இலக்கியம்

வேம்பலையும் இன்றைய உலகச் சவால்களும்

”நெடுங்குருதி” பற்றிய பார்வை சுரேஷ் பாபு நெடுங்குருதி நாவலைப் பற்றி எழுத நினைக்கும்போது The Origins of Political Order எழுதிய Francis Fukuyama இந்தியா மற்றும் சீனாவைப் பற்றிச் சொன்ன ஒரு கருத்து நினைவுக்கு வருகிறது. சீனாவின் சர்வாதிகாரமோ அல்லது இந்தியாவின் ஜனநாயகமோ திடீரென இன்று உருவாவனதில்லை, மாறாக இந்த இயல்புகள் பல நூற்றாண்டுகளாக இப்படித்தான் நீடிக்கின்றன, பல ஆட்சியாளர்கள் மாறியபோதும் இந்த நாடுகள் அவற்றின் ஆதார குணம் மாறாமல் தான் இருக்கின்றன. Three Gorges …

வேம்பலையும் இன்றைய உலகச் சவால்களும் Read More »

புத்தகங்களின் மீதான ஆசை

The Groaning Shelf and other instances of book love என்ற புத்தகத்தைப் படித்தேன். பிரதீப் செபாஸ்ட்டியன் எழுதியது. புத்தகப்புழுவாகத் தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் பிரதீப் தனது சேமிப்பிலுள்ள புத்தகங்களை எப்படிக் கையாளுகிறார். அரிய நூல்கள் வாங்கும் ஆசை உருவான விதம். மற்றும் தன்னைப் போன்ற புத்தக நேசர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதைச் சுவைபட எழுதியிருக்கிறார். நீண்ட கால வாசிப்பு மற்றும் தீராத புத்தக் காதலே இந்தக் கட்டுரைகளின் அடிநாதம். தீவிரமாக புத்தகங்களைச் சேகரித்துப் …

புத்தகங்களின் மீதான ஆசை Read More »

நாடகப் பயணம்

எனது நாடக வாழ்க்கை என்ற அவ்வை தி.க.சண்முகம் நூலில் மல்லாங்கிணருக்கு நாடகம் போட வந்த அனுபவத்தை எழுதியிருக்கிறார். அதில் சங்கரதாஸ் சுவாமிகள் மல்லாங்கிணருக்கு வந்து நாடகம் நடத்திய செய்தி இடம்பெற்றுள்ளது. எங்கள் வீட்டின் அருகிலுள்ள தேரடியில் தான் அந்தக் காலத்தில் நாடகங்கள் நடந்திருக்கின்றன. மல்லாங்கிணரில் இது போன்ற நிகழ்ச்சிகள் ஏதாவது நடக்கிறது என்றால் வேட்டுப் போடுவார்கள். அந்தச் சப்தம் கேட்டு பக்கத்துக் கிராமத்து மக்கள் யாவரும் ஒன்று திரண்டு வந்துவிடுவார்கள். அந்த விளம்பர யுக்தியை வியந்து டிகே …

நாடகப் பயணம் Read More »

குளிர் மிகுந்த வரிகள்

மண்டியிடுங்கள் தந்தையே – வாசிப்பனுபவம் தேவராஜ் விட்டலன் ரஷ்ய இலக்கியங்கள் எப்போதும் மனித நேசத்தை உயிர்ப்புடன் காட்டுபவையாகவே இருக்கின்றன. அந்த மகத்தான இலக்கியங்களை அளித்தவர்களில் முக்கியமானவர் லியோ டால்ஸ்டாய். லியோ டால்ஸ்டாயின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அறிந்து, புனைவாகக் கொடுத்துள்ளார் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள். குளிர் மிகுந்த, பனிபடர்ந்த ஜனவரி மாதத்தில்தான் மண்டியிடுங்கள் தந்தையே புத்தகத்தைப் படிக்கத்துவங்கினேன். எஸ். ரா அவர்களின் புத்தகங்கள் எனக்கு எப்பொழுதுமே மனதிற்கு நெருக்கத்தைக் கொடுக்கக் கூடிய ஒன்றாகவே இருந்துவந்துள்ளது. இராணுவத்தில் …

குளிர் மிகுந்த வரிகள் Read More »

காரந்தின் உலகம்

மகாகவி ரவீந்திரநாத் தாகூரைத் தனது ஆதர்சமாகக் கொண்டவர் கன்னட எழுத்தாளர் சிவராம காரந்த். இளமையில் சாந்தி நிகேதனுக்குச் சென்று கலைகள் மற்றும் புதிய கல்வி முறை பற்றி அறிந்து வந்திருக்கிறார். பின்னாளில் காரந்தின் செயல்பாடுகளைப் பாராட்டி விஸ்வபாரதி பல்கலைக்கழகம் அவருக்குக் கௌரவ டாக்டர் பட்டமளித்துச் சிறப்பித்திருக்கிறது. காரந்தின் பன்முகச் செயல்பாடுகளைப் பற்றி அறியும் போது வியப்பளிக்கிறது. அவர் தொடாத விஷயமேயில்லை. கன்னட இலக்கியம் மற்றும் பண்பாட்டின் வளர்ச்சிக்குப் பெரும்பங்கு வகித்திருக்கிறார். வைதீகமான குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்த போதும் …

காரந்தின் உலகம் Read More »

புனைவெழுத்தின் அதிசயம்

மண்டியிடுங்கள் தந்தையே – நாவல் குறித்த விமர்சனம்  – மணி செந்தில் வெக்கையும், வறட்சியும் நிலவும் நிலப்பகுதியில் அமர்ந்து கொண்டு, பனி பொழியும் ஊசியிலைக் காடுகளைப் பற்றியும், ஸ்டெபி புல்வெளி பற்றியும், பனி படர்ந்த ஜன்னல் கதவுகளைப் பற்றியும், குளிர் இரவின் ஊதற்காற்றினை பற்றியும் மிக எளிதாக புரிந்துகொள்ள முடிவதற்கு டால்ஸ்டாய், தாஸ்தோவ்ஸ்கி, புஷ்கின், துர்கனேவ், போன்ற கால, தேச எல்லைகள் கடந்த தீவிர எழுத்தாளர்களின் உயிர்ப்பு மிகுந்த எழுத்துக்கள் காரணமாய் அமைந்து இருக்கின்றன. குறிப்பாக ரஷ்ய …

புனைவெழுத்தின் அதிசயம் Read More »

காழ்ப்புணர்வின் வடு

உறுபசி (நாவல்) – வாசிப்பனுபவம் முனைவர் ப. சரவணன், மதுரை. ‘உறு’ என்பது, ‘மிகுதி’ என்ற பொருளில் வரும் ஓர் உரிச்சொல். மிகுதியான ‘பசி’ என்ற பொருளில் இந்த நாவலின் தலைப்பு அமைந்துள்ளது. இந்தப் பசி எதைக் குறிக்கிறது?. நிச்சயமாக உணவை அல்ல. எல்லாவற்றின் மீதான ‘காழ்ப்புணர்வு’தான் இந்தப் ‘பசி’ என்று நான் கருதுகிறேன். அந்தக் காழ்ப்புணர்வு மிதமிஞ்சிப் போய்விடுகிறது. அதனால் ‘உறுகாழ்ப்புணர்வு’ என்றும் நாம் இந்த நாவலுக்குத் தலைப்பிடலாம். சரி, ‘இது யார் மீதான, எதன் …

காழ்ப்புணர்வின் வடு Read More »

காதல் மீதான பெருங்காதல்

 ‘மண்டியிடுங்கள் தந்தையே’ (நாவல்) ந. பிரியா சபாபதி மதுரை. மண்டியிடுங்கள் தந்தையே நாவலின் வழியே டால்ஸ்டாய் மாறுபட்ட மனிதராகக் காணப்படுகிறார். சோபியாவின் பார்வை வழியாக நாம் அவரை அன்பில்லாத மனிதராகவே எண்ணுவோம். ஆனால், அக்ஸினியாவின் பார்வை வழியே டால்ஸ்டாயைக் காணும்பொழுது, நாம் பிறிதொரு டால்ஸ்டாயைத்தான் கண்டடைகிறோம். டால்ஸ்டாய் அன்பிற்கு ஏங்கிய மனிதர் மட்டும் அல்ல; அன்பு நிறைந்தவரும் கூட. அக்ஸினியா மீது அவருக்குக் காதலைத் தாண்டிய தீராத அன்பு இருந்தது. காமம் கொண்ட காதலாக இருந்திருந்தால், அது …

காதல் மீதான பெருங்காதல் Read More »

மறுக்கப்பட்ட நீதியின் குரல்

இடக்கை (நாவல்) – வாசிப்பனுபவம் ந. பிரியா சபாபதி, மதுரை ‘இடக்கை’ என்ற இந்த நாலைப் படித்ததும், ‘தன் மனத்தினை அநீதியிடம் ஒப்படைத்தவர்களின் கைகளில் எளியோர் சிக்குண்டால், அவர்களின் நிலைமை சூறாவளியால் வேரோடு பறித்துச்செல்லப்படும் மரத்தின் நிலைமையைப் போன்றாகிவிடுமே!’ என்பதை உணர்ந்தேன். இந்நாவல் மன்னராட்சிக் காலத்தைப் பற்றிப் பேசுகிறது. மன்னர்களின் வாழ்வினையும் அவர்கள் நீதிக்கும் அநீதிக்கும் இடையில் சிக்குண்ட நிலையையும் கூறிச் செல்கிறது. “அரசபதவி என்பது ஒரு மரணசிம்மாசனம், அதில் ஏறி அமர்ந்தவன் மெல்ல மெல்ல மனிதத்தன்மைகளை …

மறுக்கப்பட்ட நீதியின் குரல் Read More »

டால்ஸ்டாயின் ஒளிரும் அகம்

 ‘மண்டியிடுங்கள் தந்தையே’ (நாவல்) – வாசிப்பனுபவம் முனைவர் ப. சரவணன், மதுரை. ரஷ்ய படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகளைப் படிக்கும்போது, அந்த நாட்டின் நிலக்காட்சி மனத்தில் பதிய மறுக்கும். அங்கு நிகழும் பனிப்பொழிவு நமக்கு அந்நியமானது. அவர்களின் பெயர்களும் அவர்களின் உடை, உணவு முறைகளும்கூட நமக்கு முற்றிலும் புதிதானவையே. அதனாலேயே நான் ரஷ்ய படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகளைத் திணறி திணறித்தான் படித்து முடிப்பேன். ஆனாலும் அவற்றில் உள்ள படைப்பு நயம் என்னை மயக்கிவிடும். அந்த மயக்கத்திற்காகவே நான் மீண்டும் …

டால்ஸ்டாயின் ஒளிரும் அகம் Read More »