தோப்பில் எனும் காலத்தின் குரல்.
தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் இஸ்லாமியர்களை உரிமையோடு மாமா என்று தான் அழைப்பார்கள். பதிலுக்கு அவர்களும் மாப்பிள்ளை என்று அழைப்பார்கள். தோப்பில் முகமது மீரான் அவர்களைச் சந்திக்கும் போதெல்லாம் நான் மாமா என்றே அழைப்பேன். அதைக் கேட்கும் போது அவரது முகத்தில் சொல்ல முடியாத சந்தோஷம் வெளிப்படும். அந்த மாமா இன்றில்லை என்பது தாள முடியாத துயரமே. கேரளாவில் வாழும் இஸ்லாமியர்களின் வாழ்க்கையைச் சிறப்பாக எழுத்தில் பதிவு செய்தவர்களாக வைக்கம் முகமது பஷீரையும் புனத்தில் குஞ்ஞப்துல்லாவையும் குறிப்பிடுகிறார்கள். இருவரது படைப்புகளும் …