அனுபவம்

கோடை பதிவுகள் 1

சிப்பிபாறை என்ற ஊரைக்கடந்து சென்று கொண்டிருந்தேன். உச்சிவெயில் நேரம். பாதி சிதைந்து போன சிறியமலையொன்று கண்ணில் பட்டது. காரை விட்டு இறங்கி அந்த மலையை பார்த்தபடியே இருந்தேன். வெயில் வடிந்து கொண்டிருந்தது. அப்படி அரித்து போன மலையை அருகில் கண்டதேயில்லை. அருகில் யாருமில்லை. தனியே நடந்து மலையின் மீதேறினேன். வெயில் கொதித்து கொண்டிருந்ததால் பாறையில் நடக்க முடியவில்லை. அந்த ஊர் வேட்டை நாய்களுக்கு பிரசித்திபெற்றது. வெயில் தாங்க முடியாமல் ஊரே அடங்கியிருந்தது. ஏதோ காரணம் தெரியாத ஈர்ப்பு …

கோடை பதிவுகள் 1 Read More »

கொட்டுக்காரர்கள்.

நேற்று நண்பர் ஒருவரின்  குடியிருப்பில் வாட்ச்மேனாக உள்ள வயதான ஒருவரை  சந்தித்தேன். அவரது தோற்றம் வித்யாசமாக இருந்தது.  யார் என்று விசாரித்தேன். அவர் மிகுந்த தயக்கத்துடன் நான் கொட்டுக்காரன் என்றார். அந்த வார்த்தை எனக்கு பரவசமாக இருந்தது. ஏன் இங்கே வந்துவிட்டீர்கள் என்றேன். இப்போ யாரு கொட்டு அடிக்க கூப்பிடுறா. ஊர்ல சாந்து சட்டி சுமந்துகிட்டு இருந்தேன்,  போதும்னு கிளம்பி வந்துட்டேன். இங்கே ஆயிரத்திஇருநூறு ருபாய் மாச சம்பளம் என்றார். அவரது விரல்களை பார்த்துக் கொண்டேயிருந்தேன். எத்தனை …

கொட்டுக்காரர்கள். Read More »

கசப்பு பழங்கள் .

நேற்று மாலை ஒரு பழக்கடைக்கு சென்றிருந்தேன். அங்கே தற்செயலாக சீதாப்பழத்தை பார்த்தேன். ஆசையாக ஒரேயொரு சீதாப்பழத்தை வாங்கி பிய்த்து சாப்பிட்டேன், பற்பசையை தின்பது போன்று சக்கையாக இருந்தது. ஏன் இப்படி ருசியேயில்லை என்று கடைக்காரனிடம் கேட்டபோது இது எல்லாம் கலப்பு விதைல வர்றது  சார் . அப்படி தான் இருக்கும். ஜ÷ஸ் போட்டு நிறைய சீனி போட்டு சாப்பிடணும். தனியா சாப்பிடக்கூடாது என்று சொன்னார். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து சீதா பழத்தை சாப்பிட்டிருக்கிறேன். ஆனால் …

கசப்பு பழங்கள் . Read More »

பாடு புஜ்ஜி பாடு.

புத்தக அலமாரியை ஒதுங்க வைத்துக் கொண்டிருந்த போது மேலடுக்கில் கிடந்த ஒரு தெலுங்கு புத்தகம் கண்ணில் பட்டது. நிறைய ரோஜாப்பூக்கள் கொண்ட அட்டைபடம்.. ஏதோ கோபத்தில் வீசி எறிந்திருக்கிறேன். இன்று தான் மறுபடியும் கண்ணில் படுகிறது.நிச்சயம் ஆறு ஏழு வருசம் இருக்க கூடும். பின்அட்டையில் ஒரு பூங்காவில்  புல்வெளியில் அமர்ந்தபடியே மடியில் ஒரு பேடு, பேனாவுடன் கன்னத்தில் கைவைத்தபடியே சிந்தித்துக் கொண்டிருந்தார் கவிஞர் புஜ்ஜி. (அவர் நிஜபெயர் வேண்டாமே ). சபாரி உடை. முகத்திற்கு பொருந்தாத கண்ணாடி.  …

பாடு புஜ்ஜி பாடு. Read More »

சிற்றுண்டி சினிமா

சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் மாலைக்காட்சி முடிந்து இரவுக்காட்சி துவங்குவதற்கு முன்பு தியேட்டர் துப்பரவு பணியாயளர்கள் அரங்கினைச் சுத்தம் செய்து கொண்டிருப்பதைக் தற்செயலாகக் காண நேர்ந்தது. ஆறு பேர் மிகப்பெரிய கறுப்பு நிற பாலீதின் பைகளில் குப்பைகளை சேகரித்துக் கொண்டிருந்தார்கள். பாப்கார்ன், தண்ணீர்பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள், கேக், பப்ஸ் என்று ஐந்து பைக்கும் அதிகமாக அள்ளியும் குப்பை தியேட்டர் முழுவதும் இறைந்தே கிடந்தது. ஒரு நிமிசம் அந்த குப்பைச் சாக்கை கண்டதும் திடுக்கிட்டு போனேன். உணவகங்களில் …

சிற்றுண்டி சினிமா Read More »

வெயில்படல்

சில நாட்களாகவே பயணம் அலைச்சல், காய்ச்சல், என்று நோய்மையுற்றிருந்தேன். ஆகவே  லேசான குளிரின் குதுகுதுப்பு எனக்குள் எப்போதுமிருந்தது. இரண்டு நாட்களின் முன்பாக காலையில் வீட்டின் வாசலில் கிடக்கும் பிரம்பு நாற்காலி மட்டும் தனியே வெயிலில் கிடப்பதை கண்டேன். . காலைவெயில். மிகுந்த ப்ரகாசமாக இருந்தது. காலை வெயிலை பார்த்துக் கொண்டேயிருந்தேன். உடைந்த முட்டையிலிருந்து வழிந்தோடும் திரவத்தின் பிசுபிசுப்பை போலான வெயில். வீட்டிலிருந்து எழுந்து பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டேன். சில நிமிசங்களில் உடம்பெங்கும் எறும்பு ஏறுவது போன்ற …

வெயில்படல் Read More »

பாட்டிகளின் கடவுள்

பனிரெண்டு வயதில் திருவிளையாடல் படம் பார்க்கும்வரை கடவுள் பற்றிய பயம் எனக்குள் ஆழமாக வேர் ஊன்றியிருந்தது. அதற்கு முக்கிய காரணம்  ஒவ்வொரு நாளும் தேவாரம் திருவாசகம் படிக்க வேண்டும் என்ற ஒழுங்கை கொண்டிருந்த வைதீகமான குடும்பம் என் தாத்தாவின் வீடு. கடவுள் எப்போதுமே எங்களை கண்காணித்துக் கொண்டிருக்கிறார்.  அவருக்கு தெரியாமல் எதையும் செய்துவிட முடியாது. ஆகவே பயபக்தியோடு நடந்து கொள்ள வேண்டும் என்று பழக்கபடுத்தபட்டிருந்தோம். கோவிலுக்கு போவதும் விரதமிருப்பமிருப்பதும் வீட்டின் மாற்றமுடியாத பழக்கங்கள். நெற்றியில் திருநீறு பூசாமல் …

பாட்டிகளின் கடவுள் Read More »

புத்தக கண்காட்சியில் சில மணி நேரம்.

சனிக்கிழமை மதியம் புத்தக கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். புத்தகத் திருவிழா துவங்கி  மூன்றாம் நாள் . மாலையில் செல்வது என்று முதலில் முடிவுசெய்திருந்தேன். ஆனால் பின்மதிய நேரத்தில் சற்று கூட்டம் குறைவாக இருக்க கூடும் என்பதால் முதலில் புத்தக கண்காட்சியை முழுமையாக ஒரு முறை சுற்றி பார்த்துவிடலாம் என்று கிளம்பினேன். பெட்ரோல் தட்டுபாடு சென்னையின் அன்றாட பயணத்தை வெகுவாக பாதித்திருக்கிறது. ஆவலாக புத்தகக் கண்காட்சிக்கு போய்வரலாம் என்று திட்டமிட்டிருந்த பல நண்பர்கள்  பெட்ரோல் கிடைக்காத காரணத்தால் வீட்டிலிருந்து வெளியே …

புத்தக கண்காட்சியில் சில மணி நேரம். Read More »

நடந்து தீராத கால்கள்.

இரண்டு வாரங்களுக்கு முன்பாக ஒரு மாலையில் முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில மாநாட்டின் துவக்க விழாவினை காண்பதற்காகச் சென்றிருந்தேன். விழாவிற்கு தோழர் எஸ். ஏ. பெருமாள் வந்திருந்தார்.  எனது பள்ளி நாட்கள் துவங்கி இன்று வரை என் மீது அதிக அக்கறை கொண்டவர்களில் அவர் முக்கியமானவர். புகழ் பெற்ற உலக இலக்கியப் புத்தகங்களை தந்து  என்னைப் படிக்க வைத்து, என் சிறுகதைகள் வெளியான நாட்களில் அதைப் பற்றி விவாதித்து எப்போதும் என் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர். அவரைச் …

நடந்து தீராத கால்கள். Read More »

தாமரை பூத்த குளம்.

என் நண்பரின் அறிமுகத்தால் சுசாந்த் மிஸ்ரா என்ற ஒரியாவைச் சேர்ந்த இயக்குனரை 1994 ல் சந்தித்தேன். சுசாந்த் மிஸ்ரா இந்தர் தனுர் சாயா என்ற படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குனர். அவரது இன்னொரு படம் பிஸ்வபிரகாஷ் உலக படவிழாக்களில் கலந்து கொண்டு பாராட்டை பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான பரதநாட்டிய கலைஞரை பற்றிய ஆவணப்படம் ஒன்றை தயாரிப்பதற்காக அவருக்கு தேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவனம் நிதியுதவி அளித்திருந்தது. அந்த படத்திற்கான பின்ணணி ஆய்வு மற்றும் இடங்களை …

தாமரை பூத்த குளம். Read More »