லண்டனில் காந்தி.
காந்தியின் சுயசரிதையில் உள்ள ஒரு சிறு குறிப்பை வைத்துக் கொண்டு இந்த நாவலை கீத் ஹெல்லர் எழுதியிருக்கிறார். மார்த்தாவும் அவரது கணவர் சாமுவேலும் பிரிட்டனின் ஹெட்ஜ் எண்ட் கிராமப்புறத்தில் தங்கள் முதுமையைக் கழிக்கிறார்கள். 1948 ஆம் ஆண்டு, காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர், மார்த்தாவிற்கு மகாத்மா காந்தியின் மூத்த மகன் ஹரிலாலிடமிருந்து ஒரு கடிதம் வருகிறது. அதில் காந்தியோடு மார்த்தாவிற்கு இருந்த நீண்ட காலக் கடிதத் தொடர்பு குறித்துத் தான் அறிவேன் என்றும் அவரைச் சந்திக்க விரும்புவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. …