இலக்கியம்

காதலும் காதல் சார்ந்தவையும்

 ‘ஒரு சிறிய விடுமுறைக்காலக் காதல் கதை’ – வாசிப்பனுபவம் முனைவர் ப. சரவணன், மதுரை. கடுங்கோடையில் மழைக்காகக் காத்திருக்கும்போது வானிலிருந்து சரமென இறங்கும் கோடைமழையின் முதற்துளியைக் கையில் ஏந்தியது போன்றதுதான் பருவவயதில் வாய்த்துவிடும் முதற்காதலை வரவேற்கும் இளம் மனத்தின் நிலை. அந்த மனநிலையை வாழ்நாள் முழுவதும் மறக்கவே முடியாது. அதன் பின்னர் ஆயிரமாயிரம் பெருங்காதல்கள் வந்து மனத்தில் குடியேறியபோதும் அந்த முதற்காதல் நினைவுகள் கடுங்கோடையில் மண்ணில் விழுந்த முதல்மழையின் சுவடுகள்போலப் பதிந்தே இருக்கும். காதலைக் கொண்டாடாத படைப்பாளர்கள் …

காதலும் காதல் சார்ந்தவையும் Read More »

நிழலின் பந்தம்

“மண்டியிடுங்கள் தந்தையே” நூல் குறித்த வாசிப்பு விமர்சனம்… மஞ்சுநாத் எழுத்தாளனுக்கு எழுத்தின் வழியேயான சுதந்திரம் எல்லையற்றது. கட்டுபாடுகள் இல்லாதது. உண்மையில் எல்லா வகையான படிமங்களிலும் இதைச் சாத்தியமாக்குவது முடியுமா…? முடியாது என்பதே எதார்த்தம். குறிப்பாகத் தனி மனிதர்களின் வரலாற்றுப் பின்புலத்தைச் சாரமாகக் கொண்டு கட்டமைக்கப்படும் கதைகளுக்கு எல்லைகளும் கட்டுப்பாடுகளும் அதிகம் உள்ளன. கூடுதலாக ரஷ்ய எழுத்துலகின் கொண்டாட்டமான மனிதரான டால்ஸ்டாய் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாவலை எழுதுவதென்பது காட்டில் திரியும் குதிரை தானாக விரும்பி தனது …

நிழலின் பந்தம் Read More »

தொலைந்து போனவர்களின் உலகம்

. ஹருகி முரகாமியின் Kafka On The Shore நாவலில் காஃப்கா டமூரா வீட்டை விட்டு ஓடிப்போகிறான். அதுவும் அவனது பதினைந்தாவது பிறந்தநாள் அன்று. ஒருவன் வீட்டைவிட்டு ஓடுவது ஒரு நாளில் நடக்கும் நிகழ்வில்லை. அந்த எண்ணம் அவனுக்குள் ஒரு தாவரம் போல மெல்ல வளர்ந்து கொண்டவரும். முடிவில் ஒரு நாள் சாத்தியமாகும். அப்படித் தான் டமூரா ஓடிப்போவதற்குத் தயார் ஆகிறான். தந்தையிடமிருந்து விலகி ஓடுகிறான் என்பதாலே அவன் காஃப்காவின் மறு உருவம் போலக் கருதப்படுகிறான். அவன் …

தொலைந்து போனவர்களின் உலகம் Read More »

மகனின் நினைவாக

கணேஷ் பாரி · மண்டியிடுங்கள் தந்தையே :  வாசிப்பனுபவம் ஒரு தானியம் தன்னை அழித்துக் கொள்வதன் வழியேதான் புத்துயிர்ப்பு பெறுகிறது.மனிதர்களுக்கு அது சாத்தியமில்லை.. – எஸ்.ராமகிருஷ்ணன் விடுமுறைக் காலத்துக் காதல் கதை நாவலுக்குப் பிறகு நான் வாசிக்கும் நாவல் இது.ஐந்துவருடத்துக்குப் பிறகு எங்களுக்குப் போன வருடம் நவம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. எனது மகனின் நினைவாக வாங்கிய புத்தகம் இது.வெளியீட்டின் முதல் நாளே எஸ்.ராவின் கையால் எனது மகன் பெயர் “லெனின் வான்கா “ எழுதி …

மகனின் நினைவாக Read More »

காலத்தின் நிழல்.

மகிழ் ஆதன் நான்கு வயதிலிருந்து கவிதைகள் எழுதி வருகிறான். இப்போது அவனது வயது 9. அவனது முதற்தொகுப்பு நான் தான் உலகத்தை வரைந்தேன். அந்தத் தொகுப்பில் வியப்பூட்டும் கவிதைகள் நிறைய உள்ளன. பாடப்புத்தகங்களே உலகம் என்றிருக்கும் சிறார்களுக்கு நடுவே இந்த உலகையும் அதன் திகைப்பூட்டும் நிகழ்வுகளையும் மகிழ்ஆதன் எளிதாக எதிர்கொண்டு சிறப்பாக கவிதைகளில் வெளிப்படுத்தி வருகிறான். இப்போது அவனது இரண்டாவது கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. காலத்தைத் தாண்டி வரும் ஒருவன் என்ற இந்தக் கவிதை நூலை எதிர்  …

காலத்தின் நிழல். Read More »

விடுதலை என்பது வேறு

இடக்கை நாவல் குறித்த வாசிப்பு அனுபவம் சபரிராஜ் பேச்சிமுத்து ஒளரங்கசீப்பின் இறுதிநாளில் தொடங்குகிறது நாவல். அதனைத் தொடர்ந்து இரண்டு பேர் கைது செய்யப்படுகிறார்கள். ஒருவர் ஒளரங்கசீப்பின் விசுவாசி. அரசியல் கைதி. கைதான உடனே விசாரணை என்கிற தண்டனை தொடங்குகிறது. இன்னொருவர் சாமானியன். தாழ்த்தப்பட்டவர். காத்திருப்பு என்கிற தண்டனை தொடர்கிறது. இந்த இழையில் இருந்து இந்தியாவின் கடந்த காலத்தின், நிகழ்காலத்தின் நீதியை, நீதிமுறையை விசாரணை செய்கிறது இந்த நாவல். மரணம் பற்றிய பயம். அதிகாரத்தின் கருணையற்ற இரும்பு கை. …

விடுதலை என்பது வேறு Read More »

கண்காணிப்பின் நிழல்

பிரிட்டிஷ் அரசின் பார்வையில் பாரதி என்றொரு அரிய நூலை பாரதியியல் அறிஞர் சீனி.விசுவநாதன் வெளியிட்டிருக்கிறார். இது பாரதியாரைப் பற்றிய காவல்துறையின் ரகசிய அறிக்கைகளைக் கொண்டிருக்கிறது. இந்த அறிக்கைகள் மற்றும் குறிப்புகளைக் கி.அ.சச்சிதானந்தம் மற்றும் இரா. சுப்பராயலு இருவரும் இணைந்து மொழியாக்கம் செய்திருக்கிறார்கள் பாரதியை எப்படியெல்லாம் காவல்துறைக் கண்காணித்தது, தொந்தரவு செய்தது என்பதற்கு இந்நூல் நேரடி சாட்சியமாகும். இந்தியச் சுதந்திரப் போரில் எத்தனையோ கவிஞர்கள், எழுத்தாளர்கள் பங்கு பெற்றிருக்கிறார்கள். ஆனால் எவரையும் கண்டு பிரிட்டிஷ் அரசு இவ்வளவு பயப்படவில்லை. …

கண்காணிப்பின் நிழல் Read More »

டால்ஸ்டாயுடன் ஒரு பயணம்

மண்டியிடுங்கள் தந்தையே – எஸ். ராமகிருஷ்ணன்…. பிரான்சிஸ் சேவியர் 2022 ல் நான் வாசித்த முதல் நாவல்…. எஸ். ராமகிருஷ்ணன் சொல்லுவது போல் தமிழில் எழுதப்பட்ட ரஷ்ய நாவல். ஒரு பனிக்காலத்தில் கதை தொடங்குகிறது. யஸ்னயா போல்யானா பண்ணை, போர்யா கிராமம், துலா, மாஸ்கோ எனப் பயணிக்கிறது… டால்ஸ்டாய் கால ரஷ்யாவுக்குச் சென்று டால்ஸ்டாய் யோடு பயணித்த உணர்வு வந்து போகிறது… டால்ஸ்டாய் வாழ்கையின் ஊடே பயணித்துப் பற்றிய உண்மைகளை அப்படியே சொல்லுகிறது… முன்னும் பின்னுமாக நகர்ந்து …

டால்ஸ்டாயுடன் ஒரு பயணம் Read More »

காலம் வரைந்த காட்சிகள்

காவேரிப்பட்டினம் சித்தாந்த வேங்கடரமணி எனப்படும் கே.எஸ். வேங்கடரமணி இரண்டு நாவல்களை எழுதியிருக்கிறார். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த நாவல்கள் தஞ்சை மாவட்ட கிராமிய வாழ்க்கையை விவரிக்கின்றன. பூம்புகாரைச் சேர்ந்த கா.சி. வேங்கடரமணி வழக்கறிஞராகப் பணியாற்றியவர். .இவரது தந்தை சித்தாந்த ஐயர் சுங்கவரி அதிகாரி. இவரது முன்னோர்கள் தஞ்சை மராட்டிய மன்னர்களின் அரசவையில் அமைச்சர்களாகப் பணியாற்றியிருக்கிறார்கள்.. வேங்கடரமணி ஆரம்பப் பள்ளியினை மாயவரத்திலும் கல்லூரி படிப்பைச் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிலும் பயின்றிருக்கிறார். சட்டம் படித்து மயிலாப்பூரில் வழக்கறிஞராகத் தொழில் நடத்தியிருக்கிறார். ஓவியத்தில் …

காலம் வரைந்த காட்சிகள் Read More »

ஒளிமலர்

பிரபு மயிலாடுதுறை ஒரு பெரிய கிராமம். அதில் உலகம் கண்ட மகத்தான கலைஞர்களில் ஒருவன் வாசம் புரிகிறான். அவனது குடும்பம். நேசிக்கும் மனைவி . கலையார்வம் மிக்க வாரிசுகள். நூற்றுக்கணக்கான அவனது பண்ணைத் தொழிலாளர்கள். பெரிய மாளிகை. பெரிதினும் பெரிது கேட்கும் அவனது மனநிலை. சாரட்டு வண்டிகள். கிராமத்துத் திருவிழாக்கள் என உலகின் மகத்தான கலைஞன் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த வாழ்க்கையைத் தன் சொற்கள் மூலம் என்றுமுள காலத்தில் நிறுவியிருக்கிறார் திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள். …

ஒளிமலர் Read More »