அறிவிப்பு

Kindle eBooks

கிண்டிலில் கிடைக்கும் எனது ஈபுத்தகங்கள். Kindle eBook Whirling Swirling Sky By S.Ramakrishnan எஸ்.ராமகிருஷ்ணன் விலை ₹100 INR View on Amazon ASIN: B07B8KH6DH ** எனதருமை டால்ஸ்டாய்: enatharumai tol… By எஸ்.ராமகிருஷ்ணன் S.Ramakrishnan விலை 100 INR ASIN: B07B8QCXZQ ** காண் என்றது இயற்கை By எஸ்.ராமகிருஷ்ணன் S.Ramakrishnan விலை100 INR ASIN: B07B8FKST7 ** தாவரங்களின் உரையாடல் By எஸ் ராமகிருஷ்ணன் S.Ramakrishnan ₹125 INR View on …

Kindle eBooks Read More »

இயற்றமிழ் வித்தகர் விருது

தமிழ் இலக்கியத்தின் மீதும் இலக்கியவாதிகளின் மீதும் பெரும் பற்றும் அன்பும் கொண்டவர்  வைகோ. கலிங்கத்துபரணி, கம்பராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குறள் என அவர் ஆற்றிய விரிவான இலக்கிய உரைகளைக் கேட்டிருக்கிறேன். மடைதிறந்த வெள்ளம் போலக் கருத்துகளைப் பொழிவார். வாழும் காலத்திலே எழுத்தாளர்களைக் கௌரவித்துக் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தில் பைந்தமிழ் மன்றம் என்ற அமைப்பை அவர் உருவாக்கியுள்ளார். இந்த அமைப்பு ஆண்டிற்கு ஒரு இலக்கியவாதியைத் தேர்வு செய்து பொற்கிழியோடு விருது வழங்க முடிவு செய்திருக்கிறது. இந்த ஆண்டிற்கான இயற்றமிழ் …

இயற்றமிழ் வித்தகர் விருது Read More »

தேசாந்திரி புதிய வெளியீடுகள்- 2

கூழாங்கற்கள் பாடுகின்றன ஜென் கவிதைகள் குறித்த நூல் விலை 75 கோடுகள் இல்லாத வரைபடம் புகழ்பெற்ற வரலாற்று யாத்ரீகர்களைப் பற்றிய நூல் விலை ரூ 75 புத்தக கண்காட்சியின் போது முதல் வெளியீடாக வந்து விற்பனையில் சாதனை படைத்த நூல்கள் மறுபதிப்பு வெளியிடப்பட்டுள்ளன உலகை வாசிப்போம் உலக இலக்கியத்தின் சாதனையாளர்களைப் பற்றிய நூல் விலை 200 தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள் புதிய சிறுகதைத் தொகுப்பு விலை 150 காட்சிகளுக்கு அப்பால் உலக சினிமா குறித்த நூல் …

தேசாந்திரி புதிய வெளியீடுகள்- 2 Read More »

தேசாந்திரி புதிய வெளியீடுகள் 1

தேசாந்திரி பதிப்பகம் சார்பில் வெளியாகியுள்ள புதிய நூல்கள் உப பாண்டவம் மகாபாரதம் குறித்த நாவல். பத்து பதிப்புகளுக்கும் மேலாக விற்பனையில் சாதனை படைத்த நாவல். விலை ரூ 375 சஞ்சாரம் நாதஸ்வரக்கலையை மையமாகக் கொண்ட நாவல். விலை  340 உலக இலக்கியப் பேருரைகள் டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, ஹெமிங்வே, பாஷோ, அராபிய இரவுகள், ஹோமர், ஷேக்ஸ்பியர் குறித்து ஆற்றிய உரைகளின் தொகுப்புநூல் விலை 325 செகாவ் வாழ்கிறார் உலகின் மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளர் ஆன்டன் செகாவின் வாழ்க்கை வரலாறும் …

தேசாந்திரி புதிய வெளியீடுகள் 1 Read More »

அஞ்சலி

இயல் விருது வாங்குவதற்காக கனடாவிற்குச் சென்றிருந்த போது கவிஞர் செழியனைச் சந்தித்து உரையாடினேன். இலங்கையிலிருந்து தான் உயிர்தப்பிவந்த நிகழ்வை  வேடிக்கையான சம்பவத்தை நினைவுகூறுவது போல சிரிப்போடு விவரித்தார். கேட்கும் போது அதிர்ச்சியாக இருந்தது. நாடகங்கள் குறித்து   நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். ‘அரங்காடல்’  கனடாவில் வாழும் புலம் பெயர் தமிழர்களால் நடத்தப்படும் தீவிர நாடக முயற்சி. மனவெளி கலைக் குழுவினர் இதை ஒருங்கிணைப்பு செய்து நடத்துகிறார்கள். அதில் செழியனின் நாடகங்கள் மேடையேற்றப்பட்டிருக்கிறது அவரது கவிதைநூல் ஒன்றை எனக்குப் …

அஞ்சலி Read More »

தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்

சென்னை புத்தகக் கண்காட்சியின் போது பெங்களுரிலிருந்து  வந்த வாசகர் ஒருவர் எனக்கு இரண்டு கன்னடப்படங்களின் டிவிடி பரிசாகத் தந்தார். கூடவே ஒரு கடிதமும் தந்திருந்தார். அவற்றை எங்கோ தவறவிட்டுவிட்டேன். அந்த வாசகர் பெயர் நினைவில்லை. எனக்கு ஒருமுறை மின்னஞ்சல் அனுப்பியதாக நேர்பேச்சில் நினைவு கூர்ந்தார்.  மின்னஞ்சலில் தேடி அவரை அடையாளம் காண இயலவில்லை.  ஒருவேளை அவர் இதை வாசிப்பார் என்றால் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

திருச்சூரில்

திருச்சூரில் நடைபெறவுள்ள கேரள சாகித்ய அகாதமி நிகழ்வில் கலந்து  கொள்வதற்காக நாளை திருச்சூர் செல்கிறேன். இரண்டு நாட்கள் அங்கேயிருப்பேன்.

ஆட்கள் தேவை

தேசாந்திரி பதிப்பகத்தில் பணியாற்ற ஆபீஸ் பாய், மற்றும் இன்டிசைன் தெரிந்த வடிவமைப்பாளர், புரூப் ரீடர் தேவை. அனுபவம் உள்ளவர்கள் 9600034659 என்ற எண்ணுக்குத் தொடர்பு  கொள்ளவும்

பத்மவிபூஷண் விருது

இந்த ஆண்டுக்கான பத்மவிபூஷண் விருது  இசைஞானி இளையராஜா அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. உலகெங்குமுள்ள தமிழ் மக்களை தனது இசையால் ஆற்றுப்படுத்தும் இசைமேதைக்கு இந்த விருது அளிக்கபட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இசைஞானிக்கு என் மனம் நிரம்பிய அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்