அனுபவம்

தொலைத்த ஆடைகள்

அறையில்லாமல் சென்னையில் அலைந்து திரிந்த நாட்களில் நிறைய தொலைத்திருக்கிறேன். சில அறைகளை நான் ஊருக்கு சென்று திரும்பிவருவதற்குள் காலி செய்து போயிருப்பார்கள். அந்த அறையில் வைக்கபட்டிருந்த எனது புத்தகங்கள் உடைகள் பைகள் யாவும் தூக்கி எறியப்பட்டிருக்கும்.அல்லது பழைய பொருட்கள் கடைக்கு போயிருக்க கூடும். அப்படியொரு முறை அறையில் ஒரு பை நிறைய புத்தகங்களும் உடைகளையும் வைத்து விட்டு இரண்டு மாத காலம் ஊருக்கு சென்று இருந்துவிட்டேன். திரும்பி வருவதற்குள் அறையில் ஏதேதோ சம்பவங்கள் நடந்திருக்கின்றன. நண்பர்களாக இருந்தவர்கள் …

தொலைத்த ஆடைகள் Read More »

நினைவு ஒளிர்கிறது

ஒரு ஆளால் எத்தனை பேரை நினைவில் வைத்திருக்க முடியும். நான்கு பேர் சந்தித்து கொள்ளும் போது நினைவில் நானுறு பேர் பகிர்ந்து கொள்ளப்படுகிறார்கள் என்பார்கள். நினைவு கொள்ளுதல் நாம் விரும்பி உருவாவதை விட நடப்பின் வழியாக தானே உருக் கொள்வது தான் அதிகமாக ஏற்படுகிறது. சிறுவர்கள் நேற்று நடந்ததை இன்று மறந்துவிடுகிறார்கள். பலநாட்கள் எனது பையன் நேற்று நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்று தூங்கி எழுந்து கேட்டிருக்கிறான்.  ஒவ்வொரு வகுப்பாக என்னோடு படித்தவர்களின் பெயர்கள் முகங்களை …

நினைவு ஒளிர்கிறது Read More »

விருந்தாளிகளின் தலையணை

ஒரு நண்பரின் வீட்டில் தங்கியிருந்தேன். அவர்களுக்கு மூன்று குழந்தைகள். அவர்களது வீடு மிகச்சிறியது. இரண்டே அறைகள். ஆனாலும் அவர்களோடு நான் தங்கிக் கொள்ள வேண்டும் என்று அன்போடு சொன்னதால் இரவு தங்கியிருந்தேன். இரவு உணவு முடிந்து பேசிக் கொண்டிருந்தோம். படுப்பதற்கான பாய் தலையணைகள் கொண்டு வந்து தந்தார் நண்பரின் மனைவி. எங்கள் பேச்சு ஹாலில் சுவாரஸ்யமாக நீண்டு கொண்டிருந்தது. இடையில் தண்ணீர் குடிக்க உள்ளே எழுந்து போனபோது நண்பரின் கடைசிமகள் உறங்காமல் உட்கார்ந்தபடியே இருந்தாள். ஐந்து வயதிருக்கும். …

விருந்தாளிகளின் தலையணை Read More »

காந்தம்

 சென்ற வாரத்தில் ஒருநாள் முன்பாக அசோக்பில்லர் சாலையில் ஒரு ஆளைக் கண்டேன். வயது ஐம்பதை கடந்திருக்கும். மெலிந்து கண்கள் ஒடுங்கி போனவளாகயிருந்தார். முதுகில் ஒரு பாலிதீன் பை ஒன்று தொங்கி கொண்டிருந்தது. கையில் ஒரு குச்சியை வைத்துக் கொண்டு சாலையோரம் எதையோ தேடுவது போல சுற்றிக் கொண்டேயிருந்தார் அப்போது தான் கவனித்தேன். அவரது கையில் இருந்த குச்சி முனையில் ஒரு வட்டு போலிருந்தது. அந்த வட்டில் தரையில் கிடந்த ஆணிகள், துருப்பிடித்த சாவிகள், நட்டுகள் மற்றும் சிறு இரும்பு …

காந்தம் Read More »

தற்செயல்

கடற்கரை மணலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தேன். தற்செயலாக துருப்பிடித்த ஒரு பூட்டு கையில் தட்டுபட்டது. யாருடைய பூட்டு அது என்று தெரியவில்லை. மிகச் சிறியதாக மணலேறிப்போயிருந்தது. யார் இதை கொண்டுவந்தது. எதற்காக கொண்டு வந்திருப்பார்கள். எப்போதிலிருந்து இது கடற்கரையில் கிடக்கிறது. யோசிக்க யோசிக்க வேடிக்கையான எண்ணங்கள் உருவாக ஆரம்பித்தன. இந்த பூட்டால் இரண்டு மணல்துகள்களை ஒன்று சேர்த்து பூட்டமுடியுமா? இல்லை கடல் அலையை கரை வரவிடாமல் பூட்டமுடியுமா? கடலையும் கால்களையும் ஒன்று சேர்க்கும் பூட்டு இருக்கிறதா? இல்லை …

தற்செயல் Read More »

கால்களால் சிந்திக்கிறேன்.

கனடாவில் வாழும் கவிஞர் மெலிஞ்சிமுத்தனுடன் ஒரு நாள் பேசிக் கொண்டிருந்த போது அவர் தினமும் பத்து மைல் தூரமாவது நடந்து போவதாகவும் அப்படி நடக்கும்போதெல்லாம் எதையோ யோசித்தபடியே நடப்பது தனது இயல்பு என்றார். என்ன யோசிப்பீர்கள் என்று கேட்டதும் அவர் சிரித்தபடியே  உண்மையில் நான் கால்களால் சிந்தித்தபடியே நடக்கிறேன் என்றார். எனக்கு அவர் சொன்ன கால்களால் சிந்திக்கிறேன் என்ற பிரயோகம் பிடித்திருந்தது. நடைப்பயிற்சியின் போது நானும் அப்படியாக உணர்ந்திருக்கிறேன். கால்களால் சிந்திப்பது என்பது உயர்வானது என்று தோன்றியது. …

கால்களால் சிந்திக்கிறேன். Read More »

எலிக்கடி.

சென்னைக்கு வந்த புதிதில்  மாம்பலத்தில் ஒரு நண்பரது அறையில் தங்கியிருந்தேன். அந்த அறையை ஒரு சர்வாதிகாரி நிர்வகித்து வந்தார். அவரது கட்டுபாட்டின் கீழே நான்கு வேலையில்லாத பசங்கள் தங்கியிருந்தார்கள். நான் ஐந்தாவது ஆளாக ஊரிலிருந்து கிளம்பி அந் அறைக்கு வந்திருந்தேன்.  (அவரை ஏன் சர்வாதிகாரி என்கிறேன் என்பதை இரண்டு பத்திகளுக்கு பிறகு நீங்களே உணர்ந்து கொள்வீர்கள். )  அறைக்கு வந்த முதல்நாள் அவர் என்னை தனியே அழைத்து கையில் பத்து ருபாய் தந்து வெளியே சாப்பிட்டு கொள்ளும்படியாக அன்புக் கட்டளையிட்டார். …

எலிக்கடி. Read More »

சிறு குறிப்பு

இயக்குனர் பாலாவின் புதிய திரைப்படமான அவன் இவன் படப்பிடிப்பு செங்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் நடைபெற்று வருகிறது. வசனம் எழுதுவதால் படப்பிடிப்பு தளத்தில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக இருந்துவருகிறேன். அங்கே இணையத்தொடர்பு மிக மெதுவாக இருப்பதால் தொடர்ந்து இணையத்தில் எழுத சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. மின்னஞ்சல்களுக்கு பதில் அனுப்புவது கூட மூன்று நாட்களுக்கு ஒரு முறையே சாத்தியமாகிறது. படப்பிடிப்பு மார்ச் இறுதி வரை தொடர்கிறது. இன்னொரு பக்கம்  புதிய நாவல் ஒன்றை எழுதிக் கொண்டிருப்பதால் வேறு விசயங்களில் …

சிறு குறிப்பு Read More »

சில பாடல்கள்

எனது நண்பரும் திரைப்படஇயக்குனருமான சுகா இயக்கும் படித்துறை படத்திற்காக இளையராஜாவின் இசையில் ஒரு பாடல் எழுதியிருக்கிறேன். இசைமேதை இளையராஜாவை சந்தித்து பேசிய நாட்கள் மறக்க முடியாத அனுபவம். கல்லூரி வயதிலிருந்து இன்று வரை நான் இளையராஜாவின் ரசிகனே. எனது பயணங்களில் எப்போதுமே துணை அவரது பாடல்களே. இந்த படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாக இருக்கின்றன. இந்த படத்தினை தயாரித்திருப்பவர் நடிகர் ஆர்யா. இலக்கியத்திலும் இசையிலும் தீவிர ஆர்வம் கொண்டவர் சுகா ( எங்களுக்கு சுரேஷ் கண்ணன். ) …

சில பாடல்கள் Read More »

இரவு விளக்குகள்

விடிகாலை நாலு மணிக்கு உறக்கம் கலைந்து எழுந்து கொண்டேன். அறையில் ஒரேயொரு இரவு விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. இரவு விளக்குகள் நம் உறக்கத்தை உற்று பார்த்தபடியே இருக்கின்றன. இந்த இரவில் உலகில் எத்தனை ஆயிரமாயிரம் இரவு விளக்குகள் விழித்து கொண்டிருக்கும். அவை என்ன காண்கின்றன. இரவு விளக்குகள் தன் ஒளியை தானே  முகத்திரையிட்டு ஒளித்து கொள்கின்றன. அவை நம் உறக்கத்தின் துணைவன் போலும். பொதுவில் இரவு விளக்குகள் அதிகம் நம் கவனத்தை கவராதவை. அதன் வெளிச்சத்தில் அறை நிற …

இரவு விளக்குகள் Read More »