நம்பிக்கையோடு இருங்கள்
கரோனா தாக்குதல் காரணமாக நாடு மிகப்பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. அரசு தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றன. மருத்துவர்களும் மருத்துவமனை பணியாளர்களும் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். அவர்களுக்கு எனது மனம் நிரம்பிய நன்றி. இது போலவே ஊடகத்துறையினர் மிகுந்த பொறுப்புணர்வோடு செய்திகளை வழங்குகிறார்கள். அவர்களுக்கும் நன்றி. கொரானோ தொற்றுநோய் குறித்த பயம் நம் அனைவரின் மனதிலும் அழுத்தமாகப் பதிந்துள்ளது. குறிப்பாக வயதானவர்கள். ஆஸ்துமா நோயாளிகள் மிகுந்த மனஅழுத்தம் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பயம் அவர்களின் நோய் கூறை அதிகமாக்கிவிடுகிறது. …