துறவியின் காதல்
ஹெர்மன் ஹெஸ்ஸேயின் சித்தார்த்தா நாவல் ஒரு இளைஞன் வீட்டிலிருந்து வெளியேறி துறவு வாழ்க்கையை நோக்கிப் போவதை விவரிக்கிறது. ஞானத்தைத் தேடும் சித்தார்த்தன் முடிவில் அதை எப்படி அடைகிறான் என்பதை ஹெஸ்ஸே அழகாக விவரித்திருக்கிறார். சித்தார்த்தா நாவலின் மறுபக்கம் போன்றதே நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளரான அனடோல் பிரான்ஸ்(anatole france) எழுதிய தாயிஸ் (THAIS) இந்நாவலை தாசியும் தபசியும் என்ற தலைப்பில் எஸ். சங்கரன் மொழி பெயர்த்திருக்கிறார். தபசி என்ற சொல்லை இன்று எவரும் பயன்படுத்துவதில்லை. தவம் …