ளின்

நாடோடியாக, கோமாளியாக, சர்வாதிகாரியாக, வேலைக்காரனாக, தங்கம் தேடிச்செல்பவனாக, குத்துசண்டை வீரனாக என எவ்வளவோ கோமாளித்தனமான வேஷங்கள் புனைந்த சார்லி சாப்ளின் ஒரேயொரு படத்தில் கொலைகாரனாக நடித்திருக்கிறார். அப்படம் Monsieur Verdoux பணக்கார விதவைகள் ஒவ்வொருவராகத் தேடிச் சென்று காதலித்து திருமணம் செய்து பிறகு சொத்துக்களை அபகரிப்பதற்காக அவர்களைக் கொலை செய்துவிட்டு பணத்தைச் சுருட்டிக் கொண்டு தப்பி வாழும் ஹென்றி வெர்டாக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் சாப்ளின் நடித்திருக்கிறார் நம்ப முடியாமல் இருக்கிறதா? சாப்ளின் தோற்றம் நமக்குள் உருவாக்கியிருந்த பிம்பம் …

கொலையும் செய்வான் சாப்ளின் Read More »

ஜோதா அக்பர் – விளம்பர உப்புமா

சில ஆண்டுகளுக்கு முன்பாக கலரில் உருமாற்றப்பட்டு வெளியான மொகலே ஆசாம் பார்த்த பிறகு அக்பரையும் மொகலாய வரலாற்றையும் பற்றி அதிகம் வாசிக்க வேண்டும் என்ற உத்வேகம் உருவானது. தேடித்தேடி வாசித்தேன். கறுப்பு வெள்ளையில் இருந்து எப்படிக் கலருக்கு மாற்றினார்கள் என்ற வியப்பு படம் முழுவதுமிருந்தது. இயக்குனர் ஆசிப் முழுப்படத்தையும் கலரில் உருவாக்கவே விரும்பினார். ஆனால் தயாரிப்பாளர்களின் நெருக்கடி படத்தின் இறுதிப்பகுதி மட்டுமே கலரில் படமாக்கபட்டிருந்தது. பிருத்விராஜ் கபூர் அக்பராக நடித்திருந்ததும் மதுபாலாவும் திலீப்குமாரும் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்ததும் …

ஜோதா அக்பர் – விளம்பர உப்புமா Read More »

தெய்வம் தந்த வீடு

இரண்டு பெண்களை பலவருடமாக நான் என் நினைவிலே தேக்கி வைத்திருக்கிறேன். அவர்கள் என் கனவிலும் தனிமையிலும் எப்போதும் சப்தமின்றி இலை அசைவதை போல அசைந்து கொண்டேயிருக்கிறார்கள். ஒன்று புத்தரின் மனைவி யசோதரா. மற்றவள் சங்க இலக்கியத்தின் கவிதாயிணி வெள்ளிவீதியார். அவர் எழுதியதில் நான்கோ ஐந்தோ பாடல்கள் மட்டுமே  சங்க இலக்கியத்தில் வாசிக்க கிடைக்கின்றன. ஆனால் அந்த பாடலின் ஊடாக வெளிப்படும் காமம் தொடர்பான அவளது ஏங்குதலும் உணர்ச்சி வெளிப்பாடும் வெகு அலாதியானது. கையில்லாத ஊமை கண்ணால் காவல் …

தெய்வம் தந்த வீடு Read More »