இலக்கியம்

சிறிய கடிதம்.

லியோ டால்ஸ்டாய் தன் வாழ்நாளில் நிறையக் கடிதங்கள் எழுதியிருக்கிறார்.  அவர் எழுதிய கடிதங்கள் தனி நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன. டால்ஸ்டாய் எழுதிய மிகச்சிறிய கடிதம் சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. அது Fedorov என்ற மாணவனுக்கு எழுதப்பட்ட கடிதம். டால்ஸ்டாயின் போரும் அமைதியும் நாவலின் முக்கியக் கதாபாத்திரமான Natasha Rostovaவின் பெயரிலுள்ள Rostovaவை எப்படி உச்சரிக்க வேண்டும் எனக்கேட்டு அந்த மாணவன் கடிதம் எழுதியிருக்கிறான். அதில்“O”. என்ற எழுத்தை அழுத்தமாக உச்சரிக்க வேண்டும் என்ற தொனியில் “RostOva. L. T.” என …

சிறிய கடிதம். Read More »

தெற்கு நெடுஞ்சாலை

கதை எழுதுவதற்கான கருப்பொருள் என்பது அரிதான, அபூர்வமான, அல்லது விசித்திரமான நிகழ்வாகவோ, விஷயமாகவே இருக்க வேண்டும் என்று இளம் எழுத்தாளர்கள் பலரும் நினைக்கிறார்கள். எந்த ஒரு நிகழ்வையும் அழுத்தமான கலைப்படைப்பாக உருவாக்கிவிட முடியும். அது எழுத்தாளனின் படைப்பாற்றல் சார்ந்த விஷயம். லத்தீன் அமெரிக்கச் சிறுகதையாசிரியர்களில் ஹுலியோ கோர்தஸார் வித்தியாசமான எழுத்தாளர். அவரது சிறுகதைகள் புனைவின் புதிய எல்லைகளைத் தொடுகின்றன. அடர்த்தியான மொழியும் சிதறடிக்கப்பட்ட கதை சொல்லல் முறையிலும் தொன்மத்தை மீள்வுருவாக்கம் செய்வதிலும், கனவுத்தன்மை கொண்ட நிகழ்வுகளைச் சித்தரிப்பதிலும் …

தெற்கு நெடுஞ்சாலை Read More »

மார்க்வெஸின் வாழ்க்கை

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான கேப்ரியல் கார்சியா மார்க்வெஸின் வாழ்க்கை வரலாறு நான்கு வேறுபட்ட எழுத்தாளர்களால் எழுதப்பட்டிருக்கிறது, SUSAN MUADD DARRAJ, PELAYO RUBEN, GERALD MARTIN, ILAN STAVANS ஆகிய நால்வரில் ஜெரால்ட் மார்ட்டின் எழுதிய வாழ்க்கை வரலாறே அதிகாரப்பூர்வமானது. 642 பக்கங்கள் கொண்ட விரிவான புத்தகம். மார்க்வெஸ் தனது வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதியை Living to Tell the Tale என்று வெளியிட்டிருக்கிறார். அந்த நூல் முழுமையானதில்லை. அதன் இரண்டாவது பகுதி வெளியாகும் …

மார்க்வெஸின் வாழ்க்கை Read More »

காலத்தைச் செதுக்குபவர்கள் 2.0

ராம் முரளி திரைப்படத்துறையில் பணியாற்றி வரும் இளைஞர். உலகச் சினிமாவின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். சிறந்த மொழிபெயர்ப்பாளர். சமகால உலகச் சினிமாவின் முதன்மை இயக்குநர்கள் பலரது நேர்காணல்களையும் மொழிபெயர்த்திருக்கிறார். இவரது காலத்தைச் செதுக்குபவர்கள் என்ற முதல்நூல் கவனத்திற்குரியது. தற்போது அதன் இரண்டாவது தொகுதியாகக் காலத்தைச் செதுக்குபவர்கள் 2.0 என்ற நூலை வெளியிட்டிருக்கிறார். ஜீவகரிகாலனின் யாவரும் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது. ராம் முரளியின் ரசனை மிகவும் நுட்பமானது. புகழ்பெற்ற இயக்குநர்களின் முக்கியமான கட்டுரைகளை நேர்காணல்களைத் தேடி வாசித்து …

காலத்தைச் செதுக்குபவர்கள் 2.0 Read More »

தாய்மொழி.

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஐசக் பாஷவிஸ் சிங்கர் (Isaac Bashevis Singer) கதை ஒன்றில் ஒரு வீட்டில் திருடு போய்விடுகிறது. இதை அறிந்தவுடன் அந்த வீட்டுக்காரப் பெண் இட்டிஷ் மொழியில் கத்துகிறாள். இட்டிஷ் அவளது தாய்மொழி. ஆனால் அதை அவர்கள் கைவிட்டு ஆங்கிலம் பேச ஆரம்பித்துப் பல காலமாகிறது. திருட்டு போனவுடன் தன்னை அறியாமல் அவள் தாய் மொழியில் புலம்புகிறாள். இது போன்ற சம்பவம் ஒன்று ஜே. கிருஷ்ணமூர்த்தி வாழ்க்கை வரலாற்று நூலிலும் இடம் பெற்றிருக்கிறது. …

தாய்மொழி. Read More »

இந்த இவள்

தனது 96வது வயதில் கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ராஜநாராயணன் எழுதியிருக்கும் புதிய குறுநாவல் இந்த இவள்.  காலச்சுவடு வெளியீடாக வந்துள்ளது. புகைப்படக்கலைஞர் இளவேனிலின் அன்பிற்காகவே இக்குறுநாவலை எழுதித் தந்ததாக கிரா குறிப்பிடுகிறார். பலருக்கும் முதுமையில் நினைவாற்றல் போய்விடுகிறது. சிலருக்கோ கைநடுக்கம், பார்வைக்குறைவு. படுக்கையிலே கிடக்கும் நிலை. ஆனால் கரிசலின் வேம்பைப் போல உறுதியாக இருப்பவர் கி. ராஜநாராயணன். ஜப்பானிய ஒவியர் ஹொகுசாய் தனது ஒவியத்திறமை முதுமையில் தான் முழுமையடைந்திருக்கிறது என்று குறிப்பிடுகிறார். கிராவின் குறுநாவலும் அத்தகையதே. இந்த …

இந்த இவள் Read More »

துணிவின் பாடகன்

நேற்று இயக்குநர் ராஜு முருகனின் ஜிப்சி பட ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டேன். இந்தியாவின் சமகால அரசியல் பிரச்சனைகளைத் தொட்டுப் பேசும் படமாக ஜிப்சி உருவாக்கபட்டிருக்கிறது. இந்த ஆடியோ விழாவில் பஞ்சாபைச் சேர்ந்த பாந்த் சிங் என்ற பாடகரைப் பற்றிய புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டது. தேனிசை செல்லப்பா அவர்கள் வெளியிட நூலை நான் பெற்றுக் கொண்டேன். துணிவின் பாடகன் பாந்த் சிங் என்ற நூலை மொழியாக்கம் செய்திருப்பவர் கமலாலயன். ராஜு முருகனின் காம்ரேட் டாக்கீஸ் நூலை …

துணிவின் பாடகன் Read More »

மௌனத்தை மீட்டுகிறவன்.

“Every silence contains music in a state of gestation.” – Mia Couto கேப்ரியல் கார்சியா மார்க்வெஸின் தனிமையின் நூறு ஆண்டுகள் நாவல் வெளியான போது அதன் விசித்திர கதைசொல்லும் முறைக்காக மிகவும் கொண்டாடப்பட்டது. மேஜிகல் ரியலிசம் என்ற புதிய எழுத்துமுறையின் உன்னதமாக அந்நாவல் கருதப்பட்டது. தற்போது அப்படி நாவல் உலகில் தனது மாய எழுத்துமுறையால் தனிப்பெரும் ஆளுமையாகக் கொண்டாடப்படுகிறவர் மொசாம்பிக்கைச் சேர்ந்த மியா கௌட்டோ ( Mia Couto) இவர் ஒரு கவிஞர், …

மௌனத்தை மீட்டுகிறவன். Read More »

வாழ்த்துகள் போகன் சங்கர்

எழுத்தாளர் போகன் சங்கருக்குக் கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருது அறிவிக்கப்பட்டுள்ளது . சிறிய எண்கள் உறங்கும் அறை  என்ற கவிதைத் தொகுப்பு இந்த விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதே தொகுப்பு 2018ம் ஆண்டிற்கான கவிஞர் ஆத்மாநாம் விருதும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. போகன் சங்கருக்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகள். உரைநடையில் வண்ணநிலவனிடம் காணப்படும் கிறிஸ்துவ உலகம், தூய அன்புக்கான ஏக்கம், தன்னிருப்பு தொடர்பான இடையுறாத கேள்விகள் போகனின் கவிதை உலகிலும் வெளிப்படுகின்றன. போகனின் கவிதைகள் தனித்துவமான …

வாழ்த்துகள் போகன் சங்கர் Read More »

வீட்டிற்குள்ளிருந்து சில குரல்கள்

(சொல்வனம் இணையஇதழ் எழுத்தாளர் அம்பை அவர்களைக் கொண்டாடும் விதமாக சிறப்பிதழை வெளியிட்டுள்ளது. மிகச்சிறப்பான முறையில் அம்பையின் படைப்புலகம் பற்றிய கட்டுரைகளுடன், நேர்காணலுடன் இதழ் தயாரிக்கபட்டுள்ளது. அந்த இதழில் வெளியான எனது கட்டுரை.) அம்பையின் கதையொன்றில் பன்றி பேசுகிறது. அதுவும் கறாரான தொனியில் மனிதர்கள் தங்களைக் குரூரமாகக் கொல்வதையும், விலங்குகளைக் கொண்டு நீதிக்கதைகள் சொல்ல வைக்கும் அபத்தத்தையும் பற்றி பன்றி கண்டிப்புடன் பேசுகிறது. அது ஒரு பெண்பன்றி. இருபது குட்டிகள் போட்ட பன்றி. சாக்கடையில் வசிக்கிறது. பாரதியார் தனது …

வீட்டிற்குள்ளிருந்து சில குரல்கள் Read More »