எல் வயலின்
வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்வது நமது செயல்பாட்டில் தானிருக்கிறது. சுயலாபங்களுக்காக சகமனிதர்களை ஏமாற்றவும் காட்டிக் கொடுக்கவும் தயங்காத மனநிலை வளர்ந்து விஸ்வரூபம் கொண்டுள்ள சூழலில் எளிய மனிதர்களின் முக்கியத்துவத்தை மறுபடி மறுபடி எடுத்து சொல்லவேண்டியிருக்கிறது. குறிப்பாக சரித்திரம் பற்றிய நமது பொதுகருத்தில் தலைவர்களும், சாதனையாளர்களும், மகாராஜாக்களும், சர்வாதிகாரிகளும் மட்டுமே நிரம்பியிருக்கிறார்கள். சமூக மாற்றத்திற்கான உயிர் துறந்த சாதாரண மனிதர்கள் எவரும் அடையாளப்படுத்தபடவேயில்லை. சமூகமாற்றங்கள் அடித்தட்டு மகக்ளின் நம்பிக்கையும் உறுதுணையும் இன்றி ஒரு போதும் சாத்தியமாவதேயில்லை . அந்த உண்மையை …