முரகாமியின் தனிமை
‘கார்டியன்’ இதழில் வெளியாகியுள்ள முரகாமியின் நேர்காணலில் இரண்டு விஷயங்கள் எனக்குப் பிடித்திருந்தன. ஒன்று எவ்வளவு காலத்திற்கு இலக்கியம் வாசிக்கபடும் என்ற கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் 5 சதவீதம் பேரே தீவிரமாகப் புத்தகம் படிப்பவர்கள், அவர்கள் டிவியில் உலகப்கோப்பை போட்டிகளோ, சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளோ எது நடந்தாலும் கண்டுகொள்ளாமல் புத்தகம் படித்துக் கொண்டிருப்பார்கள், ஒருவேளை புத்தகம் படிப்பதே தடைசெய்யப்பட்டால் கூட அவர்கள் காட்டிற்குள் சென்று தாங்கள் படித்த புத்தகங்களை நினைவு கொண்டபடியிருப்பார்கள், அவர்கள் மீது நம்பிக்கை வைத்தே …