ராஞ்சிபூரின் மழை
நேற்றிரவு The Rains Came என்ற 1934 ல் வெளியான கறுப்பு வெள்ளை திரைப்படத்தை பார்த்தேன். இந்தியாவைப் பற்றி எடுக்கபட்ட பெரும்பான்மை ஆங்கில படங்கள் பொதுவாக இந்தியர்களை முட்டாள்களாகவும், இந்தியா முழுவதும் பாம்புகளும் யானைகளும் பெருகியிருப்பது போன்றும் சாமியார்கள், நரபலி, வறுமை பீடித்த மக்கள், படிப்பறிவில்லாத கிராமவாசிகள் என்று கலவையான உலகமாகவே சித்தரித்துள்ளது. அதிலும் வெள்ளைக்காரர்களை முக்கிய கதாபாத்திரமாக கொண்ட படங்களில் இந்தியர்கள் கூலிகளாகவோ, அல்லது கார் ஒட்டுனர்கள் பாம்பாட்டிகள் என்று மூன்றாம் …