அறிவிப்பு

விமர்சனப் போட்டி

அந்திமழை – ZHAKART இணைந்து நடத்தும் நூல் விமர்சனப் போட்டி •••• அந்திமழை மாத இதழ் முன்னெடுக்கும் நூல் அறிமுக/விமர்சனப் போட்டி . இந்தப் போட்டியில் பங்குபெற தமிழ் கூறும் வாசக/எழுத்தாள நண்பர்களை  அந்திமழை அழைக்கிறது. பரிசு விவரங்கள்: •         முதல் பரிசு – ரூ.10000 •         இரண்டாம் பரிசு – ரூ.5000 [ இருவருக்கு] •         மூன்றாம் பரிசு – ரூ.1000 மதிப்புள்ள …

விமர்சனப் போட்டி Read More »

வாழ்த்துகள் லிங்கம்

உலகப் புத்தக தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு பெரியார் திடலில் நடைபெறும் நிகழ்வில் வேலூர் லிங்கம் சிறந்த வாசகர் விருது பெறுகிறார். இந்த விருதிற்கு முழுத்தகுதி கொண்டவர் லிங்கம். தேர்ந்த இலக்கியப்புத்தகங்களை தேடித்தேடி வாசிக்க கூடியவர். அவரது வீடே ஒரு நூலகம் போலதானிருக்கிறது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக வாசித்து வரும் லிங்கம் இந்த விருது பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது.  அவருக்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகள் விருது வழங்கும் நிகழ்வு ஏப்ரல்23 மாலை 5 …

வாழ்த்துகள் லிங்கம் Read More »

நன்றி

நேற்று எனது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பில் கலந்து கொண்ட நண்பர்கள். வாசகர்கள் அனைவருக்கும் மனம் நிரம்பிய நன்றி. பிறந்த நாளுக்காக வாழ்த்து தெரிவித்த எழுத்தாளர்கள். பத்திரிக்கையாளர்கள் ஊடகத்துறை நண்பர்கள். வாசகர்கள் அனைவருக்கும் தீராத நன்றிகள். நேற்றை நிகழ்விற்கு எழுத்தாளர் வண்ணநிலவன் வந்து என்னை வாழ்த்தியது மறக்கமுடியாத நிகழ்வு.அவருக்கு என் அன்பும் நன்றியும். நிகழ்வினை ஒருங்கிணைப்பு செய்து உதவிய ஆடிட்டர் சந்திரசேகருக்கு நன்றிகள். நிகழ்வை முழுமையாக ஸ்ருதி டிவி நேரலையாக ஒளிபரப்பியது. காணொளிகளும் …

நன்றி Read More »

பிறந்தநாள்

ஏப்ரல் 13 – எனது பிறந்த நாளை முன்னிட்டு  தேசாந்திரி அலுவலகத்தில்  நண்பர்களைச் சந்திக்க திட்டமிட்டிருக்கிறேன். விருப்பமான வாசகர்கள், நண்பர்கள் ஒன்று கூடி தேநீர் அருந்தும் நிகழ்வாக அமைக்கலாம் என எண்ணம். நிகழ்வின் சிறப்பாக  சமீபத்தில் எழுதிய புதிய சிறுகதை ஒன்றினை வாசிக்க இருக்கிறேன். வாருங்கள், நாம் ஒன்றுகூடி கதை பேசுவோம். நேரம் :  மாலை 5 மணி முதல் 7  : 30 வரை நாள்  : 13.04.2018    வெள்ளிக்கிழமை முகவரி தேசாந்திரி பதிப்பகம் …

பிறந்தநாள் Read More »

கண்டிக்கிறேன்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை வேண்டுமென்றே மத்திய அரசு தாமதிக்கிறது. அரசியல் சுயலாபத்திற்காக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் வன்முறையிது. தமிழக விவசாயிகள் நதிநீர் பிரச்சனையில் நீதிக்காக பல்லாண்டுகளாக காத்துகிடக்கிறார்கள். உச்சநீதிமன்றம் நீதி வழங்கிய போதும் நடைமுறைப்படுத்த மத்திய அரசு மறுக்கிறது. இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும்  நடைபெற்று வரும் தொடர்போராட்டங்களை ஆதரிக்கிறேன். இது விவசாயிகளின் பிரச்சனையில்லை. ஒட்டுமொத்த தமிழகத்தின் பிரச்சனை. உரிமைகளுக்காக போராடும் விவசாயிகளுடன் நாம் கரம் கோர்த்து நிற்க வேண்டிய காலமிது. மத்திய அரசின் இந்த …

கண்டிக்கிறேன் Read More »

விருது விழா

நேற்று நடைபெற்ற விருதுவழங்கும் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.  சென்னை நகரின் கலைவாணர் அரங்கம் மிகப்பிரம்மாண்டமானது. அதி நவீன வசதிகள் கொண்டது. அந்த அரங்கம் நிரம்பி ஆட்கள் இருக்கையின்றி நின்று கொண்டே நிகழ்ச்சியைக் கண்டார்கள். விழாவில் அத்தனை அரசியல்தலைவர்களும் கலந்து கொண்டது சிறப்பு. நீதியரசர் மகாதேவன், கவிஞர் வைரமுத்து, தமிழருவி மணியன், உள்ளிட்ட பலரும் வந்து கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.  என் வாழ்வின் மறக்க முடியாத நாள். நிகழ்வில் கலந்து கொண்ட வாசகர்கள். பத்திரிக்கையாளர்கள். நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் …

விருது விழா Read More »

வெயிலைக் கொண்டுவாருங்கள்/ ஈபுக்

எனது வெயிலைக் கொண்டு வாருங்கள் சிறுகதைத் தொகுப்பு ஈபுக்காக வந்துள்ளது வெயிலைக் கொண்டு வாருங்கள்: By எஸ்.ராமகிருஷ்ணன் S.Ramakrishnan Kindle eBook ASIN: B07B91YP3M 125 INR https://www.amazon.com/s/ref=nb_sb_noss?url=search-alias%3Daps&field-keywords=ASIN%3A+B07B91YP3M&rh=i%3Aaps%2Ck%3AASIN%3A+B07B91YP3M