துயில் வெளியீட்டு விழா
எனது புதிய நாவலான துயில் வெளியீட்டு விழா புத்தாண்டு தினத்தின் மாலையில் (1.1.11 மாலை 5.30 மணி) நடைபெறுகிறது. உயிர்மை பதிப்பகம் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சி சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலக வளாகத்தில் நடைபெற உள்ளது நாவலின் வெளியீட்டு விழா நான்கு பகுதிகளைக் கொண்டதாக வடிவமைக்கபட்டிருக்கிறது முதல் பகுதி நாவலின் உள்ளடக்கம் மற்றும் அது எந்த விதமான நாவல் என்பதைப் பற்றிய செறிவான அறிமுக உரை, அதைத் தொடர்ந்து நாவல் வெளியீடு. இரண்டாம் …