அறிவிப்பு

கோவையில்

கோவை புத்தகக் கண்காட்சியில் இரண்டு நாட்களும் நிறைய வாசகர்களைச் சந்தித்தேன். இனிமையான அனுபவமாக இருந்தது. வாசிக்க வேண்டிய புத்தகங்கள், அரிய ஒவியங்கள், உலகசினிமா, மற்றும் எழுதும் கலை குறித்து அறிந்து கொள்வதில் இளம்வாசகர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். தேசாந்திரி சார்பில் இதற்கென சிறப்பு நிகழ்வுகளை நடத்தலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். நாள் மற்றும் நேரம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். சனிக்கிழமை மாலை மாதம்பட்டி ரங்கராஜ் அவர்களின் முன்னெடுப்பில் நடைபெற்ற கோல்டன் லீப் அவார்ட் நிகழ்ச்சியில் கலந்து …

கோவையில் Read More »

கோவையில் இரண்டு நாட்கள்

புத்தகத்திருவிழாவில் கலந்து கொள்ள நாளை கோவை வருகிறேன். 22 .07.23 சனிக்கிழமை மற்றும் 23.07.23 ஞாயிறு ஆகிய இரண்டு தினங்கள் கோவையில் இருப்பேன். புத்தகத்திருவிழாவில் தேசாந்தரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது. அரங்கு எண் 17. அங்கே என்னைச் சந்திக்கலாம். சனிக்கிழமை மாலையும், ஞாயிறு காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை தேசாந்திரி அரங்கில் இருப்பேன்.

சஞ்சாரம் காமிக்ஸ்

கும்பகோணம் அரசு கவின்கலைக் கல்லூரி மாணவர் பூபதி எனது சஞ்சாரம் நாவலின் ஒரு பகுதியை காமிக்ஸ் வடிவில் உருவாக்கியிருப்பதாக விரிவுரையாளரும் நண்பருமான கோ.வில்வநாதன் தெரிவித்தார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பூபதியை நேரில் காண வேண்டும் என அழைத்து வரச் சொன்னேன். சில தினங்களுக்குப் பிறகு எனது அலுவலகத்திற்கு வந்திருந்தார்கள். திரைப்படங்களுக்கான ஸ்டோரி போர்ட் வரைவதில் முனைப்புடன் செயல்படுகிறார் பூபதி தனது விருப்பத்திற்காக சஞ்சாரம் நாவலின் முதல் அத்தியாயத்தை காமிக்ஸ் வடிவில் உருவாக்கியிருக்கிறார். மிக அழகான ஓவியங்கள். கருப்பு …

சஞ்சாரம் காமிக்ஸ் Read More »

தஞ்சாவூர் புத்தகத் திருவிழாவில்

19.7.2023 புதன்கிழமை மாலை தஞ்சாவூர் புத்தகத் திருவிழாவில் உரையாற்றுகிறேன் தலைப்பு : எழுத்தின் பாதை அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில்

ஜுலை 28 வெள்ளிக்கிழமை மாலை புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவில் உரையாற்றுகிறேன். தலைப்பு : புத்தகத்தின் கைகள். இடம் : நகர் மன்றம் புதுக்கோட்டை

காந்தி /உரை

அமரர் அ.ராமசாமி எழுதிய தமிழ்நாட்டில் காந்தி நூல் அறிமுகவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்டு நூல் குறித்து உரையாற்றினேன்

சொல்வனம்- 300

தமிழ் இணைய இதழ்களில் முதன்மையானது சொல்வனம். சர்வதேச இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்வதிலும். சிறந்த படைப்புகளைத் தேர்வு செய்து வெளியிடுவதிலும் சொல்வனம் சிறப்பாகப் பங்களித்து வருகிறது. சொல்வனம் ஆசிரியர் குழுவிற்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள். https://solvanam.com/ சொல்வனம் 300ஆம் இதழ் : புதிய எழுத்துகளும் புதுப் புத்தகங்களும் குறித்த சிறப்பிதழாக வெளிவருகிறது. இம்முறை இளம் எழுத்தாளர்கள், புது எழுத்து முறைகள், தமிழின் அடுத்தக் கட்டப் பாய்ச்சல்களை முன்வைக்கும் முகமாக 300வது இதழை இளம் படைப்பாளிகளைக் கவனப்படுத்தும் …

சொல்வனம்- 300 Read More »

உப பாண்டவம் / மலையாள மொழிபெயர்ப்பு

எனது உப பாண்டவம் நாவல் மலையாளத்தில் வெளியாகி சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் கே.எஸ்.வெங்கடாசலம். DC புக்ஸ் வெளியிட்டுள்ளார்கள். குறுகிய காலத்தில் இதன் முதற்பதிப்பு விற்றுத்தீர்ந்து இரண்டாம் பதிப்பு வெளியாகியுள்ளது என்ற மகிழ்ச்சியை வெங்கடாசலம் பகிர்ந்து கொண்டார். அவருக்கு எனது மனம் நிறைந்த நன்றி. ஜுலை 3 2023.

தமிழ்நாட்டில் காந்தி

அமரர் அ. இராமசாமி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அவர் எழுதிய தமிழ்நாட்டில் காந்தி நூலின் சிறப்புப் பதிப்பு வெளியாகிறது. சந்தியா பதிப்பகம் இந்நூலினை வெளியிடுகிறார்கள். இதன் வெளியீட்டுவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன். இடம் : தக்கர்பாபா வித்யாலயம். தி. நகர் சென்னை. நாள் : ஜுலை 7. மாலை ஆறுமணி