தேவதச்சன் நேர்காணல்
கவிதைக்கு ஏழெட்டு வேலைகள் படிகம் இதழில் வெளிவந்துள்ள கவிஞர் தேவதச்சன் நேர்காணல் கேள்விகள் – ரோஸ் ஆன்றா ,ஆகாசமுத்து,கோணங்கி,லக்ஷ்மி மணிவண்ணன் •••• கே-உங்கள் கவிதையில் வினோதமான காமம் செயல்படுகிறது.கவிதையில் காமத்தின் பங்கு என்னவாக இருக்கிறது? ப- காமத்தின் பங்கு கவிதையில் நிச்சயமாக இருக்கிறது.அதை உங்கள் வாழ்தலின் இயக்கம் முடிவு செய்யும்.என்னுடைய பதினாலு வயதில் என்னுடைய செக்சுவாலிட்டி அறிமுகம் ஆகிறது.காமத்தின் கொப்புளங்கள் வரத் தொடங்குகின்றன.அதனை என்னவென்றே என்னால் அந்த வயதில் அடையாள படுத்திக்க முடியவில்லை.நிம்மதியின்மை புதுசா இருக்கு.வெளியிலிருந்து எத்தகைய …