இலக்கியம்

இஸ்மாயில் கவிதைகள்

மலையாள, கன்னட இலக்கியங்கள் அறிமுகமான அளவிற்குத் தெலுங்கு இலக்கியங்கள் தமிழுக்கு அறிமுகமாகவில்லை. ஆங்கில மொழிபெயர்ப்பில் கிடைக்கும் சில தெலுங்கு நாவல்களையும் சிறுகதைகளையும் வாசித்த போதும் அதிகம் நெருக்கம் ஏற்படவில்லை. ஆனால் சமீபமாகக் கவிஞர் இஸ்மாயில் கவிதைகளை வாசித்தபோது பிரமிப்பு ஏற்பட்டது. அவர் தெலுங்கு நவீன கவிதையின் முக்கியமான கவிஞர் என்பதை உணர்ந்தேன். ஒரு கவிதையில் பறந்து செல்லும் காகத்தின் நிழலைக் கறுப்பு மௌனம் என்று இவர் குறிப்பிட்டிருப்பது கூடுதல் ஈர்ப்பை உருவாக்கியது தத்துவப் பேராசிரியராக இருந்த முகமது …

இஸ்மாயில் கவிதைகள் Read More »

ஷேக்ஸ்பியரின் ரகசியங்கள்

ஷேக்ஸ்பியரின் நாடகங்களைப் புரிந்து கொள்வதற்கான சில அடிப்படைகளை உருவாக்கும்விதமாக. Shakespeare and the goddess of complete being என்ற புத்தகத்தைக் கவிஞர் டெட் ஹியூஸ் எழுதியிருக்கிறார். இதில் ஷேக்ஸ்பியரின் ஆரம்பகாலக் கவிதைகளான வீனஸ் அண்ட் அடோனிஸ் மற்றும் தி ரேப் ஆஃப் லுக்ரேஸைக் கொண்டு அவரது நாடகங்களை ஆராய்ந்திருப்பது முக்கியமானது. இந்தக் கவிதைகளை அவரது நாடகங்களின் திறவுக்கோலாக டெட் ஹியூஸ் மதிப்பிடுகிறார். இரண்டு வேறுபட்ட காதல்நிலைகளை சித்தரிக்கும் இந்தக் கவிதைகளிலிருந்து அவரது நாடகங்கள் உருவாக்கபட்டிருக்கின்றன என்றும் …

ஷேக்ஸ்பியரின் ரகசியங்கள் Read More »

உறவும் நட்பும்

கன்னட எழுத்தாளர் சிவராம காரந்த்-ன் ‘அழிந்தபிறகு‘ நாவலில் வரும் யசவந்தராயர் மறக்கமுடியாத கதாபாத்திரம். தற்செயலாக அவரை ரயில் பயணத்தில் சந்திக்கும் கதைசொல்லி பின்பு மும்பையில் அவரைத்தேடிச் சென்று நட்பு கொள்வது. அவரது மரணத்திற்குப் பிறகு அவரது ஆசைகளை நிறைவேற்ற முனைவதும் நாவலில் மிகசிறப்பாக எழுதப்பட்டுள்ளது இந்த நாவலில் வரும் கதைசொல்லி பயணத்தை விரும்புகிறவன். நம்முடைய வாழ்க்கையே ஒரு ரயில் பயணம் தான் என்கிறான். நமக்கான இடம் கிடைக்காவிட்டால் பயணத்தில் நின்று கொண்டே பயணிப்பது போன்ற நிலை வாழ்க்கையிலும் …

உறவும் நட்பும் Read More »

கதையாகும் மனிதர்கள்

Niall Williams எழுதிய History of the Rain நாவல் எனக்குப் பிடித்தமானது. இந்நாவலை அடிக்கடி எடுத்து வாசிப்பேன். சிறிய நாவல். எளிமையான கதை. ரிச்சர்ட் பாக்கை நினைவுபடுத்தும் எழுத்து. இளவயதிலே நோயாளியாகி படுக்கையில் வாழும் ரூத் தன்னைச் சுற்றி நிறையப் புத்தகங்களைக் கொண்டிருக்கிறாள். அவளது கட்டில் படகு போன்ற வடிவில் இருக்கிறது. நோயாளியான அவளுக்கு வேதனையிலிருந்து மீள்வதற்கான ஒரே வழி புத்தக வாசிப்பு மட்டுமே. புத்தகங்களின் வழியாக அவள் தனது தந்தையைத் தேடுகிறாள். கதை என்பது …

கதையாகும் மனிதர்கள் Read More »

ஹெமிங்வேயும் புதுமைப்பித்தனும்

புதுமைப்பித்தனின் துரோகம் என்றொரு சிறுகதையை ஆதவன் எழுதியிருக்கிறார். அந்தக் கதையில் இருவர், எழுதி என்ன பயன், எதற்காக எழுதிக் கொண்டேயிருக்க வேண்டும் என்பதைப் பற்றி உரையாடுகிறார்கள். அதில் எதிர்காலத்தில் வரப்போகும் ரசிகன் என்ற நம்பிக்கை மட்டுமே ஓர் எழுத்தாளனுக்குப் போஷாக்குத் தரமுடியாது என்கிறது ஒரு கதாபாத்திரம். யாருக்காக எழுதுகிறோம், எதற்காக எழுதுகிறோம் என்ற கேள்வியை நூற்றாண்டுகளாக எழுத்தாளர்கள் சந்தித்து வருகிறார்கள். இதற்குச் சொல்லப்பட்ட எல்லாப் பதில்களும் தற்காலிக சமாதானமே. கதையின் மையப்பகுதி இது. ‘புகழும் பணமும் இருந்தும் …

ஹெமிங்வேயும் புதுமைப்பித்தனும் Read More »

உரையாட விரும்புகின்ற நாவல்

 ‘மண்டியிடுங்கள் தந்தையே’ நாவல் குறித்த வாசிப்பனுபவம். க.வை. பழனிசாமி  தமிழ் இலக்கியத்தில் முக்கியமானப் புத்தகம் எஸ்.ராவின் ‘மண்டியிடுங்கள் தந்தையே’. வாசிக்கத் தொடங்குகிறபொழுதே அதை உணர்ந்துவிடுகிறோம். வாசகனிடம் அதிகமாக உரையாட விரும்புகின்ற நாவல். உரையாடல்தான் இந்த நாவலின் பலம். உரையாடல் பன்முகத் தன்மையில் இருக்கிறது. பழக்கமான நாவல்களிலிருந்து வேறானது என்பதை இதன் கதையாடல் சொல்லிவிடுகிறது. இந்தப் புரிதல் தோன்றியதுமே நாவல் மீதான அக்கறை கூடிவிடுகிறது. டால்ஸ்டாயை மையமாகக்கொண்டு ரஷ்ய சூழலில் எழுதப்பட்டிருக்கிறது என்பது மட்டுமே இதிலிருக்கும் புதுமையா? ரஷ்ய …

உரையாட விரும்புகின்ற நாவல் Read More »

குளிர்மலையின் வெண்மேகம்

தாங் பேரரசைச் சேர்ந்த கவிஞர் ஹான்ஷான் குளிர்மலை(COLD MOUNTAIN) என்ற பெயரிலே அறியப்படுகிறார். உலகின் பரபரப்பிலிருந்து ஒதுங்கி குளிர்மலை எனும் மலையுச்சியினைத் தேடிச் சென்று தனிமையில் வாழ்ந்திருக்கிறார் ஹான்ஷான். அவர் வசித்த குகை இன்றைக்குமிருக்கிறது. ஹான்சானின் கவிதைகள் வாழ்வின் நிலையாமையைப் பற்றிப் பேசுவதுடன் இயற்கை தரும் நிகரில்லாத மகிழ்ச்சியினையும் பாடுகின்றன. இக் கவிதைகள் ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டவை என்றாலும், மாறாத ஞானத்தையும் உண்மையையும் கொண்டு வாழ்க்கையை ஆழமாகப் புரிந்து கொள்ள உதவுகின்றன மொழிபெயர்ப்பாளர் ரெட் …

குளிர்மலையின் வெண்மேகம் Read More »

யாருக்கானது உலகம்

 “I like to use simple words, but in a complicated way.”  Carol Ann Duffy கரோல் ஆன டஃபி சமகாலப் பிரிட்டிஷ் கவிதைகளில் மிக முக்கியமானவர் பிரபலமான ஆண்களைப் பற்றி அவரது மனைவியின் குரலால் சொல்லப்படும் கவிதைகளை எழுதியிருக்கிறார். The World’s Wife என்ற தொகுப்பாக வெளியாகியுள்ளது. கரோல் ஆன் டஃபி ரோமன் கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தவர். 11 வயதில் கவிதைகளை எழுதத் துவங்கினார். தனது பதினாறு வயதில் லிவர்பூல் கவிஞர்களில் ஒருவரான …

யாருக்கானது உலகம் Read More »

ரகசிய நூலகம்

The Library Of Mabel Mogaburu என்றொரு சிறுகதையை ஃபொ்னான்டோ ஸோரன்டினோ எழுதியிருக்கிறார். அதில் அவரது நூலகத்தில் உள்ள புத்தகங்களைப் பட்டியலிடுவதைப் பற்றிச் சொல்கிறார். அந்தப் புத்தகங்களை எப்படி வகைப்படுத்துவார். அதில் எவ்வாறு குறிப்புகள் எழுதுவார் என்பதையும் வேடிக்கையாக விவரிக்கிறார் ஒரு நாள் தற்செயலாகப் புத்தக் கடை ஒன்றில் பழைய புத்தகங்களைத் தேடும் மேபல் என்ற மாணவியைச் சந்திக்கிறார். அவள் ரிக்கார்டோ குய்ரால்டெஸ் எழுதிய டான் செகுண்டோ சோம்ப்ரா என்ற 1926 ஆம் ஆண்டு வெளியான நாவலைத் …

ரகசிய நூலகம் Read More »

கோயில் பூனைகள்

கோவைக்கிழார் என அறியப்படும் கோ. ம. இராமச்சந்திரன் செட்டியார் கோயில் பூனைகள். காட்டு எருமைகள் என்ற இரண்டு முக்கியமான நூல்களை எழுதியுள்ளார் சிறந்த தமிழறிஞரான கோவைக்கிழார் எண்பது நூல்களுக்கும் மேலாக எழுதியிருக்கிறார், இதில் முக்கியமானது கொங்குநாட்டின் வரலாற்றை எழுதியது. வரலாறு, இலக்கியம், மொழிபெயர்ப்பு,கல்வெட்டு, நாட்டுப்புற இலக்கியம்,கோயிற்கலை,சமயம், மானிடவியல் எனப் பல்வேறு துறைகளில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.. மெட்ராஸ் பிரசிடென்சியின் அறநிலையத்துறை ஆணையாளராகப் பணியாற்றிய போது தமிழ்நாட்டில் உள்ள முக்கியக் கோயில்களுக்கு நேரில் சென்று அக்கோயில்களின் வரலாறு, நிர்வாக முறை, …

கோயில் பூனைகள் Read More »