இலக்கியம்

நம்பிக்கையோடு இருங்கள்

கரோனா தாக்குதல் காரணமாக நாடு மிகப்பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. அரசு தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றன. மருத்துவர்களும் மருத்துவமனை பணியாளர்களும் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். அவர்களுக்கு எனது மனம் நிரம்பிய நன்றி. இது போலவே ஊடகத்துறையினர் மிகுந்த பொறுப்புணர்வோடு செய்திகளை வழங்குகிறார்கள். அவர்களுக்கும் நன்றி. கொரானோ தொற்றுநோய் குறித்த பயம் நம் அனைவரின் மனதிலும் அழுத்தமாகப் பதிந்துள்ளது. குறிப்பாக வயதானவர்கள். ஆஸ்துமா நோயாளிகள் மிகுந்த மனஅழுத்தம் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பயம் அவர்களின் நோய் கூறை அதிகமாக்கிவிடுகிறது. …

நம்பிக்கையோடு இருங்கள் Read More »

புத்தரின் கண்கள்

ஹங்கேரியின் புகழ்பெற்ற எழுத்தாளர் லாஸ்லோ க்ராஸ்னஹோர்காய்.( László Krasznahorkai.) இவரது நாவல்களை ஒப்பற்ற திரைப்படங்களாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பெலா டார் லாஸ்லோ க்ராஸ்னஹோர்காய் எழுதிய Seiobo There Below நாவல் 2015ம் ஆண்டிற்கான மேன் புக்கர் பரிசு பெற்றது. பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த கலைஞர்களின் கலைத்திறன் பற்றியது இந்நாவல். பல்வேறு துண்டுகளால் ஒன்றிணைந்த வடிவத்தைக் கொண்டிருக்கிறது. இந்நாவலில் ஜப்பானிலுள்ள புத்த கோவில் ஒன்றில் பழங்காலப் புத்தரின் சிலையை எப்படி மறுசீரமைப்பு செய்கிறார்கள் என்பதைப் பற்றி ஒரு பகுதி …

புத்தரின் கண்கள் Read More »

லண்டனில் காந்தி.

காந்தியின் சுயசரிதையில் உள்ள ஒரு சிறு குறிப்பை வைத்துக் கொண்டு இந்த நாவலை கீத் ஹெல்லர் எழுதியிருக்கிறார். மார்த்தாவும் அவரது கணவர் சாமுவேலும் பிரிட்டனின் ஹெட்ஜ் எண்ட் கிராமப்புறத்தில் தங்கள் முதுமையைக் கழிக்கிறார்கள். 1948 ஆம் ஆண்டு, காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர், மார்த்தாவிற்கு மகாத்மா காந்தியின் மூத்த மகன் ஹரிலாலிடமிருந்து ஒரு கடிதம் வருகிறது. அதில் காந்தியோடு மார்த்தாவிற்கு இருந்த நீண்ட காலக் கடிதத் தொடர்பு குறித்துத் தான் அறிவேன் என்றும் அவரைச் சந்திக்க விரும்புவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. …

லண்டனில் காந்தி. Read More »

பிளாபர்ட்டின் குறிப்புகள்.

“Art is nothing but this strange translation of thought by form.” – Gustave Flaubert பிரெஞ்சு எழுத்தாளர் குஸ்தாவ் பிளாபர்ட் (Gustave Flaubert)  எழுதிய Intimate Notebook என்ற குறிப்பேட்டினை வாசித்தேன். அவரது மருமகள் கரோலின் மூலம் இந்தக் குறிப்பேடு கண்டறியப்பட்டு வெளியாகியுள்ளது. 1856 ஆம் ஆண்டு பிளாபர்ட் எழுதிய மேடம் பவாரி நாவல்  உலகப்புகழ்பெற்றது. இந்த நாவலின் பாதிப்பிலிருந்தே டால்ஸ்டாய் தனது அன்னாகரீனினா நாவலை எழுதினார். மேடம் பவாரி ஐந்து முறை படமாக்கப்பட்டிருக்கிறது. பிளாபர்ட் உடலின்பத்தைக் …

பிளாபர்ட்டின் குறிப்புகள். Read More »

சினிமாவே வாழ்க்கை.

இசைவிமர்சகர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நடிகர் எனப் பன்முகத்திறமை கொண்ட ஷாஜியை எனக்கு இருபது ஆண்டுகளாகத் தெரியும். எப்போது சந்தித்தாலும் அவரது பேச்சின் ஊடே சினிமாவும் இசையும் இலக்கியமும் பீறிடும். இசையின் மீது இத்தனை பித்து கொண்ட ஒருவரை நான் கண்டதில்லை. ஆழ்ந்து கரைந்து இசை கேட்கக் கூடியவர். அது போலவே தான் சினிமாவும். உலகச் சினிமா முதல் உள்ளூர் சினிமா வரை ஆராய்ந்து பேசக்கூடியவர். மிஷ்கின் படங்களில் நடிக்கத் துவங்கி தமிழ், மலையாளம் என இருமொழிகளிலும் தொடர்ந்து …

சினிமாவே வாழ்க்கை. Read More »

வீட்டிற்கு வந்த பறவை

World Literature Today என்ற இதழைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். சமகால உலக இலக்கியப்போக்குகளை அறிந்து கொள்ளவும் சிறந்த மொழியாக்கங்களை வாசிக்கவும் உதவும் பத்திரிக்கை. இந்தியாவிற்கான இதன் ஆண்டுச் சந்தா 150 டாலர். இதன் பழைய இதழில் ஃபக்ரி காவர்(Fakhri Kawar) என்ற ஜோர்டான் எழுத்தாளரின் A Bird in My House என்ற கதையை வாசித்தேன். அற்புதம். மிக வித்தியாசமான கதை. இக்கதையை வாசித்தபிறகு ஃபக்ரி காவரின் புத்தகங்களைத் தேட ஆரம்பித்தேன். ஆங்கிலத்தில் ஒன்றிரண்டே வாசிக்கக் கிடைக்கின்றன. …

வீட்டிற்கு வந்த பறவை Read More »

மும்பை இலக்கிய விழா

கடந்த மூன்று நாட்களாக மும்பை கேட்வே லிட்பெஸ்டிவலில் கலந்து கொண்டிருந்தேன். இந்தியா முழுவதுமிருந்து முக்கிய எழுத்தாளர்கள் பலரும் வந்திருந்தார்கள். இந்திய இலக்கியத்தின் எதிர்காலம் குறித்து நான்கு முக்கிய அமர்வுகள் நடைபெற்றன. NCPA அரங்கம் மிக அழகானது. பல்வேறு நாடக அரங்குகளை ஒன்றாகக் கொண்ட வளாகமது. அமர்வில் விவாதித்ததை விடவும் அரங்கிற்கு வெளியே எழுத்தாளர்களுடன் கூடிப் பேசி ஒன்றாக நாளைக் கழித்தது மகிழ்ச்சியாக இருந்தது. நிகழ்விற்கு வந்திருந்த இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணனை சந்தித்து உரையாடினேன். மலையாள எழுத்தாளர் உண்ணி, …

மும்பை இலக்கிய விழா Read More »

காதலின் நினைவில்

ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை என்ற எனது புதிய  நாவலைப் பற்றி  அழகான விமர்சனத்தை திவாகர் ஜெ எழுதியிருக்கிறார். அவருக்கு எனது நன்றி •• காதலின் நினைவில் திவாகர். ஜெ உங்களின் பள்ளிப் பருவக் காலத்தில் நீங்கள் கோடை விடுமுறைக்கு உறவினர் வீடுகளுக்கு சென்றதுண்டா? நிச்சயம் சென்றிருப்போம். அதுவும் பெரும்பாலும் தாத்தா – பாட்டி வீட்டிற்கோ அல்லது மாமா வீட்டிற்கோ தான் சென்றிருப்போம் அல்லவா? இக்கதையும் அப்படியொரு கோடை விடுமுறையில் தனது தாத்தா வீட்டிற்குச் செல்லும் ஒருவனது …

காதலின் நினைவில் Read More »

செகாவின் நாய்கள்

புகழ்பெற்ற எழுத்தாளரான ஆன்டன் செகாவிற்கு ரஷ்யாவில் நினைவில்லமும் சிலைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. கூடுதல் சிறப்பு செகாவ் வளர்ந்த டச்ஷண்ட் நாய்களுக்கும் கூட நினைவுச் சிற்பங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. செகாவ் கதைகளில் வரும் நாய்கள் மறக்கமுடியாதவை. The Lady with the Dog” கதையில் வரும் அன்னா ஒரு வெள்ளை நாய் வைத்திருக்கிறாள். இந்த நாய் அவளது அப்பாவித்தனத்தையும் இளமையையும் குறிக்கும் குறியீடு போலவே கதையில் சித்தரிக்கப்படுகிறது. கஷ்டங்கா என்ற சிறுகதையும் நாயைப் பற்றியதே. இக்கதையில் வரும் நாய் ஒரு தச்சருக்குச் …

செகாவின் நாய்கள் Read More »

எழுத்தாளனின் விசித்திரவுலகம்.

ஜேவியர் மரியாஸ் (Javier Marías) ஒரு ஸ்பானிஷ் நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் கட்டுரையாளர். அவரது படைப்புகள் 42 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவரது Written Lives என்ற கட்டுரைகளின் தொகுப்பை வாசித்தேன். இது தாமஸ் மான், ரில்கே, ஆர்தர் கானன் டாயல், இவான் துர்கனேவ், ஜுனா பார்ன்ஸ், எமிலி ப்ராண்டே, மால்கம் லோரி மற்றும் கிப்ளிங் உள்ளிட்ட இருபத்தைந்து எழுத்தாளர்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பாகும் எழுத்தாளர்களின் அறியப்படாத சொந்த வாழ்க்கை குறித்தும் அவரது ஆளுமையின் தனித்துவத்தையும் விவரிக்கும் இக்கட்டுரைகள் …

எழுத்தாளனின் விசித்திரவுலகம். Read More »