இலக்கியம்

மய்யழிக் கரையோரம்.

ஞாயிற்றுகிழமை மாலை மாஹி போயிருந்தேன். மய்யழி ஆற்றின் கரையிலுள்ள அழகான ஊர். கேரளாவினுள் இருந்தாலும் புதுச்சேரி யூனியனுடன் இணைந்த பகுதி. இங்கே தான் எழுத்தாளர் எம். முகுந்தன் வசிக்கிறார். அவர் பிரெஞ்சு தூதரகத்தில் உயரதிகாரியாகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர். முகுந்தனின் புகழ்பெற்ற நாவல் மய்யழிக் கரையோரம். இந் நாவலின் 30 முக்கிய நிகழ்வுகளை மாஹியிலுள்ள ஒரு பூங்காவில் புடைப்புச் சிற்பமாகச் செய்து வைத்திருக்கிறார்கள். அதைக் காணுவதற்காகவே சென்றிருந்தேன். மய்யழிக் கரையோரம் நாவல் பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த மாஹியின் கதையில் …

மய்யழிக் கரையோரம். Read More »

101 கடிதங்கள்.

கனேடிய எழுத்தாளர் யான் மார்டெல் (yann martel) அந்நாட்டின் பிரதமர் ஸ்டீபன் ஹார்பருக்கு இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை ஒரு புத்தகத்தைப் பரிசாக அனுப்பி வைத்திருக்கிறார். இந்தப் புத்தகங்களுடன் இதை ஏன் படிக்க வேண்டும் என்பது குறித்த கடிதம் ஒன்றையும் இணைத்து அனுப்பியிருக்கிறார். அவர் அனுப்பிய கடிதங்களில் அந்த நூலின் எழுத்தாளர் பற்றியும், அப் புத்தகம் எவ்வளவு முக்கியமானது என்பது பற்றியும் சுருக்கமாக எடுத்துச் சொல்கிறார். ஒரு நாட்டின் பிரதமர் என்ன புத்தகங்களை வாசிக்கிறார், எந்தப் புத்தகங்கள் …

101 கடிதங்கள். Read More »

இன்னொரு நேர்காணல்

FIRST CITY டெல்லியிலிருந்து வெளியாகும் சுயாதீன கலை மற்றும் கலாச்சார இதழாகும், 19 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிவந்து கொண்டிருக்கிறது THE FIRST CITY இதழ் பாரீஸ் ரிவ்யூ போலவே தொடர்ந்து எழுத்தாளர்கள், ஒவியர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் பல்துறை ஆளுமைகளின் நேர்காணல்களை வெளியிட்டு வருகிறது. இந்த நேர்காணல்கள் தொகுக்கப்பட்டு THE FIRST CITY INTERVIEWS VOLUME 1 -6 வரை வெளியாகியுள்ளன. இதில் vol 5 தொகுதி ஓவியம் மற்றும் சிற்பக்கலைஞர்களின் நேர்காணல்கள் மட்டுமே கொண்டது. இந்தத் தொகுதி …

இன்னொரு நேர்காணல் Read More »

நினைவின் உரையாடல்

ஐசக் பாஷவிஸ் சிங்கர் (Isaac Bashevis Singer,) நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர். இவர் இட்டிஷ் இலக்கிய இயக்கத்தின் முதன்மை எழுத்தாளராவார். 1978-ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றார். அவரது விரிவான நேர்காணல் கொண்ட Conversations with Isaac Bashevis Singer தொகுப்பினை வாசித்தேன். எழுத்தாளராக விரும்புகிறவர்களுக்கு இந்த நேர்காணல் நல்லதொரு வழிகாட்டி. எதை எழுத வேண்டும். எப்படி எழுத வேண்டும். எழுத்தின் நுட்பங்கள் எவையெனச் சிங்கர் விரிவாக விளக்குகிறார். கூடவே இலக்கிய வாசிப்பின் முக்கியத்துவம் …

நினைவின் உரையாடல் Read More »

தி பாரீஸ் ரிவ்யூ

1953ல் The Paris Review இதழ் துவக்கப்பட்டதிலிருந்து தொடர்ச்சியாக எழுத்தாளர்களின் நேர்காணல்களை வெளியிட்டு வருகிறது. இந்த நேர்காணல்கள் The Paris Review Interviews என 9 தொகுதிகளாக இதுவரை வெளியாகியுள்ளன. நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்கள் பலரின் நேர்காணல்கள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. எழுத்தாளனின் அகத்தை விரிவாக வெளிப்படுத்தும் இந்த நேர்காணல்கள் செறிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த நேர்காணல்கள் தொகுதி வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் ஒரு பைபிள் என்று சொல்கிறார்கள். அது வெறும் வார்த்தையில்லை. உண்மை. எழுதும் முறை …

தி பாரீஸ் ரிவ்யூ Read More »

வாசிப்பெனும் கலை

வாசிப்பது என்பது பலருக்குப் பொழுதுபோக்கு, சிலருக்கு அது ஒரு கலை என எழுத்தாளர் ஜுலியன் பார்ன்ஸ் ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார். மிகச் சரியான வாக்கியமது. புத்தகங்களின் எதிர்காலம் பற்றிய பயம் பலருக்குமிருக்கிறது. வாசிப்பது குறைந்து வருவதால் அச்சு புத்தகங்கள் வெளியாவது குறைந்துவிடும் என நினைக்கிறார்கள். அது உண்மையில்லை. மின் புத்தகங்களின் வருகையால் புதிய வாசகர்கள் உருவாகியிருக்கிறார்களே அன்றி அச்சுப் புத்தகங்களுக்கான தேவையும் அதன் வாசகர்களும் இருந்து கொண்டேயிருப்பார்கள். மின் புத்தகத்தின் விலை குறைவு என்பதே அதன் மீதான …

வாசிப்பெனும் கலை Read More »

காதல் என்ற சொல்

மதுரையிலுள்ள  சித்திரவீதிக்காரன் எனது புதிய நாவலுக்கு எழுதியுள்ள விமர்சனம். •• தூரம் காதலைக் கொல்கிறது. தூரமின்மையும்கூட. அலர் காதலைக் கொல்கிறது. சில சமயம் ஏதுமின்றியே காதல் சாகிறது. காஹா சத்தசஈ எஸ்.ராமகிருஷ்ணனின் பத்தாவது நாவலான ‘ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை’ மதுரை புத்தகத் திருவிழாவில் வெளியானது. எஸ்.ரா.வின் நாவல்கள் உப பாண்டவம் தொடங்கி பதின் வரை எல்லா நாவல்களையும் வாசித்திருக்கிறேன். ஒவ்வொன்றும் தனித்துவமானவை. காதலை மையங்கொண்ட நாவல்களில் ‘ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை’க்கும் தனியிடம் …

காதல் என்ற சொல் Read More »

அஷ்டமூர்த்தியின் கடைசி சிற்பம்

அஷ்டமூர்த்தி மலையாளத்தின் மிக முக்கியமான சிறுகதையாசிரியர். எழுத்தாளர். இவரது கடைசி சிற்பம் என்ற சிறுகதைத் தொகுப்பு தமிழில் சிதம்பரம் ரவிச்சந்திரன் மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளது. புதுப்புனல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. பஷீர் துவங்கி அசோகன் செருவில் வரை மலையாளத்தின் முக்கிய சிறுகதையாசிரியர்கள் பலரும் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கென வாசகர் வட்டமே தமிழில் உருவாகியுள்ளது. சமகால மலையாள சிறுகதைகளின் போக்கினையும் எழுத்துமுறையையும் அறிந்து கொள்வதில் தமிழ் எழுத்தாளர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். அஷ்டமூர்த்தியின் கதைகள் தமிழுக்குப் புதுவரவாக உள்ளது மகிழ்ச்சி …

அஷ்டமூர்த்தியின் கடைசி சிற்பம் Read More »

கவிஞனின் நாட்குறிப்பு.

A.K.Ramanujan – Journeys – A Poet’s Diary என்ற புத்தகத்தை வாசித்தேன். இந்நூலைப் படிக்க வேண்டும் என்று விரும்பியதற்கு முதற்காரணம் ஏ.கே ராமானுஜன் சில காலம் மதுரையிலுள்ள தியாகராசர் கலைக்கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக வேலை செய்திருக்கிறார் என்பதே. 1951ல் அவர் மதுரைக்கு வேலைக்கு வந்திருக்கிறார். 50களின் மதுரையைப் பற்றியும் தனது பணிக்கால அனுபவங்களையும் எழுதியிருக்கிறார் என்ற குறிப்பை ஆங்கில நாளிதழில் வாசித்தேன். அதுவே இந்நூலை வாசிக்கத் தூண்டியது. ஏ.கே ராமானுஜன் சிறந்த கவிஞர்.கட்டுரையாளர். நாட்டுப்புறவியல் ஆய்வாளர்.மொழிபெயர்ப்பாளர். …

கவிஞனின் நாட்குறிப்பு. Read More »

ஆர்வெலின் வாழ்க்கை

George Orwell: A Life in Pictures என்ற பிபிசி தயாரித்துள்ள ஆவணப்படத்தைப் பார்த்தேன். ஜார்ஜ் ஆர்வெல் இங்கிலாந்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்.  Big Brother is watching you என்ற இவரது வாசகம் கண்காணிப்பு அரசியல் குறித்த உரையாடல்களில்  சுட்டிக்காட்டப்படும் பிரபலமான மேற்கோளாகும். பிபிசி ஆவணப்படங்கள் பெரிதும் மரபான பாணியைக் கொண்டவை. ஆனால் இந்த ஆவணப்படம் அதிலிருந்து மாறுபட்ட விதத்தில் உருவாக்கபட்டிருக்கிறது.  ஆர்வெலின் ஆளுமையை முழுமையாக உணர்ந்து கொள்ளும் வண்ணம் உருவாக்கபட்டிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆர்வெல் இந்தியாவில் …

ஆர்வெலின் வாழ்க்கை Read More »