இலக்கியம்

ரஷ்ய நாவலின் உதயம்

பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி, லியோ டால்ஸ்டாய், இவான் துர்கனேவ் ஆகிய மூவரின் முக்கிய நாவல்களும் ரஷ்யன் ஹெரால்ட் பத்திரிக்கையில் தொடராக வெளிவந்திருக்கின்றன. இந்த நாவல்களை வெளியிடுவதற்குத் தேர்வு செய்ததோடு அவற்றை எடிட் செய்து வெளியிட்டு இலக்கிய அந்தஸ்து பெற்றுத் தந்தவர் ரஷ்யன் ஹெரால்ட் பத்திரிக்கையின் ஆசிரியர் மிகைல் நிகிஃபோரோவிச் கட்கோவ்  இவரது உறுதுணையில் தான் மூன்று படைப்பாளிகளும் தங்களுக்கான இலக்கிய இடத்தை உருவாக்கிக் கொண்டார்கள். கட்கோவோடு இவர்களுக்கு இருந்த நெருக்கம் மற்றும் மோதல்கள் பற்றி SUSANNE FUSSO எழுதிய …

ரஷ்ய நாவலின் உதயம் Read More »

வெர்தரின் காதல்

கதே எழுதிய The Sorrows of Young Werther நாவலை மறுபடி வாசித்தேன். Stanley Corngold மொழியாக்கம் செய்த புதிய பதிப்பு. அதன் தலைப்பு The Sufferings of Young Werther என மாற்றப்பட்டிருக்கிறது.  எனக்கு The Sorrows of Young Werther தலைப்பே பிடித்துள்ளது. கல்லூரி நாட்களில் இந்த நாவலை முதன்முறையாகப் படித்தபோது ஏற்பட்ட சிலிர்ப்பு, மயக்கம் இன்றைக்கு துளியும் மாறவில்லை. கதே என்றைக்குமானவர். அவரது நாவல் உலகெங்கும் காதலர்களால் கொண்டாடப்படுகிறது.  ஒருவகையில் வெர்தர் நாம் …

வெர்தரின் காதல் Read More »

அழகிய மௌனம்

எனது ஐந்து வருட மௌனம் சிறுகதைத் தொகுப்பு குறித்து வெங்கட்ராமன் கணேசன் தனது வலைப்பக்கத்தில் எழுதியுள்ள மதிப்புரை Aindhu Varuda Mounam – S. Ramakrishnan written by Venky Aindhu Varuda Mounam (“Silence of five years) is an alluring collection of short stories ranging from the profound to the plebian. Author S. Ramakrishnan in 32 short stories takes his readers on a …

அழகிய மௌனம் Read More »

கதாபாத்திரங்களைத் தேடுகிறார் டிக்கன்ஸ்

1843ம் ஆண்டு – தொடர்ச்சியாக மூன்று நாவல்கள் தோல்வியுற்ற காரணத்தால் அடுத்து என்ன எழுதுவது என்று தெரியாத குழப்பத்திலிருந்தார் சார்லஸ் டிக்கன்ஸ். ஆடம்பரமான வாழ்க்கை காரணமாக நிறையக் கடன் ஏற்பட்டிருந்தது. கடன்காரர்கள் வீட்டை முற்றுகையிட்டார்கள். அதைச் சமாளிக்கப் பணம் கேட்டு பதிப்பாளரை அணுகுகிறார் டிக்கன்ஸ். அவரோ புதிய நாவல் ஏதாவது எழுதினால் முன்பணம் தருகிறேன் என்கிறார். என்ன எழுதுவது என்று தெரியாத நிலையில் பதிப்பாளரிடம் புதிய நாவலை ஆரம்பித்துவிட்டதாகப் பொய் சொல்லி முன்பணம் பெறுகிறார் டிக்கன்ஸ். புதிய …

கதாபாத்திரங்களைத் தேடுகிறார் டிக்கன்ஸ் Read More »

அறியப்படாத கார்க்கி

டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, ஆன்டன் செகாவ் போல மாக்சிம் கார்க்கியின் வாழ்க்கை வரலாறு இன்றுவரை விரிவாக எழுதப்படவில்லை. ரஷ்ய மொழியில் வெளியாகியுள்ள அவரது வாழ்க்கை வரலாறு சுருக்கமானது. ஸ்டாலின் அரசோடு அவருக்கு ஏற்பட்ட மோதல்கள், நெருக்கடிகள் பற்றி அதில் எதுவுமில்லை. Henri Troyat எழுதிய Gorky: A Biography கூட முழுமையானதில்லை. MAXIM GORKY : A POLITICAL BIOGRAPHY என்ற T. YEDLAN புத்தகத்தில் அவரது வாழ்க்கையின் கடைசிப்பகுதி விவரிக்கப்படுகிறது. தனது பால்ய வயது துவங்கி இளைஞனான …

அறியப்படாத கார்க்கி Read More »

நகரம் விழுங்கிய மனிதர்கள்.

ஆற்றின் சுழல் நம்மை ஆழத்திற்கு இழுத்துச் சென்றுவிடுவதைப் போலச் சில நாவல்கள் நம்மை அதன் ஆழத்திற்குள் இழுத்துக் கொண்டுவிடுகின்றன. நாவலை வாசித்து முடித்தபிறகும் அதிலிருந்து வெளிவர முடியாது. மனதில் கதாபாத்திரங்கள் நடமாடியபடியே இருக்கும். அப்படியொரு நாவல் தான் அன்னையின் குரல். ஆப்பிரிக்க நாவலான இதை எழுதியவர் ஆலன் பேடன் ஆலன் பேடனின் புகழ்பெற்ற நாவலான Cry, the Beloved Country தமிழில் அன்னையின் குரல் என்று மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்நாவல் குறித்த கவனம் தமிழ்ச் சூழலில் உருவாகவில்லை. …

நகரம் விழுங்கிய மனிதர்கள். Read More »

தொப்பி அணிந்த டால்ஸ்டாய்.

ஜி.கோபி மண்டியிடுங்கள் தந்தையே நாவல் குறித்த வாசிப்பனுபவம் •• மண்டியிடுங்கள் தந்தையே நாவல் திறந்த வேகத்தில் வாசித்து முடித்துவிடக் கூடிய எளிய சுவாரசியமான புத்தகம். ஆனாலும் இரண்டு நாட்கள் தொடர்ந்து வாசித்தேன். ரஷ்யவில் யஸ்யானா போல்யானா பண்ணைக்குச் சென்று டால்ஸ்டோயை பார்த்து உடன் பழகியது போல இருந்தது. அந்தப் பண்ணையின் மீதுள்ள ஒரு மணற் குன்றின் மீது நின்று கொண்டு அங்குள்ள விவசாயிகளோடு தொப்பி அணிந்த படி டால்ஸ்டோய் வேலை பார்த்துக் கொண்டிருப்பதை நான் பார்த்தேன். எந்த …

தொப்பி அணிந்த டால்ஸ்டாய். Read More »

வெயிலின் சங்கீதம்

சஞ்சாரம் – எஸ்.ராமகிருஷ்ணன். நாவல் குறித்த வாசிப்பனுபவம் சுயாந்தன் (Suyaanthan Ratneswaran )· ** நாதஸ்வர இசையினையும் அதனை வாசிக்கும் கலைஞர்கள் பற்றியதுமான அற்புதமான  ஒரு நாவல் “சஞ்சாரம்”. கி.ராவுக்கு பின்னர் தமிழில் நாதஸ்வரம் பற்றி அதிகம் எழுதியவர் எஸ்.ராமகிருஷ்ணன் என்றே நினைக்கிறேன்.  இந்த நாவலை வாசித்து விட்டுக் கோயில்களில் நாயனம் வாசிக்கும் ஒரு வித்துவானிடம் உங்கள் கலையைப் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் என்ற எழுத்தாளர் நானூறு பக்கத்தில் பெருங்கதை ஒன்றை எழுதியுள்ளார். அதில்  அசுரவாத்தியம் என்று அவர் …

வெயிலின் சங்கீதம் Read More »

என் அறிவுலக ஜன்னல்

பு. பிரியதர்சினி · அரூ இணைய இதழில் வெளியானது, என்னுடைய வாசிப்பு, திரைப்பட ஆர்வம் என எல்லாவற்றுக்கும் அடிப்படை ஆதாரம் ஆனந்த விகடன். வாரா வாரம் வீட்டுக்கு வரும் விகடன் கூடவே எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், திரைப்பட கலைஞர்கள், சாதனையாளர்கள் சாமானியர்கள் எனப் பலரைக் கைப்பிடித்துக் கூட்டி வரும். அந்த வகையில் திரு. எஸ். ராமகிருஷ்ணன் எனக்கு அறிமுகம். ஆனந்த விகடனில் வந்த ‘சிறிது வெளிச்சம்’ தொடர் அவரை எனக்கு வெளிச்சம் காட்டியது. அந்த தொடரில் அவர் கதை, …

என் அறிவுலக ஜன்னல் Read More »

சிறந்த புத்தகங்கள் 2022

இந்த ஆண்டில் நான் படித்த புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்தவை கவிதை நிழல், அம்மா ஷங்கர் ராமசுப்ரமணியனின் புதிய கவிதைத் தொகுப்பு. தனது முந்தைய கவிதைகளிலிருந்து விலகி சொல்முறையிலும் வெளிப்பாட்டிலும் புதிய உச்சங்களைத் தொட்டிருக்கிறார். •• நீரின் திறவுகோல்: பிறமொழிக் கவிதைகள்க.மோகனரங்கன்மிகச்சிறந்த மொழிபெயர்ப்பு கவிதைகளின் தொகுப்பு இதனைப் பற்றி இணையதளத்தில் விரிவாக எழுதியிருக்கிறேன் தமிழினி பதிப்பகம் •• அசகவதாளம்பெரு விஷ்ணுகுமார் பெரு. விஷ்ணுகுமாரின் இரண்டாவது கவிதை தொகுப்பு. இவரது கவிதைகளில் வெளிப்படும் புதிய படிமங்கள் வியப்பூட்டுகின்றன. காலச்சுவடு …

சிறந்த புத்தகங்கள் 2022 Read More »