இலக்கியம்

நகரம் விழுங்கிய மனிதர்கள்.

ஆற்றின் சுழல் நம்மை ஆழத்திற்கு இழுத்துச் சென்றுவிடுவதைப் போலச் சில நாவல்கள் நம்மை அதன் ஆழத்திற்குள் இழுத்துக் கொண்டுவிடுகின்றன. நாவலை வாசித்து முடித்தபிறகும் அதிலிருந்து வெளிவர முடியாது. மனதில் கதாபாத்திரங்கள் நடமாடியபடியே இருக்கும். அப்படியொரு நாவல் தான் அன்னையின் குரல். ஆப்பிரிக்க நாவலான இதை எழுதியவர் ஆலன் பேடன் ஆலன் பேடனின் புகழ்பெற்ற நாவலான Cry, the Beloved Country தமிழில் அன்னையின் குரல் என்று மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்நாவல் குறித்த கவனம் தமிழ்ச் சூழலில் உருவாகவில்லை. …

நகரம் விழுங்கிய மனிதர்கள். Read More »

தொப்பி அணிந்த டால்ஸ்டாய்.

ஜி.கோபி மண்டியிடுங்கள் தந்தையே நாவல் குறித்த வாசிப்பனுபவம் •• மண்டியிடுங்கள் தந்தையே நாவல் திறந்த வேகத்தில் வாசித்து முடித்துவிடக் கூடிய எளிய சுவாரசியமான புத்தகம். ஆனாலும் இரண்டு நாட்கள் தொடர்ந்து வாசித்தேன். ரஷ்யவில் யஸ்யானா போல்யானா பண்ணைக்குச் சென்று டால்ஸ்டோயை பார்த்து உடன் பழகியது போல இருந்தது. அந்தப் பண்ணையின் மீதுள்ள ஒரு மணற் குன்றின் மீது நின்று கொண்டு அங்குள்ள விவசாயிகளோடு தொப்பி அணிந்த படி டால்ஸ்டோய் வேலை பார்த்துக் கொண்டிருப்பதை நான் பார்த்தேன். எந்த …

தொப்பி அணிந்த டால்ஸ்டாய். Read More »

வெயிலின் சங்கீதம்

சஞ்சாரம் – எஸ்.ராமகிருஷ்ணன். நாவல் குறித்த வாசிப்பனுபவம் சுயாந்தன் (Suyaanthan Ratneswaran )· ** நாதஸ்வர இசையினையும் அதனை வாசிக்கும் கலைஞர்கள் பற்றியதுமான அற்புதமான  ஒரு நாவல் “சஞ்சாரம்”. கி.ராவுக்கு பின்னர் தமிழில் நாதஸ்வரம் பற்றி அதிகம் எழுதியவர் எஸ்.ராமகிருஷ்ணன் என்றே நினைக்கிறேன்.  இந்த நாவலை வாசித்து விட்டுக் கோயில்களில் நாயனம் வாசிக்கும் ஒரு வித்துவானிடம் உங்கள் கலையைப் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் என்ற எழுத்தாளர் நானூறு பக்கத்தில் பெருங்கதை ஒன்றை எழுதியுள்ளார். அதில்  அசுரவாத்தியம் என்று அவர் …

வெயிலின் சங்கீதம் Read More »

என் அறிவுலக ஜன்னல்

பு. பிரியதர்சினி · அரூ இணைய இதழில் வெளியானது, என்னுடைய வாசிப்பு, திரைப்பட ஆர்வம் என எல்லாவற்றுக்கும் அடிப்படை ஆதாரம் ஆனந்த விகடன். வாரா வாரம் வீட்டுக்கு வரும் விகடன் கூடவே எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், திரைப்பட கலைஞர்கள், சாதனையாளர்கள் சாமானியர்கள் எனப் பலரைக் கைப்பிடித்துக் கூட்டி வரும். அந்த வகையில் திரு. எஸ். ராமகிருஷ்ணன் எனக்கு அறிமுகம். ஆனந்த விகடனில் வந்த ‘சிறிது வெளிச்சம்’ தொடர் அவரை எனக்கு வெளிச்சம் காட்டியது. அந்த தொடரில் அவர் கதை, …

என் அறிவுலக ஜன்னல் Read More »

சிறந்த புத்தகங்கள் 2022

இந்த ஆண்டில் நான் படித்த புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்தவை கவிதை நிழல், அம்மா ஷங்கர் ராமசுப்ரமணியனின் புதிய கவிதைத் தொகுப்பு. தனது முந்தைய கவிதைகளிலிருந்து விலகி சொல்முறையிலும் வெளிப்பாட்டிலும் புதிய உச்சங்களைத் தொட்டிருக்கிறார். •• நீரின் திறவுகோல்: பிறமொழிக் கவிதைகள்க.மோகனரங்கன்மிகச்சிறந்த மொழிபெயர்ப்பு கவிதைகளின் தொகுப்பு இதனைப் பற்றி இணையதளத்தில் விரிவாக எழுதியிருக்கிறேன் தமிழினி பதிப்பகம் •• அசகவதாளம்பெரு விஷ்ணுகுமார் பெரு. விஷ்ணுகுமாரின் இரண்டாவது கவிதை தொகுப்பு. இவரது கவிதைகளில் வெளிப்படும் புதிய படிமங்கள் வியப்பூட்டுகின்றன. காலச்சுவடு …

சிறந்த புத்தகங்கள் 2022 Read More »

ஜாய்ஸின் டப்ளின்

ஜேம்ஸ் ஜாய்ஸ் எழுதிய யூலிசிஸ் நாவலின் கடைசிவரி yes I said yes I will Yes. மோலியின் கூற்றாக வரும் இந்த வரியில் வரும் யெஸ் என்பது ஒரு இடைவெட்டு. ஒரு ஆமோதிப்பு. தளர்வு, எதிர்ப்பின் முடிவு, நிதர்சனமான உண்மை. கடந்தகாலத்தின் குரல் எனப் பல்வேறுவிதங்களில் சொல்லலாம். இந்த வரியை மிகவும் சோகமாக வரி எனக் குறிப்பிடுகிறவர்களும் இருக்கிறார்கள். ஜாய்ஸ் இதை “the female word” என்கிறார். நாவலின் கடைசிப் பத்தி “I was a …

ஜாய்ஸின் டப்ளின் Read More »

ரகசியக் கதைசொல்லி

ஆயிரத்து ஒரு அரேபிய இரவுகள் கதைத்தொகுப்பை எழுதியவர் யார் எனத் தெரியாது. அது ஒரு தொகைநூல். அதில் பல்வேறு காலகட்டங்களில் கதைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இன்று நாம் வாசிப்பது பதினேழாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட பிரெஞ்சு பதிப்பு. அதிலிருந்து ஆங்கிலப்பதிப்புகள் வந்திருக்கின்றன. ரிச்சர்ட் பிரான்சிஸ் பர்டன் மொழியாக்கமும் இது போலச் சொந்த சரக்குகள் கொண்டதே என்கிறார்கள். இன்று அரபு மூலப்பிரதிகளுடன் ஒப்பிட்டு நிறைய ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அதில் சுவாரஸ்யமான தகவல்கள் வெளிப்படுகின்றன அலாவுதீனும் அற்புத விளக்கும் கதை மற்றும் …

ரகசியக் கதைசொல்லி Read More »

காஷ்மீரின் குளிர் நிலவு

ஆஹா சாகித் அலியின் கவிதைகளை கவிஞர் ஷங்கர் ராமசுப்ரமணியன் மொழியாக்கம் செய்திருக்கிறார். சிறுநூலாக வெளியாகியுள்ளது. The Country Without a Post Office என்ற இவரது கவிதைத் தொகுப்பினை வாசித்திருக்கிறேன். சிறந்த கவிதைகளைக் கொண்டது. ஆகா சாகித் அலி 1949ல் காஷ்மீரில் பிறந்தவர். அமெரிக்காவில் ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அங்கேயே பல ஆண்டுகள் வசித்தவர். டிசம்பர் 8, 2001ல் மூளையில் ஏற்பட்ட கட்டியின் பாதிப்பால் காலமானார். புலம்பெயர்ந்த கவிஞராக அறியப்படும் சாகித் அமெரிக்காவில் வசித்தாலும் …

காஷ்மீரின் குளிர் நிலவு Read More »

உறுபசி -வாசிப்பனுபவம்

அருளானந்தம் சம்பத் இறந்து போன இரண்டு நாட்களுக்கு பிறகு என்று தொடங்குகிறது இந்த நாவல். சம்பத்தின் நண்பர்களான அழகர், ராமதுரை, மாரியப்பன் மற்றும் யாழினி இவர்களின் வழியே சம்பத்தின் மனைவியாகிய ஜெயந்தியும் அவரவர் பார்வையில் சம்பத். யார் இந்த சம்பத்?அவன் ஏன் 42 வயதில் இறந்தான்? பதின் பருவத்தின் கனவுகள் மிகவும் அலாதியானவை கனவுகள் மட்டுமல்ல ஆச்சரியங்கள், நம்பிக்கைகள், மூடத்தனங்கள் மற்றும் புத்திசாலித்தனங்கள் அனைத்தும் தான்.கல்லூரியில் தமிழ் இலக்கியத்தை முதன்மை பாடமாகக் கொண்டு பயிலும் மாணவனாக சம்பத்.தமிழின் …

உறுபசி -வாசிப்பனுபவம் Read More »

விழித்திருப்பவனின் இரவு

அசோக் The idiot   என்ற வலைப்பதிவில் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் அசோக் என்ற இலக்கிய வாசகர் எழுதியுள்ள குறிப்பு. ஆழ்ந்த வாசிப்பிலிருந்து உருவான பதிவு என்பதால் இதனைப் பகிர்ந்து கொள்கிறேன் ••• இரவில் விழித்திருந்து வாசிக்கும் பழக்கம் எனக்குண்டு. என் மேசை அருகே ஒரு ஜன்னலுண்டு. ஜன்னல் வெளியே ஒரு மரமுண்டு. மரங்களில் எப்போதும் பறவைகள் வந்து அமர்வதுண்டு. இரவில் நான் வாசிக்கும் ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு எழுத்தாளரும் அம்மரத்தில் அமர்ந்து எனக்காக பாடும் அல்லிசைப் புள் என …

விழித்திருப்பவனின் இரவு Read More »