அனுபவம்

தாய்முகம்

நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது தன்னுடைய சிறுவயதில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றினை விவரித்தார். அவரது ஊர்  மதுரை மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம். பிறந்த சில மாதங்களிலே  தாயை இழந்தவர். அம்மாவின் முகம் கூட அவருக்குத் தெரியாது. அவர்கள் ஊரில் அடிக்கடி பெண்களுக்கு பேய் பிடித்து கொள்ளுமாம். அப்படி ஒரு நாள் அவர்கள் வீதியில் இருந்த பெண் ஒருத்திக்கு பேய் பிடித்து கொண்டுவிட்டது என்று பேயோட்டும் நபரை அழைத்து வந்திருக்கிறார்கள் பேயோட்டி தன் கையில் உள்ள …

தாய்முகம் Read More »

இளையராஜாவின் திருவாசகம் கேட்டபோது.

இரண்டு மாதங்களுக்கு முன் ஜானி படத்தில் வரும் காற்றில் எந்தன் கீதம் பாடலை கேட்கத் துவங்கி அன்றிரவு முழுவதும் இளையராஜாவின் பாடல்களாக கேட்டுக் கொண்டிருந்தேன். அது போதாமல் மறுநாள் நண்பர்கள் வசமிருந்த இளையராஜாவின் பாடல்கள் தொகுப்பில் இருந்து 250 பாடல்கள் கொண்ட இரண்டு குறுந்தகடினை வாங்கி வந்து கேட்கத் துவங்கினேன். நாலைந்துநாட்கள் இளையராஜா மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தேன். ஜானகி, சித்ரா, ஜென்சி, பாலசுப்ரமணியம்,ஜேசுதாஸ், மலேசியா வாசுதேவன், இளையராஜா என்று மாறும் குரல்களும் இசையமைப்பின் வியப்பும் மேலிட இளையராஜாவின் …

இளையராஜாவின் திருவாசகம் கேட்டபோது. Read More »

கூர்க்காவின் பகல்

விழித்துக் கொண்டிருந்த எத்தனையோ பின்னிரவுகளில் அந்த நடைச்சப்தத்தை கேட்டிருக்கிறேன். யாருமற்ற தெருவில் தனியே விசில் அடித்தபடியே சைக்கிளை உருட்டிக் கொண்டு செல்லும் நாற்பது வயதை கடந்த  கூர்க்காவை பார்க்கும் போது வியப்பாக இருக்கும். என்ன வேலையிது. எதற்காக இந்த மனிதன் தெருத்தெருவாக இரவில் சுற்றியலைகிறான் என்று புரியாமலும் கூட இருக்கும். ஒரு நாள் நேரத்திற்கு உறங்காமல் போனால் அடுத்தநாள் நமக்கு வேலை ஒடுவதில்லை. சதா எரிந்து விழுகிறோம். தொழிற்சாலைகளில் இரவில் வேலை செய்கின்றவர்கள் கூட வருசம் முழுவதும் …

கூர்க்காவின் பகல் Read More »

ஒத்திகை.

நேற்று கேரளாவிலிருந்து ஜோஸ் என்ற நவீன நாடக இயக்குனர் என்னைப் பார்க்க வந்திருந்தார். எனது அரவான் நாடகத்தை மலையாளத்தில் மொழியாக்கம் செய்து கொள்வது தொடர்பான சந்திப்பு அது. பேச்சு தமிழ் நவீன நாடகச் சூழலைப் பற்றி திரும்பியது. வருடத்திற்கு பத்து நவீன நாடகங்கள் கூட சென்னையில் நடத்தப்படுவதில்லையே அது ஏன் என்று கேட்டார். நவீன நாடகங்கள் பெரும்பாலும் தனிநபர்களின் ஆர்வம் மற்றும் தொடர்ந்த ஈடுபாட்டின் காரணமாக மட்டுமே தமிழில் நடைபெற்று வருகின்றன. நாடகங்களை நிகழ்த்துவதில் உள்ள முக்கியப் …

ஒத்திகை. Read More »

துயர்மிகு பொழுது

சமீபத்திய ஈழத்தமிழர்கள் மீதான தாக்குதல்களும் போரின் அவலமும் என்னை பெரிதும் துயரமடையச் செய்து வருகின்றன. சில இரவுகளில் கணிப்பொறி முன்பாக எழுத அமரும் போதெல்லாம் எழுதுவதால் என்ன செய்துவிட முடியும் என்ற குற்றவுணர்ச்சி பெருகி வதைக்க கணிப்பொறியை அணைத்துவிட்டு மௌனமாக வெறும்திரையை உற்றுப்பார்த்துக் கொண்டிருப்பது நடந்திருக்கிறது. திரையை அணைத்து விடலாம் ஆனால் நினைவுகளை. பதுங்கு குழிக்குள் நடுங்கியபடி நிற்கும் சிறார்களின் கண்களில் பீறிடும் பயம் அடிமனதில் தீக்கோலால் சூடு இடுவது போன்ற பச்சைவலியை உருவாகிறது. இருப்பிடம் அழிக்கபட்டு, …

துயர்மிகு பொழுது Read More »

பள்ளித்தமிழ்.

சமீபத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். பொதுவில் ஆசிரியர்கள் யாரையும் தேடிப்போய் பார்ப்பார்கள் என்பது வியப்பானதே. அவர்களை நாம் தான் தேடிப்போய் பாரக்க வேண்டும். இவர் ஆரம்ப பள்ளியில் வேலை செய்கிறார். அவர் என்னைச் சந்திக்க வந்த நோக்கம் எப்படி மாணவர்களுக்குக் கற்றுத்தர வேண்டும் என்று எழுத்தாளர்களாகிய நாங்கள் நினைக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். மிகுந்த உற்சாகத்துடன் ஒரு நாள் முழுவதும் அவரோடு செலவிட்டேன். அன்றைய உரையாடல் முழுவதும் ஆரம்பப் பள்ளியில் …

பள்ளித்தமிழ். Read More »

போய்வாருங்கள் பொருட்களே.

பார்த்துக் கொண்டிருந்த போதே நம் வாழ்விலிருந்து பல பொருட்கள் நிசப்தமாக வெளியேறி மறைந்து போய்விட்டன. நவீன வாழ்க்கையின் விஞ்ஞான வளர்ச்சியால் பல புதிய பொருட்கள் வாழ்விற்குள் நுழைந்திருக்கின்றன. அதைப் பயன்படுத்துவதில் நமக்கு எவ்விதமான சிரமமும் இல்லை. ஒருவகையில் இந்த மாற்றம் தவிர்க்கமுடியாதது. அது தான் வளர்ச்சியும் கூட. ஆனால் யோசிக்கையில் நம்மை விட்டுச் சென்ற பல பொருட்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டிய அவசியமுள்ளது.  நோபல் பரிசு பெற்ற கவிஞரான பாப்லோ நெருதா  உடைகள், உண்ணும் பழங்கள் …

போய்வாருங்கள் பொருட்களே. Read More »

எழுதாத கடிதம்.

கடிதம் எழுதும் பழக்கம் அநேகமாக என்னை விட்டுப் போய்விட்டது என்றே தோன்றுகிறது. ஈமெயிலும் செல்போனும் வந்தபிறகு கடிதம் எழுதும் தேவை மிகக் குறைவாகிவிட்டது. எவ்வளவு பக்கம் வேண்டுமானலும் கதை எழுத முடிந்த என்னால் ஒரு போஸ்கார்டில் கூட கடிதம் எழுத முடியாது. காரணம் கடிதம் எழுதுவற்கு ஒரு மனநிலை தேவை. அது என்னிடம் இல்லை. அது போல யாருக்கு கடிதம் எழுத நினைக்கும் போதும், என்ன எழுதுவது என்று மனம் கொள்ளும் குழப்பம்  தீராதது. சில வேளைகளில் …

எழுதாத கடிதம். Read More »

எப்போதாவது இசைகேட்பவன்.

ரத்தத்தில் மிதந்து வரும் பித்தப்பூவை பறிக்கிறேன் – தேவதச்சன் சில வாரங்களாகவே தொடர்ந்து நாளைக்கு நாலைந்து மணிநேரம் இசை கேட்டுவருகிறேன். பொதுவில் நான் அதிகம் இசை கேட்பவன் இல்லை. என்னுடைய நண்பர்கள் சுரேஷ்கண்ணன், ஷாஜி போன்றவர்கள் இசையில் தேர்ந்த விற்பன்னர்கள். அவர்கள் அளவு நான் கேட்க கூடியவன் இல்லை. எனக்கு இசை தேவைப்படும் தருணங்கள் எப்போதாவது தான் ஏற்படுகின்றது. அதன் முன்பு வரை என் அருகாமையில் உலகின் சிறந்த இசை ஒலித்துக் கொண்டிருந்தாலும் அது என்னுள் செல்வதேயில்லை. …

எப்போதாவது இசைகேட்பவன். Read More »

நம்பிக்கையின் மீதேறி நடந்து

        மலையேற்றதைப் பற்றிய புத்தகங்களை வாசிப்பது என்பது எனக்கு மிகவும் விருப்பமானது. சில ஆண்டுகளுக்கு முன்பு அன்னபூர்ணா என்ற சிகரத்தில் மலையேற்றம் செய்த பிரெஞ்சு மலையேற்ற குழுவின் புத்தகத்தை வாசித்தேன். அது போலவே ஹெமிங்வேயின் கிளிமஞ்சரோ பயணம் பற்றிய புத்தகம் சுவாரஸ்யமானது. நான் மேற்குதொடர்ச்சி மலையேறி பலமுறை அலைந்திருக்கிறேன்.  அப்படி சமீபத்தில் நான் வாசித்த சீன் ஸ்வானரின் எவரெஸ்ட் மலையேற்றம் பற்றிய Keep Climbing புத்தகம் என்னை உலுக்கிவிட்டது. சாசகம் என்பது மலையேறுவதில் …

நம்பிக்கையின் மீதேறி நடந்து Read More »