துயில்
எனது புதிய நாவல் துயில் ஜனவரி 1 2011 அன்று (1.1.11) மாலை 6 மணி அளவில் சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேயப் பாவணர் நூலக அரங்கில் வெளியிடப்பட உள்ளது. நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பிக்க வேண்டுகிறேன்
எனது புதிய நாவல் துயில் ஜனவரி 1 2011 அன்று (1.1.11) மாலை 6 மணி அளவில் சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேயப் பாவணர் நூலக அரங்கில் வெளியிடப்பட உள்ளது. நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பிக்க வேண்டுகிறேன்
எனது புதிய நாவலான துயில் வெளியீட்டு விழா புத்தாண்டு தினத்தின் மாலையில் (1.1.11 மாலை 5.30 மணி) நடைபெறுகிறது. உயிர்மை பதிப்பகம் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சி சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலக வளாகத்தில் நடைபெற உள்ளது நாவலின் வெளியீட்டு விழா நான்கு பகுதிகளைக் கொண்டதாக வடிவமைக்கபட்டிருக்கிறது முதல் பகுதி நாவலின் உள்ளடக்கம் மற்றும் அது எந்த விதமான நாவல் என்பதைப் பற்றிய செறிவான அறிமுக உரை, அதைத் தொடர்ந்து நாவல் வெளியீடு. இரண்டாம் …
தில்லித் தமிழ்ச்சங்கம் சம கால இலக்கிய வளர்ச்சிப் போக்குகளை மதிப்பீடு செய்ய தமிழ் 2010 என்னும் இலக்கியக் கருத்தரங்கை டிச.10,11,12 ஆகிய நாட்களில் புதுடில்லியில் மிகச்சிறப்பாக நிகழ்த்த திட்டமிட்டுள்ளது. நான் அதில் கலந்து கொண்டு சிறுகதைகள் பற்றி உரையாற்ற இருக்கிறேன் 11.12.10 அன்றுகாலை பனிரெண்டு மணிக்கு எனது உரை நிகழ்த்தப்பட உள்ளது இந்த கருத்தரங்கில் நாஞ்சில்நாடன். கவிஞர் சிற்பி , ரவி சுப்பிரமணியன், பத்ரி சேஷாத்திரி , கவிஞர் கலாப்ரியா , பேராசிரியர் ப்ரேம், வெளி ரங்கராஜன், …
ஆங்கில இதழான WISDOM (international monthly digest) இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் இருந்து வெளியாகி வருகிறது , இவர்கள் ஆண்டுதோறும் சமூக மேம்பாட்டிற்கு உதவிய பல்வேறு துறைகளைச் சார்ந்து சிறந்து விளங்குபவர்களை பாராட்டும் விதமாக WISDOM AWARD என்ற விருதினை வழங்கிச் சிறப்பிக்கிறார்கள். இலக்கியம், இசை, கல்வி, மருத்துவம், பொதுசேவை என்று பல்வேறு பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கபடுகிறது, இந்த ஆண்டிற்கான விஸ்டம் இன்டர்நேஷனல் விருது எனக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதற்கான விருது வழங்கும் விழா …
இந்த ஆண்டிற்கான தமிழ் சங்கம் விருது எனக்கு வழங்கப்பட உள்ளதாக சேலம் தமிழ் சங்கம் அறிவித்துள்ளது. இவ்விருது பதினைந்தாயிரம் ரொக்கமும் நினைவுப்பரிசும் உள்ளடக்கியது நவீன தமிழ் இலக்கியத்திற்கு முக்கியப் பங்களிப்பு செய்துள்ளதற்காக இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி டிசம்பர் 26ம் தேதி ஞாயிறு காலை 10 மணி அளவில் சேலத்தில் உள்ள தமிழ் சங்க கட்டிடத்தில் நடைபெற உள்ளது. விருப்பமான நண்பர்கள் வாசகர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி …
எனது நண்பரும் தீவிர அரசியல் விமர்சகரும், எழுத்தாளருமான மதுரையைச் சேர்ந்த அ.முத்துகிருஷ்ணன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணம் ஒன்றை மேற்கொள்ள இருக்கிறார், பாலஸ்தீனத்தின் நெருக்கடிநிலையை உலகின் கவனத்திற்கு எடுத்துரைக்கவும் காசா மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் ஆசியாவின் 18 நாடுகளைச் சேர்ந்த 500 பேர் பாலஸ்தீனம் நோக்கி ஒரு பெரும் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்கள். டிசம்பர் 2 தேதி டெல்லியில் இருந்து கிளம்பும் இந்தப் பயணம் ஜனவரி 4ம் தேதி நிறைவுபெறுகிறது, தில்லியில் இருந்து கிளம்பி வாகா எல்லை …
களம் இலக்கிய அமைப்பின் சார்பில் திருச்சியில் நவம்பர் 11 மாலை ஆறுமணிக்கு கதைக்குள் வராதவர்கள் என்ற தலைப்பில் நான் பேச இருக்கிறேன், அதைத் தொடர்ந்து கலந்துரையாடல் நிகழ்வு உள்ளது, விருப்பமான நண்பர்கள் யாவரும் வரலாம் நாள் : 11.11.10 இடம் : ரவி மினி ஹால், கரூர் பைபாஸ் சாலை, திருச்சி நேரம் : மாலை 6 மணி
இரண்டு ஆண்டுகளாக எழுதி வந்த எனது புதிய நாவல் துயில் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது, இந்த நாவலின் இறுதிவடிவத்தை சீர்செய்து கொண்டிருப்பதால் இணையத்தில் எழுத நேரம் கிடைப்பதில்லை, ஒரு நாவலை எழுதுவதற்கு எனக்கு ஒன்றரை வருசங்கள் தேவைப்படுகிறது, அதை எடிட் செய்ய தினமும் ஆறு மணி நேரம் வேலை செய்தால் கூட ஆறு மாதமாகி விடுகிறது. நாவலை எழுதி இறுதிவடிவம் கொண்டுவருவது எப்போதுமே ஒரு சவால், ஆனால் அந்த உருமாற்றம் தரும் ஆனந்தம் அலாதியானது உயிர்மை …
பெங்களுரில் நடைபெற உள்ள புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொள்ள அக்டோபர் 3ம் தேதி ஞாயிற்றுகிழமை அங்கு வருவதாக உள்ளேன். ஒரு நாள் முன்னதாக அக்டோடபர் 2ல் வந்துவிடுவேன், அன்று நண்பர்கள் வாசகர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வினை ஒழுங்குசெய்திருக்கிறேன். இது ஒரு திறந்த உரையாடலுக்கான நிகழ்வு. ஆகவே நண்பர்களுடன் கூடிப்பேசி ஒரு கோப்பைத் தேநீரைப் பகிர்ந்து கொள்வது தான் நிகழ்வின் பிரதானம். விருப்பமுள்ள நண்பர்கள் அனைவரும் வரலாம் நாள்: 2.10.10 சனிக்கிழமை நேரம் : மாலை …
youtube உள்ள எனது நேர்காணலின் ஏழு பகுதிகளுக்கான இணைப்புகள் இவை https://www.youtube.com/watch?v=rvSrAk1cJM8 Part 1 https://www.youtube.com/watch?v=XJFGE_nbcZs Part 2 https://www.youtube.com/watch?v=ZaxK6Nhz6kA Part 3 https://www.youtube.com/watch?v=vZ3kormDsEI Part 4 https://www.youtube.com/watch?v=UTIefcrWq4Q Part 5 https://www.youtube.com/watch?v=7AfUg1PDrUM Part 6 https://www.youtube.com/watch?v=YaXZpPae0w8 Part 7 ** நேற்று ஷாஜியின் புத்தக உரையாடல் நிகழ்வில் இயக்குனர் மணி ரத்னம் அவர்களைச் சந்தித்தேன், மாறாத எளிய புன்னகை, வார்த்தைகளை எண்ணிச் செலவிடும் அவரது இயல்பு, மேடையில் அவர் பேசிய ஐந்து நிமிசப் பேச்சினுள் இயல்பாக …