இலக்கியம்

தலையசைக்கும் மலர்

கவிஞர் க.மோகனரங்கன் நீரின் திறவுகோல் என்ற பிறமொழிக் கவிதைகளின் தொகுப்பினை வெளியிட்டுள்ளார். இந்நூலை தமிழினி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மோகனரங்கனின் தேர்வும் மொழிபெயர்ப்பும் மிகச்சிறப்பாக உள்ளது. சமகால உலகக் கவிதைகள் மற்றும் இந்தியக் கவிதைகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளைத் தேர்வு செய்து மொழிபெயர்த்திருக்கிறார். காட்சித்தன்மையும் நேரடியான விவரிப்பு மொழியையும் கொண்ட கவிதைகளே எனது விருப்பத் தேர்வாக இருந்தது என்கிறார் மோகனரங்கன். அப்படியில்லை. சில எளிய கவிதைகள் போலத் தோற்றம் தரும் சிக்கலான, ஆழ்ந்த கவிதைகளையும் தேர்வு செய்து மொழிபெயர்ப்புச் …

தலையசைக்கும் மலர் Read More »

ஜே.கிருஷ்ணமூர்த்தியின் சமையற்காரர்

Kitchen Chronicles: 1001 Lunches with J.Krishnamurti என்ற புத்தகம் படித்தேன். 1970களில் அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் க்ரோனென் மெய்தேடலின் காரணமாக இந்தியா வந்திருக்கிறார். அப்போது ஒரு நாள் சென்னையில் நடைபெற்ற ஜே.கிருஷ்ணமூர்த்தியின் சொற்பொழிவு ஒன்றைக் கேட்கிறார். அதில் மயங்கி அவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் தானும் பயணம் செய்து அவரது உரைகளைத் தொடர்ந்து கேட்கத் துவங்குகிறார். இந்தப் பயணம் அவரது வாழ்க்கையை எப்படி மாற்றியது என்பதையே இந்த நூல் விவரிக்கிறது. ஜே.கிருஷ்ணமூர்த்தி அமைப்போடு நெருக்கமான தொடர்பு …

ஜே.கிருஷ்ணமூர்த்தியின் சமையற்காரர் Read More »

கு.ப.ராவின் கடைசி நாட்கள்

கு.ப.ரா பற்றிக் கரிச்சான்குஞ்சு ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். இலக்கியச் சிந்தனையின் சார்பில் எழுதப்பட்ட இந்த நூலை வானதி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. அதில் கு.ப.ராவின் வாழ்க்கை மற்றும் படைப்புகள் குறித்துச் சிறப்பாக எழுதியிருக்கிறார் கரிச்சான் என்ற பெயரில் கு.ப.ரா எழுதியிருப்பதால் அவரது சீடனாகத் தனது பெயரைக் கரிச்சான் குஞ்சு என்று மாற்றிக் கொண்டிருக்கிறார் நாராயணசுவாமி. கு.ப.ராவின் துயர்மிகுந்த வாழ்க்கையைப் படிக்கும் போது கண்ணீர் வருகிறது. இன்று நிகரற்ற சிறுகதையாசிரியராகக் கொண்டாடப்படும் கு.ப.ரா அன்று கண்டுகொள்ளப்படாத படைப்பாளியாக இருந்திருக்கிறார். ஆண் …

கு.ப.ராவின் கடைசி நாட்கள் Read More »

உரிமை கோரப்படாத உடல்

வேலூர் லிங்கன் மிகச்சிறந்த வாசகர். தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் அவரிடம் உள்ளது போல அரிய நூல்களைக் காண்பது அரிது. வீடே பெரிய நூலகம் போலிருக்கிறது. சமீபத்தில் ஒரு நாள் அவர் “அலெக்சாண்டர் குப்ரின் எழுதிய Yama the pit நாவல் போலவே இந்தியில் ஒரு நாவல் வெளியாகியிருக்கிறது. JAGDAMBA PRASAD DIXIT எழுதிய Mortuary என்ற நாவலது. மும்பையிலுள்ள பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பற்றியது“ என்றார். நான் ஜகதம்ப பிரசாத் தீட்சித் பற்றிக் கேள்விப்பட்டிருக்கவில்லை என்றேன். உடனே …

உரிமை கோரப்படாத உடல் Read More »

இருண்ட நினைவுகள்

. நண்பர் ஆம்பூர் அசோகன் ஜெர்மன் மற்றும் ஆஸ்திரிய இலக்கியங்களை மிகவும் விரும்பிப் படிக்கக்கூடியவர். சமீபத்தில் அவர் எனக்கு ஒரு புத்தகத்தைப் பரிசாக அனுப்பி வைத்திருந்தார் What’s to Become of the Boy? Or, Something to Do with Books என்ற அந்தப் புத்தகம் ஜெர்மன் எழுத்தாளர் ஹென்ரிக் போலின் இளமைப்பருவம் பற்றியது. சுயசரிதையாக மட்டுமின்றி ஹிட்லரின் எழுச்சி மற்றும் நாஜிகளின் ஆதிக்கம் வளர்ந்த விதம் பற்றியும் எழுதியிருக்கிறார். 82 பக்கங்களே கொண்ட சிறிய …

இருண்ட நினைவுகள் Read More »

வரலாறு எப்போது நாவலாகிறது

The History of the Siege of Lisbon என்ற ஸரமாகோ நாவலில் பதிப்பகம் ஒன்றில் பணியாற்றும் பிழைத்திருத்துபவர் தான் திருத்தம் செய்யும் நூலில் ஒரு வரலாற்றுத் தகவல் தவறாக இருப்பதைக் கண்டுபிடிக்கிறார். தானே ஒரு சொல்லை மாற்றிவிடுகிறார் புத்தகம் வெளியான பிறகு அது கண்டுபிடிக்கப்படுகிறது. அவர் விசாரிக்கப்படுகிறார். ஏன் அந்தச் சொல்லை மாற்றினார் என்று அறியும் பதிப்பாசிரியர் நீ ஏன் சரியான வரலாற்றை எழுதக் கூடாது என்று கேட்கிறார். உண்மை வரலாற்றை ஆராயத் துவங்கும் ரைமுண்டோ …

வரலாறு எப்போது நாவலாகிறது Read More »

குற்றவுணர்வின் மணியோசை

கன்னடத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட பத்து சிறுகதைகளின் தொகுப்பு புத்த மணியோசை. கதைகளைத் தேர்வு செய்து மொழியாக்கம் செய்திருக்கிறார் கே.நல்லதம்பி. எதிர் வெளியீடு இதனை வெளியிட்டுள்ளது. சமகாலக் கன்னடச்சிறுகதைகளின் போக்கையும் தனித்துவத்தையும் இத்தொகுப்பு சரியாக அறிமுகம் செய்திருக்கிறது. நேரடியாகத் தமிழில் எழுதப்பட்டது போல அத்தனை நிறைவான மொழியாக்கத்தைச் செய்திருக்கிறார் நல்லதம்பி. அவருக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள் இந்தத் தொகுப்பில் பத்து கதைகளுமே சிறப்பாக உள்ளன. குறிப்பாகக் கிருஷ்ணமூர்த்தி சந்தரின் கதை, ஹெச். என் சுபதாவின் கதை, ஸ்ரீகாந்தாவின் சிறுகதை, …

குற்றவுணர்வின் மணியோசை Read More »

நமக்கான புத்தகம்

புத்தகங்களை எப்படி அறிமுகம் செய்வது என்பதைப் பற்றிய உரையாடலில் “எல்லா புத்தகங்களையும் விரிவாக அறிமுகம் செய்ய வேண்டிய அவசியமில்லை. சில புத்தகங்களை எந்த அறிமுகமும் இன்றி அப்படியே கையில் கொடுத்துப் படிக்கச் சொல்ல வேண்டும். வேண்டுமானால் இது உங்களுக்குப் பிடிக்கக்கூடும் என்று சில வார்த்தைகள் சொல்லலாம்“ என்கிறார் ஹென்றி மில்லர் தற்செயலாகக் கையில் கிடைத்தோ, யாரோ கொடுத்தோ அறிமுகமாகும் புத்தகம் நாம் எதிர்பாராத மகிழ்ச்சியை, வியப்பை உருவாக்குவதை உணர்ந்திருக்கிறேன் இதற்காகப் புத்தக அறிமுகமே தேவையில்லையா என்றால் தேவை …

நமக்கான புத்தகம் Read More »

கவிதையே அடையாளம்

நேற்று வெய்யிலின் கவிதைகள் குறித்த ஒரு நாள் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்தேன். அந்த அரங்கில் ஒரு இளைஞர் தயக்கத்துடன் ஒரு புத்தகத்தில் கையெழுத்து வேண்டும் என்று கேட்டார். மகிழ்ச்சியோடு கையெழுத்திட்டுத் தருகிறேன் என்று அவரிடமிருந்து புத்தகத்தை வாங்கினேன். அது கவிதையின் கையசைப்பு என்ற சமகால உலகக் கவிஞர்கள் பற்றிய எனது புத்தகம். முன்பே வாங்கிப் படித்திருக்கிறார். கையெழுத்திடுவதற்கு முன்பாக அந்தப் புத்தகத்தை லேசாகப் புரட்டினேன். நிறைய வரிகளை அடிக்கோடிட்டிருக்கிறார். சில பக்கங்களின் ஓரத்தில் ஏதோ குறிப்புகள் …

கவிதையே அடையாளம் Read More »

கவிஞன் சென்ற பாதை

1689ம் ஆண்டுத் தனது 45வது வயதில் கவிஞர் பாஷோ நீண்ட பயணம் ஒன்றை மேற்கொண்டார். வடக்கு நோக்கிய அந்தப் பயண அனுபவத்தை ஒரு நூலாக எழுதியிருக்கிறார். முந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகு அதே பயண வழியில் லெஸ்லி டவ்னர் நடந்து பயணம் செய்திருக்கிறார். அந்த அனுபவத்தை On the Narrow Road: Journey Into a Lost Japan என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறார். பிரிட்டனைச் சேர்ந்த லெஸ்லி டவ்னர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஜப்பானில் வாழ்ந்தவர். ஜப்பானிய மொழி …

கவிஞன் சென்ற பாதை Read More »