கண்ணீர் சிந்தும் சிறுவர்கள்.
மனிதனின் நிர்கதியான நிலையைப் பதிவு செய்வதில் சங்க இலக்கியம் முன்னோடியாக உள்ளது. ஒரு மனிதன் நிர்கதியான நிலையில் தான் கடவுளை நம்பத்துவங்குகிறான். சகமனிதர்களை நோக்கிக் கைகூப்புகிறான். கருணையை வேண்டுகிறான். நிர்கதியின் போது உலகம் சிறியதாகிவிடுகிறது. காலமும் சூழலும் தான் நிர்கதியை உருவாக்குகிறது. போரில் வென்ற பின்பு மலையமானின் இரண்டுபிள்ளைகளை யானைக்காலில் இட்டு மிதிக்கச் சொல்லி ஆணையிடுகிறான் சோழன் குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். அந்தக் கொடுஞ்செயலை எதிர்த்து கோவூர் கிழார் என்ற கவிஞர் ஒரு பாடலை எழுதியிருக்கிறார். …