சினிமா

சந்திரபாபு – தட்டுங்கள் திறக்கப்படும்.

        நேற்றிரவு சந்திரபாபு இயக்கிய தட்டுங்கள் திறக்கப்படும் என்ற படத்தைப் பார்த்தேன். சந்திரபாபுவின் நகைச்சுவை எனக்கு விருப்பமானது. அவரது பாடல்களையும் தொடர்ந்து கேட்கக் கூடியவன். சந்திரபாபுவின் குரல்  அலாதியானது. தட்டுங்கள் திறக்கப்படும் படத்தை சில வருசங்களுக்கு முன்பாக ஒரு முறை தொலைக்காட்சியொன்றில் பார்த்திருக்கிறேன். பாதியில் இருந்து பார்க்கத் துவங்கிய போது யார் இதை இயக்கியது என்று வியப்பாக இருந்தது. பிறகு அது சந்திரபாபு இயக்கிய படம் என்று தெரிய வந்ததில் இருந்து படத்தை …

சந்திரபாபு – தட்டுங்கள் திறக்கப்படும். Read More »

நூறு உலகத் திரைப்படங்கள்

எனது வலைத்தளத்தை பார்வையிடும் பலரும் உலகசினிமாவில் எதைத் தேர்வு செய்து பார்ப்பது என்ற விபரத்தை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். சிலருக்கு தனிப்பட்ட மின்னஞ்சலில் விபரங்கள் அனுப்பிய போதும் இதே சந்தேகம் தொடர்வதால் தற்போது எனக்கு விருப்பமான நூறு படங்களின் பட்டியல் ஒன்றை வெளியிடுகிறேன். இவை மட்டுமே உலகத்திரைப்படங்கள் அல்ல. இவை என் விருப்பத்தின் படி முக்கியமான நூறு திரைப்படங்கள். இதற்கு நான்கு வருசத்தின் முன்பாக உலகசினிமா புத்தக தயாரிப்பின் போது நூறு சிறந்த படங்களின் பட்டியல் ஒன்றை தயார் …

நூறு உலகத் திரைப்படங்கள் Read More »

பதேர் பாஞ்சாலி

            எங்கிருக்கிறாய் துர்கா ? இரண்டு நாட்களுக்கு முந்தைய இரவில் பதேர்பாஞ்சாலி திரைப்படத்தை பின்னிரவில் தனியாக உட்கார்ந்து பார்த்து கொண்டிருந்தேன்.  இதற்கு முன்பாக இருபது முறைகளுக்கும் மேலாக பார்த்திருக்கிறேன் என்றாலும் அந்த படம் அந்தரங்கமாக சில சலனங்களை எனக்குள் உருவாக்குகிறது என்பதற்காகவே அடிக்கடிப் பார்ப்பேன். விளக்கின் சுடர் நிசப்தமாக அசைந்து கொண்டிருப்பது போல காட்சிகளின் வழியே  ஏதோ துண்டப்பட்டு சலனம் கொள்ளத் துவங்கியிருந்தேன். முன்பு ஒரு போதும் பார்த்தறியாத ஒரு …

பதேர் பாஞ்சாலி Read More »

ராஞ்சிபூரின் மழை

        நேற்றிரவு The Rains Came  என்ற 1934 ல் வெளியான கறுப்பு வெள்ளை திரைப்படத்தை பார்த்தேன். இந்தியாவைப் பற்றி எடுக்கபட்ட பெரும்பான்மை ஆங்கில படங்கள் பொதுவாக இந்தியர்களை முட்டாள்களாகவும், இந்தியா முழுவதும் பாம்புகளும் யானைகளும் பெருகியிருப்பது போன்றும் சாமியார்கள், நரபலி, வறுமை பீடித்த மக்கள், படிப்பறிவில்லாத கிராமவாசிகள் என்று கலவையான உலகமாகவே சித்தரித்துள்ளது. அதிலும் வெள்ளைக்காரர்களை முக்கிய கதாபாத்திரமாக கொண்ட படங்களில் இந்தியர்கள் கூலிகளாகவோ, அல்லது கார் ஒட்டுனர்கள் பாம்பாட்டிகள் என்று மூன்றாம் …

ராஞ்சிபூரின் மழை Read More »

இசையறியும் ஒட்டகம்.

சமீபத்தில் நான் பார்த்த திரைப்படங்களில் மிக சிறந்தது என்று இதையே குறிப்பிடுவேன். The Story of the Weeping Camel ஒரு ஆவணப்படம். இதைஇயக்கியிருப்பவர் Byambasuren Davaa  என்ற இளம் திரைப்படக்கல்லூரி மாணவி. மங்கோலியாவின் கோபி பாலைவனத்தில் வசிக்கும் குடும்பம் ஒன்றில் நடைபெறும் சிறிய சம்பவமே இந்த ஆவணப்படத்தின் அடித்தளம். கடுமையான வெக்கையும் கடுமையான குளிரும் கொண்ட கோபி பாலைவனத்தில் மங்கோலிய  நாடோடி இனமக்கள் வசிக்கிறார்கள். அவர்களது பிரதான தொழில் ரோமத்திற்கான ஆடு வளர்ப்பது மற்றும் ரோமங்களைப் பின்னி …

இசையறியும் ஒட்டகம். Read More »

குயிலியேட்டா மசினா

        சில முகங்கள் திரையில் தோன்றியதும் நம் கவனம் முழுதுவம் அவர்களில் மீது தன்னியல்பாக குவிந்துவிடும். குறிப்பாக கறுப்பு வெள்ளைப்படங்களின் கதாநாயகிகளாக நடித்தவர்களில் பலரும் தனித்துவமான முகப் பொலிவும் உடலமைப்பும் கொண்டவர்கள். அந்த முகங்கள் மொழி கடந்து பேசக்கூடியவை. அப்படி என்னை இன்று வரை வசீகரப்படுத்திக் கொண்டிருக்கும் வெகு தனித்துவமான பெண் முகம் குயிலியேட்டா மசினாவுடையது..( Giulietta Masina) உலகப்புகழ் பெற்ற இயக்குரான பெலினியின் மனைவியும் கான்ஸ் விருது பெற்ற நடிகையுமான குயிலியேட்டா …

குயிலியேட்டா மசினா Read More »

வெர்மரின் தேவதை.

மூன்று வருடங்களுக்கு முன்பாக Girl with a Pearl Earring என்ற திரைப்படத்தை சர்வதேச திரைப்பட விழா ஒன்றில் காண நேர்ந்தது. டச்சு ஒவியரான ஜோகனஸ் வெர்மரின் வாழ்வைப் பற்றியது என்ற அறிமுகத்தோடு படம் திரையிடப்பட்டது. வெர்மரின் சில ஒவியங்களை முன்னதாகக் கண்டிருக்கிறேன். ஆனால் அவரது வாழ்வு குறித்த எதையும் வாசித்து அறிந்திருக்கவில்லை. அந்தப் படம் துவங்கிய சில நிமிசங்களிலே மொத்த அரங்கமும் நிசப்தத்தில் ஆழ்ந்து போனது.காலம் அப்படியே பின்னால் திரும்பி பதினேழாம் நூற்றாண்டிற்குள் நழுவிவிட்டதோ எனும்படியாக …

வெர்மரின் தேவதை. Read More »

நீலக்குடை

        ஹிந்தி திரைப்பட உலகம் கடந்த சில ஆண்டுகளுக்குள் மிகப் பெரிய மாற்றத்திற்கு உள்ளாகியிருக்கிறது. புதிய கதை சொல்லும் முறை, புதிது புதிதான இளம் இயக்குனர்கள். மாறுபட்ட கதைகள் என்று அதன் வளர்ச்சி உலக அளவில் விரிந்துள்ளது. வழக்கமான கேளிக்கை படங்களின் வருகை ஒரு பக்கம் அதிகரித்திருந்த போதும் மறுபக்கம் மாற்றுமுயற்சிகளுக்கான வாசல் திறந்து விடப்பட்டிருக்கின்றது. குறிப்பாக பெருநகரங்களில் உருவாகியுள்ள மல்டிபிளக்ஸ் எனப்படும் சிறிய அரங்கங்களுக்கான திரைப்படங்கள் அதிகரித்துள்ளன.பெரும்பான்மை ஹிந்தி படங்களின் முக்கிய …

நீலக்குடை Read More »

தொஷிரோ மிபுனே

      ஏப்ரல் 1 மிபுனேயின் பிறந்த தினம். யார் மிபுனே என்று கேட்கிறீர்களா? பெயரைச்சொன்னால் பலருக்கும் தெரிந்திருக்காது ஆனால் அகிரா குரசேவாவின் படங்களில் சாமுராயாக நடித்தவர் என்றால் நிச்சயம் பலருக்கும் அடையாளம் தெரிந்துவிடும்.ஹாலிவுட் நடிகர்களை அறிந்துள்ள அளவு பிறமொழிகளின் நடிகர்களைக் குறித்து நாம் அதிகம் அறிந்திருக்கவில்லை. உலகத் திரைப்படங்களைக் காணும் சந்தர்ப்பம் கிடைத்த போதும் கூட படத்தின் இயக்குனர் யார் என்பதில் கொள்ளும் கவனம் யார் நடித்திருக்கிறார்கள் என்பதில் இருப்பதில்லை. ஒரு சில முகங்கள் …

தொஷிரோ மிபுனே Read More »

திரையில் ஒடிய ரயில்

தமிழ் சினிமாவிற்கும் ரயிலுக்கும் உள்ள தொடர்பு விசித்திரமானது. சாமிக்கண்ணு வின்சென்ட் என்ற ரயில்வே ஊழியர் தான் மௌனப்படங்களை ஊர் ஊராக எடுத்துச் சென்று திரையிட்டவர். ஆரம்ப கால கறுப்பு வெள்ளைப் படங்களில் கதையில் ஏற்படும் கால இட மாற்றங்களைத் தெரிவிப்பதற்காகவே ரயில் பயன்படுத்தபட்டிருக்கிறது. தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இரண்டு ரயில் காட்சிகள் எப்போதும் பசுமையாக உள்ளன. ஒன்று தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிவாஜி பத்மினி இருவரும் ரயிலில் செல்லும் காட்சி. அதுவும் பத்மினியின் அருகாமையில் உட்காருவதற்காக …

திரையில் ஒடிய ரயில் Read More »