அறிவிப்பு

இடக்கை

எனது புதிய நாவல் இடக்கை. உயிர்மை பதிப்பக வெளியீடாக  2016 சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வெளியாகிறது.

உலக இலக்கியம்

உலக இலக்கியத்தின் சிறந்த கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் யாவற்றையும் தொகுத்து மூன்று பெருந்தொகுதிகளாக வெளியிடத் திட்டமிட்டு வருகிறேன். ஒவ்வொரு தொகுதியும் ஆயிரம் பக்கங்கள் இருக்கக் கூடும். இதற்கான மொழிபெயர்ப்பு பணிகள் கடந்த ஒன்றரை வருடங்களாக நடந்து வருகின்றன. இந்தப் பணிக்கு ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழியாக்கம் செய்வதற்கு மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப்படுகிறார்கள். விருப்பமுள்ளவர்கள் எனது மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்பு கொள்ளவும் writerramki@gmail.com

சிறுவர்களுக்கான புத்தகங்கள்

சிறார்களுக்காக நான் எழுதிய புத்தகங்கள் எங்கே கிடைக்கும் எனக்கேட்டு கனடாவிலிருந்து ஒரு நண்பர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அவருக்கு அனுப்பிய தகவலை பகிர்ந்து கொள்கிறேன். ஆன்லைனில் வாங்க விரும்புகிறவர்கள் கீழ் கண்ட முகவரியை தொடர்பு கொள்க : டிஸ்கவரி புக் பேலஸ், எண் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம், முனுசாமி சாலை, மேற்கு  கே.கே நகர், சென்னை – 600078.  தமிழ்நாடு. இந்தியா Ph”+91 44 65157525 , Cell +91 9940446650 Mail: discoverybookpalace@gmail.com சென்னை : …

சிறுவர்களுக்கான புத்தகங்கள் Read More »

நெ.து.சு.விருது

கல்வியாளர் நெ.து.சுந்தரவடிவேலு அவர்களின் 103வது பிறந்தநாள் விழா இன்று அவரது சொந்த ஊரான நெய்யாடுபாக்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் அவரது பெயரில் வழங்கப்படும் நெ.து.சு.விருது எனக்கு அளிக்கபட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது நெய்யாடுபாக்கம். செய்யாற்றின் கரையிலுள்ள சிறிய கிராமம். அங்கே நெ.து.சுவால் உருவாக்கபட்ட துரைசாமி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் இவ்விழா நடைபெற்றது. கிராமத்துப் பொதுமக்கள், மாணவர்கள் முன்னிலையில் டாக்டர் ஏ.எம், சுவாமிநாதன் IAS. (Retd) இந்த விருதை எனக்கு வழங்கினார். நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் தமிழ் …

நெ.து.சு.விருது Read More »

ம.பொ.சி.விழா

சிலம்புச் செல்வர் டாக்டர்.ம.பொ.சிவஞானம் அவர்களின் 20ஆம் ஆண்டு நினைவு நாள் மற்றும் புத்தக வெளியீட்டு விழா அக்டோபர் 5 திங்கள்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் நடைபெற உள்ளது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன் இடம் :  டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரி (சத்யா ஸ்டுடியோ) ராஜா அண்ணாமலைபுரம். சென்னை 28 ••

காந்தி ஜெயந்தி

காந்தி சர்வ சமய பிரார்த்தனை மைய நண்பர்கள் NFDC உதவியுடன் வருகின்ற அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி நாளன்று சென்னையில் உள்ள சத்தியம்,அபிராமி,சாந்தி,பெரம்பூர் எஸ்2 ஆகிய நான்கு தியேட்டர்களில் காலைக்காட்சியாக ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கிய காந்தி  படத்தின் தமிழ் வடிவத்தை  இலவசமாகத் திரையிட  உள்ளார்கள். அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அழைக்கிறேன்.

விளம்பரப்படம்

ஆரண்யகாண்டம் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள புதிய விளம்பரப்படத்தைப் பார்த்தேன். மிகச்சிறப்பாக உள்ளது. ஸ்டாப் மோஷன் முறையில் உருவாக்கபட்ட இந்த விளம்பரப் படத்திற்கு இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் குரல் கொடுத்திருக்கிறார். இந்தப்படத்தின் உருவாக்கம் பற்றிய யூடியூப் வீடியோவை அவசியம் பாருங்கள். தனித்துவத்துடன் இதனை இயக்கியுள்ள தியாகராஜன் குமாரராஜாவிற்கும் சிறந்த ஒளிப்பதிவு செய்துள்ள ஜீவா சங்கருக்கும், தொழில்நுட்ப குழுவினர்களுக்கும், மனம் நிரம்பிய பாராட்டுகள். Make Room For Something New | Open Up With Stayzilla …

விளம்பரப்படம் Read More »

விளக்கு விருது

எழுத்தாளரும், சிறந்த மொழிபெயர்ப்பாளரும், விமர்சகருமான சி.மோகனுக்கு இவ்வாண்டிற்கான விளக்கு விருது அளிக்கப்படுகிறது. பா.சிங்காரம். சம்பத், ஜீ. நாகராஜன் போன்ற இலக்கிய ஆளுமைகள் குறித்த மோகனின் கட்டுரைகள் மிக முக்கியமானவை.  இந்த ஆளுமைகள் குறித்துத் தமிழ் இலக்கியம் கவனம் கொள்ள இக்கட்டுரைகளே முக்கியக் காரணமாக அமைந்தன. அவரது மொழிபெயர்ப்பில் வெளியான ஒநாய் குலசின்னம் மிக முக்கியமான படைப்பு. விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம் ஒவியர் ராமானுஜத்தின் வாழ்வை மையமாகக் கொண்ட சிறந்த நாவல் நடைவெளிக் குறிப்புகள், காலம்,கலை,கலைஞன்  இவரது …

விளக்கு விருது Read More »