அனுபவம்

மைனா அலையும் பகல்

கடந்த வாரத்தில் திருச்சுழி, நரிக்குடி, பெருநாழி, கமுதி, மண்டலமாணிக்கம், பார்த்திபனூர். ஆர் எஸ்.மங்கலம், பரமக்குடி,  என்று ராமநாதபுர மாவட்டத்தின் உள்ளாகவே சுற்றியலைந்து கொண்டிருந்தேன். பனைமரங்கள், புழுதி பறக்கும் சீரற்ற சாலைகள். சாலையின் இருபுறமும் மண்டி கிடக்கும் வேலிச்செடிகள். உலர்ந்து வெடித்துபோன கண்மாய்கள், கண்ணுக்கு எட்டியவரை நடமாட்டமே இல்லாத அத்துவான வெளி. உலர்ந்தமேகங்கள்.உக்கிரமான சூரியன். வெயில் ததும்பும் கிராமவீதிகள். காலத்தின் முன்னோட்டத்திலிருந்து தன்னை துண்டித்துக் கொண்டுவிட்டதோ எனும்படியாக தனித்து போயிருக்கும் ஊர்கள். தொலைக்காட்சி ஒன்று தான் கிராமங்களின் ஒரே …

மைனா அலையும் பகல் Read More »

ஜெயகாந்தன் விழா.

இன்று சென்னைச் சங்கமத்தின் ஒருபகுதியாக நடைபெற்ற தமிழ் சங்கம விழாவில் ஜெயகாந்தன் சிறுகதைகள் பற்றிப் பேசினேன். நிகழ்விற்கு ஜெயகாந்தன் வந்திருந்தார். மேடையில் அவரது அருகாமையில் அமர்ந்திருந்தது மிக சந்தோஷமாக இருந்தது. ஜெயகாந்தன் இன்று ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால் அந்த  மௌனமான அவதானிப்பு மற்றும் பேச்சை கூர்ந்து கேட்ட விதம் மிகவும் பிடித்திருந்தது. காலை அமர்வு என்பதால் அதிக கூட்டமில்லை.நூறு பேருக்கும் குறைவாகவே இருக்ககூடும். ஜெயகாந்தன் சிறுகதைகள் பற்றி பேசுவதற்காக நான் அவரது இரண்டு கதைகளை …

ஜெயகாந்தன் விழா. Read More »

கண்காட்சிக்கு பிறகு.

  கடந்த பத்து நாட்களாக புத்தகத் திருவிழா ஆயிரக்கணக்கான மக்கள் புத்தகங்கள் வாங்க திருவிழா கூட்டம் போல வந்து போவதை பார்த்துக் கொண்டேயிருந்தேன். எழுத்தாளன் சந்தோஷம் கொள்ளும் அற்புதமான தருணமது. இன்றைய சூழலில் யாரும் படிப்பதில்லை என்ற பொதுக்குற்றசாட்டுகளை பொய்யாக்கி மக்கள் ஆசையோடு புத்தகங்களை வாங்கிச் சென்றார்கள். வாங்கிய எல்லாப் புத்தகங்களையும் உடனே படித்துவிடுவார்கள் என்று நான் நம்பமாட்டேன். அப்படி படிக்க வேண்டியது அவசியமும் இல்லை. புத்தகங்கள் பிறந்த நாள் கேக்குகள் அல்ல. உடனே சாப்பிட்டு முடிக்க. …

கண்காட்சிக்கு பிறகு. Read More »

பசித்த மழை.

இருபத்தி எட்டாவது வயதில் சென்னையில் தங்குமிடமின்றி அலைந்து கொண்டிருந்த போது ஒரு நண்பனோடு மேன்ஷன் அறையொன்றில் தங்கி இருந்தேன். மிகச்சிறிய அறை. பகலில் கூட வெளிச்சம் வராது. அறையின் ஜன்னல் சாலையை நோக்கியது. அதிலிருந்து புழுதி பெருகி அறைக்குள் நிரம்பிவிடுகிறது என்று சாத்தியே வைத்திருப்பான். நானோ அந்த ஜன்னலை திறந்துவிட்டு வெளியே பார்த்தபடியே இருப்பேன். இரவிற்குள் என்சுவாச கோளங்களில் தெருப்புழுதியேறி நானே  நிறம் மாறியிருப்பேன். ஆனாலும் ஜன்னலை சாத்த மனது வராது. கடந்து செல்லும் காட்சிகளை பார்த்தபடியே …

பசித்த மழை. Read More »

மழை என்ன செய்யும்

இரவில் பெய்யும் மழை தனித்த சுபாவமுடையதாக இருக்கிறது. அது எப்போது சீறும் எப்போது தணியும் என்று  அறிய முடியாது. பள்ளி வயதில் ஒரு நாளிரவு தூக்கத்தின் ஊடே ஏதோ சப்தம் கேட்டு விழித்துக் கொண்டேன். வெளியே மழை பெய்து கொண்டிருந்த சப்தம் கேட்டது. மின்விசிறி சுழலும் ஒசை தான் அப்படி இருக்கிறதா அல்லது மழை தானா என்று உறுதியாக தெரியவில்லை. ஜன்னல்கள் அடைத்து சாத்தப்பட்டிருந்தன. மெல்லிய இரவு விளக்கின் வெளிச்சம் சுவர்களில் ஊர்ந்து கொண்டிருந்தது. பின்னிரவில் வீடு …

மழை என்ன செய்யும் Read More »

உன்னத மனிதர்.

கோடம்பாக்கத்தில் உள்ள பழைய புத்தக கடை ஒன்றின் வாசலில் ஒரு நாய் சோர்ந்து படுத்துகிடந்தது. நோய்மையுற்ற நாய்களின் முகத்தில் விவரிக்கமுடியாத ஒரு பதற்றம் இருப்பதை கண்டிருக்கிறீர்களா. அது சொல்லற்ற வலி. அந்த நாய் காலை வெயிலை கூட அதிகபட்சமான ஒன்றாக நினைத்தது போல அதை விட்டு விலகி ஒரமாக படுத்து கிடந்தது. அருகில் போய் உட்கார்ந்து அதையே பார்த்து கொண்டிருந்தேன். நாயின் உடல் சீரற்று நடுங்கிக் கொண்டிருந்தது. அதன் காதுகள் மடங்கியிருந்தன. கண்கள் பழுத்து போய் ஒடுங்கியிருந்தது. …

உன்னத மனிதர். Read More »

கனவில் பூக்கும் தாமரைகள்

 பத்து வருடங்களுக்கு முன்பாக ஒரு  கோடை இரவில் Three Seasons  என்ற வியட்நாமிய திரைப்படத்தை பார்த்தேன். எந்த ஆண்டு வெளியானது யார் முக்கிய நடிகர்கள் என்று எதுவும் தெரியவில்லை. டிவிடியின் முகப்பும் சீன மொழியில் அச்சிடப்பட்டிருந்தது. படம் துவங்கியதும் அறைக்குள் பசுமை பீறிடும் சைகோனின் நிலக்காட்சியும், அதிகாலையின் மென்னொளியும் பரவதுவங்கியது. அகன்ற இலைகளில் தண்ணீர் ததும்ப கண்ணுக்கு எட்டியவரை தாமரை பூத்துக்கிடக்கும் பெரிய நீர்நிலை . நாட்டுபடகின் துடுப்புகளை வலித்தபடியே தாமரை மலர் பறிக்க வரும்இளம் பெண்கள். …

கனவில் பூக்கும் தாமரைகள் Read More »

இணைய எழுத்து

மதுரையில் ஆகஸ்ட் 30ல் அன்று நடைபெற்ற உயிரோசை இணையஇதழின் ஒராண்டு விழாவில் பேசுவதற்காக நான் எழுதிய குறிப்புகள் இவை. இதில் ஒரு பகுதியை அந்த விழாவில் உரையாற்றினேன். *** நான் இணைய எழுத்தை தொடர்ந்து வாசித்து வருபவன். தினம் இதற்காக குறைந்தது ஒரு மணி நேரம் செலவிடுகிறேன். வலைப்பக்கங்கள். இணையதளங்கள், இணைய இதழ்கள், என்று தேடித்தேடி வாசிக்கிறேன். புதிதாக யார் எழுதுகிறார்கள், என்ன எழுதுகிறார்கள். அது எப்படி வாசிக்கபடுகிறது என்பதில் என் அக்கறை எப்போதுமே அதிகமானது. இணையத்தில் …

இணைய எழுத்து Read More »

சூரியனோடு பேசும் சோளம்

நீண்ட பல வருசங்களின் பின்பாக என் கனவில் சோளக்காடு வந்தது. ஆறடிக்கும் மேலாக வளர்ந்தருந்த சோளத்தட்டைகள் ஊடே நடந்து கொண்டிருந்தேன். சோளம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வளர்ந்துவிடும். சோளத்தட்டைகளின் நுனி கையில் பட்டால் அறுத்துவிடும்.  சோளக்காட்டிற்குள் நடக்கையில் ஏற்படும் சப்தம் விசித்திரமானது. ஆள் முகம் தெரியாது. காற்றின் லேசான சலசலப்பு. உரசல். சோளம் முற்றியிருந்த காலத்தில் நிறைய குருவிகள் வந்து சேரும். அவை பறந்தபடியே சோளம் கொத்தும் காட்சிகள் மனதில் இன்றும் பசுமை மாறாமல் அப்படியே இருக்கின்றன. …

சூரியனோடு பேசும் சோளம் Read More »

புத்தக உரையாடல்

உயிர்மை இதழ் புதிய புத்தகங்களை வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் விதத்தில் புத்தக விமர்சனத்திற்கான சிறப்புபகுதி ஒன்றினை இதழில் துவக்கியுள்ளது. அதில் பல்வேறு புதிய புத்தகங்கள் அறிமுகமும் விமர்சனமும் செய்யப்படுகின்றன. இத்துடன் மாதம் ஒரு எழுத்தாளரின் ஒரு குறிப்பிட்ட புத்தகம் சார்ந்த உரையாடல் நடைபெறுகிறது. இந்த மாத உயிர்மையில் எனது சமீபத்திய சிறுகதை தொகுதியான  பதினெட்டாம் நூற்றாண்டின் மழை குறித்து கவிஞர் மனுஷ்யபுத்திரன் எழுப்பிய கேள்விகளும் அதற்கான எனது பதில்களும் இவை. ***சமீபத்தில் வெளிவந்த உங்கள் சிறுகதைத் தொகுப்பு …

புத்தக உரையாடல் Read More »