அஞ்சலி
எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் மனைவி கணவதி அம்மாள் இன்று புதுச்சேரியில் காலமானார். அவரது மறைவிற்கு என் கண்ணீர் அஞ்சலிகள். கி.ராவிற்கு உற்றதுணையாக இருந்தவர் கணவதி. கடந்தவாரம் கி.ரா வீட்டிற்குப் போயிருந்த போது உடல்நலமற்றிருந்த கணவதி அம்மாவைச் சந்திதேன். படுக்கையில் தானிருந்தார். நினைவு தப்பியிருந்தது. அவரது உடல் நலம் குறித்த கவலையும் வேதனையும் கி.ரா முகத்தில் படிந்திருந்ததைக் காணமுடிந்தது. ஓர் எழுத்தாளன் உருவாவதற்கு அவனது குடும்பச் சூழல் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. வீட்டில் எழுதுவதற்கான சூழல் கிடைக்காத எழுத்தாளர்களே …