இளமையின் குழப்பங்கள்
நாட்சுமே சோசெகியின் கோகொரோ நாவல் 1959ல் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நாவல் ஜப்பானில் 1914ல் தொடராக வெளியானது. கோகொரோ என்பதன் பொருள் இதயம் அல்லது இதயத்தால் உணரப்படுவதாகும். மூன்று பகுதிகளாக உள்ள இந்த நாவல் சென்ஷி எனப்படும் முதியவரும் சோசெகிக்குமான நட்பையும் சோசெகியின் குடும்பப் பின்புலம் மற்றும் சென்ஷியின் கடந்தகாலத்தையும் விவரிக்கிறது விடுமுறை நாளில் காமகுரா கடற்கரையில் தற்செயலாக ஒரு முதியவரைச் சந்திக்கிறான் கல்லூரி மாணவனான சோசெகி. கிழவர் கடலில் நிதானமாக நீந்தும் விதம் மற்றும் …









