கவிஞனின் நாட்குறிப்பு.
A.K.Ramanujan – Journeys – A Poet’s Diary என்ற புத்தகத்தை வாசித்தேன். இந்நூலைப் படிக்க வேண்டும் என்று விரும்பியதற்கு முதற்காரணம் ஏ.கே ராமானுஜன் சில காலம் மதுரையிலுள்ள தியாகராசர் கலைக்கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக வேலை செய்திருக்கிறார் என்பதே. 1951ல் அவர் மதுரைக்கு வேலைக்கு வந்திருக்கிறார். 50களின் மதுரையைப் பற்றியும் தனது பணிக்கால அனுபவங்களையும் எழுதியிருக்கிறார் என்ற குறிப்பை ஆங்கில நாளிதழில் வாசித்தேன். அதுவே இந்நூலை வாசிக்கத் தூண்டியது. ஏ.கே ராமானுஜன் சிறந்த கவிஞர்.கட்டுரையாளர். நாட்டுப்புறவியல் ஆய்வாளர்.மொழிபெயர்ப்பாளர். …