அனுபவம்

நூலாறு

நேற்று வேலூரில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன்.  ஆழிபதிப்பகம் நடத்தும் நண்பர் செந்தில்நாதன்.  தன்னுடைய அரிய முயற்சியால் இந்தப் புத்தக கண்காட்சியைத் தனது ஆழி அறக்கட்டளை மற்றும் வேலூர் வாசகர் பேரவை அமைப்புடன் இணைந்து முதன்முறையாக துவக்கியுள்ளார்.  புத்தகக் கண்காட்சி அல்லது புத்தக திருவிழா என்பதற்கு மாற்றாக நூலாறு 2010 என்று அவர்கள் விளம்பரப்படுத்தியிருந்தது பிடித்திருந்தது. எழுத்தாளர் அழகிய பெரியவன் இந்தப் புத்தக கண்காட்சி ஒருங்கிணைப்பில் அயராது ஒடியாடி வேலை செய்து கொண்டிருந்தார், புத்தகங்கள் மீது அவர் கொண்ட …

நூலாறு Read More »

ஜல்லிக்கட்டு

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக எனது நண்பர் ராம்நாராயண் எனும் ராம்ஜி ஹோம்டிவி என்ற நியூடெல்லியில் உள்ள தொலைக்காட்சி நிறுவனத்திற்காக ஜல்லிகட்டு பற்றிய ஆவணப்படம் ஒன்றினை இயக்க முனைந்தார். அப்போது நான் அவருடைய அறைத்தோழனாக இருந்தேன். ராம்ஜி பூனா திரைப்படக்கல்லூரியில் ஒளிப்பதிவுத் துறையில் பயின்றவர். இன்று தொலைக்காட்சி தொடர்கள், விவாத நிகழ்வுகள் என்று விஜய் டிவி உள்ளிட்ட பல சேனல்களில் பரபரப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரது முதல் ஆவணப்படமது என்பதால் நாங்கள் சிறிய குழுவாக செயல்பட்டு அதை சிறப்பாக …

ஜல்லிக்கட்டு Read More »

வயது நாலு

நண்பரின் வீட்டில் அவரது நான்கு வயது மகளைச்  சந்தித்தேன்.  உன் பேரு என்னவென்று கேட்டேன். சம்ஷிகா என்றாள். உனக்கு எத்தனை வயசாகுது என்று கேட்டேன். எனக்கு நாலு வயது ஆகுது. இந்த வீட்டிலயே நான் தான் பெரிய ஆள் என்றாள். உங்க அப்பாவுக்கு எவ்வளவு வயசு ஆகுது என்று கேட்டேன். அதை போய் அவர்கிட்டே கேளு என்றாள். உனக்கு என்ன பிடிக்கும் என்றேன். அவள் ஒரு நிமிசம் கூட யோசிக்காமல் ரிமோட் கண்ட்ரோல் என்றாள். நண்பர் சிரித்தபடியே …

வயது நாலு Read More »

கனவின் மிச்சம்

சமீபத்தில் நான் பார்த்த மிகச்சிறந்த படம் தி போப்ஸ் டாய்லெட்.(ThePope’s Toilet) உருகுவே நாட்டில் தயாரிக்கபட்ட படமிது. இயக்கியவர் Cesar Charlone and Enrique Fernandez. 2007ம் ஆண்டு வெளியான இப்படம் சிறந்த அயல்மொழித் திரைப்படத்திற்காக ஆஸ்கார் விருதிற்குச் சிபாரிசு செய்யபட்டது. லத்தின் அமெரிக்க நாடான உருகுவேயில் கதை நடைபெறுகிறது. மெலோ என்ற சிறிய ஊர். உருகுவே பிரேசில் எல்லையில் உள்ளது. இந்த ஊருக்கு 1988ம் ஆண்டு போப் இரண்டாம் ஜான் பால் விஜயம் செய்யப் போவதாக …

கனவின் மிச்சம் Read More »

தொலைத்த ஆடைகள்

அறையில்லாமல் சென்னையில் அலைந்து திரிந்த நாட்களில் நிறைய தொலைத்திருக்கிறேன். சில அறைகளை நான் ஊருக்கு சென்று திரும்பிவருவதற்குள் காலி செய்து போயிருப்பார்கள். அந்த அறையில் வைக்கபட்டிருந்த எனது புத்தகங்கள் உடைகள் பைகள் யாவும் தூக்கி எறியப்பட்டிருக்கும்.அல்லது பழைய பொருட்கள் கடைக்கு போயிருக்க கூடும். அப்படியொரு முறை அறையில் ஒரு பை நிறைய புத்தகங்களும் உடைகளையும் வைத்து விட்டு இரண்டு மாத காலம் ஊருக்கு சென்று இருந்துவிட்டேன். திரும்பி வருவதற்குள் அறையில் ஏதேதோ சம்பவங்கள் நடந்திருக்கின்றன. நண்பர்களாக இருந்தவர்கள் …

தொலைத்த ஆடைகள் Read More »

கனகசபை

கனகசபை என்பது அவனது பெயர், ஆனால் அப்படி யாரும் கூப்பிட்டு நான் பார்த்தேயில்லை. பெரியவர்கள் சிறியவர்கள் எல்லோருக்கும் அவன் கனகு தான். கும்பகோணம் அருகில் உள்ள திருபுவனத்தில் வாழ்ந்தவன். நாற்பது வயதை கடந்திருக்கும். இலக்கியம் எழுத்து புத்தக வாசிப்பு என்று தன் வாழ்வை கொண்டுசெலுத்தி அற்பவயதில் இறந்து போனான். நான் அறிந்தவரை இலக்கியத்திற்காக கைக்காசை முழுமையாக செலவு செய்த ஒரே ஆள் கனகு மட்டுமே. கனகு ஒரு இலக்கியவாதிக்கு போன் செய்து பேசினால் எப்படியும் ஒரு மணி …

கனகசபை Read More »

திரை பார்த்தல்

ஒரு நாளைக்கு சராசரியாக எட்டு முதல் பத்து மணி நேரம் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். உலகில் வேறு எந்த  பொருளையும் இவ்வளவு நேரம் நான் பார்த்து கொண்டிருந்ததேயில்லை. திரையை பார்த்து கொண்டும் படித்தும் கொண்டு இருப்பது அலுப்பதேயில்லை. என்ன வசீகரமது? யாராவது ஒரு நாள் முழுவதும் கடலை பார்த்தபடியே இருந்திருக்கிறார்களா என்ன ? அல்லது ஒரு மலையை எட்டு மணி நேரம் இடைவிடாமல் பார்த்து கொண்டேயிருக்க முடிகிறதா, கொட்டும் மழையை கூட பத்து நிமிசங்களுக்கு மேல் ஆர்வமாக …

திரை பார்த்தல் Read More »

நினைவு ஒளிர்கிறது

ஒரு ஆளால் எத்தனை பேரை நினைவில் வைத்திருக்க முடியும். நான்கு பேர் சந்தித்து கொள்ளும் போது நினைவில் நானுறு பேர் பகிர்ந்து கொள்ளப்படுகிறார்கள் என்பார்கள். நினைவு கொள்ளுதல் நாம் விரும்பி உருவாவதை விட நடப்பின் வழியாக தானே உருக் கொள்வது தான் அதிகமாக ஏற்படுகிறது. சிறுவர்கள் நேற்று நடந்ததை இன்று மறந்துவிடுகிறார்கள். பலநாட்கள் எனது பையன் நேற்று நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்று தூங்கி எழுந்து கேட்டிருக்கிறான். ஒவ்வொரு வகுப்பாக என்னோடு படித்தவர்களின் பெயர்கள் முகங்களை …

நினைவு ஒளிர்கிறது Read More »

விருந்தாளிகளின் தலையணை

ஒரு நண்பரின் வீட்டில் தங்கியிருந்தேன். அவர்களுக்கு மூன்று குழந்தைகள். அவர்களது வீடு மிகச்சிறியது. இரண்டே அறைகள். ஆனாலும் அவர்களோடு நான் தங்கிக் கொள்ள வேண்டும் என்று அன்போடு சொன்னதால் இரவு தங்கியிருந்தேன். இரவு உணவு முடிந்து பேசிக் கொண்டிருந்தோம். படுப்பதற்கான பாய் தலையணைகள் கொண்டு வந்து தந்தார் நண்பரின் மனைவி. எங்கள் பேச்சு ஹாலில் சுவாரஸ்யமாக நீண்டு கொண்டிருந்தது. இடையில் தண்ணீர் குடிக்க உள்ளே எழுந்து போனபோது நண்பரின் கடைசிமகள் உறங்காமல் உட்கார்ந்தபடியே இருந்தாள். ஐந்து வயதிருக்கும். …

விருந்தாளிகளின் தலையணை Read More »

வளரும் புத்தகங்கள்.

மூன்று நாட்களுக்கு முன்பு என் கனவில் இரண்டாம் வகுப்பில் நான் படித்த பாடல் ஒன்று அப்படியே வரிமாறாமல் நினைவிற்கு வந்தது. அதைப் பாடிய டீச்சர் முகமும் குரலும் கூட எனக்கு துல்லியமாக கேட்டது. விடிந்து எழுந்து உட்கார்ந்தவுடன் அந்தப் பாடலை கடகடவென கணிணியில் அடித்துவிட்டேன். நம்பவே முடியவில்லை. எத்தனை வருசங்களாகிவிட்டது. எப்படி இந்தப் பாடல் மனதில் பசுமையாக இருக்கிறது. அதைப் பாடும்போது எங்கே கை அசைக்க வேண்டும் என்பது கூட நன்றாக நினைவிருக்கிறது. மறுபடி மறுபடி அதைப் …

வளரும் புத்தகங்கள். Read More »