இலக்கியம்

மதகுரு 3 – ஓநாயும் நாவலும்

மதகுரு நாவலில் ஓநாய்களின் கூட்டம் கெஸ்டாவை தாக்கும் காட்சி இடம்பெறுகிறது. அபாரமான பகுதியது. பணக்காரக் கிழவன் பிபெர்க்கும் அழகி அன்னா ஸ்டார்ண்யேக்கும் திருமணம் அறிவிக்கப்படுகிறது. அதைக் கெஸ்டா விரும்பவில்லை. அன்னா ஏன் இப்படி ஒரு கிழவனைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆத்திரப்படுகிறான். அன்னாவை மணந்து கொள்ள வேண்டும் எனப் பெர்டினாண்ட் பிரபு ஆசைப்படுகிறான் அன்னாவின் திருமணத்தை ஏற்பாடு செய்தவள் மதகுருவின் மனைவி ஸ்வார்ட்டோ. அவள் தான் பணக்காரக் கிழவனைத் திருமணம் செய்தால் வசதியாக வாழலாம் …

மதகுரு 3 – ஓநாயும் நாவலும் Read More »

மதகுரு- 2 தந்தையின் கோபம்

தந்தைக்கும் மகளுக்குமான உறவில் ஏற்படும் விரிசலையும் அதனால் ஏற்படும் கோபத்தையும் மதகுரு நாவலில் செல்மா லாகர்லெவ் மிகவும் நுட்பமாக எழுதியிருக்கிறார். கெஸ்டா பெர்லிங் தனது மகள் மரியாளைக் காதலிக்கிறான். மகளும் அவனுடன் நெருங்கிப் பழகுகிறாள் என அறியும் மெல்கியார் இதை விரும்பாமல் ஆத்திரமடைகிறார். அந்தக் கோபத்தினாலே மகளைச் சூதாட்டப்பொருளாக வைக்கிறார். சூதில் கெஸ்டா வென்றுவிடவே மரியாளை அவனிடமே விட்டுவிட்டு ஏக்பி மாளிகையை விட்டு வெளியேறுகிறார். அன்றிரவு நடந்த நடனவிருந்தில் கெஸ்டாவும் மரியாளும் கைகோர்த்து ஆடுகிறார்கள். நள்ளிரவைத் தாண்டியும் …

மதகுரு- 2 தந்தையின் கோபம் Read More »

மதகுரு- தாயின் சாபம்

இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண் எழுத்தாளர் செல்மா லாகர்லெவ், இவரது கெஸ்டா பெர்லிங் ஸாகா நாவலை ‘மதகுரு’ எனத் தமிழில் க.நா.சு மொழியாக்கம் செய்திருக்கிறார் கெஸ்டா பெர்லிங் ஸாகா நாவல் 1894 இல் ஸ்வீடனில் வெளியாகியிருக்கிறது. மதகுரு நாவலைப் பலமுறை வாசித்திருக்கிறேன். காவியத்தன்மை கொண்ட நாவல். மகாபாரதத்தில் வருவது போலவே சூதாடி பெண்ணைத் தோற்கும் நிகழ்ச்சி இதிலும் இடம்பெற்றிருக்கிறது. தனது மகளைச் சூதில் இழக்கிறார் சிங்களேர். அபூர்வமான இந்த நாவலை எப்படி க.நா.சு கண்டுபிடித்து …

மதகுரு- தாயின் சாபம் Read More »

சதுரங்கக் காய்கள் போல

வைரவன் லெ.ரா.வின் பட்டர் பி சிறுகதைத் தொகுப்பினைப் படித்தேன். பதினைந்து சிறுகதைகள் கொண்ட முதற்தொகுப்பு. யாவரும் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சொந்த ஊர் திரும்புதலின் போது வெளிப்படும் நினைவுகளையும், கடந்தகால வாழ்வின் அரிய தருணங்களையும், மறக்கப்பட்ட மனிதர்களையும் சித்தரிக்கும் கதைகள். நாஞ்சில் வட்டார வாழ்க்கையைக் கிருஷ்ணன் நம்பி, நாஞ்சில் நாடன் துவங்கி சுசில்குமார் வரை பலரும் சிறப்பாக எழுதியிருக்கிறார்கள். இவர்களிலிருந்து மாறுபட்டு தனக்கென கதைமொழியும், கதைக்களன்களும் கொண்ட சிறுகதைகளை வைரவன் எழுதியிருக்கிறார். அதுவே இவரது வருகையைக் கொண்டாடச் செய்கிறது. …

சதுரங்கக் காய்கள் போல Read More »

பரவாயில்லையின் சங்கீதம்

கவிதைக்குள் நம்மை அழைத்துச் செல்ல எப்போதும் ஒரு மௌன ரயில் காத்திருக்கிறது. அது ஒருவர் மட்டுமே செல்லக்கூடியது. மலையின் உச்சியை நோக்கி குகைப் பாதையினுள் செல்லும் பயணமது வழக்கமான ரயில் பயணத்தில் நமக்கும் புறக்காட்சிக்குமான இடைவெளி குறைவதும் விரிவதுமாக இருக்கும். கவிதையினுள் செல்லும் ரயில் மரங்களை நெருங்கியில்லை மரங்களுக்குள்ளாகவே நம்மை அழைத்துச் சென்றுவிடுகிறது. மரத்தினுள் தண்ணீர் நுழைந்து செல்வது போல ரகசியமாக, மகிழ்ச்சியாக நீங்களும் ஒன்று கலந்துவிடுகிறீர்கள். சில வேளைகளில் இந்த ரயில் பின்னோக்கியும் செல்லக்கூடியது. அப்போது …

பரவாயில்லையின் சங்கீதம் Read More »

இதயத்திலிருந்து உதிரும் இலைகள்

பிரெஞ்சு எழுத்தாளரான குஸ்தாவ் ஃபிளாபேர் மீது மிகுந்த அபிமானம் கொண்டவர் ஜூலியன் பார்ன்ஸ். ஜூலியன் பார்ன்ஸ் இங்கிலாந்தின் லெய்செஸ்டரில் பிறந்தவர். அவரது பெற்றோர் பிரெஞ்சு வம்சாவழியை சேர்ந்தவர்கள். பிரெஞ்சு கற்பிக்கும் ஆசிரியர்கள், ஆகவே இயல்பாகவே அவருக்குப் பிரெஞ்சு மொழி மற்றும் இலக்கியத்தின் மீது விருப்பமிருந்தது. தனது ஆதர்ச எழுத்தாளரான குஸ்தாவ் ஃபிளாபேரைக் கொண்டாடும் விதமாக அவர் எழுதிய நாவல் Flaubert’s Parrot. 1984 இல் வெளியானது. நாவலின் நாயகனாக வரும் மருத்துவர் ஜெஃப்ரி பிரைத்வைட் ஒருவகையில் ஜூலியன் …

இதயத்திலிருந்து உதிரும் இலைகள் Read More »

தொடுதிரை மீன்கள்

கவிதையில் தத்துவத்தின் இடம் என்ன என்ற கேள்வி இன்று காலாவதியானது. கவிஞர்கள் இதைப்பற்றியெல்லாம் பேசிக் கொள்வதில்லை. விவாதிப்பதில்லை. காரணம் இன்றைய பெரும்பான்மைக் கவிதைகள், நிஜமீன்கள் போலவே செல்போன் திரையில் நீந்திக் கொண்டிருக்கும் பிம்பமீன்கள். அது உண்மையான மீனை விடவும் அதிக நிஜமாக, அதிக இயக்கம் கொண்டதாக, வசீகரமாக இருக்கிறது. திரையில் அலைவுறும் மீனுக்குப் பசியெடுக்காது. அதற்கு மரணமில்லை செல்போன் சட்டகத்தில் நாம் காணும் தண்ணீரும் மீன் கூட்டங்களும் பாசியும் குமிழிடும் நுரைகளும் நிஜமில்லை. அவை நிஜத்திற்கு மாற்றானவை. …

தொடுதிரை மீன்கள் Read More »

தந்தையின் குரல்

இ.இளங்கோவன் தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் வைத்தி கதாபாத்திரம் சிக்கல் சண்முகம் என்ற நாதஸ்வர கலைஞனைப் பார்த்து கேட்கிற மாதிரியான ஒரு வசனம், “என்ன சண்முகம், துரை சொல்றது புரியலையா? மேனாட்டுச் சங்கீதத்தை உன்னோட நாதஸ்வரத்தில் வாசிக்க முடியுமா? வித்தை எப்படி, கர்நாடகத்தோட சரியா? இல்லை மேல்நாட்டு சங்கீதமும் வருமா?” இந்தக் கேள்விக்குச் சிக்கல் சண்முகம் எவ்வாறு தனது நாதஸ்வரம் மூலமாகப் பதிலுரைத்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. சிக்கல் சண்முகம் எதிர்கொண்ட இந்த அறைகூவலை, தனக்குக் கொடுத்த …

தந்தையின் குரல் Read More »

வெளிச்சத்தைப் பரப்பும் மழைமான்

பிச்சைக்காரன் எஸ் ராமகிருஷ்ணனின் மழைமான் சிறுகதை தொகுதி சமீபத்தில் மனநிறைவளித்த ஒரு கதை தொகுப்பு. எளிய மனிதர்களின் அன்றாட வாழ்க்கை எந்த நிமிடத்திலும் திசை திரும்பி விடக்கூடியது. அறம் அழிவது அன்றாடச் செயல்பாடாகி வருகிறது; என்ற பின்னட்டைக்குறிப்புகள் இந்தச் சிறுகதைத் தொகுதியை முடித்தபின்பு வேறோரு பொருளைத்தருகின்றன எளிய மனிதர்கள் என்பதே ஒரு ரிலேட்டிவ் பதம்தான். ஒரு பார்வையில் மனிதர்கள் அத்தனைப்பேருமே எளியவர்கள்தான். காலம்தான் சிலரை அவ்வப்போது ஒவ்வொரு இடத்தில் வைக்கிறது.ஒரு நிமிடத்தில் மாறி விடக்கூடியதுதான். இந்தத் தொகுப்பில் …

வெளிச்சத்தைப் பரப்பும் மழைமான் Read More »

நாச்சியாரு, என் பிரியே

கி.ராவின் ’கன்னிமை’ சிறுகதையில் வரும் நாச்சியாரைப் பற்றி நினைக்கும் போது மனதில் மணிமேகலையின் உருவம் தோன்றி மறைகிறது. இருவருக்கும் ஒரே சாயல். நாச்சியார் கன்னிப்பெண்ணாக இருந்த போது எல்லோருக்கும் அள்ளிக் கொடுக்கிறாள். ஒடியோடி உதவிகள் செய்கிறாள். அன்பு மயமாக இருக்கிறாள். வேலைக்காரர்களுக்குக் கூட அவள் கையில் தான் கஞ்சி ஊற்றுவது பிடித்திருக்கிறது. பருத்தி எடுக்கும் பெண்கள் கூட அவள் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள். வேலைக்காரர்களுக்கு மட்டுமில்லை, பிச்சைக்காரர்களுக்குக்கூட நாச்சியாரம்மாஎன்றால் ‘குலதெய்வம்’தான். அவளுக்கு என்னவோ அப்படி அடுத்தவர்களுக்குப் படைத்துப் படைத்து …

நாச்சியாரு, என் பிரியே Read More »