அறிவிப்பு

சிறார் இலக்கிய முகாம்

டிஸ்கவரி புக் பேலஸ் மற்றும் வம்சி பதிப்பகத்துடன் இணைந்து திருவண்ணாமலையில் வருகிற மே 16 மற்றும் 17 தேதிகளில் குழந்தைகள் இலக்கியம் குறித்து இரண்டு நாள் முகாம் ஒன்றினை ஏற்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளேன். இதில் குழந்தை இலக்கிய நூல்கள், தமிழ் காமிக்ஸ், கதை சொல்லும் நிகழ்வு , உலகப்புகழ்பெற்ற குழந்தை இலக்கியப் படைப்புகள், எழுத்தாளர்கள் குறித்த அறிமுகம், குழந்தைகள் சினிமா ஆகிய அமர்வுகள் இடம் பெற உள்ளன. எழுத்தாளர்கள், கதை சொல்லிகள், ஒவியர்கள், குறும்பட இயக்குனர்கள் எனப் …

சிறார் இலக்கிய முகாம் Read More »

பிறந்த நாள்

இன்று (13.04.2015) எனது பிறந்த நாள். தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் வாழ்த்துகளைத் தெரிவித்த எழுத்தாளர்கள், நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும் மனம் நிரம்பிய நன்றி. ••

செகாவ் வாழ்கிறார்

“இந்த பூமியில் மனிதனுக்குத் தேவை ஏழடி நிலம் தான்“ “இல்லை, சவத்திற்குத் தான் ஏழடி நிலம் வேண்டும், மனிதனுக்கு ஒட்டுமொத்த உலகமும் வேண்டியுள்ளது“ எனத் தனது குறிப்பேடு ஒன்றில் செகாவ் கூறுகிறார். இந்தக் குறிப்பை வாசிக்கும் போதெல்லாம் மனது மிகுந்த கிளர்ச்சி அடைகிறது. டால்ஸ்டாயின் புகழ்பெற்ற கதை How Much Land Does A Man Need , இதில் ஆறு அல்லது ஏழு அடி தான் ஒரு மனிதனுக்குக் கடைசியில் தேவை என்பதை டால்ஸ்டாய் வலியுறுத்துகிறார். …

செகாவ் வாழ்கிறார் Read More »

வாழ்த்துகள் மணிகண்டன்

கவிஞரும் தீவிர இணையச் செயல்பாட்டாளருமான வா.மணிகண்டன் பெங்களூரு வாசகர் சந்திப்பில் தொடர்ச்சியாகச் சிறுகதைகளை முன்வைத்துக் கூட்டங்களை நடத்திவருகிறார். இந்த முயற்சிக்கு உறுதுணையாக நான் தொகுத்த நூறு சிறந்த சிறுகதைகள் நூலில் உள்ள கதைகளைத் தேர்வு செய்து விவாதித்து வருகிறார்கள். 100 சிறந்த சிறுகதைகள் நூலை உருவாக்கும் போது இப்படியான செயல்பாடுகளுக்குத் துணையாக இத் தொகுப்பு அமைய வேண்டும் என்பதே எனது முக்கிய விருப்பமாக இருந்தது அதைச் சாத்தியப்படுத்தியிருக்கும் மணிகண்டனுக்கு எனது மனம் நிரம்பிய வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் …

வாழ்த்துகள் மணிகண்டன் Read More »

புத்தகம் பேசுது

புத்தகம் பேசுது இதழில் சஞ்சாரம் நாவலுக்கு  தே. லட்சுமணன் எழுதியுள்ள விரிவான விமர்சனக்கட்டுரை வெளியாகியுள்ளது. நன்றி புத்தகம் பேசுது. மார்ச் 2015

உயிர்மையில்

உயிர்மை மார்ச் 2015 இதழில் சஞ்சாரம் நாவல் குறித்து லஷ்மி சரவணக்குமார் எழுதிய விமர்சனம் வெளியாகியுள்ளது நன்றி: உயிர்மை

கணையாழி

கணையாழி மார்ச் 2015 இதழில் சஞ்சாரம் நாவல் குறித்து ஆ. சிவசுப்பிரமணியன் எழுதிய விரிவான விமர்சனக்கட்டுரை வெளியாகியுள்ளது நன்றி: கணையாழி