இலக்கியம்

தோப்பில் எனும் காலத்தின் குரல்.

தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் இஸ்லாமியர்களை உரிமையோடு மாமா என்று தான் அழைப்பார்கள். பதிலுக்கு அவர்களும் மாப்பிள்ளை என்று  அழைப்பார்கள். தோப்பில் முகமது மீரான் அவர்களைச் சந்திக்கும் போதெல்லாம் நான் மாமா என்றே அழைப்பேன். அதைக் கேட்கும் போது அவரது முகத்தில் சொல்ல முடியாத சந்தோஷம் வெளிப்படும். அந்த மாமா இன்றில்லை என்பது தாள முடியாத துயரமே. கேரளாவில் வாழும் இஸ்லாமியர்களின் வாழ்க்கையைச் சிறப்பாக எழுத்தில் பதிவு செய்தவர்களாக வைக்கம் முகமது பஷீரையும் புனத்தில் குஞ்ஞப்துல்லாவையும் குறிப்பிடுகிறார்கள். இருவரது படைப்புகளும் …

தோப்பில் எனும் காலத்தின் குரல். Read More »

தஸ்தாயெவ்ஸ்கியின் நாட்குறிப்பு.

கடந்த சில ஆண்டுகளாகத் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகின்றன. சென்னைப் புத்தகக் கண்காட்சியில் டால்ஸ்டாய் மற்றும் தஸ்தாயெவ்ஸ்கியின் நூல்கள் அதிகம் விற்பனையாகியுள்ளன. நான் கல்லூரியில் படிக்கும் நாட்களில் தஸ்தாயெவ்ஸ்கியின் ஒரேயொரு சிறுகதைத் தொகுப்பு வெண்ணிற இரவுகள் மட்டுமே தமிழில் வாசிக்கக் கிடைத்தது. மற்ற நாவல்களை, குறுநாவல்களை, சிறுகதைகளை ஆங்கிலம் வழியாகவே வாசித்தேன். இன்று என்னிடம் தஸ்தாயெவ்ஸ்கி எழுதிய எல்லா நூல்களும் இருக்கின்றன. இதில் The Brothers Karamazov நாவல் ஐந்து வேறுபட்ட …

தஸ்தாயெவ்ஸ்கியின் நாட்குறிப்பு. Read More »

பரிந்துரைகள்

பரிந்துரை – 1 ஆன்டன் செகாவ் சிறுகதைகள் பத்துக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பாளர்களால் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. அவற்றில் மிகச்சிறந்த தொகுப்பாக Selected Stories of Anton Chekhov -, Richard Pevear &, Larissa Volokhonsky என்ற மொழியாக்கத்தைச் சொல்வேன். இதில் 28 சிறுகதைகள் உள்ளன. வேறு ஆங்கில மொழிபெயர்ப்புகளுடன் ஒப்பிட்டு இக்கதைகளை வாசிக்கும் போது இதன் தரமும் கவித்துவமும் சிறப்பாகப் புலப்படுகின்றன. செகாவ் கதைகளில் பெரிய திருப்பங்கள், எதிர்பாராத அம்சங்கள் கிடையாது. இம்பிரஷனிச ஒவியங்களைப் …

பரிந்துரைகள் Read More »

வாசிப்பின் நுழைவாயில்.

அனைவருக்கும் இனிய புத்தக  தின நாள் வாழ்த்துகள் புத்தக வாசிப்பு குறித்த கவனமும் செயல்பாடுகளும் கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்ச் சூழலில் தீவிரமாக நடந்து வருகின்றன. வாசகசாலை போன்ற அமைப்புகள் இதற்கு முக்கியக் காரணம். அவர்களுக்கு இந்தத் தருணத்தில் எனது மனம் நிரம்பிய பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்திலுள்ள மாவட்ட நூலகங்கள் அத்தனையிலும் வாசகர்கள் சந்திப்பு நடைபெறுகிறது என்பது மிகுந்த மகிழ்ச்சி தரும் செய்தி. வேறு எந்த மாநிலத்திலும் இது போன்று புத்தக வாசிப்பு ஒரு இயக்கமாகச் …

வாசிப்பின் நுழைவாயில். Read More »

எழுத்தாளனின் உலகம்

THE FRAGRANCE OF GUAVA கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்ஸின் விரிவான நேர்காணல் தொகுப்பு. 120 பக்கங்கள் கொண்டது. கொலம்பிய பத்திரிக்கையாளர் Plinio Apuleyo Mendoza எடுத்த நேர்காணலது. மார்க்வெஸ் நோபல் பரிசு பெறுவதற்கு முன்பாக எடுக்கப்பட்டது. இதில் தான் எவ்வாறு எழுத்தாளராக உருவானேன் என்பதில் துவங்கி தனது நம்பிக்கைகள். எழுத்துமுறை, நட்பு. குடும்பம். அரசியல் என மார்க்வெஸ் விரிவாக உரையாடியிருக்கிறார். நான் அடிக்கடி வாசிக்கும் நூலிது. இதன் சில பகுதிகள் தமிழில் வெளியாகியுள்ளன. நோபல் பரிசு பெற்ற …

எழுத்தாளனின் உலகம் Read More »

நேர நெறிமுறை நிலையம்

நேர நெறிமுறை நிலையம் என்ற துருக்கி நாவல் நான்கு ஆண்டுகளின் முன்பாக வெளியாகியுள்ளது. காலச்சுவடு பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது. துருக்கியின் மிக முக்கிய எழுத்தாளரான அகமத் ஹம்தி தன்பினார் எழுதிய நாவலிது. தன்பினாரின் மொழியும் கதை சொல்லும் விதமும் அபாரம். தமிழில் எத்திராஜ் அகிலன் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். எத்திராஜ் அகிலன் நான் பெரிதும் மதிக்கும் மொழிபெயர்ப்பாளர். மிகச்சிரத்தையாக, நுட்பமாக, மூலத்திற்கு மிகவும் நெருக்கமாக மொழியாக்கம் செய்யக்கூடியவர். இந்நாவல் அவரது மொழிபெயர்ப்பின் சாதனை என்றே சொல்வேன். தன்பினார் …

நேர நெறிமுறை நிலையம் Read More »

நான் தஸ்தாயெவ்ஸ்கி

தஸ்தாயெவ்ஸ்கியைப் பற்றி மூன்று நாடகங்களை நான் எழுதியிருக்கிறேன். ஒன்று பாண்டிச்சேரி பல்கலைக்கழக நாடகத்துறையில் முருகபூபதி பயிலும் போது அவரது தயாரிப்பிற்காக notes from underground குறுநாவலை மையமாகக் கொண்டு மரணவீட்டின் குறிப்புகள் என்ற நாடகத்தை எழுதித் தந்தேன். அது பல்கலைக்கழக வளாகத்திலே நாடகமாக நிகழ்த்தப்பட்டது. பின்பு தஸ்தாயெவ்ஸ்கியின் காதலை முதன்மைப்படுத்தி தஸ்தாயெவ்ஸ்கியின் சங்கீதம் என்ற பெயரில் நாடகம் எழுதினேன். அதுவும் சென்னையில் மேடையேற்றப்பட்டது. தியேட்டர் லேப் நாடகக்குழுவின் ஜெயராவ் விருப்பத்திற்காகத் தஸ்தாயெவ்ஸ்கி வாழ்க்கையைப் பற்றிய நாடகத்தை எழுதிக் …

நான் தஸ்தாயெவ்ஸ்கி Read More »

பஷீரின் நாடகம்

நேற்று புதுவைப் பல்கலைக்கழக நாடகத்துறை சார்பாக நடைபெற்ற  வைக்கம் முகமது பஷீரின் மூன்று சீட்டுக்காரனின் மகள் சிறுகதையைத் தழுவிய வை ராஜா வை என்ற நாடகம் பார்க்கப் போயிருந்தேன். நண்பரும் நடிகருமான சுகுமார் இந்த நாடகம் குறித்துத் தெரிவித்திருந்தார். புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்தினுள்ளே அரங்கை உருவாக்கியிருந்தார்கள். ஒரு மரத்தடி அதைச் சுற்றி அரங்க அமைப்பு.  ஏராளமான மாணவர்கள் நாடகம் பார்க்க வந்திருந்தார்கள். பஷீரே தனது கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி நாடகத்தைத் துவக்கி வைப்பது போல அமைத்திருந்தார்கள். வைக்கம் முகமது …

பஷீரின் நாடகம் Read More »

இரண்டு நகரங்கள்

டால்ஸ்டாயின் அன்னாகரீனினா நாவலை விவாதிப்பதற்கென நிறையக் குழுமங்கள் இணையத்தில் இருக்கின்றன. அப்படி ஒரு குழுமத்தில் பகிரப்பட்ட கட்டுரை ஒன்றை சமீபத்தில் வாசித்தேன். அது அன்னாகரீனினா மாஸ்கோவில் வாழ்ந்திருந்தால் இப்படி நடந்து கொண்டிருக்க மாட்டாள் அவள் வாழ்க்கை வேறுவிதமாக அமைந்திருக்கும் என்று கூறி மாஸ்கோ, பீட்டர்ஸ்பெர்க் இரண்டு நகரங்களுக்குமான வேறுபாட்டை, அதன் வாழ்க்கை முறையைக் கொண்டு நாவலின் மையத்தை புதிய கோணத்தில் அணுகுகிறது. அன்னாகரீனினா நாவல் 1878ல் வெளியான நாள் முதல் இன்று வரை தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. …

இரண்டு நகரங்கள் Read More »

சிங்கிஸ் ஐத்மாத்தவ்

கிர்கிஸ்தான் சோவியத் குடியரசில் ஒன்றாக இருந்த நாடு. இதன் வடக்கில்  இந்நாட்டின் வடக்கில் கசக்கிஸ்தான், மேற்கில் உஸ்பெகிஸ்தான், தென்மேற்கில் தஜிகிஸ்தான், மற்றும் கிழக்கில் சீன மக்கள் குடியரசு ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. கிர்கிஸ்தானின் தேசிய படைப்பாளியாக கொண்டாடப்படுகிறவர் சிங்கிஸ் ஐத்மாத்தவ். இவரது நாவல்களில் குல்சாரி, முதல் ஆசிரியர், ஜமீலா, சிவப்புத் தலைக்குட்டையணிந்த பாப்ளார் மரக்கன்று, ஒட்டகக் கண் போன்றவை தமிழில் வெளியாகியுள்ளன. சிங்கிஸ் ஐத்மாத்தவ்(Chinghiz Aitmatov) மிகச்சிறந்த படைப்பாளி.  இவரது நாவல்கள் யாவும் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளன. தங்கள் …

சிங்கிஸ் ஐத்மாத்தவ் Read More »