அறிவிப்பு
மே 3 – நிகழ்ச்சி
மே 3 வெள்ளிக்கிழமை மாலை கவிக்கோ மன்றத்தில் நடைபெறும் எனது புத்தக அறிமுகவிழாவிற்கான அழைப்பிதழ்.
நூல் அறிமுக விழா மற்றும் சிறப்புப் புத்தக விற்பனை
ஓரியண்ட் பிளாக்ஸ்வான் எனது தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் ஆங்கில மொழியாக்கத்தை The Man Who Walked Backwards and Other Stories என வெளியிட்டுள்ளது. இந்த நூலை நீதிபதி பிரபாஸ்ரீதேவன் மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார். இதற்கான அறிமுக விழா மே 3 வெள்ளிக்கிழமை மாலை நடைபெறுகிறது. ஆங்கில எழுத்தாளர் அபர்ணா கார்த்திகேயன் அறிமுகவுரை நிகழ்த்துகிறார். நீதிபதி பிரபாஸ்ரீதேவன் தனது மொழிபெயர்ப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார். கதையாகும் நினைவுகள் என்ற தலைப்பில் நான் சிறப்புரை ஆற்றுகிறேன். இந்த விழாவோடு தேசாந்திரி பதிப்பகத்தின் …
நூல் அறிமுக விழா மற்றும் சிறப்புப் புத்தக விற்பனை Read More »
தமிழக ஓவிய மரபுகள்
நாளை செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் நடைபெறவுள்ள தமிழக ஓவிய மரபுகள் குறித்த பயிலரங்கில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறேன்.
உலகப் புத்தக தினம்
நாளை ஏப்ரல் 23 உலகப் புத்தக தினம். யுனெஸ்கோ 1995 ம் ஆண்டு முதல் ஏப்ரல் 23 ம் தேதியை உலக புத்தக மற்றும் காப்புரிமை தினமாக கொண்டாடி வருகிறது. இந்த தினம் ஷேக்ஸ்பியர் மற்றும் செர்வாண்டஸின் நினைவுநாளாகும். உலகம் முழுவதும் புத்தக தினக் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. வாசகர்கள். சக படைப்பாளிகள் , பதிப்பாளர்கள். புத்தக விற்பனையாளர்கள். நூலகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உலகப் புத்தக தின வாழ்த்துகள். தேசாந்திரி பதிப்பகம் இதனைக் கொண்டாடும் விதமாக எனது …
நீலச்சக்கரம் / கடிதம்
எனது சிறார் நூலான நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்தினை வாசித்து தங்ககோபி என்ற பள்ளிச்சிறுவன் எழுதிய கடிதம். மாணவர்கள் மத்தியில் புத்தக வாசிப்பு அதிகரிக்கப்பட வேண்டும். இன்று பல்வேறு பள்ளிகளில் அதற்கான முயற்சிகளை ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்
புதுச்சேரியில்
ஏப்ரல் 11 வியாழக்கிழமை புதுச்சேரி சென்றிருந்தேன். பேராசிரியர் ரவிக்குமார், சீனுதமிழ்மணி இருவரையும் சந்தித்து உரையாடினேன். ரவிக்குமார் கல்பனாவுடன் இணைந்து மணிப்பூரிக் கவிதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார். அந்த நூலை எனக்கு அளித்தார். மாலையில் பேராசிரியர் ஜெயசீல ஸ்டீபன் அவர்களைச் சந்தித்தேன்.. வரலாற்று அறிஞரான ஜெயசீல ஸ்டீபன் சாந்திநிகேதனில் பணியாற்றியவர். டச்சு, போர்த்துகீஸ். பிரெஞ்சு உள்ளிட்ட ஆறு மொழிகள் அறிந்தவர். 16 முதல் 19 நூற்றாண்டு வரையிலான டச்சு, போர்த்துகீஸ், பிரெஞ்சு காலனிய வரலாற்றை ஆராய்ந்து சிறப்பான நூல்களை எழுதியிருக்கிறார். …
எஸ்.ராவிடம் கேளுங்கள் -1
எஸ்.ராவிடம் கேளுங்கள் காணொளித் தொடர் நேற்று யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. உங்கள் கேள்விகளை இதில் காணும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.
நன்றி
நேற்று (13.04.24) எனது பிறந்த நாள். காலை முதலே நண்பர்கள், வாசகர்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கத் துவங்கினார்கள். ஊரிலிருந்து அம்மாவும் அப்பாவும் வாழ்த்துச் சொன்னார்கள். தங்கைகளின் வாழ்த்து அதைத் தொடர்ந்து வந்தது. கவிஞர் தேவதச்சன் வாழ்த்துச் சொல்லியதோடு பிறந்தநாளை எப்படி உணருகிறீர்கள் என்று கேட்டார். மீனா அலெக்சாண்டர் கவிதை ஒன்றில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இருவர் சந்தித்துக் கொள்வார்கள். அப்போது அவர்களுக்கு என்ன பேசுவது என்று தெரியாது. ஆனால் அவர்கள் இளமையின் குருவி எங்கிருந்தோ சப்தமிடுவதைக் கேட்பதாக உணருவார்கள். …








