எனது நாடகம்
கடந்த சனிக்கிழமை அன்று தியேட்டர் லேப் சார்பாக நண்பர் ஜெயராவ் எனது ஐந்து சிறுகதைகளையும் கவிஞர் மனுஷ்யபுத்திரனின் ஐந்து கவிதைகளையும் நாடகமாக நிகழ்த்திக்காட்டினார். அரங்கு நிரம்பிய கூட்டம். இந்த நிகழ்விற்குத் தோழர் மகேந்திரன் தலைமை வகித்து உரையாற்றினார். இவை இளம் நடிகர்களுக்கான நடிப்பு பயிற்சிக்காக உருவாக்கபட்டவை. குறைந்த வசதிகளைக் கொண்டு எளிய முறையில் இவை மேடையேற்றப்பட்ட போதும் மூலப்பிரதியை சரியாக உள்வாங்கிக் கொண்டு சிறப்பாக நிகழ்த்தபட்டன என்பது சந்தோஷம் அளித்தது நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் பிரதிகளை …