இலக்கியம்

கவிதையின் கையசைப்பு

விகடன் தடம் இதழில் சமகால உலகக் கவிதைகள் குறித்த புதிய பத்தி ஒன்றை துவங்கியுள்ளேன் கவிதையின் கையசைப்பு என்ற அந்தப் பத்தி இந்த இதழில் துவங்கியுள்ளது ஜப்பானின் புகழ்பெற்ற கவிஞன் டகுபுகு பற்றிய அறிமுகம்.

சிறுநாவல்கள்

நண்பர் வேலூர் லிங்கம் சிறந்த வாசிப்பாளர். தான் வாசித்த நூல்களைப் பற்றி அடிக்கடி தொலைபேசியில் பேசி மகிழ்வார். இன்று காலை பேசிக்கொண்டிருக்கும் தடிதடியாக ஆயிரம் பக்கங்களுக்கு மேலுள்ள மொழியாக்க நாவல்களைப் பலராலும் படிக்க முடியவில்லை. நூறு இருநூறு பக்கங்களுக்குள் உள்ள சிறிய வெளிநாட்டு நாவல்கள் நிறைய உள்ளன. அவற்றைப் பற்றி நீங்கள்  விரிவாக கட்டுரைகள் எழுதலாமே எனச் சொன்னார் மறுவாசிப்பு செய்துவிட்டு அவசியம் எழுதுகிறேன் என்றேன். அதற்கு முன்னதாக வாசிக்க வேண்டிய சிறுநாவல்களின் பட்டியலை வெளியிடுங்கள். அது …

சிறுநாவல்கள் Read More »

சொற்களின் தோகை

அனார் எனக்குப் பிடித்தமான கவிஞர். சூபி கவிதையுலகின் நவீன வடிவம் போன்றவை அவரது கவிதைகள். பெண் மனத்தின் ஆழ்தவிப்புகளை, மகிழ்ச்சியை, துயரை வெளிப்படுத்துகின்றன அவரது கவிதைகள். அனார் கிழக்கிலங்கையின் சாய்ந்த மருதுவில் வசித்துவருகிறார். சமகால தமிழ் கவிஞர்களில் மிக முக்கியமானவர். நான்கு கவிதை தொகுதிகளை வெளியிட்டிருக்கிறார். ஜின்னின் இரு தோகை கவிதைநூலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது அனாரின் கவிதைகள் அன்றாட வாழ்விலிருந்து தாவிப் பறப்பவை. அவர் புறஉலகின் நிகழ்வுகளை விடவும் அகவுலகின் தத்தளிப்புகளை, எழுச்சிகளையே அதிகம் எழுதுகிறார். …

சொற்களின் தோகை Read More »

கிரேசியா டெலடா

நோபல்பரிசு பெற்ற பெண் எழுத்தாளர் கிரேசியா டெலடா (Grazia Deledda.) இத்தாலியைச் சேர்ந்த இவர் ஐம்பதுக்கும் அதிகமான நாவல்களை எழுதியிருக்கிறார். இவரது The Mother என்ற நாவலை தி.ஜானகிராமன் மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார். மிக அற்புதமான நாவல். பாதிரியாக உள்ள தனது மகன் பால் ஒரு இளம்பெண்ணுடன் பழகுவதைத் தாங்கிக் கொள்ள முடியாத அன்னையின் தவிப்பே நாவல். கைம்பெண்ணாகப் பல ஆண்டுகள் வாழ்ந்த அந்த அன்னை, பால் மதகுருவாகப் பணியேற்றதும் மதகுருவின் தாய் என்ற புனித அடையாளத்தைப் பெறுகிறாள். …

கிரேசியா டெலடா Read More »

அம்ரிதா ஏயெம்

ஈழத் தமிழ் சிறுகதையுலகில் தனிக்குரலாக ஒலிப்பவர் அம்ரிதா ஏயெம். விலங்குகள் தொகுதி ஒன்று அல்லது விலங்கு நடத்தைகள் என்ற இவரது சிறுகதை தொகுப்பை எழுத்தாளர் எஸ்.எல்.எம். ஹனீபா இலங்கை சென்றிருந்த போது கொடுத்து வாசிக்கச் சொன்னார். விமானத்தில் திரும்பி வரும் போது ஒன்றிரண்டு கதைகளை வாசித்தேன். பின்பு தொகுப்பை எங்கோ வைத்துவிட்டுக் காணாமல் தேடிக் கொண்டிருந்தேன். நேற்று  வேறு ஒன்றை தேடிக் கொண்டிருக்கையில் அந்தச் சிறுகதை தொகுப்பு கையில் அகப்பட்டது. உடனே வாசித்து முடித்தேன். அம்ரிதா ஏயெம் இருபத்தைந்து …

அம்ரிதா ஏயெம் Read More »

வாழ்த்துகள்

உலகப் புத்தக தினத்தைக் கொண்டாடும் அனைவருக்கும் மனம் நிரம்பிய வாழ்த்துகள். •• இன்று   A russian Childhood  என்ற நூலை வாசித்தேன். தஸ்தாயெவ்ஸ்கி காலத்தை சேர்ந்த Sofya Kovalevskaya  என்ற இளம்பெண் தான் எழுதிய சிறுகதையை தஸ்தாயெவ்ஸ்கி படிக்க வேண்டும் என்பதற்காக தபாலில் அனுப்பி வைத்திருக்கிறார். ஒரு இளம் எழுத்தாளரின் கதையை படித்து தேவையான ஆலோசனைகளை சொல்லி உற்சாகப்படுத்தியிருக்கிறார்தஸ்தாயெவ்ஸ்கி. பின்பு அந்த பெண் அவரைத் தேடி வந்து நேரில் சந்தித்து உரையாடியிருக்கிறார். அவர்கள் சந்திப்பு எப்படியிருந்தது. தஸ்தாயெவ்ஸ்கி …

வாழ்த்துகள் Read More »

போர்ஹே

பறவையியல் விவாதம் —– ஹோர்ஹே லூயி போர்ஹே நான் கண்களை மூடியபோது ஒரு பறவைக் கூட்டத்தைக் கண்டேன். ஒரு விநாடி அல்லது அதற்கும் குறைவான நேரமே அந்தக் காட்சி இருந்தது. எத்தனைப் பறவைகளைப் பார்த்தேன் எனத் தெரியவில்லை. அந்த எண்ணிக்கை அறுதியானதா? அறுதியற்றதா? இந்த சிக்கல் கடவுள் உள்ளாரா? இல்லையா என்பதோடு தொடர்புடையது. கடவுள் இருந்தால் இந்த எண்ணிக்கை அறுதியானது. ஏனெனில் நான் எவ்வளவு பறவைகளைப் பார்த்திருப்பேன் எனத் தெரியும் அவருக்கு. கடவுள் இல்லை என்றால் எண்ணிக்கையும் …

போர்ஹே Read More »

நதிமுகம் தேடி

நைல் உலகின் மிக நீளமான ஆறு தான்சானியா, உகாண்டா, ருவாண்டா, புரூண்டி, காங்கோ, கென்யா, எத்தியோபியா, எரிட்ரியா, தெற்கு சூடான், சூடான், எகிப்து ஆகிய பதினோரு நாடுகளின் வழியாகப் பாய்ந்து மத்தியதரைக்கடலில் கலக்கின்றது. எகிப்து மற்றும் சூடான் ஆகியவை நைல் ஆற்றால் அதிகம் பயனடைகின்றன நைல்  நதி வெள்ளை நைல், நீல நைல் என்ற இரண்டாகப்  பிரியக்கூடியது. வடகிழக்கு ஆப்ரிக்காவில் இது தொடங்குகிறது. இரண்டில் வெள்ளை நைல் தான் மிக நீளமானது. இந்த நதி ருவாண்டா, புரூண்டி, …

நதிமுகம் தேடி Read More »

உலக ஞானம் ஒரு நூலில்!

தி இந்து நாளிதழில் பிரபஞ்சன் எழுதி வரும்  எமதுள்ளம் சுடர்விடுக பத்தியில் நான் ஆற்றிய உலக இலக்கியப் பேருரைகளின் தொகுப்பு நூல் பற்றி சிறப்பாக எழுதியிருக்கிறார். பிரபஞ்சன் அவர்களுக்கு அன்பும் நன்றியும் •• உலக இலக்கியப் பெரும் ஆளுமைகள் பற்றித் தமிழ்ச் சூழலில் ஆக்கபூர்வமாக அறிமுகப்படுத்தும் பெரும் பணியில் பல காலமாக ஈடுபட்டு வருபவர் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். அண்மையில் அவர் நிகழ்த்திய இலக்கியப் பேராசான் டால்ஸ்டாய், ஷேக்ஸ்பியர், ஹோமர், ஹெமிங்வே, பாஷோ, அரேபிய இரவுகள், தஸ்தாயெவ்ஸ்கி ஆகியோர் …

உலக ஞானம் ஒரு நூலில்! Read More »

நிலவொளியின் பாடல்கள்

தமிழில் ஜப்பானிய இலக்கியம் அறிமுகமான அளவிற்குச் சீன இலக்கியம் அறிமுகமாகவில்லை. ஜென் கவிதைகள். ஹைக்கூ கவிதைகள் தமிழில் அதிகம் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டிருக்கின்றன. ஜென் கவிதைகள் குறித்து நான் கூழாங்கற்கள் பாடுகின்றன என்ற கட்டுரை தொகுதி ஒன்றை எழுதியிருக்கிறேன். அதில் பாஷோ, ரியோகான் என முக்கியமான ஜென் கவிஞர்களின் கவிதையுலகை அறிமுகம் செய்திருக்கிறேன். பாஷோவின் கவிதையுலகம் பற்றி விரிவான உரையொன்றையும் சென்னையில் நிகழ்த்தியிருக்கிறேன். அது தற்போது டிவிடியாகவும் கிடைக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பாக வாரிச்சூடினும் பார்ப்பவரில்லை என்ற பயணியின் …

நிலவொளியின் பாடல்கள் Read More »