நகரம் விழுங்கிய மனிதர்கள்.
ஆற்றின் சுழல் நம்மை ஆழத்திற்கு இழுத்துச் சென்றுவிடுவதைப் போலச் சில நாவல்கள் நம்மை அதன் ஆழத்திற்குள் இழுத்துக் கொண்டுவிடுகின்றன. நாவலை வாசித்து முடித்தபிறகும் அதிலிருந்து வெளிவர முடியாது. மனதில் கதாபாத்திரங்கள் நடமாடியபடியே இருக்கும். அப்படியொரு நாவல் தான் அன்னையின் குரல். ஆப்பிரிக்க நாவலான இதை எழுதியவர் ஆலன் பேடன் ஆலன் பேடனின் புகழ்பெற்ற நாவலான Cry, the Beloved Country தமிழில் அன்னையின் குரல் என்று மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்நாவல் குறித்த கவனம் தமிழ்ச் சூழலில் உருவாகவில்லை. …









