கோடை பதிவுகள் 1
சிப்பிபாறை என்ற ஊரைக்கடந்து சென்று கொண்டிருந்தேன். உச்சிவெயில் நேரம். பாதி சிதைந்து போன சிறியமலையொன்று கண்ணில் பட்டது. காரை விட்டு இறங்கி அந்த மலையை பார்த்தபடியே இருந்தேன். வெயில் வடிந்து கொண்டிருந்தது. அப்படி அரித்து போன மலையை அருகில் கண்டதேயில்லை. அருகில் யாருமில்லை. தனியே நடந்து மலையின் மீதேறினேன். வெயில் கொதித்து கொண்டிருந்ததால் பாறையில் நடக்க முடியவில்லை. அந்த ஊர் வேட்டை நாய்களுக்கு பிரசித்திபெற்றது. வெயில் தாங்க முடியாமல் ஊரே அடங்கியிருந்தது. ஏதோ காரணம் தெரியாத ஈர்ப்பு …