நாளை ஏப்ரல் 23 உலகப் புத்தக தினம். யுனெஸ்கோ 1995 ம் ஆண்டு முதல் ஏப்ரல் 23 ம் தேதியை உலக புத்தக மற்றும் காப்புரிமை தினமாக கொண்டாடி வருகிறது.
இந்த தினம் ஷேக்ஸ்பியர் மற்றும் செர்வாண்டஸின் நினைவுநாளாகும்.
உலகம் முழுவதும் புத்தக தினக் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.

வாசகர்கள். சக படைப்பாளிகள் , பதிப்பாளர்கள். புத்தக விற்பனையாளர்கள். நூலகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உலகப் புத்தக தின வாழ்த்துகள்.
தேசாந்திரி பதிப்பகம் இதனைக் கொண்டாடும் விதமாக எனது அனைத்து நூல்களுக்கும் 15 சதவீத தள்ளுபடி அறிவித்துள்ளது. ஆன்லைன் மூலமோ, நேரிலோ புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

தேசாந்திரி பதிப்பகம்
டி1, கங்கை குடியிருப்பு
எண்பதடி சாலை, சாலிகிராமம், சென்னை-93