இலக்கியம்

கலையில் சுழலும் வாழ்க்கை

எஸ்.ராவின் சஞ்சாரம்:  விமர்சனம் – ஏக்நாத் வாழ்க்கை மட்டுமே எல்லாமுமானதாக இருக்கிறது. திசைகளாகவும் காற் றாகவும் மரமாகவும் செடியாகவும் அது மட்டுமே எங்கெங்கும் நிலை கொண் டிருக்கிறது. விரிகிற சிறகுகளை அசைக்கிற பறவையின் ஆனந்தத்தையும் ஒடிந்த சிறகோடு உயிருக்குப் போராடும் அவஸ்தையையும் வாழ்க்கை தந்து கொண்டே இருக்கிறது. அது தரும் மகிழ்ச்சியில் அல்லது அதிர்ச்சியில் நாம் இழுபட்டுக் கொண்டிருக்கிறோம். அதன் பாய்ச்சலில் நீந்தி ஆக வேண்டிய கட் டாயம் நீச்சல் தெரியாதவனுக்கும் இருப்பது துரதிர்ஷ்டம்தான். அந்த துரதிர் …

கலையில் சுழலும் வாழ்க்கை Read More »

ஒளிரும் நினைவுகள்

கும்பகோணத்தில் பிறந்த வளர்ந்த நண்பர்கள் தங்களின் ஊரைப் பற்றியும் அங்கு வாழ்ந்து மறைந்த கலை இலக்கிய ஆளுமைகள் குறித்தும், காவிரி பற்றியும், ஊரின் முக்கிய கோவில்கள்,  விழாக்கள்,  இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள், நூலகங்கள். உணவகங்கள்  பற்றியும் சொல்லித்தீராத நினைவுகளைக் கொண்டிருக்கிறார்கள். எல்லாத் தருணங்களிலும் இவை குறித்து உணர்ச்சிபூர்வமாகப் பகிர்ந்து கொள்கிறார்கள் தேனுகாவைக் கும்பகோணத்தில் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் அவர் கும்பகோணம் குறித்துப் புதிது புதிதாக விஷயங்கள் சொல்லிக் கொண்டேயிருப்பார். தேனுகா அபூர்வமான கலைஞர். இசையையும் ஒவியத்தையும் …

ஒளிரும் நினைவுகள் Read More »

சிரிக்கும் வகுப்பறை

– நூல் விமர்சனம். மதுரை சரவணன். கட்டாய இலவச கல்வி சட்டம் தண்டனை அற்ற வகுப்பறையை உறுதி செய்கின்றது. இருப்பினும் ஆங்காங்கே பள்ளிகளில் மாணவர்கள் தண்டிக்கப்படுவது வாடிக்கையாகி கொண்டு தான் இருக்கின்றது. தேர்வு, அதன் பின் ஒளிந்துள்ள வெற்றி , இவற்றிற்கு இடையேயான போராட்டத்தில் தண்டனை நிச்சயமானதாகிப் போகின்றது.இந்த தண்டனை, மாணவர்களை எப்படி துரத்துகின்றது என்பதை எஸ்.ராமகிருஷ்ணன் தனது சிரிக்கும் வகுப்பறை என்ற நாவலில்  மிக அற்புதமான நாவலை படைத்துள்ளார். தண்டனை முறைகள் குறித்து பேசும் புத்தகங்கள் …

சிரிக்கும் வகுப்பறை Read More »

சஞ்சாரம் விமர்சனம்

– அழகியசிங்கர் சமீபத்தில் நான் படித்த ஒரு நாவல் எஸ் ராமகிருஷ்ணனின் சஞ்சாரம் . 375 பக்கங்கள் கொண்ட இந் நாவலைப் படிக்க சில நாட்கள் ஆயிற்று. ஒரே சமயத்தில் இப்போதெல்லாம் என்னால் ஒரு புத்தகத்தைப் படிக்க முடியவில்லை. இந் நாவல் குறித்து இரண்டு கருத்துகளை அறிய முடிந்தது. இப்புத்தக வெளியீட்டுக் கூட்டத்திற்கு நான் சென்றேன். இந் நாவலைப் பற்றி ராமகிருஷ்ணன் ஒன்று சொன்னார். அவருக்கு இசையைப் பற்றி ஒன்றும் தெரியாதாம். இசையை ரசிப்பது வேறு; இசையைப் …

சஞ்சாரம் விமர்சனம் Read More »

நாயன சஞ்சாரம்

கரிசல்காட்டு காற்றலைகளில் நாயன சஞ்சாரம் மதுரை வாசகன் *** வேறு எந்த வாத்தியத்தைவிடவும் கிராமத்து மக்களுக்கு நாதஸ்வரம் கேட்பதே பிடித்தமானதாக இருக்கிறது. அந்த இசையை, தங்களின் மண்ணின் இசையாகவே விவசாயிகள் நம்பினார்கள். கரிசலின் தொல்நினைவுகளை எல்லாம் நாதஸ்வரம் மீட்டுத் தருவதாகவே கருதினார்கள். -எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.ராமகிருஷ்ணனின் சஞ்சாரம் வாசிக்கையில் பழகிய மனிதர்களோடு நமக்குப் பிடித்த ஊரில் அலைவதைப் போலிருந்தது. சஞ்சாரம் நாவலைக் குறித்து பதிவெழுதத் திண்ணையில் அமர்ந்தபோது காற்றலைகளில் ‘அங்க இடி முழங்குது.. கருப்பசாமி தங்க கலசமின்னுது’ பாடல் …

நாயன சஞ்சாரம் Read More »

விளையாட்டுப் புத்தகங்கள்

ஆறு முதல் பனிரெண்டு வயதுள்ள குழந்தைகள் புத்தகம் படிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்பதற்காக இரண்டு விளையாட்டுப் புத்தகங்களை உருவாக்கியிருக்கிறேன். விளையாட்டுப் புத்தகங்கள் என்றால் என்ன ? வெறுமனே பக்கங்களைப் புரட்டிக் கதையைப் படித்துப் போவதற்குப் பதிலாகக் கதையில் சில சிக்கல்கள், சவால்கள், புதிர்களை இடம்பெறச்செய்து படிப்பவர் தன் கையில் உள்ள பகடையை உருட்டி எந்த எண் விழுகிறதோ அதற்கு ஏற்ப அந்தச் சிக்கலை, சவாலை எதிர் கொண்டு கடப்பதே விளையாட்டுப் புத்தகம் எனப்படுகிறது. ஐரோப்பிய மொழிகளில் …

விளையாட்டுப் புத்தகங்கள் Read More »

புலியின் முன்னால் மன்றாடுகிறவன்

(இரண்டு தினங்களுக்கு முன்பு டெல்லி மிருகக்காட்சி சாலையில் ஒரு மனிதனை புலி அடித்துக் கொன்றுவிட்டது, அந்த சம்பவத்தைக் காணொளியாக ஒரு நண்பர் அனுப்பி பார்க்கச் சொல்லியிருந்தார். நேற்று காலை அதைப் பார்த்த நிமிசத்தில் மனது பாரம் கொண்டுவிட்டது. அப்புலியின் முன்னால் நான் நிற்பதை போலவே உணர்ந்தேன். அந்த மனிதன் புலியின் முன்னால் உயிருக்கு மன்றாடும் காட்சி கண்ணீரை வரவழைத்தது,  அது குறித்த பதிவிது) •••••• அந்த மனிதனின் பெயர் புலிக்குத் தெரியாது, அவன் ஒரு மனிதன், அது …

புலியின் முன்னால் மன்றாடுகிறவன் Read More »

முரகாமியின் தனிமை

‘கார்டியன்’ இதழில் வெளியாகியுள்ள முரகாமியின் நேர்காணலில் இரண்டு விஷயங்கள் எனக்குப் பிடித்திருந்தன. ஒன்று எவ்வளவு காலத்திற்கு இலக்கியம் வாசிக்கபடும் என்ற கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் 5 சதவீதம் பேரே தீவிரமாகப் புத்தகம் படிப்பவர்கள், அவர்கள் டிவியில் உலகப்கோப்பை போட்டிகளோ, சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளோ எது நடந்தாலும் கண்டுகொள்ளாமல் புத்தகம் படித்துக் கொண்டிருப்பார்கள், ஒருவேளை புத்தகம் படிப்பதே தடைசெய்யப்பட்டால் கூட அவர்கள் காட்டிற்குள் சென்று தாங்கள் படித்த புத்தகங்களை நினைவு கொண்டபடியிருப்பார்கள், அவர்கள் மீது நம்பிக்கை வைத்தே …

முரகாமியின் தனிமை Read More »

கனவினைப்பின் தொடர்ந்து

கனவினைப்பின் தொடர்ந்து என்ற குழந்தைகளுக்கான சரித்திர நூலை வாசித்தேன். த.வெ.பத்மா எழுதிய The Forbidden Temple: Stories from the Past நூலை எழுத்தாளர் ஜே. ஷாஜஹான் மொழியாக்கம் செய்திருக்கிறார். எதிர் வெளியீடாக வெளியாகியுள்ளது அமெரிக்காவில் வசிக்கும் த.வெ.பத்மா கணிதம் மற்றும் வரலாறு சார்ந்து குழந்தைகளுக்கான புத்தகங்களை தொடர்ந்து எழுதிவருகிறார்.  இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இவரது MATHEMATWIST: number tales from around the world கணிதம் குறித்த சுவாரஸ்யமான கதைகளின் தொகைநூலாகும். கற்காலத்தில் குழந்தைகள் …

கனவினைப்பின் தொடர்ந்து Read More »