அறிவிப்பு

அ.ரெங்கசாமிக்கு விருது

அ.ரெங்கசாமி  மலேசியாவின் மிக முக்கிய எழுத்தாளர். நேதாஜியின் விடுதலைப்போரை முன்வைத்து இமயத்தியாகம் என்ற நாவலையும்,  ஜப்பானியர்கள் மரண ரயில்வே அமைக்கத் தமிழர்களைக்  கொண்டு சென்ற அவலக் கதையை “நினைவுச் சின்னம்” என்னும் நாவலாகவும் எழுதியிருக்கிறார் ஆங்கிலேய ஆதிக்கத்துக்கும் மலாயா கம்யூனிஸ்டுக் கட்சிக்குமான உள்நாட்டுப்போரில் சிக்கி தவித்த மலேயத் தமிழர்கள் கதையை  “லங்காட் நதிக்கரை” என்னும்  நாவலாக எழுதியிருக்கிறார். வரலாற்றுபிரக்ஞையும் கலைமேதமையும் கொண்ட அவரது படைப்புகள் மிக முக்கியமானவை. அவருக்கு வல்லினம் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது. அ. ரெங்கசாமி  அவர்களுக்கு …

அ.ரெங்கசாமிக்கு விருது Read More »

வேண்டுகோள்

தசைச்சிதைவு நோயால் பாதிக்கபட்ட வானவன் மாதேவி, வல்லபி இருவரும் ஆதவ் அறக்கட்டளை என்ற தன்னார்வ நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள்.  உயிருககுப் போராடிய நிலையிலும் இவர்கள் மேற்கொண்டு வரும் சேவை மகத்தானது. தன்னைப் போலவே தசைச்சிதைவு நோயால் போராடும் பலருக்கும் மருத்துவ உதவி அளித்து வருகிறார்கள் அந்தப்பணிக்கு நிறைய பொருளுதவி தேவைப்படுகிறது. விருப்பமுள்ள நண்பர்கள் உதவி செய்யும்படியாக கேட்டுக் கொள்கிறேன் •• அன்பு நண்பர்களுக்கு, வணக்கம், என் பெயர் வானவன் மாதேவி. எனது தங்கை பெயர் இயல் இசை வல்லபி. நானும் …

வேண்டுகோள் Read More »

விளக்கு விருது

நண்பர் கோணங்கிக்கு விளக்கு விருது அறிவிக்கப்பட்டிருப்பது சந்தோஷம் தருகிறது. அவருக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்

விருட்சம் பரிசு

நவீன விருட்சம் இலக்கிய இதழ் சார்பாக ஒவ்வொரு மாதமும் தமிழில் வெளியாகிற சிறுகதைகளிலிருந்து சிறந்த ஒன்றினைத் தேர்வு செய்து பரிசு வழங்கி வருகிறார் எழுத்தாளர் அழகியசிங்கர். சென்ற மாதத்தின் சிறந்த கதையாக நான் எழுதிய எம்பாவாய் சிறுகதை தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இக்கதை உயிர்மை இதழில் வெளியாகி வாசகர்களின் மிகுந்த பாராட்டினைப் பெற்றது. •••

வீடில்லாத புத்தகங்கள்

தி இந்துவில் வியாழன் தோறும் வீடில்லாத புத்தகங்கள் என்ற தலைப்பில் ஒரு பத்தி எழுதுகிறேன். இன்று முதல் அந்தப் பத்தி துவங்குகிறது. இணைப்பு : https://tamil.thehindu.com/general/literature/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D/article6421560.ece?homepage=true

நிகழ்வுகள்

சென்னை அண்ணாநகரில் எழுத்தாளர் தமிழ்மகன் நடத்தும் பொக்கிஷம் புத்தகக் கடையில் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான நாகிப் மாஃபஸ் எழுதிய அரேபிய இரவுகளும் பகல்களும் நாவல் குறித்து உரையாற்றினேன். அரங்கு நிரம்பிய கூட்டம். நாவல்குறித்து வாசகர்களின் கலந்துரையாடல் சிறப்பாக நடைபெற்றது. மொழிபெயர்ப்பாளர் சா. தேவதாஸ் நிகழ்வில் கலந்து கொண்டு தனது மொழிபெயர்ப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். டிஸ்கவரி புக் பேலஸ், பனுவல், அகநாழிகை, பொக்கிஷம் என சென்னையில் உள்ள புத்தக கடைகள் தொடர்ந்து இலக்கிய நிகழ்வுகளை நடத்திவருவது …

நிகழ்வுகள் Read More »

தமிழ் இலக்கிய விருது

திருச்சி சமயபுரத்திலுள்ள எஸ்.ஆர்.வி. பள்ளி, சிறந்த எழுத்தாளர்கள், தமிழ் அறிஞர்கள், சமூக சேவை செய்யும் ஆளுமைகளைக் கௌரவிக்கும் விதமாக வாழ்நாள் தமிழ் விருது, தமிழ் இலக்கிய விருது, சமநோக்கு விருது, படைப்பூக்க விருது என நான்கு விதமான விருதுகளை அளித்துவருகிறார்கள். இந்த ஆண்டிற்கான தமிழ் இலக்கிய விருது எனக்கு அளிக்கபடுவதாக எஸ். ஆர். வி. பள்ளி அறிவித்திருக்கிறது. இந்த விருதினை எழுத்தாளர்கள் பிரபஞ்சன், வண்ணதாசன் , வண்ணநிலவன் ஆகியோர் கடந்த காலங்களில் பெற்றிருக்கிறார்கள். எழுத்தாளர்கள் அசோகமித்ரன். எஸ். …

தமிழ் இலக்கிய விருது Read More »

புத்தக வெளியீட்டு விழாவில்

மதுரையில் நடைபெற்ற எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த தஞ்சை பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருமலை. தோழர் எஸ். ஏ. பெருமாள். எழுத்தாளர் சுரேஷ் குமார இந்திரஜித். கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம், எழுத்தாளர் எஸ்வி வேணுகோபால். டாக்டர் வெங்கடாசலம், எழுத்தாளர் ஷாஜகான், எழுத்தாளர் முத்துகிருஷ்ணன், ஆகியோருக்கும், உயிர்மை பதிப்பகத்திற்கும், நிகழ்வினைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த நண்பர் மனுஷ்யபுத்திரனுக்கும், செல்விக்கும், தொகுத்து வழங்கிய கவிஞர் ஆத்மார்த்திக்கும், , வருகை தந்த வாசகர்கள், நண்பர்கள் …

புத்தக வெளியீட்டு விழாவில் Read More »

காஃப்கா எழுதாத கடிதம்

காஃப்கா எழுதாத கடிதம் என்ற எனது கட்டுரைகளின் தொகுப்பு ஆகஸ்ட் 30 மாலை ஆறுமணிக்கு மதுரை தமுக்கம் மைதானம் எதிரில் உள்ள நார்த்கேட் ஹோட்டலில் வெளியிடப்படவுள்ளது. உயிர்மை பதிப்பகம் இந்த நூலை வெளியிடுகிறது. காஃப்கா எழுதாத கடிதம் கட்டுரைத்தொகுப்பில் 28 கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. காஃப்கா, வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ், ழான் காக்தூ, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், ஹெர்மென் மெல்வில், தோரோ, ஹெர்மன் ஹெஸ்ஸே, ஸ்டீபன் ஜ்ஸ்வேய்க், மிரோஜெக், ரேமண்ட் கார்வர், விளாதிமிர் மெக்ரே ,வியோலெட் லெடுக், செல்மா லாகர்லெவ். …

காஃப்கா எழுதாத கடிதம் Read More »