இலக்கிய உரை
தேசாந்திரி Youtube சேனலில் வெளியாகியுள்ள இலக்கிய உரை ”நவீன மலையாள இலக்கியத்தின் அடையாளம் பஷீர் https://youtu.be/XSZSPY0SNhQ
தேசாந்திரி Youtube சேனலில் வெளியாகியுள்ள இலக்கிய உரை ”நவீன மலையாள இலக்கியத்தின் அடையாளம் பஷீர் https://youtu.be/XSZSPY0SNhQ
எனது கதைகள், நாவல்கள், பயண நூல், கட்டுரைகள் பற்றி கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் பலரும் ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்கள். இதுவரை நான்கு பேர் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள். 20க்கும் மேற்பட்டவர்கள் எம்பில் பட்டம் பெற்றிருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலரே தனது ஆய்வேட்டினை எனக்கு அனுப்பித் தருகிறார்கள். மற்றவர்கள் அனுப்புவதில்லை. ஆய்வாளர்கள் ஒரு பிரதியை எனக்கு அனுப்பினால் உங்கள் ஆய்வில் என்ன சொல்லியிருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்வேன். •• எனது சிறுகதைத் தொகுதி பற்றி வெளியாகியுள்ள ஆய்வேடு
யோகா மாஸ்டர் ஜி.சௌந்தரிடம் இரண்டு மாதங்களாக யோகா கற்றுக் கொண்டேன். உடலையும் மனதையும் பேணுவதற்கு யோகா மிகச்சிறந்த வழி. யோகா கற்றுக் கொள்வதில் நல்ல ஆசான் கிடைப்பது முக்கியம். சௌந்தர் மிகச்சிறந்த ஆசிரியர். . சிறந்த யோக பரம்பரையில் ஒன்றான பிஹார் யோக பள்ளியில் ஏழு ஆண்டுகள் பயின்றவர். சென்னை வடபழனியில் சத்யானந்த யோகமையம் நடத்தி வருகிறார். இவர் கற்றுத்தரும் மரபார்ந்த, முறையான யோகப் பயிற்சிகள் மிகச்சிறப்பானவை. அதன் பலனை நான் முழுமையாக உணர்ந்திருக்கிறேன். இலக்கியத்தின் மீது …
தேசாந்திரி சேனலில் வெளியாகியுள்ள புதிய வீடியோ Q&A SESSION WITH S.RA https://youtu.be/ZM23e-6Gtqk
எழுத்தாளர் அ.முத்துலிங்கம் நேர்காணல் யாவரும்.காமில் வெளியாகியுள்ளது. அகரமுதல்வன் நேர்காணல் செய்திருக்கிறார். சமீபத்தில் படித்த மிகச்சிறந்த நேர்காணலிது. முத்துலிங்கத்தின் பதில்கள் வியக்கவைக்கின்றன. அ.முத்துலிங்கம் கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ் இருக்கைக்காகச் செய்து வரும் முன்னெடுப்புகள் மகத்தானவை. இயல் விருதுகள் வழங்குவதிலும், தமிழ் படைப்பாளிகளைக் கொண்டாடுவதிலும் அவர் காட்டும் அக்கறையும் நேசமும் நிகரற்றது. கிரிக்கெட் விளையாட்டில் ஒரு சில வீரர்கள் தனக்குப் பந்து வரும்வரை காத்திருக்க மாட்டார்கள். ஒரு அடி முன்னால் போய்ப் பந்து வரும்போதே எதிர்கொண்டு ஓங்கி அடித்துவிடுவார்கள். …
தேசாந்திரி youtube சேனலில் வெளியாகியுள்ள புதிய உரைகள் TOTTO-CHAN ஜன்னலில் ஒரு சிறுமி – அறிமுகம் https://youtu.be/aY89jPESR_Q ஈசாப் ஒரு அறிமுகம் https://youtu.be/c5SByiZF4Ao
தங்களது மேற்கின் குரல் நேற்றிரவு முடித்தேன். சிறிய நூல், அனுபவம் பெரியது. ஒவ்வொரு கட்டுரையும் ஒரு அனுபவம். அதிகமாக அடிக் கோடுகள் மற்றும் குறிப்புகள் எடுத்து கொண்ட புத்தகம் இது. ஒரு நாள் தனிமையின் நூறு ஆண்டுகள் தொடங்கி இருந்தேன். தற்செயலாக Gabriel Garcio Marquez மற்றும் தனிமையின் நூறு ஆண்டுகள் பற்றிய கட்டுரை இந்நூலில் படித்தேன். அதில் இருந்து மேற்கின் குரல் தொடங்கியது. தனிமையின் நூறு ஆண்டுகள் முடித்து தங்களது Marquez கட்டூரை மறுபடியும் படித்தேன். …
இந்த வாரம் புதிய தலைமுறை இதழில் வெளியான குறிப்பு
சென்ற வாரம் தினமணிக் கதிரில் வெளியான கட்டுரை
காற்று, மணல்,நட்சத்திரங்கள் குறித்த சிறிய அறிமுக உரை பிரெஞ்சு எழுத்தாளர் அந்த்வான் து செந்த்-எக்சுபெரி எழுதிய குட்டி இளவரசன் உலகின் மிகச்சிறந்த புத்தகங்களில் ஒன்று. அந்த நாவல் எழுதுவதற்கான ஆதார அனுபவங்களை விவரிக்கிறது காற்று, மணல், நட்சத்திரங்கள். இதில் விமானியான எக்சுபெரி தனது பறக்கும் அனுபவத்தை மிக அழகாக விவரித்திருக்கிறார். . இந்த நூலை தமிழில் சிறப்பாக மொழியாக்கம் செய்திருப்பவர் வெ. ஸ்ரீராம். க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது இணைப்பு https://youtu.be/_fTInyp8nfk