இலக்கியம்

சினிமாவுக்குப் போன ஜெயகாந்தன்

அம்ஷன் குமார் சினிமா எவ்வாறு தமிழ்ச் சமூகத்தைச் சீரழிக்கிறது என்பது பற்றி ஒரு தலைமுறைக்கே அது குறித்த எண்ணங்களைத் தோற்றுவித்த ஆசானாக விளங்கினார் ஜெயகாந்தன். ஜெயகாந்தன் எழுத வந்த காலத்தில் தமிழில் பத்திரிகை உலகும் சினிமா உலகும் பெரும் தொழில் நிறுவனங்களாக ஆகிவிட்டிருந்தன. பல இலக்கிய எழுத்தாளர்கள் மக்களிடையே செல்வாக்குப் பெற்ற பெரும் பத்திரிகைகளில் தங்கள் படைப்புகளை வெளியிட்டனர். நாவல்கள், கதைகள் மட்டுமின்றி கட்டுரைகளும் அவற்றில் வந்தன. இலக்கியச் சிறப்பு மிக்க உ.வே.சாமிநாத அய்யரின் சுயசரிதை ‘என் …

சினிமாவுக்குப் போன ஜெயகாந்தன் Read More »

அழகியசிங்கரின் கட்டுரைகள்

இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக எனக்கு விருட்சம் அழகியசிங்கரைத் தெரியும். இலக்கியத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் அபூர்வமான மனிதர். கவிதைகள், சிறுகதைகள். கட்டுரைகள் எழுதி வருவதுடன் நவீன விருட்சம் என்ற இலக்கிய இதழை 27 ஆண்டுகளாக நடத்தி வருகிறார் அதன் 100 வது இதழ் சமீபமாக வெளிவந்துள்ளது. நவீன விருட்சம் இதழில் எனது சிறுகதைகள் வெளியாகியிருக்கிறது. விருட்சம் இதழ் நடத்துகிற சிரமம் பற்றிப் பேசும்போது கூட பரிகாசமாகவே தனது கஷ்டங்களைச் சொல்லக்கூடியவர் அழகியசிங்கர். அவரது இயற்பெயர் சந்திரமௌலி. …

அழகியசிங்கரின் கட்டுரைகள் Read More »

கலாப்ரியா

நான் பெரிதும் மதிக்கும் கவிஞர் கலாப்ரியா இடதுகை பற்றி எழுதிய இக்கட்டுரை எனது நாவலுக்கு நெருக்கமாக உள்ளது. இதனை எழுதிய கலாப்ரியாவிற்கும் சுட்டிக்காட்டிய விநாயகமுருகனுக்கும் நன்றி •• தி.ஜானகிராமன் எழுதியிருப்பார், ஒரு நாள் பூராவும் உள்ளங்கை ரேகைகளையே பார்த்துக் கொண்டிருக்கலாம் என்று. பார்ப்பதற்கும், வியப்பதற்கும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. அபூர்வம் எங்கேயும் எப்பொழுதும் நம்மைச் சுற்றியும் நம்மிடமுமே இருக்கிறது.நாமோ “பூர்வமானவைகளைப் பற்றியே யோசித்து, முந்தினவைகளையே நினைத்துக்’’ கவலைக் குழியில் விழுந்து கிடக்கிறோம். ஒரு தனிமையான மதியப் பொழுது, …

கலாப்ரியா Read More »

அரவிந்தனின் இரண்டு நாவல்கள்

பயணம், பொன்னகரம் என்ற அரவிந்தனின் இரண்டுநாவல்களைச் சமீபத்தில் வாசித்தேன். பத்திரிக்கையாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் இலக்கியக் கட்டுரைகள் எழுதுபவராகவுமே அவரை அதிகம் அறிந்திருக்கிறேன். அவர் இந்தியாடுடே மற்றும் காலச்சுவடு இதழ்களில் பணியாற்றிய நாட்களில் சிலதடவைகள் சந்தித்துப் பேசியிருக்கிறேன். ஆனால் அவரது புனைவெழுத்தை வாசித்ததில்லை. இந்த இரண்டுநாவல்களில் முதலாவதாகப் பொன்னகரத்தை வாசிக்கத் துவங்கினேன். முக்கியக் காரணம் அதன் தலைப்பு. புதுமைபித்தனின் புகழ்பெற்ற சிறுகதை ஒன்றின் தலைப்பாகும் .இந்நாவல் புதுமைப்பித்தன் கதையோடு எவ்விதமாகவும் தொடர்பற்றது. சுந்தர ராமசாமியின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர் …

அரவிந்தனின் இரண்டு நாவல்கள் Read More »

கடலின் நியதி

கடல் பற்றித் தமிழில் ஏராளமான கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் கடற்புரத்து வாழ்க்கையைப் பற்றிய சிறுகதைகளும் நாவல்களும் மிகக்குறைவு. தோப்பில் முகமது மீரான், ஜோ டி குரூஸ் இருவரும் மீனவர்களின் வாழ்வியல் குறித்துச் சிறந்த நாவல்களை எழுதியிருக்கிறார்கள். வறீதையா கன்ஸ்தண்டீன் கடல் வளம் கற்பிக்கும் பேராசிரியர். தமிழகக் கடலோடிகளின் வாழ்க்கைப்பாட்டையும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் ஆராய்ந்து சிறப்பாக எழுதிவருகிறார் அந்த வரிசையில் குமரிமாவட்ட மீனவர்களின் வாழ்க்கை குறித்துத் துறைவன் என்ற அற்புதமான நாவலை எழுதியிருக்கிறார் கிறிஸ்டோபர் ஆன்றணி. துறைவன் …

கடலின் நியதி Read More »

டால்ஸ்டாயின் வாழ்க்கை

டால்ஸ்டாயின் வாழ்க்கை மற்றும் இறுதிஊர்வலம் குறித்த அரிய காணொளிக் காட்சிகள். LEO TOLSTOY on Film https://youtu.be/oxHr1ku9DGI Leo Tolstoy – The Last Years https://youtu.be/rh1vYrogvNE Tolstoy Death & Funeral.mov https://youtu.be/U8M-Y1OMJhw Tolstoy Biography https://youtu.be/5YOywSV3zB4 The Trouble with Tolstoy https://youtu.be/F0_fE22qjBE

எழுத்தாளனின் சித்திரம்.

மதுரையில் வாழ்ந்துவரும் எழுத்தாளர் கர்ணன் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறுகதைகள், குறுநாவல்கள், கட்டுரைகள் எழுதி வருபவர். இவரது படைப்புகள் கல்கி, அமுதசுரபி, கலைமகள், தீபம், தாமரை, தினமணிக்கதிர் விகடன் உள்ளிட்ட இதழ்களில் வெளியாகியுள்ளன. இதுவரை 14 சிறுகதை தொகுப்புகள் வெளியாகியுள்ளன. ஐந்தாம் வகுப்பைத் தாண்டாத தன்னைக் கல்கியின் எழுத்துகளே எழுத்தாளன் ஆக்கின என்கிறார். மதுரையில் சிறிய டெய்லர் கடை ஒன்றை நடத்திக் கொண்டு வறுமையான வாழ்க்கைச் சூழலிலும் தீவிரமாக இலக்கியத்தையும் இலக்கியவாதிகளையும் நேசித்தவர் கர்ணன். இன்று தனது …

எழுத்தாளனின் சித்திரம். Read More »

நவீனத் தமிழ் நிலத்தை எழுதுதல்

பேராசிரியர் அ.ராமசாமி நான் பெரிதும் மதிக்கும் கல்வியாளர். இலக்கிய விமர்சகர். நாடக இயக்குனர். அவர் எனது யாமம் நாவல் குறித்து தீராநதியில் எழுதியுள்ள விமர்சனக்கட்டுரை ••• நவீனத் தமிழ் நிலத்தை எழுதுதல் : அ.ராமசாமி எஸ்.ராமகிருஷ்ணனின் யாமம் : 1960-1970 வரையிலான பத்தாண்டுகள் விடுதலைக்குப் பிந்திய இந்தியவாழ்வின் முக்கியமான ஆண்டுகள். காலனிய இந்தியாவின் அடையாளங்கள் விலகிப்போன ஆண்டுகள். முதல் பிரதமர் பண்டித நேருவின் மரணம் அந்தப் பத்தாண்டுகளின் மத்தியில்(1964) தான் நடந்தது. ஆனால் அவரது திட்டங்களின் பலனும் அப்போதுதான் …

நவீனத் தமிழ் நிலத்தை எழுதுதல் Read More »

குந்தர் கிராஸ் கவிதை

முட்டையினுள்… தமிழில் :ஆர் சுவாமிநாதன் •• நாம் முட்டையினுள் வசிக்கிறோம் ஓட்டின் உட்புறச் சுவரில் ஒழுங்கற்ற சித்திரங்கள் நமது விரோதிகளின் முதற் பெயர்கள் தீட்டி விட்டோம் நாம் அடைக்காக்கப் போகிறோம் நம்மை அடைக்காக்கிற யாரோ நமது பென்சில்களையும் அடைகாக்கிறார்கள் முட்டையிலிருந்து விடுபடும் ஒருநாள் நம்மை அடைகாக்கிறவர் படத்தை நாம் உடனே வரைவோம். நாம் அடைக்காக்கப் பெறுகிறோம் என்று நாம் எண்ணிக் கொள்கிறோம். நல்ல சுபாவமுள்ள கோழி ஒன்றை கற்பித்துக் கொள்கிறோம். நம்மை அடைகாக்கும் கோழியின் வர்ணம், வம்சம் …

குந்தர் கிராஸ் கவிதை Read More »

தேவதச்சனின் பதினைந்து கவிதைகள்

துணி துவைத்துக் கொண்டிருந்தேன் காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம் தொடர்ந்து துவைத்துக் கொண்டிருந்தேன் காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம் அடுத்த துணி எடுத்தேன் காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம். ————————————– சிறுமி கூவுகிறாள். நான் போகிற இடம் எல்லாம் நிலா கூடவே வருகிறதே. சிறுவன் கத்தினான். இல்லை. நில்லா என்கூட வருகிறது இருவரும் சண்டை போட்டுக்கொண்டு திருப்பத்தில் பிரிந்தனர். வீட்டிக்குள் நுழைந்து, உடன் வெளியே வந்து எட்டி பார்க்கிறாள். நிலா இருக்கிறதா? …

தேவதச்சனின் பதினைந்து கவிதைகள் Read More »