அறிவிப்பு

யாமம் விமர்சனம்

ஈநாடு என்ற தெலுங்கு நாளேடில் எனது யாமம் மொழிபெயர்ப்பு குறித்த விமர்சனம் வெளியாகியுள்ளது. நாவலை மிகச்சிறப்பாகப் பாராட்டியுள்ளார்கள். மொழிபெயர்ப்பாளர் பாலாஜிக்கு அன்பும் நன்றிகளும்

கதைகேளு கதைகேளு

வித்யா சுபாஷ் அமெரிக்காவில் வசிக்கிறார். ஜீரோ டிகிரி வெளியிட்டுள்ள எனது இடக்கை நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை (The Final Solitude ) மிகச்சிறப்பாக திருத்தம் செய்து கொடுத்தவர் வித்யா சுபாஷ். சிறந்த இலக்கிய வாசகர். மொழிபெயர்ப்பாளர். இசையில் மிகுந்த தேர்ச்சி கொண்டவர். அவர்  தனக்குப் பிடித்தமான சிறுகதைகளைத் தன் குரலில் பதிவு செய்து கதைகேளு கதைகேளு என்ற தலைப்பில் You tubeல் வெளியிட்டு வருகிறார். அருமையான குரல். தெளிவான உச்சரிப்பு. நேர்த்தியான கதை சொல்லல். கதையின் உணர்ச்சிகளை …

கதைகேளு கதைகேளு Read More »

தலாய்லாமா உரை

தினசரி காலை ஏழு மணிக்கு தலாய் லாமா இணையத்தின் வழியே உரையாற்றுகிறார். சில நாட்கள் கேள்வி பதில் பகுதியும் இடம்பெறுகிறது. அதைத் தொடர்ச்சியாகக் கேட்டு வருகிறேன். மிகச் சிறப்பான உரைகள். தலாய் லாமாவின் நிதானமும் சிரிப்பும் அபூர்வமானது. நேற்றைய உரையில் சில முக்கியமான விஷயங்களைக் குறிப்பிட்டார் பண்டைய இந்தியாவை நவீன இந்தியா மறந்துவிட்டது. ஆனால் பண்டைய இந்தியாவோ நவீன இந்தியாவை நோக்கி தன் கையை நீட்டிக் கொண்டேயிருக்கிறது. மொழி வழியாக மட்டுமே இன்றும் பண்டைய இந்தியா நம்மோடு …

தலாய்லாமா உரை Read More »

குளிர் மலை

சசிகலா பாபு சிறந்த கவிஞர், மொழிபெயர்ப்பாளர். கல்குதிரையில் இவரது மொழிபெயர்ப்புகளை வாசித்திருக்கிறேன். அத்துடன் இவரது மொழியாக்கத்தில் வெளியான வார்த்தைகளில் ஒரு வாழ்க்கை – இஸ்மத் சுக்தாய் நூலை வாசித்திருக்கிறேன். தற்போது அவரது மொழியாக்கத்தில் வெளியான குளிர் மலை என்ற சீனக் கவிதைகளின் மொழிபெயர்ப்புத் தொகுப்பினை வாசித்தேன். தேர்ந்த மொழியாக்கம். தாவோயிச சிந்தனைகளை வெளிப்படுத்தும் இக்கவிதைகள் தனித்துவமிக்கவை. ஹான்ஷான் என்ற ஜென் துறவி எழுதிய இக்கவிதைகள் மொழிபெயர்ப்பிற்குச் சவாலானவை. அதை மிகச்சிறப்பாக உள்வாங்கிக் கொண்டு சசிகலாபாபு மொழியாக்கம் செய்திருக்கிறார். …

குளிர் மலை Read More »

சிறப்புத் திட்டம்.

என் மகன் ஹரிபிரசாத் மற்றும் அவனது நண்பர்கள் இணைந்து DESANTHIRI YOUTUBE CHANNELயை கடந்த ஓராண்டாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். அவர்களுக்குப் பல்வேறு விதங்களில் உதவிய நல்ல உள்ளங்களுக்கு மனம் நிரம்பிய நன்றி. குறிப்பாக ஸ்ருதி டிவி கபிலன் மற்றும் சுரேஷ், புகைப்படக்கலைஞர் இளவேனில், மணிமாறன், அன்பு, சித்துராஜ் பொன்ராஜ், திருவாசகம்,  உள்ளிட்ட நண்பர்களுக்கு அன்பும் நன்றிகளும்.. இந்தச் சேனல் வழியாகப் புதிய நிகழ்ச்சிகளை உருவாக்கத் திட்டமிட்டு வருகிறார்கள். குறிப்பாக உலகச் சினிமா குறித்த எனது உரைகள். …

சிறப்புத் திட்டம். Read More »

நிமித்தம்- துயரத்தின் துளிகள்

சத்தியமூர்த்தி. அஸ்திரேலியா நிமித்திம். எஸ்.ராவால் தமிழுக்குத் தரப்பட்ட இன்னொரு க்ளாஸிக். இதைப் படிக்கும் போது பல இடங்களில் என்னை நெகிழச் செய்ததது. தேவராஜ்க்கு நாற்பத்தியேழு வயதில் திருமணம் நடக்கிறது. அவருக்குக் காது கேட்காது. தன் திருமணத்தின் முதல் நாள் இரவு, தன் நண்பர்களை எதிர்பார்த்து அறையில் காத்திருக்கிறார். யாருமே வரவில்லை. அந்தத் தனிமையில் தன் கடந்த காலத்தை நினைத்துப் பார்ப்பதுதான் நாவலின் கதை. ஒரு மனிதன் வாழ்வில் எந்த அளவுக்குப் புறக்கணிக்கப் படுகிறான் என்று நாவலில் சொல்லப்படுகிறது. …

நிமித்தம்- துயரத்தின் துளிகள் Read More »

இடக்கை காட்டும் வெளிச்சம்

-கண்ணன். நீதிக்காக மனிதர்கள் நடத்தும் நெடும்போராட்டத்தை தங்களின் இடக்கை நாவலில் நீங்கள்  சிருஷ்டித்த விதம் அற்புதம் , இந்த மண்ணில் எதோ ஒரு காலத்தில் கதை நிகழ்கிறது என சொல்லமுடியாதபடி இன்றைய எதார்த்தத்திற்கு அவ்வளவு நெருக்கமான இன்னும் சொல்வதானால் எல்லாக் காலத்திற்கும் பொருத்தமான கேள்விகளை நீதி குறித்த விசாரணையை,நீதிக்கான விளக்கத்தை சாமானியனுக்கு ஒரு விதமும்  ஆள்பவருக்கு வேறுவிதமுமாக  ஆளுக்கொரு நீதி கடைபிடிக்கப்படும் சூட்சமத்தை உங்கள் இடக்கை-யில்  வாசித்துக் கடப்பது எளிதாக இருக்கவில்லை … நீதிக்கு இருக்கும் இருபக்கங்களை …

இடக்கை காட்டும் வெளிச்சம் Read More »

இலக்கிய உரை

தேசாந்திரி Youtube சேனலில் வெளியாகியுள்ள இலக்கிய உரை ”நவீன மலையாள இலக்கியத்தின் அடையாளம் பஷீர் https://youtu.be/XSZSPY0SNhQ

ஆய்வு

எனது கதைகள், நாவல்கள், பயண நூல், கட்டுரைகள்  பற்றி கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் பலரும் ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்கள். இதுவரை நான்கு பேர் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள். 20க்கும் மேற்பட்டவர்கள் எம்பில் பட்டம் பெற்றிருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலரே தனது ஆய்வேட்டினை எனக்கு அனுப்பித் தருகிறார்கள்.  மற்றவர்கள் அனுப்புவதில்லை.  ஆய்வாளர்கள் ஒரு பிரதியை எனக்கு அனுப்பினால் உங்கள் ஆய்வில் என்ன சொல்லியிருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்வேன். •• எனது சிறுகதைத் தொகுதி பற்றி வெளியாகியுள்ள ஆய்வேடு