இலக்கியம்

தஸ்தாயெவ்ஸ்கியின் தந்தை

தஸ்தாயெவ்ஸ்கியின் தி பிரதர்ஸ் கரமசோவ் நாவல் ஐந்து முறை திரைப்படமாக்கப்பட்டிருக்கிறது. ஹாலிவுட்டில் யூல் பிரைனர் (Yul Brynner ) நடித்த The Brothers Karamazov 1958ல் வெளியானது. Richard Brooks இயக்கியிருப்பார். நாவலின் மையக்கருவை மட்டுமே எடுத்துக் கொண்டு உருவாக்கப்பட்ட படமிது. இப்படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. Bratya Karamazovy (1969) என்ற ரஷ்யத் திரைப்படம் 1969ல் வெளியானது. அதுவும் முழுமையாக நாவலைச் சித்தரிக்கவில்லை. செக் மொழியிலும் பிரெஞ்சிலும் இந்நாவல் படமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதுவரை எந்தத் திரைப்படமும் …

தஸ்தாயெவ்ஸ்கியின் தந்தை Read More »

2019ன் சிறந்த புத்தகங்கள்- 4

ஷங்கர் ராமசுப்ரமணியனின் புதிய கவிதைத்தொகுப்பு கல் முதலை ஆமைகள் க்ரியா பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. சமகால உலகக் கவிதைகளின் வரிசையில் வைத்துக் கொண்டாட வேண்டிய தொகுப்பிது.. 110 பக்கங்கள் கொண்ட சிறிய கவிதைநூல். ஷங்கர் ராம சுப்ரமணியனின் கவித்துவம் தமிழ் மரபிலிருந்து தனது கிளைகளை விரித்துக் கொண்டிருக்கிறது. அசலான கவிமொழியும் பாடுபொருளும் கொண்ட இக்கவிதைகள் ஆழமும் செறிவும் கொண்டிருக்கின்றன. காலை வெளிச்சத்தைப் போலத் தூய்மையும் பேரழகும் கொண்டதாகயிருக்கின்றன வாசிக்கும் போது மனதில் சலனத்தை ஏற்படுத்தும் இக்கவிதைகள் வாசித்து …

2019ன் சிறந்த புத்தகங்கள்- 4 Read More »

அருவியை மௌனமாக்கும் சிறு செடி கவிதை

கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன் உலகின் வெவ்வேறு தேசங்கள், கலாசாரம், அழகியல், அரசியல் பின்னணிகள் கொண்ட கவிஞர்களையும் கவிதைகளையும் அறிமுகம் செய்து எஸ். ராமகிருஷ்ணன் தடம் இதழில் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘கவிதையின் கையசைப்பு’. இதில் 12 கவிஞர்களும் அவர்கள் கவிதைகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்கள். ஒரு மாத இடைவெளி கொடுத்து அந்தந்தக் கவிஞர்களையும் அவர்களது கவிதைகளையும் வாசிப்பதற்கான அவகாசம் தேவைப்படும் அளவுக்கு திடமான அறிமுகங்கள் இவை. ஒரு ஜப்பானியக் கவிஞரையும் ஒரு ரஷ்யக் கவிஞரையும் அவர்களது கவிதைகளையும் எனக்கு …

அருவியை மௌனமாக்கும் சிறு செடி கவிதை Read More »

வாசிப்பின் வழியாக

பேராசிரியர் பாரதிபாலன் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் இலக்கியம் என்ற மகாசமுத்திரத்திற்குள் இறங்குகிறார்கள், நுழைகிறார்கள். இந்த இலக்கியத்துக்குள் நுழைவதற்கு எத்தனையோ வாயில்கள் திறந்திருக்கின்றன. அவரவர் சூழலுக்கு ஏற்ப அவரவர் வாயில்களை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்கின்றார்கள்! எஸ். ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுத்துக் கொண்ட வாயில் ‘ரஷ்ய இலக்கியங்கள்’. இளம் வயதில் தனக்கு ஏற்பட்ட ரஷ்ய இலக்கியத்தின் தாக்கத்தால், ஆற்றுப்படுத்துதலால் உந்தப்பட்டு எழுத வந்தவர் எஸ். ராமகிருஷ்ணன்! பின்னர் பழந்தமிழ் இலக்கியம் தொட்டு தமிழில் இலக்கிய வளமைகளை எல்லாம் உள்வாங்கிக் கொண்டு தன் …

வாசிப்பின் வழியாக Read More »

காந்தியின் நிழலில்.

மாலதி செந்தூர் தெலுங்கு மொழியின் புகழ்பெற்ற எழுத்தாளர். இவரது இதய நேத்ரி என்ற நாவல் தமிழில் இதய விழிகள் என்று மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இதனைச் சாகித்திய அகாதெமி வெளியிட்டிருக்கிறது காந்தி யுகத்தை இத்தனை துல்லியமாக இதுவரை எந்த நாவலும் சித்தரித்ததில்லை. மிகவும் யதார்த்தமாக எழுதப்பட்ட நாவல். நேரடியாகவே கதை சொல்லப்படுகிறது. பல்வேறு அரசியல் செய்திகள் உரையாடலின் வழியே வெளிப்படுகின்றன. காந்தியின் தாக்கம் ஆந்திர மக்களிடம் எவ்வாறு இருந்தது என்பதை நாவல் அழுத்தமாக விவரிக்கிறது. பால்ய விவாகத்திற்கு எதிரான …

காந்தியின் நிழலில். Read More »

மித்ராவின் குற்றச்சாட்டுகள்.

கிருஷ்ணா ஸோப்தி ஞானபீடம் விருது பெற்ற இந்தி மொழி எழுத்தாளர். இவரது மித்ரோ மராஜனி என்ற நாவல் தமிழில் மித்ராவந்தி என வெளியாகியுள்ளது. நேஷனல் புக் டிரஸ்ட் இதை வெளியிட்டிருக்கிறார்கள். பெண்ணின் காமத்தையும் கூட்டுக்குடும்பத்தில் பெண் நடத்தப்படும் விதம் பற்றியும் மித்ராவந்தியில் ஸோப்தி சிறப்பாக எழுதியிருக்கிறார். மித்ராவந்தி என்ற பெண்ணின் கதாபாத்திரம் போல இந்திய இலக்கியத்தில் எவரும் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கியதில்லை. அவள் வெளிப்படையாகத் தனது உடலின் வேட்கைகளை, காமத்தூண்டுதல்களைப் பேசுகிறாள். மற்றவர்கள் ரகசியமாக இன்பங்களை அடைந்து …

மித்ராவின் குற்றச்சாட்டுகள். Read More »

குரங்கு வளர்க்கும் பெண்

லியோனார்டு மைக்கேல்ஸ் என்ற அமெரிக்கச் சிறுகதையாசிரியர் எழுதிய குரங்கு வளர்க்கும் பெண் சிறுகதையைக் கவிஞர் க. மோகனரங்கன் மிகச்சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். தமிழினி வெளியிட்டுள்ள மொழிபெயர்ப்பு கதைகளின் தொகுப்பாகிய குரங்கு வளர்க்கும் பெண் சென்ற ஆண்டு வெளியானது. மிகச் செறிவாக மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ட சிறுகதைகள் கொண்ட தொகுப்பிது. குரங்கு வளர்க்கும் பெண் கதையில் பியர்டு என்பவன் இங்கர் என்ற விலைப்பெண்ணை ஜெர்மனியில் சந்திக்கிறான். அவள் மீது தீராத ஆசை கொள்கிறான். அவளோ பியர்டினை இன்னொரு வாடிக்கையாளன் போலவே நடத்துகிறாள். …

குரங்கு வளர்க்கும் பெண் Read More »

கவிஞனும் காவல்துறையும்

பிரிட்டிஷ் அரசின் பார்வையில் பாரதி என்றொரு அரிய நூலை பாரதியியல் அறிஞர் சீனி.விசுவநாதன் வெளியிட்டிருக்கிறார். இது பாரதியாரைப் பற்றிய காவல்துறையின் ரகசிய அறிக்கைகளைக் கொண்டிருக்கிறது. இந்த அறிக்கைகள் மற்றும் குறிப்புகளைக் கி.அ.சச்சிதானந்தம் மற்றும் இரா. சுப்பராயலு இருவரும் இணைந்து மொழியாக்கம் செய்திருக்கிறார்கள் பாரதியை எப்படியெல்லாம் பிரிட்டிஷ் அரசின் காவல்துறைக் கண்காணித்தது, தொந்தரவு செய்தது என்பதற்கு இந்நூல் நேரடி சாட்சியமாகும். இந்தப் பெரும்பணியைச் செய்த சீனி.விசுவநாதன் மிகுந்த பாராட்டிற்குரியவர். இந்தியச் சுதந்திரப் போரில் எத்தனையோ கவிஞர்கள், எழுத்தாளர்கள் பங்கு …

கவிஞனும் காவல்துறையும் Read More »

எழுத்தாளனுடன் வாழுவது

Living with  a Writer என்ற கட்டுரைத் தொகுப்பினை வாசித்தேன். எழுத்தாளனுடன் வாழ்வது குறித்துப் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் மனைவி அல்லது கணவர் தங்கள் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். BBC TV series ‘Walking with Dinosaurs’ எனத் தலைப்பே பயமுறுத்துகிறதே என்று ஒரு கட்டுரையின் துவக்க வரியுள்ளது. நிஜம் தானே. எழுத்தாளனுடன் சேர்ந்து வாழுவது என்பது சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையில் ஊஞ்சலாடிக் கொண்டிருப்பது போலாகும். எப்போது ஊஞ்சல் சொர்க்கத்தை நோக்கிச் செல்லும் எப்போது நரகத்தை நோக்கித் …

எழுத்தாளனுடன் வாழுவது Read More »

மீனின் பாடல்

உதிரும் இலைகளின் பாடல் என்ற தலைப்பில் சீனக்கவிதைகளை மொழியாக்கம் செய்து வெளியிட்ட ப. கல்பனா தற்போது மலர்கள் விட்டுச்சென்ற வெற்றிடத்தில் எனக் கொரியக்கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறார். அவரும் புதுவையில் வசிக்கும் பேராசிரியர் பா. இரவிக்குமாரும் இணைந்து கொரியாவின் முக்கியக் கவிஞர்களின் தேர்வு செய்யப்பட்ட கவிதைகளைச் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார்கள் .பரிசல் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது. கொரியக்கவிஞரான கோ யுன் குறித்துத் தடம் இதழில் நான் விரிவான கட்டுரை எழுதியிருக்கிறேன். அந்தக் கட்டுரை தங்களுக்கு ஒரு உந்துதலாக இருந்ததாக ரவிக்குமார் …

மீனின் பாடல் Read More »