இதாலோ செவோ
பாதசாரியின் காசி குறுநாவலை வாசித்த போது அதில் இதாலோ செவோ (Italo Svevo ) பற்றி முதல்முதலாக அறிந்து கொண்டேன். பாதசாரி சிறந்த நவீன கவிஞர். அவரது காசி குறுநாவல் குறிப்பிடத்தக்கவொன்று. மீனுக்குள் கடல் என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். கோவையில் வசிக்கிறார். அந்த குறுநாவல் வெளியாகி இருபது ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் இன்றும் அது குறித்து தீவிரஇலக்கியப் பரிச்சயம் கொண்டவர்கள் பேசிக் கொண்டுதானிருக்கிறார்கள். பாதசாரி இதாலோ செவோவின் Confessions of Zeno நாவலை வாசித்திருக்கிறார். அந்த நாவலை …