இலக்கியம்

தேவதச்சன் நேர்காணல்

கவிதைக்கு ஏழெட்டு வேலைகள் படிகம் இதழில் வெளிவந்துள்ள கவிஞர் தேவதச்சன் நேர்காணல் கேள்விகள் – ரோஸ் ஆன்றா ,ஆகாசமுத்து,கோணங்கி,லக்ஷ்மி மணிவண்ணன் •••• கே-உங்கள் கவிதையில் வினோதமான காமம் செயல்படுகிறது.கவிதையில் காமத்தின் பங்கு என்னவாக இருக்கிறது? ப- காமத்தின் பங்கு கவிதையில் நிச்சயமாக இருக்கிறது.அதை உங்கள் வாழ்தலின் இயக்கம் முடிவு செய்யும்.என்னுடைய பதினாலு வயதில் என்னுடைய செக்சுவாலிட்டி அறிமுகம் ஆகிறது.காமத்தின் கொப்புளங்கள் வரத் தொடங்குகின்றன.அதனை என்னவென்றே என்னால் அந்த வயதில் அடையாள படுத்திக்க முடியவில்லை.நிம்மதியின்மை புதுசா இருக்கு.வெளியிலிருந்து எத்தகைய …

தேவதச்சன் நேர்காணல் Read More »

எஸ்தர் கதை உருவான விதம்

வண்ணநிலவன் பாண்டிச்சேரி ரோமன்ரோலண்ட் நூலகம் நான் வேலை பார்த்து வந்த புதுவைக் குரல் அலுவலகத்தின் எதிரேதான் இருந்தது. ரோமன் ரோலண்ட் நூலகம் ஒரு புஸ்தகச் சுரங்கம். பேர்லாகர் க்விஸ்ட்டின் ‘அன்புவழி’ போன்ற மகத்தான உலக இலக்கியங்களை எல்லாம் அந்த நூலகத்திலிருந்து எடுத்துச் சென்று படித்தேன். காரை சிபி, சில பிரெஞ்சு நாவல்களின் ஆங்கிலமொழி பெயர்ப்புகளைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். பாண்டிச்சேரியில் இருந்த நாட்களில் உலக இலக்கியங்களில் திளைத்தேன். அவை என் இலக்கிய அறிவைப் பட்டை தீட்டின.  இலக்கியக் …

எஸ்தர் கதை உருவான விதம் Read More »

கலாப்ரியா கட்டுரை

பதினெட்டாம் நூற்றாண்டின் மழையை முன் வைத்து சில தூறல்கள்-கலாப்ரியா அவனே ** அந்தச் சிறுகதைக்குள்ளிருந்து அவன் உடலை மீட்டு வர மிகச் சிரமப்பட்டதாக அவன் நண்பர்கள் சொன்னார்கள் அங்கோர்வாட் கோயில் மண்டபச் சிதிலங்களூடே பாம்பெனப் பிதுங்கி நிற்கும் மர வேர்கள் போல அவன் அந்தக் கதையில் அடிக் கோடிட்டிருந்த வரிகள் பற்களைத் துளைத்துக் கொண்டும் கண்குழி மூக்குப் பொந்து என்று கபாலம் முழுக்க இறுக்கிக் கொண்டிருந்ததாயும் அதை எடுக்கவே அதிகச் சிரமமென்றும் அவன் உறவினர்களிடம் சொன்னார்கள் பிய்த்தெடுத்த …

கலாப்ரியா கட்டுரை Read More »

மதுரை கருத்தரங்கம்

வதனம் இலக்கிய அமைப்பின் சார்பில் மதுரையில் நடைபெற்ற சிறுகதை கருத்தரங்கம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. மதுரையில் அக்னி நட்சத்திர வெயில் கொதிக்கிறது. இதில் யார் கூட்டத்திற்கு வருவார்கள், தேதியை மாற்றிவிடுங்கள் எனச் சில நண்பர்கள் ஆலோசனைகள் சொன்னார்கள்.ஆனால் நான் மிகுந்த நம்பிக்கையோடு இருந்தேன். மதுரையில் இலக்கியத்திற்கென எப்போதும் தனிவாசகர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் நிச்சயம் கலந்து கொள்வார்கள் என உறுதியாக நம்பினேன் ஒரு மாத காலமாகவே  நண்பர் ஆத்மார்த்தி மிகுந்த ஈடுபாட்டுடன் இதற்கான வேலைகளைச் செய்து கொண்டிருந்தார். திருவண்ணாமலை சிறார் இலக்கிய …

மதுரை கருத்தரங்கம் Read More »

முகாம் நினைவுகள்

திருவண்ணாமலையில் நடைபெற்ற சிறார் இலக்கிய முகாம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. தொடர்மழையின் காரணமாக நிகழ்ச்சியை நடத்த முடியாதோ எனத் தோணியது, ஆனால் சனி காலை முதல் ஞாயிறு மாலை வரை மழையில்லை. முந்திய நாள் பெய்த மழையின் குளிர்ச்சியில் திருவண்ணாமலை குளிர்ந்து ஊட்டி போலாகியிருந்தது. காணுமிடமெல்லாம் தண்ணீர், குளிர்ச்சி, கோடையில் இவ்வளவு மழை என்பது அதிர்ஷடமே. வெள்ளிக்கிழமை காலை சென்னையில் இருந்து கிளம்பும் போதே நல்ல மழை. சாலை தெரியவில்லை. காரில் திருவண்ணாமலைக்குப் போய்ச் சேர ஐந்து மணி …

முகாம் நினைவுகள் Read More »

சஞ்சாரம்-அலைக்கழிப்பின் தனிமை

மோனிகா மாறன் எஸ்.இராமகிருஷ்ணனின் சஞ்சாரம் மனித மனங்களின் சிதறல்களை,வாழ்வின் தவிர்க்க இயலா யதார்த்தத்திற்கும்,மனங்களின் எல்லைகளுக்குமிடையிலான போராட்டங்களைக் காண்பிக்கிறது. பக்கிரியின் கதை நாதஸ்வரம் வாசிக்கும் கலைஞனின் சுயமரியாதையை வெளிப்படுத்துகிறது. “மனுசன் அற்பப்புழு, இசைக்கு தாய்ப்பாலு நாதஸ்வரம்” கலையை நேசிக்கும் மனிதர்களின் மனதில் தான் இப்படிச் சொற்கள் உருவாகும். எலுமிச்சை மணம் என்பது கடந்த காலத்தையும் நினைவுகளையும் இணைக்கும் மரணத்தை மாலிக்கபூருக்கு அளிக்கிறது லட்சய்யாவின் இசை.உண்மையில் எல்லா மனங்களின் ஆழங்களும் ஏதோ ஒரு வாசத்தில் மரணத்தை,காலங்களை நினைவூட்டும்.மணம் என்பதே இங்கு …

சஞ்சாரம்-அலைக்கழிப்பின் தனிமை Read More »

சஞ்சாரம் விமர்சனம்

அவலத்தின் வலி உணர்த்தும்  ஓர் இசைப்பயணம் பேராசிரியர் ராமகுருநாதன் காவிரி மண்ணுக்குரிய பெருமை அது கலைகளின் தாயகமாக ஒருகாலத்தில் இருந்ததுதான். இசை, நாடகம், நடனம், ஓவியம் போன்ற நுண்கலைகளில் தஞ்சை மாவட்டத்திற்குத் தனித்தன்மை உண்டு. கலைஞர்கள் பலரை உருவாக்கி உலவ விட்டது அந்தக் காவிரி மண்.  இசைக்கலைஞர்களில் குறிப்பாக நாதஸ்வர இசைக் கலைஞர்களில் சிறப்புக்குரியோராகப் பலர்தஞ்சை மண்ணால் தமிழகத்திற்குப் புகழ் சேர்த்தவர்கள். அவர்களில் சிலர் இந்திய அளவில் புகழ் பெற்றவர்கள். காவிரி மண்ணுக்கு மட்டும் இந்தப் பெருமை …

சஞ்சாரம் விமர்சனம் Read More »

பிராட்பரியின் முன்னுரை

தமிழில் : கடுகு அகஸ்தியன் ••• A PASSION FOR BOOKS  என்ற புத்தகத்திற்கு எழுத்தாளர் ரே பிராட்பரி (RAY BRADBURY)  சிறப்பான முன்னுரை எழுதியுள்ளார்.  அதை நகைச்சுவை எழுத்தாளர் கடுகு அகஸ்தியன் தமிழில் மொழியாக்கம் செய்து தனது வலைப்பதிவில் ஏற்றியுள்ளார். இந்த முன்னுரையில்  தனது புகழ்பெற்ற நாவலான பாரன்ஹீட் 451யை எப்படி எழுதினேன் என்பதைரே பிராட்பரி விவரிக்கிறார். பாரன்ஹீட் 451  தற்போது க்ரியா பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. ••• ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்து மூன்றாம் வருடம் ஃபாரன்ஹீட் 451 …

பிராட்பரியின் முன்னுரை Read More »

நிமித்தம் விமர்சனம்

– தமிழ்மகன் ‘பொய், விதை இல்லாத தாவரம்’ என்று ஒரு வரி நாவலில் வருகிறது. எந்தவித ஆதாரமும் இல்லாமல் முளைக்கக் கூடியது பொய். காது கேளாத ஒருவன் பொய்யைத் துணைக்கு அழைத்துக்கொள்ளும் துயரத்தை விவரிக்கும்போது இப்படிச் சொல்கிறார் ராமகிருஷ்ணன். ஒருவன் எதன் பொருட்டோ வாழ்வைத் தக்கவைத்துக்கொள்ள பொய்யைச் சொல்ல வேண்டியிருக்கிறது. நிரந்தரமின்மை தருகிற அச்சம்தான் பொய்யின் வேர். மனக்குறைபாடுகளும் உடற்குறைபாடுகளும் ஏற்படுத்துகிற அவநம்பிக்கை பலருக்கு இப்படியான அச்சத்தைத்தான் வளர்க்கிறது. தேவராஜ் என்ற காதுகேளாத முதிர் இளைஞனின் திருமண …

நிமித்தம் விமர்சனம் Read More »

உயர்த்திப் பிடித்த வெளிச்சம்

ஜெயகாந்தன் மறைந்துவிட்டார் என அறிந்த மறுகணம் அவர் வீட்டில் இருந்தேன். கம்பீரமான குரலில் வரவேற்கும் ஜெயகாந்தன் அங்கு இல்லை. அவரது உடலே கிடத்தப்பட்டிருந்தது. அந்த மௌனம், பெரும் துக்கத்தை உருவாக்கியது. தாங்க முடியாத மனவலியோடு அவரது வீட்டு வாசலில் இரவெல்லாம் அமர்ந்திருந்தேன். சலனமற்ற நீண்ட இரவு. நினைவுகள் கொப்பளிக்கின்றன. ஜே.கே. வாழ்வில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களைப் பகிர்ந்துகொண்டிருந்தார்கள். மனம் அதில் ஒன்றமுடியாமல் தத்தளித்தது. இந்த இழப்பு எளிதானது அல்ல. எத்தனையோ வாசகர்களைப்போல நானும் அவரது வாசகன். அவர் …

உயர்த்திப் பிடித்த வெளிச்சம் Read More »