அனுபவம்

கணிதமேதை வாழ்ந்த வீடு

            கும்பகோணத்தில் உள்ள கணித மேதை ராமானுஜத்தின் நினைவில்லத்திற்கு சென்றிருந்தேன்.  கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தெருவில்  உள்ள ராமானுஜம் வாழ்ந்த வீடு தன் பழமை மாறாமல் அப்படியே பாதுகாக்கபட்டு வருகிறது. சொருகு ஒடுகள் வேய்ந்த தாழ்வான வீடு. சிறிய திண்ணையும் ரேழியும் தெரு பார்த்த ஜன்னல் கொண்ட படுக்கையறையும் காலத்தின் கறைபடிந்த கட்டிலுமாக உள்ளது குனிந்து செல்ல வேண்டிய அளவு மிக தாழ்வான கூரையமைப்பு. சிறிய சமையல் அறை, பூஜை …

கணிதமேதை வாழ்ந்த வீடு Read More »

சாலை திறந்து கிடக்கிறது.

      சாலையின் நடுவே எங்காவது  பழுதடைந்து போன பைக் , கார் அல்லது பேருந்தின் காரணமாக கைவிரல்களை உயர்த்திக்காட்டி லிப்ட் கேட்பவர்களை கண்டிருக்கிறீர்களா? நம்மில் வெகுசிலரே அவர்களுக்கு உதவி செய்திருப்போம். மற்றவர்கள் நமது வாகனத்தில் எதற்கு தெரியாத மனிதர் என்று திரும்பிக் கூட பார்ப்பதில்லை. . அரிதாக சிலர் தங்களது வாகனங்களில் வழிப்பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்வார்கள். அப்படி சாலையில் மாட்டிக் கொண்டு உதவி வாகனத்தை பிடித்து ஒரு இடம் விட்டு மற்றொரு இடம் …

சாலை திறந்து கிடக்கிறது. Read More »

சிற்றுரையும் பேருரையும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக சென்னையில் உள்ள மெட்ரிக் பள்ளி ஒன்றின் ஆண்டுவிழாவில் பேசவேண்டும் என்று அழைத்திருந்தார்கள். இது ஒரு சம்பிரதாயம் போல எல்லா பள்ளிகளிலும் நடைபெறும் விஷயம் என்பதால் கலந்து கொள்வதில் தயக்கம் காட்டினேன். மொத்தமே ஒரு மணி நேர நிகழ்ச்சி இதில் நீங்கள் பத்து நிமிசம் பேசினால் போதும் என்று தெரிந்த ஒரு ஆசிரியர்  வழியாக அன்புக் கட்டளையிட்டு கலந்து கொள்ளச் செய்தார்கள். ஐந்து மணிக்கு நிகழ்ச்சி என்பதால் நாலரை மணிக்குச் சென்றேன். ஐநூறு பேருக்கும் …

சிற்றுரையும் பேருரையும். Read More »

சிங்கப்பூரில் ஐந்து நாட்கள்

      சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் வாசிப்போம் சிங்கப்பூர் நிகழ்ச்சிக்காக 10ம் தேதி முதல் 15ம் தேதி வரையான ஐந்து நாட்கள் சிங்கப்பூர் சென்றிருந்தேன். பள்ளி கல்லூரிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல்களும் சிங்கப்பூர் இலக்கிய அமைப்புகள்  மற்றும் பொது வாசகர்களுடன் நிகழ்த்தபட்ட உரையாடல்களும் சிறப்புரைகளும் நன்றாக அமைந்திருந்தன. இந்த நிகழ்ச்சிகள் சிறப்பாக அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் சிங்கப்பூர் தேசிய நூலகத்தை சார்ந்த திருமதி புஷ்பலதா, மணியம், மற்றும் நாராயண மூர்த்தி, …

சிங்கப்பூரில் ஐந்து நாட்கள் Read More »

ஈழத்தின் பாடல்

    1934 ஆண்டு தயாரிக்கப்பட்ட Song of Ceylon  என்ற ஆவணப்படத்தை கல்கத்தாவில் நடைபெற்ற உலக திரையிடப்பட விழாவில் பதினைந்து வருடங்களுக்கு முன்பாக பார்த்திருக்கிறேன். சமீபமாக அதை சின்னக்குட்டிவின்  வலைத்தளத்தில் பார்வையிட்டேன். ஆவணப்படங்களின் வரிசையில் மிக முக்கியமான படமிது. Song of Ceylon https://sinnakuddy1.blogspot.com/2008/06/song-of-1934.html ***நாற்பது நிமிசங்கள் உள்ள இந்த ஆவணப்படம் இலங்கையின் கடந்த கால வாழ்வைப் பற்றிய மிக பசுமையான பதிவு . பேசில் ரைட் இயக்கிய இப்படம் சிறந்த ஆவணப்படத்திற்கான புருசெல்ஸ் திரைப்பட விழா …

ஈழத்தின் பாடல் Read More »

திரை வெளி.

இணையத்தில் அதிகம் விவாதிக்கபடும் விஷயம் தமிழ் சினிமா. குறிப்பாக திரையிசைப்பாடல்கள்  குறித்து எண்ணிக்கையற்ற பதிவுகள் காணப்படுகின்றன.  அது போலவே கடந்த கால தமிழ்சினிமா குறித்த அறியப்படாத தகவல்கள், நினைவலைகள் ஆங்காங்கே தொடர்ந்து பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.  இதில் பல வல்லுனர்கள் இருக்கிறார்கள். இந்த செய்திகளும் கதைகளும்  ஒருவகையான வாய்மொழி வரலாறு. தமிழ் சினிமாவின் நடிகர்கள், நடிகைகள் இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் வெளியாகமால் போன திரைப்படங்கள் குறித்த வாய்மொழிகதைகள், வேடிக்கைகள் மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் இதுவரை முழுமையாக தொகுக்கபடவில்லை.  நண்பர்கள் …

திரை வெளி. Read More »

அறிந்த அவசரம்

நம் நூற்றாண்டின் தீர்க்கமுடியாத நோய்களில் ஒன்று அவசரம். வீடு, பணியிடம் பேருந்து, மின்சாரரயில், வணிகவளாகம் பள்ளி, கோவில், வங்கி, மருத்துவமனை, தியேட்டர் என எங்கும் அவசரம் பொங்கி வழிகிறது. சிறியவர்கள் பெரியவர்கள் என்று பேதமில்லாமல் இந்த நோய்க்கு நம்மை ஒப்புக் கொடுத்திருக்கிறோம். எதற்காக இவ்வளவு அவசரம் என்று ஒரு போதும் நம்மை நாமே கேட்டுக் கொண்டதில்லை. அவசரம் வைரஸ் கிருமிகளை  விடவும் மோசமானது. அது உடலுக்குள் புகுந்த மறுநிமிசம் கைகால்கள் தானே உதற துவங்கிவிடுகின்றன. முகம் சிவந்துவிடுகிறது. …

அறிந்த அவசரம் Read More »

சிறுநுரை.

பால்ய வயதின் நினைவுகள் அவ்வப்போது உதிரியாகத் தோன்றுவதும் அதைச் சிறிய குறிப்பாக எழுதி வைத்துக் கொள்வதும் சில வருடங்களாகவே நடந்து வருகின்றது. இது போன்ற பால்யத்தின் சிறுகுறிப்புகளை மட்டும் தனித்து ஒரு நூலாக வெளியிடலாம் என்ற எண்ணம் உள்ளது. இவை கதைகள் போலவும் இருக்கின்றன. கதைகளை விட நெருக்கமாகவும் இருக்கின்றன. அதிலிருந்து சில மாதிரிகள். வட்டக்கண்ணாடி. அப்போது நாங்கள் சூலக்கரை என்ற சிறிய கிராமத்திலிருந்தோம். பத்து வயதிருக்கும் போது கையில் வைத்து பார்ப்பது போன்ற வட்டகண்ணாடி ஒன்றை …

சிறுநுரை. Read More »

பொதுக்குளியல்.

சென்ற வாரத்தில் ஒரு நாள் எனக்கு விசித்திரமான பிரச்சனை ஒன்று ஏற்பட்டது. சென்னையில் நடைபெற உள்ள மாற்று மருத்துவக்கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக சாத்தூரிலிருந்து நாற்பது பேர் ஒரு வேனில் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் காலையில் குளிப்பதற்கு மட்டும் ஏதாவது ஒரு இடமிருக்கிறதா அல்லது வழியில் எங்காவது குளிக்கலாம் என்றால் எங்கே குளிப்பது என்று எனது அண்ணன் தொலைபேசியில் கேட்டார். இதற்கென எளிய விஷயம் தானே என்று முதலில் தோன்றியதால் விசாரித்து ஏற்பாடு செய்கிறேன் என்று சொன்னேன். …

பொதுக்குளியல். Read More »

உதறிச் செல்லும் அடையாளம்

தீவிர சினிமாவின் இன்றைய இலக்கு வாழ்வைக் காண் நிலையில் அப்படியே பிரதி பலிப்பது மட்டுமல்ல. மாறாக வாழ்வின் முக்கியப் பிரச்சனை யாகக்  கருதும் ஒன்றை நுணுகி ஆராய்வதும், அதன் அக மற்றும்புறத்தளங்களில் ஏற்படும் சலனங்களைஅவதானித்து வெளிப்படுத்துவதுமேயாகும் . சமகால உலக சினிமாவில் பெரும்பான்மை குடும்பம் என்ற அமைப்பு சார்ந்த பிரச்சனைகளையே மையப் பொருளாக  கொண்டுள்ளது. குறிப்பாக குடும்பத்தை  உருவாக்குவதிலும் கட்டிக் காப்பதிலும் ஆண் பெண் இருவரும் என்ன பங்கு வகிக்கிறார்கள். ஆண் பெண் இருவருக்குமான பால் இச்சைகளின் …

உதறிச் செல்லும் அடையாளம் Read More »