அறிவிப்பு

பெற்றோர்களுக்கு

இன்று காலை எனது மெயிலில் இந்தச் செய்தியை  ஒரு நண்பர் பகிர்ந்திருந்தார். இணையத்தில்  வெளியாகியுள்ள இச்செய்தி சிங்கப்பூரிலுள்ள ஒரு பள்ளி முதல்வர் எழுதியது. SSLC தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள சூழலில் தமிழகப் பெற்றோர்கள் அவசியம் புரிந்து கொள்ள வேண்டிய செய்தியிது

பாவண்ணன் பாராட்டு விழா

நண்பரும் தமிழின் சிறந்த எழுத்தாளருமான பாவண்ணனைக்  கொண்டாடும் விதமாக மே 26 சனிக்கிழமை முழுநாள் கருத்தரங்கம் சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பாவண்ணன் சிறுகதைகள். நாவல்கள், மொழிபெயர்ப்புகள் குறித்து விரிவான உரைகள் இடம்பெறவுள்ளன. நிகழ்வை அமெரிக்காவைச் சேர்ந்த p.k சிவக்குமார், மதுரை வெற்றிவேல், பெங்களுர் மகாலிங்கம் போன்ற நண்பர்கள் ஒருங்கிணைந்து நடத்துகிறார்கள். பாவண்ணனின் சிறுகதைகள் தனித்துவமிக்கவை. அவரது சிறுகதை தொகுப்பு சுஜாதா விருது பெற்றபோது அது குறித்து விரிவாக நான் உரையாற்றியிருக்கிறேன். எனது இல்லத் திருமணம் …

பாவண்ணன் பாராட்டு விழா Read More »

அநீதி

நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் எட்டு உயிர்கள் பலியாகியுள்ளன. கலவரக்காட்சிகளை வீடியோவில் பார்த்த போது எழுந்த கேள்வி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களா வாகனங்களுக்கு தீ வைக்கிறார்கள். யாரோ புல்லுருவிகள் ஊடுபுகுந்திருக்கிறார்கள்.. ஆனால் இதற்காக பழிவாங்கப்பட்டது போராட்டக்கார்களின் உயிர். துப்பாக்கியை உயர்த்தியபடியே வாகனத்தின் மீது பவனி வரும் காவலர்களைப் பாருங்கள். கார்ப்பரேட் நலம் காக்க எப்படி பணியாற்றுகிறார்கள் என்பது புரியும் . நூறு நாட்களுக்கும் மேலாக அமைதிவழியில் …

அநீதி Read More »

பெங்களுரில்

திரைப்பட பணி ஒன்றின் காரணமாக கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக பெங்களுருவில் இருந்தேன். நண்பர்களை சந்திக்க நேரமில்லை. மகாலிங்கம் மட்டும் தினமும் வந்து  சந்தித்து பல்வேறு உதவிகள் செய்து கொடுத்தார். தேர்தல் நடக்கிற பரபரப்பே இல்லாமல் இருந்தது.  ஒரு நாள் விட்டு ஒரு நாள் மழை. வெயிலே தெரியவில்லை.  நிறைய நண்பர்கள் சந்திக்க விரும்பினார்கள்.  பணிச்சூழல் காரணமாக சந்திக்க இயலவில்லை.  விரைவில் பெங்களுருவில் ஒரு வாசக சந்திப்பை நடத்தலாம் என திட்டமிட்டு வருகிறேன். ஏற்பாடுகள் முடிந்தவுடன் அறிவிக்கிறேன் …

பெங்களுரில் Read More »

புதிய தொடர்

தி இந்து குழுமம் துவங்கியுள்ள காமதேனு இதழில் புதிய பத்தி ஒன்றை துவங்கியிருக்கிறேன். முடிவற்ற சாலை என்ற இந்த பத்தி எனது பயண அனுபவங்களை முன்னிலைப்படுத்துகிறது

கதை சொல்கிறார்கள்

கோடைவிடுமுறையில் குழந்தைகளை ஒன்று கூட்டி எனது கடவுளின் நாக்கு புத்தகத்திலுள்ள கதைகளைப் பகிர்ந்துவருகிறார்கள் இரண்டு ஆசிரியர்கள். துறையூரைச் சேர்ந்த பெருமாள் என்ற ஆசிரியரும் அவரது துணைவியாரும் தங்கள் வீட்டிலே இந்தக் கதை சொல்லும் நிகழ்வை நிகழ்த்தி வருகிறார்கள். நேற்று அவர்கள் என்னிடம் தொலைபேசியில் பேசி தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்கள். தி இந்து நாளிதழில் கடவுளின் நாக்கு தொடராக வந்த போது விரும்பி வாசித்தோம். இப்போது அந்த நூலிலுள்ள கதைகளை மாணவர்களை எடுத்துச் சொல்கிறோம். சிறுவர்கள் ஆர்வமாகக் …

கதை சொல்கிறார்கள் Read More »

பிரபஞ்சன் பாராட்டுவிழா

கடந்த ஆண்டு சென்னையில் எழுத்தாளர் பிரபஞ்சனைக் கொண்டாடுவோம் என்ற சிறப்பான நிகழ்ச்சியை நடத்தி அவருக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி திரட்டி  அளித்தோம். அந்த விழாவிற்கு வந்திருந்த புதுவை முதல்வர் எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த பிரபஞ்சனை நாங்களும் சிறப்பித்துக் கொண்டாடுவோம் என்று உறுதி அளித்தார். அதன்படி கடந்த வியாழன் ( 3.05.2018) அன்று மாலை புதுவையில் அரசு சார்பில் பிரபஞ்சன் அவர்களுக்கு சிறப்பான விழா நடத்தி பத்து லட்சம் ரூபாய் நிதியை வழங்கினார்கள். அந்த நிகழ்வில் கலந்து …

பிரபஞ்சன் பாராட்டுவிழா Read More »

காணொளி

நேற்று மௌனி பற்றி நான் ஆற்றிய உரையை ஸ்ருதி டிவி பதிவு செய்து வலையேற்றம் செய்துள்ளார்கள். ஸ்ருதிடிவி கபிலனுக்கு மனம் நிரம்பிய நன்றி •• டிஸ்கவரி புக் பேலஸ் & தேசாந்திரி பதிப்பகம் வழங்கும் உலகப் புத்தக தினம் சிறப்பு நிகழ்வு ‘மெளனியைக் கொண்டாடுவோம்’ – எஸ்.ராமகிருஷ்ணன் சிறப்புரை S.Ramakrishnan speech https://www.youtube.com/watch?v=yRRwfaW7nqk

மௌனியைக் கொண்டாடுவோம்

உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 23 மாலை 5 மணிக்கு  எழுத்தாளர் மௌனி குறித்து சிறப்புரை ஆற்றுகிறேன் இடம் : டிஸ்கவரி புக் பேலஸ், கே. கே. நகர். சென்னை 78 நண்பர்கள், வாசகர்கள் அனைவரும் கலந்து  கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்