இலக்கியம்

கண்ணீர் சிந்தும் சிறுவர்கள்.

மனிதனின் நிர்கதியான நிலையைப் பதிவு செய்வதில் சங்க இலக்கியம் முன்னோடியாக உள்ளது. ஒரு மனிதன் நிர்கதியான நிலையில் தான் கடவுளை நம்பத்துவங்குகிறான். சகமனிதர்களை நோக்கிக் கைகூப்புகிறான். கருணையை வேண்டுகிறான். நிர்கதியின் போது உலகம் சிறியதாகிவிடுகிறது. காலமும் சூழலும் தான் நிர்கதியை உருவாக்குகிறது. போரில் வென்ற பின்பு மலையமானின் இரண்டுபிள்ளைகளை யானைக்காலில் இட்டு மிதிக்கச் சொல்லி ஆணையிடுகிறான் சோழன் குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். அந்தக் கொடுஞ்செயலை எதிர்த்து கோவூர் கிழார் என்ற கவிஞர் ஒரு பாடலை எழுதியிருக்கிறார்.  …

கண்ணீர் சிந்தும் சிறுவர்கள். Read More »

ரே பிராட்பெரியின் நேர்காணல்கள்.

ஒரு புத்தகத்தை வாசிக்கையில் அது எழுப்பும் நினைவுகளே அதன் மீதான விருப்பத்தை உருவாக்குகின்றன. நேற்று ரே பிராட்பெரியின் (Ray Bradbury) நேர்காணல்கள் அடங்கிய தொகுப்பை வாசித்துக் கொண்டிருந்தேன். ரே பிராட்பெரி எனது விருப்பத்திற்குரிய எழுத்தாளர். அவரது நேர்காணல்களின் வழியே அவரது புனைவின் பின்புலத்தையும், அவர் எழுத்தாளராக உருவான சூழலையும் புரிந்து கொள்ள முடிந்தது. உலகெங்கும் எழுத்தாளர்கள் ஒன்று போலத் தான் உருவாகிறார்கள் போலும். பிராட்பெரியின் நேர்காணல்களில் வெளிப்படும் கேலியும் கிண்டலுமான பதில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. புதிதாக …

ரே பிராட்பெரியின் நேர்காணல்கள். Read More »

துயில் : ஒரு பார்வை

டாக்டர் ராமானுஜம் •• துயில்: நோய்மையின் வரலாற்று, உளவியல் பதிவு மனிதனுக்கு நேரும் சிக்கல்களிலேயே அவன் மிகவும் அஞ்சுவது நோய்க்குத்தான். வேறு எதையும் விட அவனால் தாங்கமுடியாதது மர்மங்களை.மற்ற பிரச்சனைகளைத் தீர்க்க முடியாவிட்டாலும் ஏன் வந்தது என்ற காரணத்தையாவது அறிந்திருப்பான்.ஆனால் நோய் வந்தவுடன் அவன் மருத்துவரிடம் கேட்கும் முதல் கேள்வி ‘இது ஏன் வந்தது’ என்பதுதான்ஆனால் பெரும்பாலான நோய்கள் ஏன் வந்தன,அதிலும் தனக்கு மட்டும் ஏன் வந்தது என்ற கேள்விக்கு விடை தெரியாமலிருப்பது அவனால் தாங்கிக் கொள்ள …

துயில் : ஒரு பார்வை Read More »

வைதீஸ்வரனின் கவிதைகள்

எஸ். வைதீஸ்வரன் நவீன தமிழ் கவிதையின் முக்கிய ஆளுமை. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கவிதைகள் எழுதி வருபவர்.. சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து’ பத்திரிகையில் கவிதை எழுதத் தொடங்கியவர். இவரது கவிதைகள் ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் பிரெஞ்சு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது மொத்த கவிதைகளின் தொகுப்பான மனக்குருவி வாசித்துக் கொண்டிருந்தேன். நகரவாழ்வின் நெருக்கடியை, தடித்தனத்தை, அவலத்தை, ஆறாத் துயரங்களை, அரிதான சந்தோஷங்களைக் கவிதையில் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். வைதீஸ்வரன் ஒரு ஒவியர். முறையாக ஒவியர் கற்றவர். ஒவியர் என்பதால் …

வைதீஸ்வரனின் கவிதைகள் Read More »

இடக்கை -விமர்சனம்

மரணத்துக்கு முன் உன் வாழ்வை திரும்பி பார் பவா. செல்லதுரை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய, ‘இடக்கை’ என்ற நாவலை சமீபத்தில் படித்தேன். உயிர்மை பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. அவுரங்கசீப் பற்றிய நாவல் என உணர்ந்தாலும், அதையும் தாண்டி பல்வேறு விஷயங்கள் இந்நாவலில் உள்ளன. ஒரு பேரரசனின் எழுச்சியும், வீழ்ச்சியும், எப்படி ஒரு சாமானியனோடு தொடர்பு கொள்கிறது என்பதை நாவல் சொல்கிறது. ஒரு நாவலை படிக்க எடுத்தோம், ஒரே நேரத்தில் படித்து முடித்தோம் என, ‘இடக்கை’ நாவலை படித்துவிட …

இடக்கை -விமர்சனம் Read More »

புதிய சிறுகதை – மீறல்

சமீபத்தில் எழுதிய புதிய சிறுகதை. அச்சில் வராதது. •• மீறல் சுகந்தி பேருந்தை விட்டு இறங்கிய போது கோயம்பேட்டில் லேசான தூறலாக இருந்தது. இரவில் நல்ல மழை பெய்திருக்க வேண்டும். சாரலோடு ஒரு ஆட்டோ பிடித்துத் தனது தோழி கல்பனாவின் அறையைத் தேடிப் போனாள். கல்பனாவின் கணவன் துபாய் சென்றபிறகு அவள் வீட்டை காலி செய்துவிட்டு தன்னோடு வேலை பார்க்கும் மிதிலாவின் அபார்ட்மெண்டிற்கு மாறி விட்டாள். பெங்களுரில் இரவு புறப்பட்ட போது போனின் சார்ஜ் குறைந்து கொண்டுவந்தது. …

புதிய சிறுகதை – மீறல் Read More »

கவிதையின் கையசைப்பு

விகடன் தடம் இதழில் சமகால உலகக் கவிதைகள் குறித்த புதிய பத்தி ஒன்றை துவங்கியுள்ளேன் கவிதையின் கையசைப்பு என்ற அந்தப் பத்தி இந்த இதழில் துவங்கியுள்ளது ஜப்பானின் புகழ்பெற்ற கவிஞன் டகுபுகு பற்றிய அறிமுகம்.

சிறுநாவல்கள்

நண்பர் வேலூர் லிங்கம் சிறந்த வாசிப்பாளர். தான் வாசித்த நூல்களைப் பற்றி அடிக்கடி தொலைபேசியில் பேசி மகிழ்வார். இன்று காலை பேசிக்கொண்டிருக்கும் தடிதடியாக ஆயிரம் பக்கங்களுக்கு மேலுள்ள மொழியாக்க நாவல்களைப் பலராலும் படிக்க முடியவில்லை. நூறு இருநூறு பக்கங்களுக்குள் உள்ள சிறிய வெளிநாட்டு நாவல்கள் நிறைய உள்ளன. அவற்றைப் பற்றி நீங்கள்  விரிவாக கட்டுரைகள் எழுதலாமே எனச் சொன்னார் மறுவாசிப்பு செய்துவிட்டு அவசியம் எழுதுகிறேன் என்றேன். அதற்கு முன்னதாக வாசிக்க வேண்டிய சிறுநாவல்களின் பட்டியலை வெளியிடுங்கள். அது …

சிறுநாவல்கள் Read More »

சொற்களின் தோகை

அனார் எனக்குப் பிடித்தமான கவிஞர். சூபி கவிதையுலகின் நவீன வடிவம் போன்றவை அவரது கவிதைகள். பெண் மனத்தின் ஆழ்தவிப்புகளை, மகிழ்ச்சியை, துயரை வெளிப்படுத்துகின்றன அவரது கவிதைகள். அனார் கிழக்கிலங்கையின் சாய்ந்த மருதுவில் வசித்துவருகிறார். சமகால தமிழ் கவிஞர்களில் மிக முக்கியமானவர். நான்கு கவிதை தொகுதிகளை வெளியிட்டிருக்கிறார். ஜின்னின் இரு தோகை கவிதைநூலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது அனாரின் கவிதைகள் அன்றாட வாழ்விலிருந்து தாவிப் பறப்பவை. அவர் புறஉலகின் நிகழ்வுகளை விடவும் அகவுலகின் தத்தளிப்புகளை, எழுச்சிகளையே அதிகம் எழுதுகிறார். …

சொற்களின் தோகை Read More »

கிரேசியா டெலடா

நோபல்பரிசு பெற்ற பெண் எழுத்தாளர் கிரேசியா டெலடா (Grazia Deledda.) இத்தாலியைச் சேர்ந்த இவர் ஐம்பதுக்கும் அதிகமான நாவல்களை எழுதியிருக்கிறார். இவரது The Mother என்ற நாவலை தி.ஜானகிராமன் மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார். மிக அற்புதமான நாவல். பாதிரியாக உள்ள தனது மகன் பால் ஒரு இளம்பெண்ணுடன் பழகுவதைத் தாங்கிக் கொள்ள முடியாத அன்னையின் தவிப்பே நாவல். கைம்பெண்ணாகப் பல ஆண்டுகள் வாழ்ந்த அந்த அன்னை, பால் மதகுருவாகப் பணியேற்றதும் மதகுருவின் தாய் என்ற புனித அடையாளத்தைப் பெறுகிறாள். …

கிரேசியா டெலடா Read More »