அறிவிப்பு

இந்தப் பிரபஞ்சத்தின் பெயர்-கதை

செங்கதிர் தமிழின் மிக முக்கியமான மொழிபெயர்ப்பாளர்.  கேப்ரியல் கார்சியா மார்க்வெஸின் சிறுகதையை செங்கதிர் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். அத்துடன் ரேமண்ட் கார்வர் சிறுகதைகளை மொழியாக்கம் செய்து தனியொரு தொகுப்பாகவும் வெளியிட்டிருக்கிறார். வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு என்ற அத்தொகுப்பை காலச்சுவடு வெளியிட்டுள்ளது. செங்கதிர் மொழிபெயர்ப்பில் சென்ற ஆண்டு வெளியான தொகுப்பு இந்தப் பிரபஞ்சத்தின் பெயர்-கதை. இந்தத் தொகுப்பின் சிறப்பு எழுத்தாளர்களை முக்கிய கதாபாத்திரங்களாக கொண்ட உலகப்புகழ்பெற்ற சிறுகதைகளை கொண்டது என்பதே. செங்கதிரின் மொழியாக்கம் அபாரமானது. வெளியாகி …

இந்தப் பிரபஞ்சத்தின் பெயர்-கதை Read More »

தேசாந்திரியின் நிழலாக வாசகர்கள்

கடந்த ஆறு நாட்களாக புத்தகக் கண்காட்சியில் வாசகர்களைச் சந்தித்து உரையாடுவது மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது. வாசகர்களின் மகத்தான ஆதரவும் அன்புமே தேசாந்திரி பதிப்பகத்தின் வளர்ச்சிக்கு பெரும் துணை. எத்தனை விதமான வாசகர்கள். எழுத்தாளர்கள். பத்திரிக்கையாளர்கள். புத்தகக் கண்காட்சியில் என்னைச் சந்திக்கும் போது அவர்கள் காட்டும் அன்பு நெகிழச்செய்கிறது. எழுத்தாளர்கள் பிரபஞ்சன், அம்பை, சாருநிவேதிதா,சமஸ், மாமல்லன், மருதன், ,  லட்சுமி சரவணக்குமார், சரவணன் சந்திரன், பா.ராகவன், சுந்தர புத்தன்,  கே.என். செந்தில், விஷால் ராஜா, மானா பாஸ்கர், அதிஷா, பரிசல், …

தேசாந்திரியின் நிழலாக வாசகர்கள் Read More »

வெய்யில்

சமீபத்தில் நான் வாசித்த மிகச்சிறந்த கவிதைத்தொகுப்பு வெய்யில் எழுதியுள்ள மகிழ்ச்சியான பன்றிக்குட்டி. புதிய பாடு பொருள். கவிமொழி என அற்புதமாக எழுதியிருக்கிறார். வெயிலின் கவிதைகளை தொடர்ந்து வாசித்துவருபவன். அவரது கவிதை உலகின் அடுத்த கட்டம் இத்தொகுப்பு. கவிதைகளின் தொனியும், வியப்பூட்டும் படிமங்களும் இத்தொகுப்பை மிக முக்கியமானதாக்குகிறது. நூலைச் சிறப்பாக அச்சிட்டுள்ளது கொம்பு பதிப்பகம் ••• மகிழ்ச்சியான பன்றிக்குட்டி தலைமுறை ஒன்று: என்னிடம் விசுவாசமிக்க ஒரு பன்றி இருந்தது அதை பல நூற்றாண்டுகளாக நான் பழக்கினேன் என் தேவையைப் பொறுத்து …

வெய்யில் Read More »

அஞ்சலி

பத்திரிக்கையாளரும் எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான ஞாநி இன்று காலமானார். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஞாநியோடு பழகியிருக்கிறேன். சிறந்த நண்பர். இலக்கியவாதிகளை மிகவும் நேசிக்ககூடியவர். அவர் நடத்திய கேணி நிகழ்வின் முதல் கூட்டத்தை நான் தான் துவக்கிவைத்தேன். சிறந்த பண்பாளர். அவரது மறைவிற்கு என் இதயப் பூர்வமான அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

இரண்டுவார்த்தைகளும் மூன்று துறவிகளும்

ஆர். சிவக்குமார் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர். தேர்ந்த இலக்கிய ஆய்வாளர். ஆங்கிலத்துறைப்  பேராசிரியராக பணியாற்றி ஒய்வு பெற்றவர். 90களில் மீட்சி இதழ்களில் லத்தீன் அமெரிக்கக் கதைகளைத் தொடர்ச்சியாக மொழியாக்கம் செய்து வந்தவர். அவர் தொகுத்த லத்தீன் அமெரிக்க சிறுகதைகள் மிக முக்கியமான நூல். சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான எஸ்.ஆர்.எம் விருது பெற்றிருக்கிறார். கடந்த 30 ஆண்டுகளில் அவர் மொழிபெயர்ப்பு செய்த சிறுகதைகள் யாவும் ஒரே தொகுதியாக பாதரசம் பதிப்பகம்  வெளியிட்டுள்ளது. அதில் உலகப்புகழ்பெற்ற 22 சிறுகதைகளை மிக நேர்த்தியாக மொழியாக்கம் …

இரண்டுவார்த்தைகளும் மூன்று துறவிகளும் Read More »

புதிய வெளியீடுகள்

தேசாந்திரி பதிப்பகம் எனது பதின், இடக்கை நாவல்களின் சிறப்பு பதிப்பினை வெளியிட்டுள்ளது. சென்னை புத்தக கண்காட்சி அரங்கு எண் 391 , 392ல் கிடைக்கும் பதின்   விலை ரூ 235 இடக்கை விலை ரூ 375

Facebook Live

13.01.2018 Shrutitv வழியாக  வாசகர்களுடன் கலந்துரையாடல் Facebook  Live  மூலமாக இன்று இரவு  8.00 (ist) மணிக்கு நேரலையாக ஒளிப்பரப்பாக உள்ளது. விருப்பமான வாசகர்கள் உங்கள் கேள்விகளைக் கேட்கலாம். புத்தக கண்காட்சி தேசாந்திரி பதிப்பக அரங்கு எண் 391 392ல் இருந்து உங்களுடன் உரையாட இருக்கிறேன் #FBLive #bookstall stall no 391&392 தேசாந்திரி -Desanthiri

புத்தகக் கண்காட்சியில்

புத்தக கண்காட்சியில் தினமும் வாசகர்கள் என்னைச் சந்திக்கலாம். கையெழுத்து பெற்றுக் கொள்ளலாம். இன்று துவங்கி புத்தக கண்காட்சி முடியும் ஜனவரி 22  வரை தினமும் 4 மணி முதல் 8  :30 வரை  தேசாந்திரி பதிப்பகம் அரங்கு 391 &392ல் இருப்பேன். ஜனவரி 12, மற்றும் 19 ஆகிய  நாட்களில் மாலையில் வேறு நிகழ்ச்சிகள் இருப்பதால் ஐந்து மணி வரை மட்டுமே புத்தக கண்காட்சியில் இருப்பேன்.