இலக்கியம்

லேர்மன்தேவ்வின் காதல்.

லேர்மன்தேவ் என்ற ரஷ்ய தொலைக்காட்சிக்காக உருவாக்கபட்ட  திரைப்படத்தைப் பார்த்தேன். மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்ட வாழ்க்கை வரலாற்றுப்படம். மிகையில் லேர்மன்தேவ்(Mikhail Lermontov) எழுதிய நம் காலத்து நாயகன் (A Hero of Our Time) படித்திருக்கிறீர்களா. ரஷ்ய நாவல்களில் மிகவும் தனித்துவமானது. லேர்மன்தேவ் ரஷ்யாவின் புகழ்பெற்ற கவிஞர். ஒரேயொரு நாவல் தான் எழுதியிருக்கிறார். சில நாடகங்களையும் ஐந்து கவிதை தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார். தனது 27வது வயதில் Duel எனப்படும் துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டார் லேர்மன்தேவ். புஷ்கினை தனது ஆதர்சமாகக் கொண்ட …

லேர்மன்தேவ்வின் காதல். Read More »

மோபிடிக் எனும் இதிகாசம்.

ஹெர்மன் மெல்வில் எழுதிய மோபிடிக் உலகின் மிகச்சிறந்த நாவல்களில் ஒன்று. எனக்கு மிகவும் பிடித்தமான இந்நாவலை அடிக்கடி எடுத்து வாசிப்பேன். ஒவ்வொரு முறை வாசித்து முடிக்கும் போதும் மாபெரும் இதிகாசம் ஒன்றை வாசித்து மீண்டது போல வியப்பு மேலிடவே செய்யும். மிகவும் நுட்பமாக, கவித்துவமாக எழுதப்பட்ட அமெரிக்க நாவல். 19ம் நூற்றாண்டில் நடைபெற்ற திமிங்கல வேட்டை பற்றிய ஆவணத்தொகுப்பு போல நாவலில் நுட்பமான விபரங்களை எழுதியிருக்கிறார் மெல்வில். மோபிடிக் நாவலை நான்கு முறை திரைப்படமாக்கியிருக்கிறார்கள். அத்தோடு காமிக்ஸ் …

மோபிடிக் எனும் இதிகாசம். Read More »

மக்கத்துச் சால்வை

ஈழப்படைப்பாளிகளில் எஸ்.எல்.எம். ஹனீபா முக்கியமானவர். கிழக்கிலங்கையைச் சேர்ந்த ஹனீபாவின் சிறுகதைகள் தனித்துவமிக்கவை. இலங்கை சென்ற போது ஓட்டமாவடியில் இருக்கும் அவரது வீட்டிற்குச் சென்றிருக்கிறேன். அழகான வீடு. நிறையப் பழமரங்கள். கிழக்கிலங்கை படைப்பாளிகள் பலருக்கும் அவர் தான் ஞானத்தந்தை. புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமியின் கதைமரபில் வரக்கூடியவர். அவரது மக்கத்துச் சால்வை முக்கியமான சிறுகதைத் தொகுப்பு தேர்ந்த ஓவியர் போலவே ஹனீபா காட்சிகளைக் கண்முன்னே தீட்டிக் காட்டுகிறார். கதாபாத்திரங்கள் நம் முன்னே நடமாடுகிறார்கள். கிழக்கிலங்கை இஸ்லாமியப் பண்பாட்டை மிகவும் நுட்பமாகக் கதைகளில் …

மக்கத்துச் சால்வை Read More »

பால்சாக்கின் காதல்.

பிப்ரவரி 1832 இல் எழுத்தாளர் பால்சாக் (Honore de Balzac) முகவரிக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. அது உக்ரேனின் ஒடேஸாவிலிருந்து எழுதப்பட்ட கடிதம். எழுதியவர் பெயர் முகவரி எதுவுமில்லை. ஆனால் அக் கடிதம் பால்சாக்கின் படைப்புகளைக் கோபமாக விமர்சனம் செய்திருந்தது. குறிப்பாக அவரது La Peau de chagrin நாவலின் பெண் கதாபாத்திரம் பற்றி எதிர்மறையான விமர்சனத்தை வைத்திருந்தது. யார் எழுதியது என்று தெரியவில்லை. அந்நியர் என்று மட்டுமே கையெழுத்து இடப்பட்டிருந்தது. ஆனால் அதை எழுதியது ஒரு …

பால்சாக்கின் காதல். Read More »

டால்ஸ்டாய் கேட்கிறார்.

மாஸ்கோவில் பிச்சைக்காரர்களைச் சந்திக்காமல் ஒரு தெருவைக் கடந்து செல்ல முடியாது, நகரத்துப் பிச்சைக்காரர்கள் கிராமப்புற பிச்சைக்காரர்களைப் போல இயேசு உருவம் பதித்த துணிப்பை வைத்திருப்பதில்லை. தனது தொப்பியைக் கழற்றி நம்முன்னால் நீட்டி பிச்சை கேட்கிறார்கள். நாம் காசு தரவில்லை என்றால் அலட்சியமாகப் பார்த்தபடியே கடந்து போய்விடுகிறார்கள் என்கிறார் லியோ டால்ஸ்டாய். நாட்டுப்புறத்திலிருக்கும் பிச்சைக்காரனுக்கும் நகரத்திலிருக்கும் பிச்சைக்காரனுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன என்பதை லியோ டால்ஸ்டாய் விரிவாக எழுதியிருக்கிறார். இனி நாம் செய்ய வேண்டியது என்ன? என்ற அவரது …

டால்ஸ்டாய் கேட்கிறார். Read More »

கதையில்லாதவன் கதை

மலையாளக் கவிஞர் எம்.என்.பாலூரின் வாழ்க்கை வரலாற்று நூலான கதை இல்லாதவனின் கதையை வாசித்தேன். வியப்பூட்டும் வாழ்க்கை . இந்நூலைச் சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ளது. ஒரு மனிதனின் வாழ்க்கை எப்படித் துவங்கி எங்கே சென்று எப்படி நிலை கொள்ளும் என்று யாராலும் கணிக்கவே முடியாது. பாலூரின் வாழ்க்கை அப்படியானதே. ஒரு நாவலுக்கும் சுயசரிதைக்குமான வேறுபாடாக எதை நினைக்கிறீர்கள் என்று கவிஞர் தேவதச்சன் ஒருமுறை என்னிடம் கேட்டார். நாவலில் வரும் கதாபாத்திரங்களின் போக்கினை, விதியை வாசகனால் ஓரளவு ஊகித்து அறிந்துவிட …

கதையில்லாதவன் கதை Read More »

கண் தெரியாத இசைஞன்

விளாதீமிர் கொரலேன்கோ எழுதிய கண்தெரியாத இசைஞன் ரஷ்ய நாவல்களில் குறிப்பிடத்தக்கது. நாவல் ஒரு குழந்தையின் அழுகையொலியில் துவங்குகிறது. ரஷ்யாவின் தென்மேற்கு பகுதியில் வசித்து வரும் பணக்கார குடும்பம் ஒன்றில் நள்ளிரவில் ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. தாய் மயங்கிய நிலையிலிருக்கிறாள். குழந்தையின் அழுகையொலி கேட்டுக் கண்விழித்து ஏன் இப்படி அழுகிறது எனக்கேட்கிறாள். தாதி பயப்படத் தேவையில்லை என ஆறுதல் சொல்கிறாள். ஆனால் குழந்தையின் அழுகையொலி ஏதோ ஒன்றின் அறிகுறி போலவே இருக்கிறது. குழந்தை வளர ஆரம்பிக்கையில் அதற்குக் …

கண் தெரியாத இசைஞன் Read More »

காதலின் இரவுகள்

ஜப்பானின் ஓனோ நோ கோமாச்சி மற்றும் இசுமி ஷிகிபு என்ற இரண்டு பெண் கவிஞர்களின் காதல் கவிதைகளின் தொகுப்பு நூல் The Ink Dark Moon: Love Poems by Ono no Komachi and Izumi Shikibu அவர்களின் கவிதைகள் பொதுவாக டாங்கா என்ற கவிதை வடிவத்தினைச் சார்ந்தவை. ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியினைச் சேர்ந்தவர் ஓனோ நோ கோமாச்சி. இவரது காதல் உறவு பற்றி நிறையக் கதைகள் இருக்கின்றன. அதில் ஒன்றில் இவர் பேரரசரிற்காகக் காத்திருந்த …

காதலின் இரவுகள் Read More »

ரஷ்யக் குறிப்புகள்.

1830 ஆம் ஆண்டில் காலரா பரவிய காரணத்தால் புஷ்கின் சில மாதங்கள் அவரது குடும்ப எஸ்டேட் போல்டினோவிற்கு இடம்பெயர்ந்தார். தனிமையிலிருந்த அந்த நாட்களைப் புஷ்கின் மிகப் பயனுள்ளதாக மாற்றிக் கொண்டார். அந்த நாட்களை ‘போல்டினோ இலையுதிர் காலம்’ என்று குறிப்பிடப்படுகிறார்கள். அங்கிருந்த போது தான் யூஜின் ஒன்ஜினின் இறுதி அத்தியாயத்தைப் புஷ்கின் எழுதினார். இலையுதிர்காலத்தின் அழகினை ரசித்தபடியே அவர் எழுதுவதும் வாசிப்பதும் நடனமாடுவதுமாக நாட்களைக் கழித்தார். யூஜின் ஒன்ஜின் எழுதுவதற்கு எட்டு ஆண்டுகளைச் செலவிட்டார் புஷ்கின் (1799-1837) …

ரஷ்யக் குறிப்புகள். Read More »

தந்தையும் தாயும்.

புகழ்பெற்ற இந்திய ஆங்கில எழுத்தாளரான வேத் மேத்தா எழுதிய Mamaji, Daddyji என்ற இரண்டு புத்தகங்களை வாசித்தேன். இது அவரது சுயசரிதை. சாந்தி மேத்தா மற்றும் அமோலக் ராம் மேத்தா என்ற அவரது தாய் தந்தை இருவரைப் பற்றிய வாழ்க்கை சரித்திரமாக எழுதப்பட்டிருக்கிறது. வேத் மேத்தா 1934 லாகூரில் பிறந்தவர். பஞ்சாபி. மூன்று வயதில் ஏற்பட்ட மூளைக்காய்ச்சல் காரணமாகக் கண் பார்வையை இழந்தவர். ஆனாலும் மனம் தளராமல் பம்பாயில் உள்ள பார்வையற்றோருக்கான தாதர் பள்ளியில் சேர்ந்து படித்தார். …

தந்தையும் தாயும். Read More »