தெலுங்கில்
எனது சிறுகதை கொஞ்சம் அதிகம் இனிப்பு தெலுங்கில் வெளியாகியுள்ளது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் கௌரி கிருபாகரன். அவருக்கு மனம் நிரம்பிய நன்றி ••
எனது சிறுகதை கொஞ்சம் அதிகம் இனிப்பு தெலுங்கில் வெளியாகியுள்ளது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் கௌரி கிருபாகரன். அவருக்கு மனம் நிரம்பிய நன்றி ••
நாளை மதுரை புத்தகத் திருவிழாவிற்கு வருகிறேன். நாளை மாலை (05.09.2019) 5 .30 மணிக்கு மதுரைப் புத்தகத் திருவிழா தேசாந்திரி அரங்கு எண் 138ல் எனது புதிய நாவல் ஒரு சிறிய விடுமுறைக்காலக் காதல்கதை வெளியிடப்படவுள்ளது. தலைமையேற்று நாவலை வெளியிடுபவர் தோழர் எஸ்.ஏ.பெருமாள் நண்பர்கள், வாசகர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி வேண்டுகிறேன் விலை ரூ 200 ••• 04.09.2019
கனலி இணையதளத்தின் துவக்கவிழா சிறப்பாக நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு குட்டி இளவரசனுடன் ஒரு பயணம் என்ற தலைப்பில் உரையாற்றினேன். விக்னேஷ்வரன் மற்றும் நண்பர்களுக்கு நன்றி. நேற்று சித்துராஜ் பொன்ராஜ் முரகாமி பற்றி ஆற்றிய உரை மிகச்சிறப்பானது. அழகிய புகைப்படங்களை எடுத்த பாலமுரளிக்கும் நிகழ்வை ஒளிப்பதிவு செய்த ஷ்ருதி டிவிக்கும் நன்றி நண்பர் வேலூர் லிங்கன் நிகழ்விற்கு வந்திருந்தது கூடுதல் மகிழ்ச்சி. அவரது நேர்காணல் கனலியில் வெளியாகியுள்ளது. அவசியம் வாசிக்கவும். எனது உரையின் காணொளி https://www.youtube.com/watch?v=H7I5mAvUKDg&feature=em-uploademail இணையதள …
தேசாந்திரி பதிப்பகம் மதுரைப் புத்தகத்திருவிழாவை முன்னிட்டு எனது நூல்களின் புதிய பதிப்பினை வெளியிட்டுள்ளது விலை: ரூ125 விலை: ரூ 125 மதுரைப் புத்தகக் கண்காட்சி தேசாந்திரி அரங்கு எண் 138ல் இப் புத்தகங்களைப் பெறலாம் ஆன்லைன் தளத்திலும் தேசாந்திரி பதிப்பகத்திலும் விற்பனைக்குக் கிடைக்கும். தொடர்பிற்கு : தேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சாலிகிராமம், சென்னை-93 தொலைபேசி 044 23644947 அலைபேசி 9600034659 desanthiripathippagam@gmail.com https://www.desanthiri.com/
எனது புதிய நாவல் ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை வெளியாகிவிட்டது. தேசாந்திரி பதிப்பகத்திலும் ஆன்லைன் விற்பனை தளத்திலும் இந்நூலைப் பெறலாம். மதுரைப் புத்தகக் கண்காட்சியில் தேசாந்திரி அரங்கு எண் 138ல் இந்நாவல் கிடைக்கும். விலை ரூ 200 ••• முதன் முதலாக காதல் நாவல் எழுதி இருக்கிறேன் குங்குமம் இதழில் வெளியான நேர்காணல் சந்திப்பு: கதிர்வேலன் தமிழ் இலக்கிய உலகில் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு எப்போதும் தனி ராஜ்ஜியம்தான். மெலிதான கதை சொல்லல், தீவிர தத்துவ விசாரம், பேரன்பு என …
ஆகஸ்ட் 31 ம் தேதி மாலை கவிக்கோ மன்றத்தில் நடைபெற இருக்கும் கனலி கலை இலக்கிய இணையதளம் தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன் தலைப்பு : குட்டி இளவரசனுடன் ஒரு பயணம். ( ஃபிரெஞ்ச் எழுத்தாளர் அந்துவாந்த் செந்த் எக்ச்பெரியின் வாழ்க்கை மற்றும் எழுத்து குறித்த உரை ) •• 24.8.2019
பிரான்ஸிலிருந்து வெளியாகும் கலை இலக்கிய இணையச் சிற்றிதழ் நடு – தமிழகச் சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் எனது சிறுகதை வெளியாகியுள்ளது. நடு இதழின் பிரதம ஆசிரியராக இருப்பவர் கோமகன் . சமகாலத் தமிழ் இலக்கியத்தின் முகத்தைப் பிரதிபலிப்பது போன்று சிறந்த கதைகள், கட்டுரைகள். கவிதைகள் கொண்டதாக இதழ் உருவாக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி தருகிறது. இணைய இதழ் சிறந்த ஓவியங்களுடன் நேர்த்தியாக வடிவமைப்புச் செய்யப்பட்டிருப்பது மிகவும் பிடித்திருக்கிறது. நடு இதழின் ஆசிரியர் குழுவிற்க்கும் வடிவமைப்பாளருக்கும் மனம் நிரம்பிய பாராட்டுகள் …
மதுரை புத்தகக் கண்காட்சியில் எனது புதிய நாவல் ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை வெளியாகவுள்ளது. அது குறித்த காணொளி •••• https://youtu.be/IdPVqFqp6aw
யுவான் ருல்போ, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், போர்ஹெஸ், ஆக்டோவியா பாஸ் உள்ளிட்ட புகழ்பெற்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் சிறுகதைகளைக் கவிஞர் பிரம்மராஜன், ஆர். சிவகுமார், எதிராஜ் அகிலன், நாகார்ஜுனன், சம்யுக்தா, மணிக்கண்ணன் ஆகியோர் சிறப்பாக மொழியாக்கம் செய்து வெளியிட்ட இந்நூல் எனக்கு மிகவும் பிடித்தமானது. நவீன தமிழ் சிறுகதையை மாற்றம் செய்ததில் இந்நூலுக்கு முக்கிய பங்கிருக்கிறது. பாஸ்கரன் ஒவியத்துடன் சிறந்த வடிவமைப்பில் நேர்த்தியாக உருவாக்கபட்டிருந்தது இந்நூலை பிரம்மராஜன் மறுபதிப்பு செய்தால் இன்றைய வாசகர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும். …
இந்திய சினிமாவின் பெருமைக்குரிய இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் மதவெறியர்களால் தொடர்ந்து தாக்கப்படுவதையும் அவமதிக்கப்படுவதையும் கண்டித்து ஆகஸ்ட் 7 புதன்கிழமை கேரளாவின் திருச்சூரில் நடைபெற்ற கண்டனக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன். அடூர் கோபாலகிருஷ்ணன் நம் காலத்தின் மகத்தான கலைஞன். அவரைச் சிறுமைப்படுத்தும் விதமாக கேரளாவில் மதவெறியர்கள் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருவதை கண்டித்துப் பேசியதுடன் தமிழ் எழுத்துலகம் அடூர் பக்கம் நிற்கும் என்று உரையாற்றினேன். இந்நிகழ்வில் மலையாளத் திரையுலகம் மற்றும் எழுத்துலகினைச் சார்ந்த முக்கியக் கலைஞர்கள், படைப்பாளிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள். …