சிஹாபுதினின் கதைகள்
சமகால மலையாளச் சிறுகதை இலக்கியத்தில் புதியதொரு எழுத்துவகையை உருவாக்கியவர் சிஹாபுதின் பொய்த்தும்கடவு. நாவலாசிரியர், கவிஞர், பத்திரிக்கையாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் இயக்குனர் எனப் பன்முகப்பட்ட ஆளுமை. இவரது பனிரெண்டு சிறுகதைகளின் தொகுப்பாக யாருக்கும் வேண்டாத கண் வெளியாகியுள்ளது. தினசரி வாழ்க்கையைக் கவிதைகள் கையாளுவது போல உருவகத்தளத்திலோ, அரூபமாக்கியோ, பன்முகப்படுத்தியோ சிறுகதைகளாக உருவாக்குகிறார் சிஹாபுதின். இது ஒருவகை மாய யதார்த்த எழுத்து. ஆனால் கேப்ரியல் கார்சியா மார்க்குவெஸ் வகையிலிருந்து மாறுபட்டது. கவித்துவமான, இந்திய புராணீக மரபிலிருந்து உருவாகி வந்த நீட்சி போன்ற …