அறிவிப்பு

உப பாண்டவம் / மலையாள மொழிபெயர்ப்பு

எனது உப பாண்டவம் நாவல் மலையாளத்தில் வெளியாகி சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் கே.எஸ்.வெங்கடாசலம். DC புக்ஸ் வெளியிட்டுள்ளார்கள். குறுகிய காலத்தில் இதன் முதற்பதிப்பு விற்றுத்தீர்ந்து இரண்டாம் பதிப்பு வெளியாகியுள்ளது என்ற மகிழ்ச்சியை வெங்கடாசலம் பகிர்ந்து கொண்டார். அவருக்கு எனது மனம் நிறைந்த நன்றி. ஜுலை 3 2023.

தமிழ்நாட்டில் காந்தி

அமரர் அ. இராமசாமி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அவர் எழுதிய தமிழ்நாட்டில் காந்தி நூலின் சிறப்புப் பதிப்பு வெளியாகிறது. சந்தியா பதிப்பகம் இந்நூலினை வெளியிடுகிறார்கள். இதன் வெளியீட்டுவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன். இடம் : தக்கர்பாபா வித்யாலயம். தி. நகர் சென்னை. நாள் : ஜுலை 7. மாலை ஆறுமணி

உறுபசி- மலையாளத்தில்

எனது உறுபசி நாவல் மலையாளத்தில் வெளியாகியுள்ளது. தீப்பசி என்ற தலைப்பில் லோகோஸ் புக்ஸ் இதனை வெளியிட்டுள்ளது. எடமன் ராஜன் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

பண்பாட்டின் பயணம்

R பாலகிருஷ்ணன் IAS எழுதிய ஒரு பண்பாட்டின் பயணம் நூல் குறித்த அறிமுகவிழா திருச்சியில் சிறப்பாக நடைபெற்றது. களம் இலக்கிய அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பரை ஆற்றினேன். அரங்கு நிறைந்த கூட்டம். நிறைய நண்பர்களைச் சந்தித்து உரையாட முடிந்தது மகிழ்ச்சி அளித்தது ThanksShruti Ilakkiyam

திருச்சியில்

களம் இலக்கிய அமைப்பின் சார்பில் திருச்சி அஜந்தா ஹோட்டலில் 24.6.23 சனிக்கிழமை மாலை ஆர். பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எழுதிய ஒரு பண்பாட்டின் பயணம் நூலிற்கான அறிமுகவிழா நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு நூல் குறித்து சிறப்புரை ஆற்றுகிறேன்

ஆங்கில மொழிபெயர்ப்பு

எனது முகமது அலியின் கையெழுத்து சிறுகதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு borderless journal இதழில் வெளியாகியுள்ளது இதனை டாக்டர் சந்திரமௌலி மொழியாக்கம் செய்துள்ளார்

பில்லி காலின்ஸ்

புகழ்பெற்ற அமெரிக்க கவிஞர் பில்லி காலின்ஸ் தனது கவிதைகளை வாசிக்கும் காணொளி. இதன் முடிவில் கவிதை குறித்த அவரது பேச்சு மிக முக்கியமானது. Basically when you’re teaching poetry, despite that poem (Introduction to Poetry), you’re talking about meaning. We’re basically extracting meaning from the poem. And I realized at some point, that when I wrote a poem, meaning was the last …

பில்லி காலின்ஸ் Read More »

ஆங்கிலத்தில்

எனது முகமது அலியின் கையெழுத்து சிறுகதையை டாக்டர் சந்திரமௌலி ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். அக்கதை borderless journal இதழில் வெளியாகிறது.

நீல்பாக் பள்ளி

ரிஷிவேலி அருகே அமைந்துள்ள நீல்பாக் பள்ளியை பற்றிய இந்த இந்த ஆவணப்படம் தனித்துவமான கற்றல் முறையினையும் பள்ளி சூழலையும் விவரிக்ககூடியது. டேவிட் உருவாக்கியுள்ள இப் பள்ளியில் குழந்தைகள் ஐந்து மொழிகளைக் கற்றுக் கொள்கிறார்கள். சுதந்திரமாக செயல்படுகிறார்கள். இப்பள்ளி கிராமப்புற மாணவர்களின் கற்றல் திறனை வளர்க்க புதிய வழிமுறைகளை அறிமுகம் செய்துள்ளது. நீல்பாக்கின் கதை கல்வியில் நாம் விரும்பும் மாற்றங்களை செயல்படுத்த முனைந்த டேவிட்டின் கனவாகவும் விரிகிறது.