இலக்கியம்

கவிஞனின் நாட்குறிப்பு.

A.K.Ramanujan – Journeys – A Poet’s Diary என்ற புத்தகத்தை வாசித்தேன். இந்நூலைப் படிக்க வேண்டும் என்று விரும்பியதற்கு முதற்காரணம் ஏ.கே ராமானுஜன் சில காலம் மதுரையிலுள்ள தியாகராசர் கலைக்கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக வேலை செய்திருக்கிறார் என்பதே. 1951ல் அவர் மதுரைக்கு வேலைக்கு வந்திருக்கிறார். 50களின் மதுரையைப் பற்றியும் தனது பணிக்கால அனுபவங்களையும் எழுதியிருக்கிறார் என்ற குறிப்பை ஆங்கில நாளிதழில் வாசித்தேன். அதுவே இந்நூலை வாசிக்கத் தூண்டியது. ஏ.கே ராமானுஜன் சிறந்த கவிஞர்.கட்டுரையாளர். நாட்டுப்புறவியல் ஆய்வாளர்.மொழிபெயர்ப்பாளர். …

கவிஞனின் நாட்குறிப்பு. Read More »

ஆர்வெலின் வாழ்க்கை

George Orwell: A Life in Pictures என்ற பிபிசி தயாரித்துள்ள ஆவணப்படத்தைப் பார்த்தேன். ஜார்ஜ் ஆர்வெல் இங்கிலாந்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்.  Big Brother is watching you என்ற இவரது வாசகம் கண்காணிப்பு அரசியல் குறித்த உரையாடல்களில்  சுட்டிக்காட்டப்படும் பிரபலமான மேற்கோளாகும். பிபிசி ஆவணப்படங்கள் பெரிதும் மரபான பாணியைக் கொண்டவை. ஆனால் இந்த ஆவணப்படம் அதிலிருந்து மாறுபட்ட விதத்தில் உருவாக்கபட்டிருக்கிறது.  ஆர்வெலின் ஆளுமையை முழுமையாக உணர்ந்து கொள்ளும் வண்ணம் உருவாக்கபட்டிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆர்வெல் இந்தியாவில் …

ஆர்வெலின் வாழ்க்கை Read More »

பரிபூர்ண மனம் மீதான பாடல்கள்

கவிஞர் ஷங்கர் ராமசுப்ரமணியன் தனது வலைப்பக்கத்தில் ஷின் ஷின் மிங் எனப்படும் ஜென் கவிதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார். சிறப்பான மொழியாக்கமது. ** பரிபூர்ண மனம் மீதான பாடல்கள் தமிழில் : ஷங்கர்ராமசுப்ரமணியன் ஷின் ஷின் மிங் என்னும் இந்தப் பாடல், ஜென் குருவான சோசன் அவர்களால் ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. ஜென்னின் தெளிவான அனைத்துக் கருத்துகளையும் உள்ளடக்கிய அறிக்கையாக இது கருதப்படுகிறது. ஷின் ஷின் மிங்-க்கு “பரிபூர்ண மனம் மீதான பாடல்கள்” என்று இதன் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் …

பரிபூர்ண மனம் மீதான பாடல்கள் Read More »

கசாக்கின் நினைவில்.

சமீபத்தில் கேரளா சென்றிருந்த போது பாலக்காட்டினை அடுத்துள்ள தர்ஸக் கிராமத்தில் உருவாக்கப்பட்டுள்ள எழுத்தாளர் ஒ.வி. விஜயன் நினைவகத்திற்குச் சென்றிருந்தேன். சின்னஞ்சிறிய பசுமையான கிராமம். அந்த ஊரினை மையமாகக் கொண்டு தான் விஜயன் தனது புகழ்பெற்ற கசாக்கின் இதிகாசம் நாவலை எழுதியிருக்கிறார். அந்த நினைவைக் கொண்டாடும் விதத்தில் நாவலின் முக்கியக் கதாபாத்திரங்களைச் சிற்பங்களாகவும் ஒவியமாகவும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். ஊரின் நுழைவாயிலில் வழியம்பலம் என நாவலில் ரவி வந்து இறங்குமிடம் அழகான வளைவு கொண்டதாக உருவாக்கப்பட்டிருக்கிறது மலையாள இலக்கியத்தின் தனிப்பெரும் …

கசாக்கின் நினைவில். Read More »

ரகசியத்தின் தோட்டம்.

ஷங்கர் ராமசுப்ரமணியனின் புதிய கவிதைத்தொகுப்பு கல் முதலை ஆமைகள் க்ரியா பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. சமீபத்தில் நான் வாசித்த மிகச்சிறந்த கவிதைத் தொகுப்பு இதுவென்பேன்.. சமகால உலகக் கவிதைகளின் வரிசையில் வைத்துக் கொண்டாட வேண்டிய தொகுப்பிது.. 110 பக்கங்கள் கொண்ட சிறிய கவிதைநூல். மூன்று நாட்களாகக் கையில் வைத்து வைத்துப் படித்துக் கொண்டேயிருக்கிறேன். அற்புதம், அற்புதம் என மனம் அரற்றிக் கொண்டேயிருக்கிறது. ஒரு கவிஞனாக ஷங்கர் ராம சுப்ரமணியன் தனது கவித்துவ உச்சத்தைத் தொட்டிருக்கிறார்.. பாஷோவின், ழாக் …

ரகசியத்தின் தோட்டம். Read More »

ஸீபால்ட் சிறப்பிதழ்

சொல்வனம் இணைய இதழ் இங்கிலாந்தில் வசிக்கும் ஜெர்மானிய எழுத்தாளரான டபில்யூ.ஜீ. ஸீபால்ட் குறித்துச் சிறப்பிதழ் ஒன்றை உருவாக்கியுள்ளது. அரிய கட்டுரைகள், அறிமுகத்துடன் ஸீபால்ட் குறித்த விரிவான பார்வையைத் தரும் விதமாக சிறப்பிதழ் உருவாக்கப்பட்டுள்ளது. சொல்வனம் ஆசிரியர் குழுவினருக்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள். இதழின் முக்கியக் கட்டுரைகளை எழுதியிருப்பவர் நம்பி கிருஷ்ணன். இவரது கட்டுரைகளை நான் விரும்பி வாசிப்பவன். இந்த இதழில் இவர் ஸீபால்ட் பற்றி எழுதியுள்ளதையும் மொழியாக்கம் செய்திருப்பதையும் வாசித்த போது பிரமிப்பு ஏற்பட்டது. எவ்வளவு …

ஸீபால்ட் சிறப்பிதழ் Read More »

எழுத்தின் தோழமை.

மார்க்ரெட் அட்வுட் பற்றிய ஆவணப்படம் ஒன்றைப் பார்த்தேன். Margaret Atwood: Once in August என்ற இந்த ஆவணப்படத்தை இயக்கியிருப்பவர் மைக்கேல் ரபோ. 1984ல் வெளியானது மைக்கேல் ரபோ எழுதும் கடிதம் ஒன்றின் மூலம் ஆவணப்படம் துவங்குகிறது. கனேடிய எழுத்தாளர்கள் பலரையும் பற்றி ஆவணப்பபடம் எடுத்துவரும் தான் அட்வுட் பற்றிய ஆவணப்படம் ஒன்றை உருவாக்க விரும்புவதாகவும் அது அவரைப் பிரேதப் பரிசோதனை போலக் கூறுபோடுவதாக ஒரு போதுமிருக்காது. அவர் விரும்புகிறபடி, விரும்பும் இடத்தில் படப்பிடிப்பு நடத்தப்படும். அவரது …

எழுத்தின் தோழமை. Read More »

ஜெங்கியின் கடைசிக்காதல்

மார்கெரித் யூர்ஸ்னார் புகழ்பெற்ற பிரெஞ்சு பெண் எழுத்தாளர். இவரது கீழை நாட்டுக் கதைகள் என்ற சிறுகதைத் தொகுப்பை க்ரியா பதிப்பகம் 2006ல் வெளியிட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட சிறுகதைத் தொகுப்புகளில் இதுவே தலைசிறந்தது என்று சொல்வேன். நேரடியாகப் பிரெஞ்சு மொழியிலிருந்து வெ. ஸ்ரீராம், எஸ், ஜனகநந்தினி, மனிஷா நாராயண், துர்கா சங்கர் ஆகியோர் சிறுகதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். ழான் போல் சார்தர், சிமோன் தெ போவார், ஆல்பெர் காம்யூ ஆகியோரின் சமகால எழுத்தாளர் …

ஜெங்கியின் கடைசிக்காதல் Read More »

தேவமலர்

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஸெல்மா லாகர் லெவ்வின் சிறந்த குறுநாவலான தேவமலரை தமிழில் க.நா.சு மொழியாக்கம் செய்திருக்கிறார். இது ஸ்காணடிநேவிய இலக்கியத்தின் புகழ்பெற்ற படைப்பு. தேவமலர் எனக்கு மிகவும் பிடித்தமான குறுநாவல். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தேவமலர் பற்றி விரிவான உரை ஒன்றையும் நிகழ்த்தியிருக்கிறேன். தற்போது தேசாந்திரி பதிப்பகம் தேவமலர் மற்றும்  கதைகள் என நான்கு முக்கியக் கதைகளை ஒரு தொகுப்பாகக் கொண்டுவந்துள்ளது. தேவமலர் மற்றும் கதைகள் தமிழில். க.நா.சு ரூ 150 தொடர்புக்கு தேசாந்திரி …

தேவமலர் Read More »

ரியோக்கன் கவிதைகள்

தஸ்தாயெவ்ஸ்கியின் புத்தக சாலை என்ற இணையதளம் ஒன்றை உருவாக்கி தொடர்ந்து எழுதி வருகிறார் சர்வோத்தமன் சடகோபன் தஸ்தாயெவ்ஸ்கி பற்றி மிகச்சிறப்பான கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.  மிக ஆழமான பார்வை கொண்ட கட்டுரைகள் இவரது கட்டுரைகளை விரும்பிப் படிப்பேன். ரஷ்ய இலக்கியங்களின் மீது தீவிர விருப்பம் கொண்டவர் சர்வோத்தமன் . தஸ்தாயெவ்ஸ்கி பற்றி இவர் எழுதிய கட்டுரைகள் தனித்து நூலாக்க வேண்டியவை. இவரது இணையதளத்தில் ஜப்பானிய கவியான ட்டய்கு ரியோக்கன் கவிதைகளை தொடர்ந்து மொழியாக்கம் செய்து வருகிறார். அதில் எனக்கு …

ரியோக்கன் கவிதைகள் Read More »