அனுபவம்

சேவற்சண்டை

சேவற்சண்டை எனப்படும் சேவற்போரின் மீது எதற்காக ஆர்வம் வந்தது என்று இன்று வரை எனக்குத் தெரியவில்லை. அதைப் பற்றி ஒரு நாவல் எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இன்று வரை அது சாத்தியமாகமலே போகிறது.  சிறுவயதில் ஒதுக்குப்புறமான நந்தவனங்களில் சேவற்சண்டை நடப்பதைக் கண்டிருக்கிறேன். சேவலை யார் வளர்ப்பார்கள். எப்படி பழக்குகிறார்கள்  என்று கவனித்தில்லை. ஆனால் சண்டை முடியும் வரை நின்று பார்ப்பேன். சண்டைச் சேவல்களைத் தெருவில் மேய விட மாட்டார்கள். அது ஆச்சரியமாக இருக்கும். கல்லூரி முடிந்த  …

சேவற்சண்டை Read More »

எப்படி படிக்கிறீர்கள்?

நீங்கள் எப்படி இவ்வளவு புத்தகங்கள் படிக்கிறீர்கள்? எங்கிருந்து உங்களுக்கு புத்தகங்கள் கிடைக்கின்றன. எப்படி தேர்வு செய்கிறீர்கள் என்று ஒரு நண்பர் மின்னஞ்சலில் கேட்டிருந்தார். இதே கேள்வியை பலமுறை எதிர்கொண்டிருக்கிறேன். எனது பதில் ஒன்று தான். புத்தகம் படிப்பது எனது ஒய்வு நேர விருப்பமில்லை. மாறாக அது எனது வேலை. இன்னும் சொல்வதாயின் அன்றாடச் செயல்பாடு. இருக்க இடமின்றி அலைந்து திரிந்த நாட்களில் கூட தினம் பத்து பக்கமாவது வாசித்திருக்கிறேன். பசியை மறப்பதற்கு புத்தகங்கள் உதவியிருக்கின்றன.  தாளமுடியாத வலியை …

எப்படி படிக்கிறீர்கள்? Read More »

ஈரக்காகிதம்

உதயம் தியேட்டரில் இருந்து கேகேநகர் செல்லும் சாலையில் ஈஎஸ்ஐ மருத்துவமனையின் அருகில் உள்ள நடைபாதையில் புத்தகங்களை குவித்து போட்டிருக்கும் ஒரு பழைய புத்தக கடைக்காரருடன் எனக்கு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பழக்கம். சில நாட்கள் எனக்கு போன் செய்து   பழைய புத்தகங்கள் வந்துள்ளது பாருங்கள் என்று அழைப்பார். ஐம்பது வயதைத் தாண்டிய உருவம். பெயர் பாய். எப்போதுமே வெள்ளை ஜிப்பா அணிந்திருப்பார். பல ஆண்டுகாலமாக குப்பை தூசி நிரம்பிய காகிதங்களுடன் வாழ்ந்து நுரையீரல் பாதிப்பு கொண்டவர், சக்கரை நோயும் …

ஈரக்காகிதம் Read More »

சிறுநடை.

கூடல் இலக்கிய சந்திப்பிற்காக மூன்று நாட்கள் மதுரையில் இருந்தேன். ஒரு நாள் மாலையில் நானும் எழுத்தாளர் பிரபஞ்சன் மொழிபெயர்ப்பாளர் சா. தேவதாஸ் மூவரும் நேதாஜி சாலை வழியாக  நடக்க துவங்கி மீனாட்சியம்மன் கோவிலை முழுமையாக சுற்றி புதுமண்டபம், வடக்கு வாசல், சிம்மக்கல் சாலை என  மூன்று மணி நேரம் நடந்து சிறிய வீதிகளுக்குள்  அலைந்து திரிந்தோம். நேதாஜி சாலை மிக பரபரப்பாக மாறியிருக்கிறது. வாகன போக்குவரத்தில் ஏற்பட்ட மாற்றம் அந்த வீதியின் இயக்கத்தை பெரிதாக மாற்றியிருக்கிறது. திருவிழா …

சிறுநடை. Read More »

ஐமாக்ஸ்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உலகின் மிகப்பெரிய ஐமாக்ஸ் திரையரங்கு வளாகம் உள்ளது. அதை திரையரங்கம் என்று சொல்லி எளிமை படுத்த முடியாது. அது ஒரு உலகம்.  பிம்பங்களின் பிரபஞ்சம். ஐமாக்ஸில் திரைப்படம் பார்த்தவர்கள் அதன்பிறகு வேறு எந்த திரையிடலையும் ரசிக்க முடியாது. வழக்கமாக நாம் பார்க்கும் திரையிடலை போன்று பத்து மடங்கு பெரிய திரை. படம் பார்க்கும் அனுபவமே அற்புதமானது.  டிக்கெட்டின் விலை 25 டாலர்.  அதில் இரண்டு முறை சினிமா பார்த்திருக்கிறேன். கனவுலகிற்குள் நாம் நுழைந்துவிட்டது …

ஐமாக்ஸ். Read More »

எழுத நினைத்த நாவல்

நாவல் எழுதுவதற்காக ஐரோப்பிய எழுத்தாளர்கள் யாருமில்லாத தீவுகள் , பனிமலை சார்ந்த விடுதிகள், மலைநகரங்களை தேடிச் சென்று அங்கேயே தங்கியிருந்து எழுதுவார்கள் என்று வாசித்த நாளில் இருந்து நானும் அப்படி எங்காவது பயணம் செய்து நாவல் எழுதலாமே என்று விருப்பமாக இருந்தது. பத்து ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு முறை கோணங்கியும் நானும்  இதற்காக தனுஷ்கோடிக்கு சென்று சில நாட்கள் இருந்தோம். கடல் பார்த்ததை தவிர ஒன்றும் நடக்கவில்லை. காட்டிற்குள் போனால் இயற்கையோடு இணைந்த மனநிலை உருவாகும். புதிதாக  …

எழுத நினைத்த நாவல் Read More »

அந்தரத்தில் சர்க்கஸ்

நீண்ட வருடங்களுக்குப் பிறகு சமீபத்தில் சர்க்கஸ் பார்க்கச் சென்றிருந்தேன். தேனியில் பத்து நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த கிரேட் இந்தியன் சர்க்கஸை சாலை பயணத்தில் கண்ட போது அதை பார்க்கலாமே என்று மதியகாட்சிக்கு சென்றிருந்தேன். என் பால்யநாட்களில் சர்க்கஸ் மிக அரிதான நிகழ்வு.  அதன் வருகை சுற்றுப்புற கிராமங்களில் பரபரப்பை ஏற்படுத்தும். ரஷ்யன் சர்க்கஸ், ஏசியன் சர்க்கஸ், பாரத் சர்க்கஸ் என்று மிகப்பெரிய சர்க்கஸ்களை பார்த்திருக்கிறேன். எனது முதல் வசீகரம் சர்க்கஸ்கூடாரம். அது போல ஏன் வீடுகள் …

அந்தரத்தில் சர்க்கஸ் Read More »

நவ கண்டம்

தன் கழுத்தை தானே அறுத்து பலியிட்டு கொள்ளும் மரபு தமிழகத்தில் தொன்மையாக இருந்து வந்திருக்கிறது. கொற்றவையின் முன்பாக தன் வேண்டுதலை நிறைவேற்ற தலையை அறுத்து பலியிட்டு கொண்டவர்களை பற்றிய குறிப்புகள் உள்ளன. குறிப்பாக கலிங்கத்துபரணியில் சோழ அரசின் வெற்றிக்காக இப்படி தலையை அறுத்து பலிகொண்ட வீரனை பற்றிய செய்தி இடம் பெற்றுள்ளது. இது போலவே தண்டனையாகவும் தன் தலையை தானே அறுத்துக் கொள்ளும் வழக்கம் இருந்திருக்கிறது. பிடிபட்ட திருடனை குடும்பத்துடன் ஒரு நாள் சந்தோஷமாக வாழச்செய்து மறுநாள் …

நவ கண்டம் Read More »

பதிலற்ற மின்னஞ்சல்கள்

இறுதிப்போரின் பின்பு மீளாத துயரமும் அழிவுமாக ஈழம் சிதைந்து போயிருக்கிறது. மின்ஊடகங்கள் அவற்றைத் திரும்பத் திரும்ப காட்சிப் பொருளாக காட்டிக் கொண்டேயிருக்கின்றன. மனித உயிரிழப்பு தரும்  வேதனை வெற்று காட்சிகளாக கடந்து போவது தாங்க முடியாத வலி தருவதாக உள்ளது. குறிப்பாக ஆங்கில ஊடகங்கள் ஈழப்போரினை தங்களது அற்ப அரிப்புகளும் தீனி கொடுப்பதற்கே அதிகம் பயன்படுத்திக் கொள்கின்றன. தமிழ் ஊடகங்களில் பெரும்பான்மை இதையே நகலெடுக்கின்றன. இறந்து போன பல்லாயிரம் மனிதர்களுக்கான துக்கத்தையோ  உயிர் பிழைத்தவர்களின் சொல்லவொண்ணாத துயரத்தையோ …

பதிலற்ற மின்னஞ்சல்கள் Read More »

கோடை பதிவுகள் 2

விருதுநகரின் பழைய பேருந்து நிலையத்தின் வெளியே நின்று கொண்டிருந்தேன். தார் உருகியோடுவது போன்ற வெயில். ஒதுங்குவதற்கு நிழல் அற்ற நகரம். அருகாமை கிராமத்தின் சாலைகள் நன்றாக போடப்பட்டிருக்கின்றன. ஆனால் நகரின் உள்ளே பழுதடைந்து போன சாலைகள் . நடமாடவே முடியவில்லை.   நான் சென்ற நாளில் 109 டிகிரி வெயில் என்றார்கள். உள்ளுர்வாசிகளுக்கு அது பழகிப்போன ஒன்று. அந்த வெயிலில் ஒரு ஆள் சாவகாசமாக நின்றபடியே சினிமா போஸ்டரில் உள்ள பெயர்களை வாசித்து கொண்டிருந்தார். காலத்தின் பின்னால் சென்று …

கோடை பதிவுகள் 2 Read More »