இலக்கியம்

அம்ரிதா ஏயெம்

ஈழத் தமிழ் சிறுகதையுலகில் தனிக்குரலாக ஒலிப்பவர் அம்ரிதா ஏயெம். விலங்குகள் தொகுதி ஒன்று அல்லது விலங்கு நடத்தைகள் என்ற இவரது சிறுகதை தொகுப்பை எழுத்தாளர் எஸ்.எல்.எம். ஹனீபா இலங்கை சென்றிருந்த போது கொடுத்து வாசிக்கச் சொன்னார். விமானத்தில் திரும்பி வரும் போது ஒன்றிரண்டு கதைகளை வாசித்தேன். பின்பு தொகுப்பை எங்கோ வைத்துவிட்டுக் காணாமல் தேடிக் கொண்டிருந்தேன். நேற்று  வேறு ஒன்றை தேடிக் கொண்டிருக்கையில் அந்தச் சிறுகதை தொகுப்பு கையில் அகப்பட்டது. உடனே வாசித்து முடித்தேன். அம்ரிதா ஏயெம் இருபத்தைந்து …

அம்ரிதா ஏயெம் Read More »

வாழ்த்துகள்

உலகப் புத்தக தினத்தைக் கொண்டாடும் அனைவருக்கும் மனம் நிரம்பிய வாழ்த்துகள். •• இன்று   A russian Childhood  என்ற நூலை வாசித்தேன். தஸ்தாயெவ்ஸ்கி காலத்தை சேர்ந்த Sofya Kovalevskaya  என்ற இளம்பெண் தான் எழுதிய சிறுகதையை தஸ்தாயெவ்ஸ்கி படிக்க வேண்டும் என்பதற்காக தபாலில் அனுப்பி வைத்திருக்கிறார். ஒரு இளம் எழுத்தாளரின் கதையை படித்து தேவையான ஆலோசனைகளை சொல்லி உற்சாகப்படுத்தியிருக்கிறார்தஸ்தாயெவ்ஸ்கி. பின்பு அந்த பெண் அவரைத் தேடி வந்து நேரில் சந்தித்து உரையாடியிருக்கிறார். அவர்கள் சந்திப்பு எப்படியிருந்தது. தஸ்தாயெவ்ஸ்கி …

வாழ்த்துகள் Read More »

போர்ஹே

பறவையியல் விவாதம் —– ஹோர்ஹே லூயி போர்ஹே நான் கண்களை மூடியபோது ஒரு பறவைக் கூட்டத்தைக் கண்டேன். ஒரு விநாடி அல்லது அதற்கும் குறைவான நேரமே அந்தக் காட்சி இருந்தது. எத்தனைப் பறவைகளைப் பார்த்தேன் எனத் தெரியவில்லை. அந்த எண்ணிக்கை அறுதியானதா? அறுதியற்றதா? இந்த சிக்கல் கடவுள் உள்ளாரா? இல்லையா என்பதோடு தொடர்புடையது. கடவுள் இருந்தால் இந்த எண்ணிக்கை அறுதியானது. ஏனெனில் நான் எவ்வளவு பறவைகளைப் பார்த்திருப்பேன் எனத் தெரியும் அவருக்கு. கடவுள் இல்லை என்றால் எண்ணிக்கையும் …

போர்ஹே Read More »

நதிமுகம் தேடி

நைல் உலகின் மிக நீளமான ஆறு தான்சானியா, உகாண்டா, ருவாண்டா, புரூண்டி, காங்கோ, கென்யா, எத்தியோபியா, எரிட்ரியா, தெற்கு சூடான், சூடான், எகிப்து ஆகிய பதினோரு நாடுகளின் வழியாகப் பாய்ந்து மத்தியதரைக்கடலில் கலக்கின்றது. எகிப்து மற்றும் சூடான் ஆகியவை நைல் ஆற்றால் அதிகம் பயனடைகின்றன நைல்  நதி வெள்ளை நைல், நீல நைல் என்ற இரண்டாகப்  பிரியக்கூடியது. வடகிழக்கு ஆப்ரிக்காவில் இது தொடங்குகிறது. இரண்டில் வெள்ளை நைல் தான் மிக நீளமானது. இந்த நதி ருவாண்டா, புரூண்டி, …

நதிமுகம் தேடி Read More »

உலக ஞானம் ஒரு நூலில்!

தி இந்து நாளிதழில் பிரபஞ்சன் எழுதி வரும்  எமதுள்ளம் சுடர்விடுக பத்தியில் நான் ஆற்றிய உலக இலக்கியப் பேருரைகளின் தொகுப்பு நூல் பற்றி சிறப்பாக எழுதியிருக்கிறார். பிரபஞ்சன் அவர்களுக்கு அன்பும் நன்றியும் •• உலக இலக்கியப் பெரும் ஆளுமைகள் பற்றித் தமிழ்ச் சூழலில் ஆக்கபூர்வமாக அறிமுகப்படுத்தும் பெரும் பணியில் பல காலமாக ஈடுபட்டு வருபவர் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். அண்மையில் அவர் நிகழ்த்திய இலக்கியப் பேராசான் டால்ஸ்டாய், ஷேக்ஸ்பியர், ஹோமர், ஹெமிங்வே, பாஷோ, அரேபிய இரவுகள், தஸ்தாயெவ்ஸ்கி ஆகியோர் …

உலக ஞானம் ஒரு நூலில்! Read More »

நிலவொளியின் பாடல்கள்

தமிழில் ஜப்பானிய இலக்கியம் அறிமுகமான அளவிற்குச் சீன இலக்கியம் அறிமுகமாகவில்லை. ஜென் கவிதைகள். ஹைக்கூ கவிதைகள் தமிழில் அதிகம் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டிருக்கின்றன. ஜென் கவிதைகள் குறித்து நான் கூழாங்கற்கள் பாடுகின்றன என்ற கட்டுரை தொகுதி ஒன்றை எழுதியிருக்கிறேன். அதில் பாஷோ, ரியோகான் என முக்கியமான ஜென் கவிஞர்களின் கவிதையுலகை அறிமுகம் செய்திருக்கிறேன். பாஷோவின் கவிதையுலகம் பற்றி விரிவான உரையொன்றையும் சென்னையில் நிகழ்த்தியிருக்கிறேன். அது தற்போது டிவிடியாகவும் கிடைக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பாக வாரிச்சூடினும் பார்ப்பவரில்லை என்ற பயணியின் …

நிலவொளியின் பாடல்கள் Read More »

டி.எஸ். எலியட்டின் காதல்

கல்லூரி நாட்களில் நோபல் பரிசு பெற்ற கவிஞர் டி.எஸ். எலியட்டின் வேஸ்ட் லேண்ட் கவிதையைப் பாடமாக வாசித்திருக்கிறேன். பின்பு எலியட்டின் (T.S.Eliot) கட்டுரைகளைப் பலமுறை விரும்பி வாசித்திருக்கிறேன். ஆனால் கல்லூரி நாட்களில் ஒரு பேராசியர் கூட எலியட்டின் வாழ்க்கை குறித்தோ, அவருக்கும் எஸ்ரா பவுண்டிற்குமான நட்பு குறித்தோ, யார் வேஸ்ட் லேண்ட் என்ற கவிதையின் தலைப்பை வைத்தவர் என்றோ எதுவும் சொல்லிக் கொடுத்ததில்லை. பாடமாக இலக்கியம் கற்கும் போது மதிப்பெண் மட்டுமே முதன்மையாகி விடுகிறது. ரசித்து ரசித்து …

டி.எஸ். எலியட்டின் காதல் Read More »

கவிதையே வாழ்க்கை.

சையத் மிர்ஸா, இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர். பூனே திரைப்படக்கல்லூரியில் பயின்ற இவர் இந்திய சினிமாவின் நவீன அலை இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர். இவரது வாழ்க்கை மற்றும் திரையுலகப் பங்களிப்பு பற்றிய ஆவணப்படமாக உருவாக்கபட்டுள்ளது Saeed Mirza: The Leftist Sufi. சூபியும் இடது சாரி எண்ணங்களும் கொண்டவர் என்ற தலைப்பே அவரது ஆளுமையின் தனித்துவத்தைக் காட்டுகிறது. இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் என்ற போதும் எவ்விதமான மதக்கட்டுபாடுகளும் இல்லாமல் வளர்க்கபட்டதாக நினைவு கூறுகிறார். இவரது பத்து …

கவிதையே வாழ்க்கை. Read More »

விருது விழா

நேற்று நடைபெற்ற விருதுவழங்கும் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.  சென்னை நகரின் கலைவாணர் அரங்கம் மிகப்பிரம்மாண்டமானது. அதி நவீன வசதிகள் கொண்டது. அந்த அரங்கம் நிரம்பி ஆட்கள் இருக்கையின்றி நின்று கொண்டே நிகழ்ச்சியைக் கண்டார்கள். விழாவில் அத்தனை அரசியல்தலைவர்களும் கலந்து கொண்டது சிறப்பு. நீதியரசர் மகாதேவன், கவிஞர் வைரமுத்து, தமிழருவி மணியன், உள்ளிட்ட பலரும் வந்து கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.  என் வாழ்வின் மறக்க முடியாத நாள். நிகழ்வில் கலந்து கொண்ட வாசகர்கள். பத்திரிக்கையாளர்கள். நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் …

விருது விழா Read More »

நாடற்றவனின் நாட்கள்

Stefan Zweig: Farewell to Europe திரைப்படம் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ஸ்டெபான் ஸ்வேக்கின் அகதி வாழ்க்கையை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது. ஸ்டெபான் ஸ்வேக் (Stefan Zweig). ஆஸ்திரியாவை சேர்ந்த எழுத்தாளர். ஹிட்லரின் நாஜி படைகளால் யூதர்கள் தேடித்தேடி கொலை செய்யப்பட்டார்கள். இந்த இன அழிப்பிலிருந்து உயிர்த்தப்ப முயன்ற எழுத்தாளர்கள். கலைஞர்கள். விஞ்ஞானிகள் பலரும் ஜெர்மனியை விட்டு வெளியேறினார்கள். அப்படி நாட்டை விட்டு வெளியேறி அகதியாக அலைந்து திரிந்தவர் ஸ்வேக். தத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்ற இவர் …

நாடற்றவனின் நாட்கள் Read More »