ஏப்ரல் 11 வியாழக்கிழமை புதுச்சேரி சென்றிருந்தேன். பேராசிரியர் ரவிக்குமார், சீனுதமிழ்மணி இருவரையும் சந்தித்து உரையாடினேன். ரவிக்குமார் கல்பனாவுடன் இணைந்து மணிப்பூரிக் கவிதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார். அந்த நூலை எனக்கு அளித்தார். மாலையில் பேராசிரியர் ஜெயசீல ஸ்டீபன் அவர்களைச் சந்தித்தேன்.. வரலாற்று அறிஞரான ஜெயசீல ஸ்டீபன் சாந்திநிகேதனில் பணியாற்றியவர். டச்சு, போர்த்துகீஸ். பிரெஞ்சு உள்ளிட்ட ஆறு மொழிகள் அறிந்தவர். 16 முதல் 19 நூற்றாண்டு வரையிலான டச்சு, போர்த்துகீஸ், பிரெஞ்சு காலனிய வரலாற்றை ஆராய்ந்து சிறப்பான நூல்களை எழுதியிருக்கிறார். …
புதுச்சேரியில் Read More »